Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Tuesday, 8 October 2024

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

 2016 ஏப்ரலில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் பேசினார் ஜெ. அப்போது சேலத்தில் 3 பேரும் விருத்தாசலத்தில் 2 பேரும் என 5 பேர் வெயிலில் தாக்கத்தால் இறந்தனர்!
 அப்போதும் வெயில் உச்சத்தில் இருந்த நேரம்!
 ஹெலிகாப்டர் தரையிறங்க பிரத்யேகமாக தளம் அமைக்கப்பட்டு அதில் ஜெ இறங்கி மேடையில் பத்து கூலர்கள் மத்தியில் அமர்வார் ஆனால் மக்கள் காலையிருந்து வெயிலில் காத்திருப்பர்!
 உயிரிழப்பு 5 பேர் மயங்கி விழுந்தவர்களோ 30  பேருக்கும் மேல்!
 இதையடுத்து கண்டனங்கள் குவிந்தன!
 பாமக ஜெ மீது கொலை வழக்கு பதிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரியது!
அதன்பிறகு தான் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் நடத்தினார்!

 இன்று மெரினாவில் அலட்சியத்தால் திமுக கொன்றது 5 உயிர்கள் என்றால் அன்று அதிமுக கொன்றதும் 5 உயிர்கள்தான்!
 இரண்டும் வேறு வேறு இல்லை!

 1992 இல் கும்பகோணம் மகாமகம் சென்று நெரிசல் உண்டாக்கி 60பேர் உயிரைக் குடித்தவர் ஜெயலலிதா என்பதையும் இங்கே நினைவு கூற வேண்டும்.
 
 

Thursday, 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Thursday, 6 September 2018

பழைய சுப.வீ

பழைய சுப.வீ

இன்று திராவிட கருத்தியலுக்கு பிரச்சார பீரங்கியாகவும் தி.மு.க -வுக்கு விசுவாசமான அடிமையாகவும் மாறிக்கிடக்கும்
சுப.வீ (எ) சுப.வீரபாண்டியன் தமிழினத்தில் பிறந்த ஒரு இனத்துரோகி ஆவார்.

ஆனால், இவர் 1990 களில் திராவிடத்தை விமர்சித்தும் தமிழ்தேசியத்தை ஆதரித்தும் எழுதிவந்தார் என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கலாம்.

தி.மு.க இவரை எதைக் காட்டி வளைத்தார்களோ தெரியாது.
அப்போது நிறம் மாறிய பச்சோந்தியான சுப.வீ இப்போது நாயினும் கேடாக நக்கிப் பிழைக்கும் இழிபிறப்பாகி நிற்கிறார்.

இவரை சான்றுடன் தோலுரிப்பது நமது கடமையாகும்.

1990 இல் துக்ளக் இதழில் தனித்தமிழ்நாடு ஆதரவாளர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கம் பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சுப.வீ பேசியது இடம்பெற்றுள்ளது.
அது வருமாறு,

"1963 -ல் பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அந்த சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிவினை என்றே சொல்லவே கூடாது என்று பேச்சுரிமை பறிக்கப்பட்டது.
அந்தச் சட்டம் வந்தவுடனேயே அண்ணா திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணங்கள் சாதூர்யமான பேச்சுதான்.
பிறகு 1965 -ல் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி 67 -ல் முடிந்துவிட்டது.
அதற்கு காரணம் (தி.மு.க) ஆட்சிக்கு போனதுதான்.

திருச்சி (தி.மு.க)மாநாடு ஒரு திருப்புமுனை என்றார்கள்.
ஆனால் ஒரு மாற்றமும் இல்லை.
குடியரசு, விடுதலை, குத்தீட்டி, எரியீட்டி என்று ஒரு காலத்தில் (திராவிட) பத்திரிக்கைகள் வந்தன.
ஆனால் இன்று திராவிட இயத்திலிருந்து குங்குமம், முத்தாரம், மெட்டி என்று வருகின்றன.

