Tuesday 12 January 2016

M.G.R ஒரு மலையாளியே

M.G.R ஒரு மலையாளியே

தான் ஒரு மன்றாடியார் என்று ம.கோ.இரா கூறியது பொய்.

அவரது தந்தை ஒரு மலையாள மேனன்.
ஆனால் தாய் மலையாளம் பேசும் தமிழ் இனமான ஈழவர்.

அவர் ஈழத்திற்கு உதவியதை பெரிதாகக் கூறுகிறார்கள்.

அன்று அவர் ஈழத்திற்கு உதவாவிட்டால் 2009ல் உதவாததற்காக கருணாநிதியைத் தூக்கிவீசியது போல
தமிழக மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள்.

அவரது உண்மை முகம் முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தெரிகிறது.

25.11.1979ல் முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேச தமிழகத்திலிருந்து 47 பேரும்
கேரளாவிலிருந்து 47 பேரும்
சென்றனர்.

இதில் தமிழகக் குழுவில் 46 மலையாளிகளும் 1 தமிழரும் இடம்பெற்றிருந்தனர்.

அந்த தமிழர் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது.

அவர் அணை மட்டத்தைக் குறைப்பதை கடுமையாக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.

94ல் 93பேர் ஆதரவுடன் அணையின் மட்டம் குறைக்கப்பட்டது.

அது இன்றுவரை உயர்த்தப்படவில்லை.

1981ல் கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டு போனது.

எம்.ஜி.ஆர் அதைத் தட்டிக்கேட்கவில்லை.

என்ன செய்யமுடியும் என்கிறீர்களா?

மலையாளிகளின் உணவுத்தேவை 90% தமிழகத்தை நம்பி உள்ளது.
முல்லைப்பெரியாறு நீர்தான் தமிழகத்தில் உணவாக விளைந்து மீண்டும் கேரளா செல்கிறது.
ஒரு வாரம் உணவு செல்வதைத் தடுத்தால் கேரளா பணிந்துவிடும்.

1987வரை எம்.ஜி.ஆர் எதுவும் செய்யவில்லை.

அதன்பிறகு கருணாநிதி 1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைந்த அணையையாவது கட்டித்தாருங்கள் என்று.

அதன்பிறகு ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.

பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாளிகள்.

No comments:

Post a Comment