Saturday 16 September 2017

முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்

முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்

நல்லவேளை குழப்பவாதிகள் ஈழத்தில் பிறந்திருந்தால்
"ஈழம் என்பதே வெள்ளாளர் தேசியம்.
பிரபாகரன் உட்பட அனைவரும் ரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள்.
உலகம் முழுவதும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
கோட்டை, கப்பல் எல்லாம் வைத்திருந்தார்கள்.
எனவே இவர்களை ஒழித்துவிட்டு தமிழ் வம்சாவழி சிங்கள சாதிகளான கரவ, துரவ, ,சாலகாம, வேட போன்றவர்களுடன் கைகோர்த்து தனிநாடு கேட்டால் அடுத்த நொடி ஈழம் கிடைத்துவிடும்.
நம்பமுடியவில்லையா இதோ பிடி சான்று"
என்று இந்திரா சௌந்திரராஜன் மாதிரி அமானுஷ்யமாக பத்து புத்தகங்கள் போட்டிருப்பார்கள்.
நண்டு சிண்டுகள், அம்புலி மாமா ரசிகர்கள், மூடநம்பிக்கையில் ஊறிப்போனவர்கள் பலரும் வாங்கி படித்து ஆகா ஓகோ என்று 100, 120 கடிதம் எழுதியிருப்பார்கள்.
சிங்களவர் தலையில் தூக்கிவைத்து ஆடியிருப்பர்.
நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை இத்தகைய குழப்பவாதிகள் இருந்திருக்கலாம்.
அவர்கள் குரல்வளை சத்தமேயில்லாமல் புலிகளால் நெரிக்கப்பட்டு காணாமலடிக்கப் பட்டிருக்கலாம்.

யாருக்கு தெரியும்?

No comments:

Post a Comment