குங்குமம் பத்திரிக்கையிலே ஆபாச இலவச கிளுகிளுப்பு இணைப்பு வெளியிட்டு அதை எதிர்த்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.
ஏ.பி.வி.பி யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒவ்வொரு கல்லூரியிலும் பள்ளியிலும் வேலை செய்கிறார்கள்.
நாம் இலவச கிளுகிளுப்பு வெளியிட்டுக்கொண்டு இருக்கிறோம்.
திராவிட இயக்கம் எந்த தேய்வுக்கு வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டு திராவிட இயக்கங்களும் மாறி மாறி டெல்லிக்கு காவடி எடுத்ததால் இங்கு தமிழ் தேசிய உணர்வு பட்டுப் போயிருக்கிறது"
[துக்ளக் 16.02.1990]

இன்னொரு சான்றையும் பார்ப்போம்.
சுப.வீ 'இனி' என்கிற பெயரில் நடத்தி வந்த மாத இதழில் 1994 இல் எழுதியது வருமாறு,

"மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் பெறாமல் இருந்த சென்னைத் தலை மாகாணத்தில் ஆந்திரர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்தனர்.

காங்கிரசு எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு மூன்றும் தெலுங்கர் முதலான பிற திராவிட இனத்தவருக்கும் உரியதாக இருந்தமையால், அவர்களையும் அணைத்துக் கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதனால் தமிழ்த் தேசிய உணர்வை திராவிட தேசிய உணர்வு விழுங்கி விட்டது.

நீதிக்கட்சி என்று அறியப்பட்ட 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தெலுங்கர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது என்பதனை ஹ்யூஜின் இர்ஷிக், கிறிஸ்டோபர் ஜான் பேக்கர், குணா முதலான ஆய்வாளர்கள் தத்தம் ஆய்வு நூல்களில் விளக்கமாகக் குறித்துள்ளார்கள்.

'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றே குணா கருதுகின்றார்.

நீதிக்கட்சியை தொடங்கிய பி.டி.தியாகராயர், மருத்துவர் டி.எம். நாயர் இருவரும் தமிழரல்லர்.

பனகல் அரசரும் 1915ஆம் ஆண்டிலேயே ஆந்திர இயக்க மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.

நீதிக்கட்சியின் சார்பாகத் தொடங்கப்பெற்ற தமிழ் ஏட்டிற்கு 'திராவிடன்' என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆனால், தெலுங்கு ஏட்டின் பெயர் 'ஆந்திர பிரகாசிகா' என்று தான் இருந்தது.

நீதிக்கட்சியின் சார்பில், சென்னை தலை மாகாணத்திற்கு முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் பலர் (ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், கே.வேங்கட ரெட்டி நாயுடு, சித்தூர் வி.முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், கூர்ம வெங்கட ரெட்டி) தெலுங்கர்களே.

நீதிக்கட்சியின் கூட்டங்கள் தெலுங்குப் பகுதியில் நடைபெற்றபோது தெலுங்கிலும், தமிழ்ப் பகுதியில்
நடைபெற்ற போது ஆங்கிலத்திலும் நடைபெற்றன.

மொழிவழித் தேசங்கள் உருவாகாத அன்றையச் சூழலில், தேசிய இன உணர்வை (National race) முன் நிறுத்த முடியாமல், சமூக நீதியில் சரியாக இயங்கினர் என்னும் நிறைவில், 'திராவிடர்' என்னும் மரபு இன உணர்வையே (Ethnic race) பெரியார் உட்பட அனைவரும் முன் நிறுத்திய சூழலை நாம் இன்று உணர முடிகிறது.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய உணர்வு பின்னடைந்தமைக்கு, திராவிட தேசிய உணர்வு ஒரு முகாமையான காரணம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை."

[இனி -சமூக மாத இதழ்,
திருவள்ளுவர் ஆண்டு 2025,
மடங்கல் -கன்னி, செப்டம்பர் '94 ]

இவ்வளவு தெளிவாக இருந்த சுப.வீ எப்படி மாறினார்?!

