Showing posts with label சசிகலா. Show all posts
Showing posts with label சசிகலா. Show all posts

Sunday, 7 September 2025

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா
 இதோ விளக்கம்!
சசிகலா சரியாகவே நடந்துள்ளார்!
நியாயப்படி அவர் கட்டுப்பாட்டில் பலமாக இன்று இருந்திருக்க வேண்டிய அதிமுக அப்போது பாஜக வின் தூண்டுதலால் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தால் ஜனநாயகப் படுகொலை நடந்து விதிகளெல்லாம் மீறப்பட்டு சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த நிலையில் இருக்கிறது! 
 அன்று வளர்மதி பாடநூல் கழகத் தலைவராக நியமித்தார், தளவாய் சுந்தரம் அரசின் சிறப்பு பிரதிநியாக நியமித்தார். இருவருமே சசிகலாவின் சமூகத்தவர்கள் கிடையாது.
 அன்று முதல்வரை நியமிக்கும் அதிகாரம் இருந்த போதும் 4 சீனியர் முக்குலத்து அமைச்சர்கள் இருந்தபோதும் மூப்பு அடிப்படையில் சீனியரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. 
 எடப்பாடியை விட சீனியரான நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தனர்.
 அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று அவரே வெளியே போய்விட்டார்.
 செங்கோட்டையனை 2016 இல் ஜெயலலிதா வே அமைச்சராக நியமிக்கவில்லை! 
 அதனால் ஓ.பன்னீர்செல்வம் உடன் வெளியேறிய மாஃபா பாண்டியராஜன் வகித்த கல்வியமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கினார். 
ஓபிஎஸ் வகித்த நிதியமைச்சர் பதவியை மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு வழங்கினார்.
 இப்படி சசிகலா நியமித்த எவருமே முக்குலம் இல்லை! 
 இப்படி கட்சி விதிப்படி சமுதாய உணர்வில்லாமல் நியாயமாக நடந்துகொண்டார் சசிகலா!

Wednesday, 21 March 2018

ம.நடராசன் அவர்களைப் பற்றி அறிவோம்

ம.நடராசன் அவர்களைப் பற்றி அறிவோம்

* 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டதில் மாணவராக இருந்தபோது முனைப்பாக இருந்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எல்.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்று செவ்வனே செயல்படுத்தினார்.

* ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் 'கலை இலக்கிய விழா'வை பொங்கல் விழாவின் போது நடத்தி வந்தார்.

* 'புதிய பார்வை' என்ற இதழை நடத்திவந்தார்.

* 'மகளிர் மேம்பாட்டில்
இதழ்களின் பங்கு'

* ஈழப்போர் பற்றிய ஒரு நூலை எழுதியுள்ளார்.

* தஞ்சை நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளார் என்பது இவரது சொந்த ஊர்.
அங்கே ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் பட்ட அவலங்களையும் நினவு கூரும் வகையில்  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெரிய கூடத்தை நிறுவினார்.

Tuesday, 19 September 2017

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.

மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.

பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.

மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)

ஆனால்,

தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.

சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)

அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.

இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).

மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.

தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.

(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)

Wednesday, 15 February 2017

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஒப்பீடு

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஒப்பீடு

*சசிகலா மூன்று ஆட்சிகளிலும் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.

**பன்னீர்செல்வம் இரு ஆட்சிகளில் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.

* சசிகலா 1991-96 ஆட்சியில் சென்னையில் கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் வளைத்து மிரட்டிப் பறித்தவர் என்றால்,

**பன்னீர் தேனியில் தொடங்கி கேரளத்தின் மையம் வரை ஏராளமான சொத்துக்களை இனிக்கப் பேசி பணத்தால் அடித்துப் பிடுங்கியவர்.

* சசிகலாவும் அவரது சொந்தங்களும் 10 நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால்,

**பன்னீர்செல்வமும், அவரது சொந்தங்களும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.

* ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது கூலிப்படையை ஏவி அமிலம் வீசியது சசிகலாவின் சாதனை என்றால்,

**பெரியகுளம் கோவிலின் தலித் பூசாரி நாகமுத்துவை மிரட்டி, அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்தது பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் சாதனை.

* சசிகலா குடும்பத்தில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
தினகரன் அதிமுக பொருளாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
வெங்கடேஷ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தவர்.
மகாதேவன் ஜெயலலிதா பேரவையில் கோலோச்சியவர்.

