Showing posts with label ம.கோ.ரா. Show all posts
Showing posts with label ம.கோ.ரா. Show all posts

Monday, 5 March 2018

கச்சத்தீவை வரைபடத்தில் இருந்து நீக்கிய எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ஆட்சி

கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆட்சி.

(படம்: 1982 எல்லை மாற்றம் தொடர்பான இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு
நன்றி: விகடன்)

Sunday, 8 October 2017

எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்!

சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.
அதைத் திறந்துவைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்துகொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறிவிடுகிறார்.
உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.
இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.
தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.
ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.
கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.
(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).
அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.
அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே!
அன்று கருணாநிதி குற்றம்சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர்நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி
அதன்பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு
அதன்பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

Friday, 1 September 2017

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்!

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது (???!!!!)

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலைசெய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார், கொள்ளையடித்துவிட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன்தான்
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து,
கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலைசெய்யப்பட்டார்.

மேலும் அறிய,

காண்க காணொளி :-
தமிழரசன் வங்கி கொள்ளை பற்றி பழனிபாபா (vaettoli.wordpress)

search இனம்னா என்ன? வேட்டொலி

search வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி வேட்டொலி

Tuesday, 12 April 2016

எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்

எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்

அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைக் கொன்றார்

நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி 14 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்

தர்மபுரி, ஆற்காடு பகுதிகளில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 21 இளைஞர்கள் தேவாரம் தலைமையிலான காவல்படை சுட்டுக் கொலை செய்தது.

வேப்பந்தட்டையில் பஸ் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைக் கொன்றார்

சென்னை வியாசர்பாடியில் விசாரணை என்ற பேரில் ஒரு அப்பாவி இளைஞனைத் துன்புறுத்திக்கொன்றது போலீஸ்.
அதைக் கண்டித்துத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றது.

நடு இரவில் சென்னை கடற்கரையில் மீனவர் குடியிருப்பை அடித்து நொறுக்கிய போலீஸ் பலரை சுட்டுக் கொன்றது.

விழுப்புரம் நகரில் பட்டியல் சாதியினர் 12 பேர் அ.தி.மு.க வினரால் வெட்டிக்கொலை
ஒரு பட்டியல்சாதி பெண்ணை மதுராந்தகம் அ.தி.மு.க அலுவலகத்திற்கே தூக்கிவந்து கற்பழித்து கொன்று போட்டனர்

நாகப்பட்டணம் எம்.பி யையே அ.தி.மு.க கொலை செய்தது.

திருச்செந்தூர் நகைக் கொள்ளை, அதை சரி பார்க்க வந்த அரசு அதிகாரி கொலை.

இன்னும் வெளிவராத அ.தி.மு.க குண்டர்கள் செய்த கொலைகள் பல உண்டு

நன்றி: வினவு தளத்தின்
"எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !"
கட்டுரை
------------------------
இது போக தனித்தமிழ்நாடு போராளி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் இந்திய உளவுத்துறை கொலை செய்தது இவர் ஆட்சியில்தான்

இடவொதுக்கீடு போராட்டத்தின் துணை ராணுவம் வந்து 21 பேரைக் கொன்றதும் இவர் காலத்தில்தான்

M.G.R ஒரு மலையாளியே
vaettoli.blogspot.in/2016/01/mgr.html?m=1
மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?
vaettoli.blogspot.in/2016/01/blog-post_12.html?m=1

Sunday, 7 February 2016

தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர்சூட்டியது யார்?

தென்னிந்திய நடிகர் சங்கம்
என பெயர்சூட்டியது யார்?

1959ல் 'தமிழ் நடிகர் சங்கம்'
தொடங்கவிருந்த இயக்குனர் கே.சுப்ரமணியத்தை சந்தித்து அதை
'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர்மாற்றச் செய்தவர்
மலையாளி ம.கோ.இரா (எம்.ஜி.ஆர்)

Tuesday, 12 January 2016

மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?

மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?

அவர் உதவியிராவிட்டால் தமிழக மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பர்.
2009ல் உதவாத கருணாநிதியைத் தூக்கியெறிந்தது போல.

ராசீவின் உத்தரவுப் படி எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.
உடனே சென்னையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழகமே கிளர்ந்தெழுந்தது.
வெறும் 24 மணிநேரத்தில் மத்திய அரசு பணிந்தது.
இதுவே திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்திய அமைதிப்படை விடயத்தில் பணியவில்லை என்பதை நினைவில் கொள்க.

ஜெயலலிதா ஈழ தீர்மானம் போட்டதும்,

கருணாநிதி காயம்பட்ட ஈழப்போராளிகளை சிறிலங்கா அனுப்ப எம்.ஜி.ஆர் முடிவுசெய்தபோது
சென்னை மெரினாவில் பத்துமணிநேரத்தில் பத்தாயிரம் தொண்டர்களைத் திரட்டிப் போராடித் தடுத்ததும்,

ம.கோ.இரா ஈழத்திற்கு வெளிப்படையாக அறிவித்து பணம் கொடுத்ததும் அரசியல் ஆதாயத்திற்குதான்.

இந்திய ராணுவம் திரும்பி வரும்போது வரவேற்கப் போகமாட்டேன் என்றார் கருணாநிதி.
அந்த அளவு ஈழ ஆதரவு உச்சத்தில் இருந்த நேரம் அது.

M.G.R ஒரு மலையாளியே

M.G.R ஒரு மலையாளியே

தான் ஒரு மன்றாடியார் என்று ம.கோ.இரா கூறியது பொய்.

அவரது தந்தை ஒரு மலையாள மேனன்.
ஆனால் தாய் மலையாளம் பேசும் தமிழ் இனமான ஈழவர்.

அவர் ஈழத்திற்கு உதவியதை பெரிதாகக் கூறுகிறார்கள்.

அன்று அவர் ஈழத்திற்கு உதவாவிட்டால் 2009ல் உதவாததற்காக கருணாநிதியைத் தூக்கிவீசியது போல
தமிழக மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள்.

அவரது உண்மை முகம் முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தெரிகிறது.

25.11.1979ல் முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேச தமிழகத்திலிருந்து 47 பேரும்
கேரளாவிலிருந்து 47 பேரும்
சென்றனர்.

இதில் தமிழகக் குழுவில் 46 மலையாளிகளும் 1 தமிழரும் இடம்பெற்றிருந்தனர்.

அந்த தமிழர் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது.

அவர் அணை மட்டத்தைக் குறைப்பதை கடுமையாக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.

94ல் 93பேர் ஆதரவுடன் அணையின் மட்டம் குறைக்கப்பட்டது.

அது இன்றுவரை உயர்த்தப்படவில்லை.

1981ல் கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டு போனது.

எம்.ஜி.ஆர் அதைத் தட்டிக்கேட்கவில்லை.

என்ன செய்யமுடியும் என்கிறீர்களா?

மலையாளிகளின் உணவுத்தேவை 90% தமிழகத்தை நம்பி உள்ளது.
முல்லைப்பெரியாறு நீர்தான் தமிழகத்தில் உணவாக விளைந்து மீண்டும் கேரளா செல்கிறது.
ஒரு வாரம் உணவு செல்வதைத் தடுத்தால் கேரளா பணிந்துவிடும்.

1987வரை எம்.ஜி.ஆர் எதுவும் செய்யவில்லை.

அதன்பிறகு கருணாநிதி 1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைந்த அணையையாவது கட்டித்தாருங்கள் என்று.

அதன்பிறகு ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.

பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாளிகள்.