பெற்றோர் காலத்தில் இருந்தே திராவிட சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட சுப.வீ,
1970களில் பெருஞ்சித்திரனார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு தமிழ்தேசியத்திற்கு மாறினார்.
  'தமிழர் இயக்கம்' எனும் அமைப்பையும் தொடங்கினார்.
பிறகு தியாகுவின் தமிழ்தேசிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
ஈழ ஆதரவு பணிகளில் ஈடுபட்டபோது 2002 இல் ஜெயலலிதாவினால் பொடா சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் இவருக்கு தி.மு.க உதவி செய்தது.
30 ஆண்டுகள் திராவிடத்தை விமர்சித்துவந்த சுப.வீ இவ்வாறு தி.மு.க வினால் விலைக்கு வாங்கப்பட்டு திராவிடத்திற்கு மாற்றப்பட்டார்.
2007 இல் 'திராவிட இயக்கத் தலைவர் பேரவை' என்ற அமைப்பை நிறுவி வெளியிலிருந்தே தி.மு.க வை ஆதரித்து வருகிறார்.

தி.மு.க 2009 இல் சாயம் வெளுத்து அம்மணமாகிவிட்ட நிலையிலும் இப்போதும் முட்டுக் கொடுத்து வருகிறார்.

Tuesday, 19 September 2017

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.

மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.

பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.

மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)

ஆனால்,

தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.

சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)

அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.

இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).

மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.

தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.

(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)

Friday, 1 September 2017

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்!

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது (???!!!!)

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலைசெய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார், கொள்ளையடித்துவிட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன்தான்
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து,
கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலைசெய்யப்பட்டார்.

மேலும் அறிய,

காண்க காணொளி :-
தமிழரசன் வங்கி கொள்ளை பற்றி பழனிபாபா (vaettoli.wordpress)

search இனம்னா என்ன? வேட்டொலி

search வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி வேட்டொலி

Wednesday, 15 February 2017

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஒப்பீடு

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஒப்பீடு

*சசிகலா மூன்று ஆட்சிகளிலும் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.

**பன்னீர்செல்வம் இரு ஆட்சிகளில் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.

* சசிகலா 1991-96 ஆட்சியில் சென்னையில் கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் வளைத்து மிரட்டிப் பறித்தவர் என்றால்,

**பன்னீர் தேனியில் தொடங்கி கேரளத்தின் மையம் வரை ஏராளமான சொத்துக்களை இனிக்கப் பேசி பணத்தால் அடித்துப் பிடுங்கியவர்.

* சசிகலாவும் அவரது சொந்தங்களும் 10 நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால்,

**பன்னீர்செல்வமும், அவரது சொந்தங்களும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.

* ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது கூலிப்படையை ஏவி அமிலம் வீசியது சசிகலாவின் சாதனை என்றால்,

**பெரியகுளம் கோவிலின் தலித் பூசாரி நாகமுத்துவை மிரட்டி, அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்தது பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் சாதனை.

* சசிகலா குடும்பத்தில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
தினகரன் அதிமுக பொருளாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
வெங்கடேஷ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தவர்.
மகாதேவன் ஜெயலலிதா பேரவையில் கோலோச்சியவர்.

**ஆனால், பன்னீரின் குடும்பம் அனுபவித்த அதிகாரமோ இன்னும் பெரியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும் கூட தேனி உள்ளிட்ட மதுரை மண்டல அதிமுக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரகுமாரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
தவிர முன்னாள் காவல் துறை அதிகாரியான ரவீந்திரநாத் குமாரின் மாமனார் கந்தசாமி ஓய்வுக்குப் பிறகும் காவல்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ஓ.பி.எஸ் தங்கை கணவர் சரவணன் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பார்ப்பவர்.
பன்னீர் செல்வத்தின் மகளை திருமணம் செய்த காசிராஜன் வீட்டு வசதி வாரிய அரசு வழக்கறிஞர்.
காசிராஜன் அப்பாவான செல்லப்பாண்டியன் மதுரை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்.
இளைய மகன் பிரதீப் மனைவியின் உறவினர் தங்கராஜ், வங்கி விவகாரங்களைப் பார்க்கும் அரசு வழக்கறிஞர் என
ஒரு பட்டாளமே ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி அதிகார மட்டத்தில் ஆட்டம் காட்டியவர்கள்.

* தமக்கும் கட்சிக்கும் துரோகம் செய்ததாகக் கூறி சசிகலாவையும், அவரது சொந்தங்களையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா.
இவர்களில் இராவணன் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன.

