Wednesday 20 January 2016

குறிஞ்சாக்குளம் கூடுதல் ஏன்?

குறிஞ்சாக்குளம்
கூடுதல் ஏன்?

வடயிந்தியர்கள் ஒரு 5லட்சம் பேர்
கன்னியாகுமரியில் மகா யாகம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்த மாத இறுதியில்.

உமேஷ்சந்திர சர்மா என்ற பிராமணர் தலைமையில்
விவேகானந்த கேந்திரம் சார்பில்
551 யாக குண்டங்கள்
ஒவ்வொரு குண்டத்திலும் 13 பிராமணர்கள் 3 நாட்கள் யாகம் செய்வார்கள்.
ஹிந்தியிலேயே பிரச்சாரம், பதாகைகள், பக்தி பாடல்கள், சமஸ்கிருத மந்திரங்கள், பகவத்கீதை புத்தகம் வழங்குதல், ஹிந்து புராண நாடகங்கள் எல்லாம் உண்டு.

ஹிந்தியா முழுவதும் இருந்து குறைந்தது 3லட்சம் ஹிந்தியர்கள் வருகிறார்கள்.
தமிழகத்தில் வடயிந்தியனுக்கா பஞ்சம்?!
அவர்கள் ஒரு 2லட்சம்,
ஆக மொத்தம் 5லட்சம் பேர் கூடுவார்கள்.

நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த 28,29,30 தேதிகளில் கன்னியாகுமரி போனால் தெரியும்.

ஏன்?

தமிழக மண்ணில் வட ஹிந்தியர்கள் அடிக்கடி இப்படி பெரும் எண்ணிக்கையில் கூடுவது ஏன்?

நமக்கு பயத்தை உருவாக்கத்தான்.
நாம் சிறுபான்மையாம்.
அவர்கள் 100 கோடியாம்.
இது அவர்கள் நாடாம்.

நாம் குறிஞ்சாக்குளத்தில் கூடப்போவது கிட்டத்தட்ட இதே நோக்கத்திற்காகத்தான்.

ஹிந்தியா இங்கே கூட்டம் கூட்டுவது ஆக்கிரமிப்பை நோக்கமாகக்கொண்டது.

நாம் குறிஞ்சாக்குளத்தில் கூட இருப்பது ஆக்கிரமிப்பை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டது.

தாய்நிலத்தில் ஒரு தமிழனை அவன் சாதியைக் காரணம்காட்டி ஒண்டவந்த வந்தேறுகுடிகள் ஒடுக்க நினைத்தால் மொத்த தமிழனும் வந்து நிற்பான் என்று காட்டவேண்டும்.

உள்ளூர் தமிழனுக்காகக் களத்தில் இறங்காத ஒரு தமிழன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்க்கமுடியும்?

நான் உங்களை
சோமாலியா பஞ்சத்திற்காகவோ
சிரியா அகதி பிரச்சனைக்கோ
தண்டகாருண்ய மாவோயிஸ்ட்களுக்காகவோ
போராட வரச்சொல்லவில்லை.

உங்கள் மண்ணின்
உங்கள் மக்களின் உரிமைப் பிரச்சனைக்காகத் தான் களத்திற்கு வரச்சொல்கிறேன்.

அதைக் கூட செய்யவிருப்பம் இல்லாவிட்டால்,
உங்களுக்கு நாளையே ஒரு பிரச்சனை வரலாம்,
அப்போது எவனும் வரமாட்டான்.

#சனவரி24குறிஞ்சாக்குளம்

No comments:

Post a Comment