**ஆனால், பன்னீரின் குடும்பம் அனுபவித்த அதிகாரமோ இன்னும் பெரியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும் கூட தேனி உள்ளிட்ட மதுரை மண்டல அதிமுக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரகுமாரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
தவிர முன்னாள் காவல் துறை அதிகாரியான ரவீந்திரநாத் குமாரின் மாமனார் கந்தசாமி ஓய்வுக்குப் பிறகும் காவல்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ஓ.பி.எஸ் தங்கை கணவர் சரவணன் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பார்ப்பவர்.
பன்னீர் செல்வத்தின் மகளை திருமணம் செய்த காசிராஜன் வீட்டு வசதி வாரிய அரசு வழக்கறிஞர்.
காசிராஜன் அப்பாவான செல்லப்பாண்டியன் மதுரை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்.
இளைய மகன் பிரதீப் மனைவியின் உறவினர் தங்கராஜ், வங்கி விவகாரங்களைப் பார்க்கும் அரசு வழக்கறிஞர் என
ஒரு பட்டாளமே ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி அதிகார மட்டத்தில் ஆட்டம் காட்டியவர்கள்.

* தமக்கும் கட்சிக்கும் துரோகம் செய்ததாகக் கூறி சசிகலாவையும், அவரது சொந்தங்களையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா.
இவர்களில் இராவணன் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன.

**கட்சிக்கும், தமக்கும் துரோகம் செய்ததாக பன்னீர்செல்வம் குடும்பமும், அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது.
பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டு அவர் பெயரிலும்,
அவருக்கு தெரிந்தவர்கள் பெயரில் இருந்த சொத்துக்களும் எழுதி வாங்கப்பட்டன.
பன்னீர்செல்வத்தின் மகன் இரவீந்திரநாத் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு,
அடித்து உதைக்கப்பட்டு அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் வாங்கப்பட்டன.

* சசிகலா குடும்பத்திற்காக ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வளைக்கப்பட்டது என்றால்,

**பன்னீரின் மகன் இரவீந்திரநாத் வணிகம் செய்வதற்காக தமிழ் திரைப்படங்களை வெளிநாடுகளில் வினியோகிக்கும் உரிமை அவரைத் தவிர வேறு எவருக்கும் வழங்கப்படக்கூடாது என்று எழுதப்படாத சட்டம் இயற்றப்பட்டது.

* சசிகலாவுக்காக மணல் வணிகம் செய்ய ஆறுமுகசாமி இருந்தால்,

**பன்னீருக்காக மணல் வணிகம் செய்ய சேகர் ரெட்டி உருவாக்கப்பட்டார்.

* இவற்றையெல்லாம் கூடுதல் தகுதிகளாக சசிகலா குடும்பத்தினருக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில்,

**பன்னீரில் ஆதரவாளரான சேகர் ரெட்டிக்கு தமிழக அரசின் பரிந்துரையில் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பதவி வழங்கப்பட்டது.

* சசிகலா குடும்பத்திற்கு கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தர வேறு ஆட்கள் இல்லாத நிலையில், ஏராளமான ஃபெரா வழக்குகளை சுமந்து கொண்டு இருக்கும் நிலையில்,

**பன்னீர் செல்வம் தரப்போ அன்புநாதன் என்ற தரகரை இதற்காகவே நியமித்து அவர் மூலம் பல்லாயிரம் கோடி சொத்துக்களை பத்திரமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது.

இப்படியாக பார்த்தால் ஊரை அடித்து உலையில் போடுவதில் சசிகலாவை விட ஒரு படி மேலே இருக்கிறார் மிஸ்டர் பணிவு பன்னீர் செல்வம்.
இவரது புன்னகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத செயல்பாடுகள் பல.

Thursday, 9 February 2017

பன்னீர் ஒரு பிள்ளைப்பூச்சி சசி ஒரு இருமுனைக் கத்தி

பன்னீர் ஒரு பிள்ளைப்பூச்சி
சசி ஒரு இருமுனைக் கத்தி

எதற்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும்.

என்னைக்கேட்டால் இப்போதைக்கு கையைக் கீறினாலும் பரவாயில்லை என்று கத்தியை எடுக்கத்தான் கூறுவேன்.

நல்லவரை விட வல்லவரே அரசியலுக்கு தகுதியானவர்.

பா.ஜ.க ஆதரவுடன் சசியை ஒழித்துவிட்டு
பன்னீரை சப்பாணியாக்கிவிட்டு கருணாநிதியை கொன்றுவிட்டு அனுதாப அலையில் படுபாவிமகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவது நடக்கக்கூடாது.