**கட்சிக்கும், தமக்கும் துரோகம் செய்ததாக பன்னீர்செல்வம் குடும்பமும், அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது.
பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டு அவர் பெயரிலும்,
அவருக்கு தெரிந்தவர்கள் பெயரில் இருந்த சொத்துக்களும் எழுதி வாங்கப்பட்டன.
பன்னீர்செல்வத்தின் மகன் இரவீந்திரநாத் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு,
அடித்து உதைக்கப்பட்டு அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் வாங்கப்பட்டன.

* சசிகலா குடும்பத்திற்காக ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வளைக்கப்பட்டது என்றால்,

**பன்னீரின் மகன் இரவீந்திரநாத் வணிகம் செய்வதற்காக தமிழ் திரைப்படங்களை வெளிநாடுகளில் வினியோகிக்கும் உரிமை அவரைத் தவிர வேறு எவருக்கும் வழங்கப்படக்கூடாது என்று எழுதப்படாத சட்டம் இயற்றப்பட்டது.

* சசிகலாவுக்காக மணல் வணிகம் செய்ய ஆறுமுகசாமி இருந்தால்,

**பன்னீருக்காக மணல் வணிகம் செய்ய சேகர் ரெட்டி உருவாக்கப்பட்டார்.

* இவற்றையெல்லாம் கூடுதல் தகுதிகளாக சசிகலா குடும்பத்தினருக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில்,

**பன்னீரில் ஆதரவாளரான சேகர் ரெட்டிக்கு தமிழக அரசின் பரிந்துரையில் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பதவி வழங்கப்பட்டது.

* சசிகலா குடும்பத்திற்கு கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தர வேறு ஆட்கள் இல்லாத நிலையில், ஏராளமான ஃபெரா வழக்குகளை சுமந்து கொண்டு இருக்கும் நிலையில்,

**பன்னீர் செல்வம் தரப்போ அன்புநாதன் என்ற தரகரை இதற்காகவே நியமித்து அவர் மூலம் பல்லாயிரம் கோடி சொத்துக்களை பத்திரமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது.

இப்படியாக பார்த்தால் ஊரை அடித்து உலையில் போடுவதில் சசிகலாவை விட ஒரு படி மேலே இருக்கிறார் மிஸ்டர் பணிவு பன்னீர் செல்வம்.
இவரது புன்னகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத செயல்பாடுகள் பல.

Thursday, 29 December 2016

சசிகலா பொதுச்செயலாளராக...

சே குவேரா கூறியதுதான் நினைவு வருகிறது.

"மோசமான தலைவர்களை மாற்றுவது என்பது
புதிய தலைவர்கள் வந்து மோசமாக மாறுவதற்குத்தான்"

ஜெயாவின் இடத்தை சசியைக் கொண்டு மாற்றியமைப்பது இதையே குறிக்கிறது.

ஆயிரம்தான் இருந்தாலும் சசி ஒரு தமிழர்.
(இருவேறு சாதிகள் கலந்து பிறந்தவர்).

அதனால் மகிழ்ச்சி.

Tuesday, 6 December 2016

மரணமடைந்த திமிர்

மரணமடைந்த திமிர்
*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
வீரப்பனாரைக் கொன்ற,

பிரபாகரனாரைத் தூக்கில் போடவேண்டும் என்று சொன்ன,

புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த,

தண்ணீர் தரமாட்டேன் என்று பிரதமர் முன்னால் முகத்திற்கு நேராக சொன்ன கர்நாடக முதல்வரை எதிர்க்க துணிச்சலில்லாத,

அசிங்கமாக கார்ட்டூன் வரைந்த சிங்களவனை எதிர்க்க தைரியமில்லாத,

சாராயக்கடையை முடுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்து பிறகு சாராயக் கடைகளைத் திறந்து தமிழகத்தையே குடிக்கு அடிமையாக்கி பல ஆயிரம் பெண்களின் தாலியை அறுத்த

தமிழக மக்களுக்கு கடுகளவு நன்மையும் மலையளவு கேடுகளும் செய்த

ஒரு ஒழுக்கம்கெட்ட
திமிர்பிடித்த
கோமளவல்லி என்ற கன்னட வந்தேறி

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து

தனிமரமாய் இறந்ததில்

தமிழ்தேசியவாதியாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

Thursday, 24 November 2016

மதிமாறியவனுக்கு கரிநாய் பாணி பதில்

மதிமாறியவனுக்கு கரிநாய் பாணி பதில்

"அம்மையார் சட்டமன்றத்தில் ஒரு வாக்கியத்தை தவறாகக் கூறிவிட்டதாகக் கூறுகிறார்.

