Wednesday 20 September 2017

இடது - வலது குழப்பம்

இடது - வலது குழப்பம்

இப்படித்தான் புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் கம்யூனிச இடதுசாரி சிந்தனை சில மேதாவிகளால் புகுத்தப்பட்டது.
ஆன்டன் பாலசிங்கம் அதில் முக்கியமானவர்.

அப்போது புலிகளின் தலைவர் முகுந்தன்.
புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் 5 பேரில் பிரபாகரன் தவிர மற்றவர்கள் இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டனர்.

  நம் தலைவர் பிரபாகரனுக்கோ கம்யூனிசம் இடதுசாரி போன்றவை தொடக்கத்திலேயே பிடிக்கவில்லை.

இது தமிழக விடுதலைக் குழுக்களுடன் புலிகள் கைகோர்க்காமைக்கு முக்கிய காரணம்.

சிவப்பு சிந்தனை முற்றி ஒரு கட்டத்தில் ஆயுதமெல்லாம் தேவையில்லை.
மக்களை திரட்டி புரட்சி செய்வதே சரி என்று பலர் இடது பக்கம் சாய,
தலைவர் மட்டும் அதை ஒத்துக்கொள்ளாமல் ஆயுதவழியில் அரசு அமைத்து பிறகு அதில் சோசலிசத்தைக் கொண்டுவருவதே தீர்வு என்று தொடர்ந்து வாதிட்டார்.

தலைவருடன் நின்றது பேபி சுப்பிரமணியம் ஒருவர் மட்டுமே.

கடைசியில் உங்களுக்குதான் ஆயுதம் தேவையில்லையே என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள் என்று தலைவர் கேட்க ஆயுதங்கள் அவரிடம் ஒப்படைப்பட்டன.

இப்போது இடதுசாரி பிரிவு மேலும் இரண்டாக உடைந்தது.
ஆயதமும் தேவை என்று ஒரு பிரிவு.
ஆயுதம் தேவையில்லை என்ற பிரிவு.

தலைவர் யாரென வாக்கெடுப்பு மூலம் முடிவுசெய்ய வாக்கெடுப்பும் நடந்தது.
அதிலும் பிரபாகரன் இரண்டாம் இடத்தையே பிடித்தார்.

அப்போது பிரபாகரன் ஒரு துணிச்சலான முடிவு எடுத்தார்.

எவரும் எக்கேடும் கெட்டுப்போங்கள் என்று ஆயுதங்களுடன் பேபி சுப்பிரமணியத்தை மட்டும் அழைத்துக்கொண்டு தனியே பிரிந்துபோய் தன் வழியில் தனியாக இயங்கினார்.

  நாளடைவில் இடதுசாரி பிரிவு, பத்திரிக்கை பரப்புரை என்று ஜனநாயக வழிமுறைகளைத் தொடங்கி
மக்கள் புரட்சி புடலங்காய் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு கடைசியில் வேறுவழியின்றி ஆயுதத்தை தூக்கி புளோட் இயக்கமாகி அதிலும் வலது இடது என்று குழம்பி
பிரபாகரனுடனும் மோதி கடைசியில் அனைவரும் காணாமல் போனார்கள் அல்லது செத்து போனார்கள்.

பிரபாகரன் முதலில் டெலோவுடன் சேர்ந்தார் (அப்போது அதற்கு பெயர் இல்லை)
குட்டிமணி ஜெகன் சிறையில் சிங்களவரால் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கமும் வலுவிழந்தது.

பிரபாகரன் வழிதான் சரியென்று ஆன்டன் பாலசிங்கம் உட்பட பலரும் அவரின் தலைமையின் கீழ் வந்துசேர ஆரம்பித்தனர்.
தலைவரும் டெலோவிலிருந்து விலகிவிட்டார்.
இவ்வாறாக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைவர் கைக்கு வந்தது.

கடைசியில் டெலோ உட்பட அனைத்து குழுக்களும் இந்தியாவிற்கு ஆதரவாக மாற
தனியாக புலிகள் மட்டுமே உறுதியாக நின்றனர்.

அத்தனை போட்டிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்து இந்தியாவின் படை சிங்கள தளபதிகளையும் சேர்த்துக்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தது.

அனைத்துவகை கனரக தளவாடங்களுடன் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்த அந்த பெரிய கூட்டணியை
வெறும் 2000 புலிகளையும் அன்று ஆயுதச் சந்தையில் புதிதாக அறிமுகமாயிருந்த அதிநவீன துப்பாக்கியையும் மட்டுமே வைத்துக்கொண்டு ஒற்றை ஆளாக எதிர்த்து களமாடி பிரபாகரன் தோற்றொடச் செய்தார்.
அதோடு டெலோவையும் இல்லாதொழித்தார்.

அனைத்து குழுக்களும் தலைமை அழிந்தபின் புலிகளிடம் வந்து சேர புலிகளின் ராணுவ எழுச்சி கம்யூனிசம் நூறாண்டுக்குப் பிறகு சாதிக்க இருந்ததை 20 ஆண்டுகளில் சாதித்தது.

தனி அரசாங்கம், முப்படை, உலகிலேயே பணக்கார ஆயுதக்குழு பட்டியலில் முதல் ஐந்து இடம், பாமரர் வரை அரசியல் விழிப்புணர்வு, மக்களுக்குக்கான ஆட்சி என புலிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றனர்.

வலது இடது குழப்பம் இருந்ததால் பத்தாண்டுகள் பின்னடைவு அடைந்தாலும் பிரபாகரன் எனும் ஒரு மனிதனின் உறுதி இதைச் சாதித்தது.

