Tuesday 19 September 2017

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.

மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.

பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.

மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)

ஆனால்,

தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.

சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)

அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.

இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).

மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.

தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.

(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)

1 comment:

  1. நீங்கள் அன்று சொன்னது இன்று நடந்து கொண்டிருக்கின்றதே! எப்படி?!!! அம்மா மக்கள் என்பதை அனைத்து தமிழர் முன்னேற்றக் கழகம் என மாற்றினால் மேலும் சிறப்பே!!

    ReplyDelete