அதெப்படி முழு வாக்கியமும் தவறி வரும்?

வாக்கியத்தில் ஒரு எழுத்தோ உச்சரிப்போ பிறழ்ந்து வரலாம்.

கோவலனை பாண்டிய மன்னன் 'கொண்டு வருக' என்பதற்குப் பதில் 'கொன்று வருக' என்று கூறியது போல"

- கருணாநிதி ஜெயலலிதாவுக்கு அளித்த பதில்

Saturday, 24 September 2016

காவிரித் தாயாம்ல?!

காவிரித் தாயாம்ல?!

அதிமுக கொத்தடிமையே

ஒங்கம்மா சட்டபோராட்டம் நடத்தி காவிரிய கொண்டாந்தாளா?!

சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் முதல் வாரமே தண்ணீர் வந்தால்தான் வேலையைத் தொடங்கமுடியும்.
நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் 134 டிஎம்சி.

ஒங்கொம்மா முக்கி முக்கி செப்டம்பர்ல பிச்சையா வாங்கி தந்தது வெறும் 13 டி.எம்.சி.

இதவச்சி சம்பா பயிரிடணும்னா காலியான ஓ தலைலதான் பயிரிடணும்.

Friday, 3 June 2016

570 கோடி கண்டெய்னர்களும், ஜெயா, மோடி & லக்கானியின் கூட்டும், நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும்

570 கோடி கண்டெய்னர்களுக்கு பின்னால்
ஜெயா, மோடி & லக்கானியின் கூட்டும்,
நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும்

விடை தெரியாத கேள்விகள்..

14.5.2016 சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு செங்கப்பள்ளி அருகே மூன்று கண்டெய்னர்கள் பணத்துடன் பிடிபடுகின்றன!

சரியாக 18 மணி நேரம் கழித்து ஸ்டேட் பேங்க் அது தங்கள் பணம் என்று சொந்தம் கொண்டாடுகிறது!
அதற்கான சில ஆவணங்களையும் அது சமர்ப்பிக்கிறது!

அந்த ஆவணத்திலிருக்கும் தேதி கன்டெய்னர் லாரியின் எண் உட்பட பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன!

ரிசர்வ் வங்கி, தனக்கு இந்தப் பணப் பரிமாற்றம் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று கையை விரிக்கிறது!

ஆனால் நாட்டின் நிதி அமைச்சர் இரண்டு நாள் கழித்து அது ஸ்டேட் வங்கியின் பணம்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்!

அவ்வளவுதான்! அறிவு ஜீவிகள் எல்லோரும் இதைப்பற்றிக் கேள்வி கேட்பவர்களை எள்ளி நகையாடுகிறார்கள்!

வழக்கம்போல் கேள்வி கேட்பவன் முட்டாள் என்றும்,
வேறு வேலை இல்லாதவன் என்றும் ஒருமனதாகத் தீர்மானிக்கப் படுகிறது! சுபம்!

அப்படி முத்திரை குத்தப்பட்ட ஒரு முட்டாளின் சந்தேகங்களில் மிகச் சில!

1. செங்கப்பள்ளி, கண்டெய்னர் புறப்பட்டதாகச் சொல்லப்படும் கோவையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!
லாரிகள் ஒரு மணிக்கு செங்கப்பள்ளி வருகின்றது என்றால்,
கோவையிலிருந்து அதிகபட்சம் நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டிருக்கவேண்டும்!
கோவையில் வங்கிப் பெட்டகம் நள்ளிரவு வரை திறந்திருக்குமா?
அப்படித் திறந்திருக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறதா?

2. விடிந்தால் சனிக்கிழமை, அடுத்தநாள் ஞாயிறு, இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை!
அந்தக் கண்டெய்னர்கள் எந்த நாளில் அந்தப் பணத்தை எந்த வங்கியில் கொண்டுபோய் ஒப்படைக்கும்?
அதற்கும் ஆர் பி ஐ அனுமதி அளித்திருக்கிறதா?

3. வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்லவேண்டிய வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன!
அதன்படி அந்த வண்டிகளில் GPS பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டனவா?

4. அந்த பரிமாற்றத்துக்கான இன்ஸ்யூரன்ஸ் ஆவணங்கள் எங்கே?

5. இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றம் பற்றி நெறிமுறைகளின்படி உள்ளூர் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதா?

6. வழியிலிருக்கும் டோல்கேட்டைத் தவிர்ப்பதற்காக அந்த வண்டிகள் மாற்றுப் பாதையில் சென்றதாக அறிவித்திருக்கிறார்கள்!
அந்த மாற்றுப்பாதை, ஆள் நடமாட்டமற்ற வயல்வெளிகளிடையே சுமார் பத்து கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டும்.
ஒரு பொதுத்துறை வங்கியின் 570 கோடி ரூபாயை எடுத்துச் செல்லும் வண்டிகள் ஒரு 350 ரூபாய் சுங்கவரி செலுத்தப் பயந்துகொண்டு ஆள் நடமாட்டமில்லாத பாதையில் செல்ல முடிவெடுத்தது எந்தவகையான சிக்கன நடவடிக்கை
அல்லது முட்டாள்தனமான ரிஸ்க்?
இதை யார் அனுமதித்தது?

7. தேர்தல் அதிகாரிகளை அடையாளம் தெரியாமல் கொள்ளையர்கள் என்று நினைத்து நிற்காமல் விரைந்துபோனதாகச் சொல்லியிருக்கும் வண்டியின் பாதுகாவலர்களுக்கு சக போலீஸ்காரர்களை அடையாளம் தெரியவில்லை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்,
அவர்களின் ஆயுதங்களும் பயந்து பதுங்கிக்கொண்டனவா?

8. கொள்ளையர்களுக்கு பயந்து செல்பவர்கள் ஆள்நடமாட்டமில்லாத பாதையைத் தேர்ந்தெடுப்பார்களா,
நடமாட்டம் மிக்க ஹைவேயைத் தேர்ந்தெடுப்பார்களா?

9. விதிமுறைப்படி GPS கண்காணிப்பில் இருக்கும் வாகனங்கள் மாற்றுப்பாதையை எந்த தைரியத்தில் தேர்ந்தெடுத்தன?
அது எப்படி கண்காணிப்பில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது?

10. தகவல் பரிமாற்றத்துக்கு இவ்வளவு வழிமுறைகள் இருக்கும் காலகட்டத்தில் 18 மணிநேரம் எதற்காகத் தேவைப்பட்டது?
தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவா?

11. ரிசர்வ் வங்கி மண்டல அதிகாரி இந்தப் பரிமாற்றம் தங்களுக்குத் தெரியாமல் நடந்ததாகச் சொன்ன காரணம் என்ன?

12. இவ்வளவு பெரிய தொகை ஆர்.பி ஐக்குத் தெரியாமலே பரிமாற்றம் செய்யப்பட்டதா?
அப்படியெனில் அதற்கு அனுமதி அளித்தவர் யார்?

13. எல்லா விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு இவ்வளவு அலட்சியமாக இந்தத் தொகைப் பரிமாற்றம் செய்யப்பட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அதிகாரிகளுக்குத் தெரியாதா?
தாங்கள் பணிநீக்கம், கைது, செய்யப்படுமளவு ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க அவர்களைத் தூண்டியது யார், அல்லது எது?

14. சாதாரண நேரத்திலேயே கடும் விதிமுறைகளுக்கு உட்பட்ட பணப் பரிவர்த்தனை தேர்தல்கால விதிமுறைகள் கடுமையாக அமலில் இருக்கும்போது தீவிரமாக்கப்படுமா, அலட்சியப்படுத்தப்படுமா?

15. ஒரு சாதாரண தனி மனிதன் 50000 ரூபாய் கொண்டுசெல்லவே முறையான ஆவணங்கள் தேவைப்படும் தேர்தல் காலத்தில்,
மாநிலம் விட்டு மாநிலம் நள்ளிரவில் செல்லும் வங்கிப்பணம் ஆவணங்களே இல்லாமல் நள்ளிரவில் அனுப்பப்படுமா?