உலக கார்ப்பரேட் முதலாளிகள் மண்ணைச் சுரண்ட பெரும் தடையாக புலிகள் இருந்தனர்.

கடைசியில் கார்ப்பரேட்களுக்கு பணியாத சதாம் உசேன், கடாபி போல பிரபாகரன் உலக வல்லாதிக்கங்களால் ஒன்றுசேர்ந்து பெரும் முயற்சிக்குப் பிறகு வீழ்த்தப்பட்டார்.

புலிகள் வீழ ஒரே ஒரு காரணம் அவர்கள் தமிழ்த் தாய்நிலத்தின் ஒரு பகுதியான தமிழகத்தை அந்நிய நாடாகக் கருதியதே ஆகும்.

தேசியம் என்பது முழு தேசிய இனத்திற்கும் சேர்த்துதான் என்பதை புலிகள் உணராததே பெரிய தவறாகிவிட்டது.

ஈழத்தைப் போலவ 1980களில் இடதுசாரி தமிழகப் போராளிகளும், தமிழரசன் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையின்போது பொதுமக்கள் போல வேடமிட்ட உளவுத்துறையால் அடித்துக்கொல்லப்பட பெரும் பின்னடைவை சந்தித்தனர்.

தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) இரண்டாக உடைந்து அதில் இடது சுப.இளவரசன் தலைமையில் தனிக் குழு உருவானது.
மாறன் தலைமையிலான வலதுசாரி பிரிவு ஆயுதவழியில் வளர்ந்து நின்ற வீரப்பனாருடன் சேர்ந்து ராஜ்குமார் கடத்தல் உட்பட சில விடயங்களை சாதித்தனர்.

தமிழ்நாடு மீட்சிப் படைகள் (TNRT) புலிகளுடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
சுப.முத்துக்குமார் அதைச் செய்தார்.
அவரும் பிரபாகரனும் வீரப்பனும் மாறனும் இணைந்து கூட்டணி அமைக்கும் சூழல் 2000களில் வந்தது.
ஆனால் கொள்கை முரண்பாடுகளால் அது நடக்கவில்லை.

சுப.முத்துக்குமார் காவல்துறையில் பிடிபட்டார்.

வீரப்பனாரை 32 ஆண்டுகளுக்குப் பிறகு படாத பாடு பட்டு வீழ்த்தினார்கள்.

கடைசியாகப் பிரபாகரன் வீழ்த்தப்பட்டார்.

இப்படியாக தமிழினத்தின் ராணுவ எழுச்சி முற்றாக ஒழிக்கப்பட்டது.

தற்போது எந்த தடையுமின்றி தமிழர் மண் மீது முழுவீச்சில் சுரண்டல் நடக்கிறது.

நல்லவேளையாக சுப.முத்துக்குமார் வெளியேவந்து மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்படும் முன் நாம்தமிழரை ஆரம்பித்து சீமானிடம் கொடுத்துவிட்டார்.

இல்லையென்றால் சீமான் இடத்தில் வைகோ இருந்திருப்பார்.

சுரண்டலை எதிர்க்கும் இனம்சார்ந்த அந்த ஒரு கட்சியும் இல்லாது போயிருக்கும்.

அதாவது ஒரு தேசிய எழுச்சியை வலது இடது நட்டநடு என்று பிரிப்பது பெரும் பின்னடைவைத் தரும் என்பது இதிலிருந்து புரிகிறது.

நம் இனத்தில் என்றோ எவனோ எங்கேயோ தூக்கிய ஆயுதம்தான் இன்றுவரை நம்மை பல்வேறு வடிவங்களில் காப்பாற்றி வந்துள்ளது.

மக்களை அரசியல் மயமாக்குவோம்.
கிராமம் கிராமமாக பேசுவோம்.
மக்களைத் திரட்டி நாடுமுழுக்க ஒரே நேரத்தில் புரட்சி செய்வோம் என்பதெல்லாம்
கல்யாணத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு தாலிகட்டும் அன்று பெண்தேடுவோம் என்பதுபோல முட்டாள்த்தனமானது.

தனிநாடுக்கான அத்தனை அடிப்படையும் நம்மிடம் உள்ளது.
தற்போது தேவை அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஆயுதவலு மட்டுமே.

உணவுக்கே வழியில்லாத நிலை வந்தால்தான் மக்கள் புரட்சி வெடிக்கும்.
அதுவரைக்கும் வல்லாதிக்கம் சுரண்டிக்கொள்ள அனுமதிப்பதே மேற்கண்ட மக்கட்புரட்சி சிந்தனை.

நாம் ஆயுதம் தூக்கவேண்டும்.
மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்கவேண்டும்.
மக்கள் தானாகவே நம்மைப் பற்றி அறிந்துகொள்வார்கள்.
மக்கள் ஆதரவுடன் மேலும் ஆயுதம் வாங்கி அதன்மூலம் பெற்ற ராணுவ வலிமையால் நமது தாய்நிலம் முழுவதையும் கைப்பற்றி தனிநாடு அமைக்கவேண்டும்.

இதுதான் விடுதலைக்கான ஒரே வழி. புலிகளின் வழி.

அதன்பிறகுதான் நாம் எந்த கொள்கையை பின்பற்றுவது என்று முடிவெடுக்கவேண்டும்.

இப்போதே குழம்பக்கூடாது.

குழப்புவோரை ஆதரிக்கவும் கூடாது.

No comments:

Post a Comment