சசியை ஆதரிப்போம்.
மோடியின் திட்டத்தை முறியடிப்போம்.

Thursday, 29 December 2016

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பன்னீர்செல்வம் ஒரு மறவர் என்பதற்காக மட்டுமே எதிர்க்கும் சில பள்ளர்களுக்கு..

முதலில் மள்ளர்-மறவர் மோதல் எப்போது தொடங்கியது என்று அறிக.

தேவரையா தேர்தலில் நிறுத்திய பள்ளர்கள் இருவர்.

1957தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் சார்பாக ஏ.வேலு தேவேந்திரர் என்பவரையும்
ஏ.பெருமாள் தேவேந்திரர் என்பவரையும்
நிறுத்தினார்.

இதில் ஒருவர் வெற்றியடைந்தார்.
இதன் பிறகே இமானுவேல் சேகரனார் படுகொலை நடந்தது.

இது ஏன் நடந்தது என்றால் சமாதான பேச்சுவார்த்தையின் போது இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்கமுடியாது என்றும் அன்று காங்கிரஸ் சார்பாக நின்று வென்றவர்தான் (அவரும் ஒரு பள்ளர்.
தேவரையா நிறுத்திய பள்ளரை காங்கிரஸ் ஆதரவுடன் தோற்கடித்தவர்) பிரதிநிதியாக ஏற்கமுடியும் என்றும் கூறினார் தேவர்.
(சாதியை காரணமாக அவர் கூறவில்லை)

ஆனால் பிறகு மனம் மாறி விட்டுக்கொடுத்தார்.
இமானுவேல் சேகரனாரை பள்ளர் பிரதிநிதியாக ஏற்று மக்களை அமைதியாக இரும்படி அறிவிக்கப்பட இருந்த அறிக்கையில் கையெழுத்து போட்டார்.

இதை மறைத்து அந்த அறிக்கையை வெளிவராமல் தடுக்கவே இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டனர்.
(தேவரை சிறையிலடைத்து மெல்லக் கொல்லும் நஞ்சு கொடுத்தனர்.
அதுவரை ஆரோக்கியமாக கம்பீரமாக வலம் வந்த தேவனார்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு நோயாளி ஆகி விரைவிலேயே மரணமும் அடைந்தார்)

1962 ல் மீண்டும் ஏ.வேலு தேவேந்திரரை ஃபார்வர்டு ப்ளாக் சார்பாக நிறுத்தி வெற்றி பெறச்செய்தார்
முத்துராமலிங்க தேவனார்.

அதுமட்டுமன்றி தேவர் வெற்றி பெற்ற தொகுதிகளில் பள்ளர்கள் கணிசமாக இருந்தனர்.

தேவரையா பள்ளர்களுக்கோ
பள்ளர்கள் தேவனாருக்கோ எதிராக இருந்ததே இல்லை.

அவர் இறக்கும் தருவாயில் தமது சொத்துக்களை பகிர்ந்தளித்த போது 30% பள்ளர்களுக்கு கிடைத்தது.

ஆக தேவர்-தேவேந்திரர் மோதல் அரசியல் லாபத்திற்காக போலியாக உருவாக்கப்பட்டது.

இதனை இரு தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும்.
பன்னீர்செல்லத்தையும் சசிகலாவையும் நாம் தூக்கியெறிந்தால் அந்த இடத்தில் வேற்றினத்தான் வந்து அமர வழி ஏற்படும்.

உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்ற இயற்கைக்கு ஏற்பவே உங்கள் ஆழ்மனம் பதில் சொல்லும்.

பன்னீர்செல்வம் ஒன்றும் நிரத்தரமானவர் கிடையாது.

நாம் பிறகு இவரை அகற்றிவிட்டு மானமுள்ள வேறொரு தமிழரை அரியணை ஏற்றலாம்.

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

சசிகலா பொதுச்செயலாளராக...

சே குவேரா கூறியதுதான் நினைவு வருகிறது.

"மோசமான தலைவர்களை மாற்றுவது என்பது
புதிய தலைவர்கள் வந்து மோசமாக மாறுவதற்குத்தான்"

ஜெயாவின் இடத்தை சசியைக் கொண்டு மாற்றியமைப்பது இதையே குறிக்கிறது.

ஆயிரம்தான் இருந்தாலும் சசி ஒரு தமிழர்.
(இருவேறு சாதிகள் கலந்து பிறந்தவர்).

அதனால் மகிழ்ச்சி.