16. இத்தனை விதி மீறல்களோடு விடுமுறை நாளில் பணத்தை எடுத்துச் செல்ல அனுமதி அளித்ததற்கு எந்தப் புண்ணியவான் பொறுப்பேற்றுக்கொண்டார்?

17. இந்திய நிதி அமைச்சர் இதில் எல்லோருக்கும் முந்திக்கொண்டு துள்ளிக் குதிக்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கி, ஆர் பி ஐ உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள்?

18. இந்த அப்பட்டமான விதிமீறல்களை மத்திய நிதி அமைச்சர் அங்கீகரிக்கிறாரா?

19. 570 கோடி ரூபாய்க்கு மூன்று கண்டெய்னர் தேவையா?
அப்படியானால் அதன் டினாமிநேஷன் அனுப்பிய பெட்டகத்தின் லெட்ஜர்களில் இருந்து கொடுக்கப்பட்டதா?

20. உள்ளூர் வங்கிகளுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனையின்போதே சீல் செய்து அனுப்பப்படுகையில் இத்தனை கோடி வங்கிப்பணம் அனுப்பப்பட்ட வாகனங்கள் ஒரு சாதாரணப் பூட்டால்தான் பூட்டப்படுமா?

இவை வெறும் அடிப்படைக்கேள்விகள்!

இவற்றுக்கான பதில்கிடைக்குமானால் இன்னும் சிலசந்தேகங்களைக் கேட்போம்!
நாம் வெறும் கேள்வி கேட்கும் முட்டாள்கள்தானே!

கடைசியாக ஒரு சின்ன வேண்டுகோள்!

அறிவுசார் பொதுத்துறை வங்கி அதிகாரிகளே,
அந்தப் பணம் யாருடையதென்று அரசியல்வியாதிகள் அவர்களுக்குள் அடித்துக்கொள்ளட்டும்!
அவர்கள் வீசும் எலும்புகள் உங்கள் மாண்பைக் குலைக்காது காத்துக்கொள்ளுங்கள்!

N.B:
வங்கிகளிடையேயான பணபரிமாற்றத்துக்கான சில RBI விதிமுறைகள்:
1. In case of any movements of large amounts of cash report to the superiors and the nearest police station/Police Control Room.

2. While organizing movement of cash between branches, (currency chest or other branches) planning should be done by bank officials in consultation with security/police officers.

3. Avoid taxies or other hired vehicles and use own transport as far as possible, with facilities like proper cavity and it should be properly camouflaged.

4. The armed guards/police guards accompanying the treasure should always be in ready position and should not be taken by surprise.

5. It may be ensure that cash cages are fitted with grilles/wire-mesh nets with automatic locks.

6. Security Van Layout: Typical van layout should conform to the following standards:
• Make : LMV (Light Motor Vehicle) or any other vehicle of similar type. • Van should have 3 independent compartments.
The compartment for storing cash to be physically separated and locked from the other compartments.

7. Security: Vehicles should adhere to the following minimum security guidelines to ensure safe passage of cash and other valuables:
• Monitoring: Each van should be monitored at all time through a communications protocol.
The van should have a GPS installed and also the controlling technology for immobilizing the van whenever required.
• Cash Security: The cash compartment must be specially reinforced with steel, with only one door and should be inaccessible from outside the van unless operated internally by the custodians through levers controls.
•Each of the cash boxes must be secured to the floor with separate chains and should have 2 padlocks that can be opened or locked only by using separate keys available with different custodians.
•Cash for each bank should be carried in a separate box with the name of the bank written on it.

8.Incident security:
Vans should be equipped with hooters, fire extinguishers etc for quick reaction in case of an attack.

9. Armed security guards/Gunmen: One or more armed guard depending on the amount of cash carried and as per individual company’s insurance guidelines/ client contract.

10.Minimum cash carrying guideline:
Security vans should compulsorily be deployed for carrying cash of value more than Rs. 20 lakhs per trip.

11. Maximum cash carrying guideline:
Security vans should not carry more than Rs. 5 crores per trip.
Size of the crew for the security van
• Driver – 1
• Armed Security guards – 1 or 2 depending on cash carrying limit.
• ATM Officer / Custodians – 2 Weapons
• Single/double barrel guns to be used under valid licenses.

(வாட்சப் செய்தி)