பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்
சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்.
இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.
அது எங்கே?
இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?
17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
இதைத் தவறவிட்டது யார்?
பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு ஊடகம் கூடவா இல்லை?
தலித் ஊடகங்கள் கூட இதனை பயன்படுத்திக்கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?
Monday, 25 April 2016
பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்
Friday, 1 April 2016
பறைய"ர்"
பறைய"ர்"
○○○○○○○○
பறையர்களை எவ்வாறு அழைப்பது?
தலித் என்று அழைக்கலாமா?
ஓ அழைக்கலாமே!
சிறைக்கம்பிகளை எண்ணவேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.
1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981
2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999
3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999
ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"
போன்ற *இழிவுப் பெயர்களால்* அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.
ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.
ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?
1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.
மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.
1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு,
குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.
ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி,
சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.
இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.
அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.
இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.
ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.
பறையர்களை பலமுறை சாதிவெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.
( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)
கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?
பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.
அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம்.
ஆதிகுடிகளாக இருக்கக்கூடாதாம்.
ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.
அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.
அவமானப்படுத்தும் வகையில் சாதிப்பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்.
Sunday, 7 February 2016
பறையும் ஆண்டாளின் இறைவனும்
பறையும் ஆண்டாளின் இறைவனும்
---------------------------------------------------------
1. நாராயணனே நமக்கே "பறை " தருவான்
(தி:1 - மார்கழித் திங்கள்)
2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை " கொண்டு
(தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)
3. போற்றப் "பறை " தரும் புண்ணியனால்
(தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)
4. அறை "பறை " மாயன் மணிவண்ணன்
(தி:16 - நாயகனாய் நின்று)
5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை " கொள்வாம்
(தி:24 - அன்று இவ்வுலகம்)
6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை " தருதியாகில்
(தி:25 - ஒருத்தி மகனாய்)
7. சாலப்பெரும் "பறை "யே பல்லாண்டு இசைப்பாரே
(தி:26 - மாலே மணிவண்ணா)
8. பாடிப் "பறை "கொண்டு யாம்பெறும் சம்மானம்
(தி:27 - கூடாரை வெல்லும்சீர்)
9. இறைவா நீ தாராய் "பறை "யேலோ ரெம்பாவாய்
(தி:28 - கறவைகள் பின்சென்று)
10. இற்றைப் "பறை " கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
(தி:29 - சிற்றஞ் சிறுகாலே)
11. அங்கு அப்"பறை " கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன
(தி:30 - வங்கக் கடல்கடைந்த)
நன்றி: ஆண்டாள் எனும் "பறை"ச்சி (மாதவிப் பந்தல்)
Saturday, 23 January 2016
தலித் என்பதன் பொருள் என்ன?
பிராமணரல்லாதோர் அனைவரும் 'தலித்'
-இதுதான் அம்பேத்கரின் வரையறை.
குறிஞ்சாக்குளத்திற்கு தமிழர்கள் வந்தால் போதும்.
தலித்துகள் வரவேண்டிய அவசியம் இல்லை.
Wednesday, 20 January 2016
குறிஞ்சாக்குளம் கூடுதல் ஏன்?
குறிஞ்சாக்குளம்
கூடுதல் ஏன்?
வடயிந்தியர்கள் ஒரு 5லட்சம் பேர்
கன்னியாகுமரியில் மகா யாகம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்த மாத இறுதியில்.
உமேஷ்சந்திர சர்மா என்ற பிராமணர் தலைமையில்
விவேகானந்த கேந்திரம் சார்பில்
551 யாக குண்டங்கள்
ஒவ்வொரு குண்டத்திலும் 13 பிராமணர்கள் 3 நாட்கள் யாகம் செய்வார்கள்.
ஹிந்தியிலேயே பிரச்சாரம், பதாகைகள், பக்தி பாடல்கள், சமஸ்கிருத மந்திரங்கள், பகவத்கீதை புத்தகம் வழங்குதல், ஹிந்து புராண நாடகங்கள் எல்லாம் உண்டு.
ஹிந்தியா முழுவதும் இருந்து குறைந்தது 3லட்சம் ஹிந்தியர்கள் வருகிறார்கள்.
தமிழகத்தில் வடயிந்தியனுக்கா பஞ்சம்?!
அவர்கள் ஒரு 2லட்சம்,
ஆக மொத்தம் 5லட்சம் பேர் கூடுவார்கள்.
நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த 28,29,30 தேதிகளில் கன்னியாகுமரி போனால் தெரியும்.
ஏன்?
தமிழக மண்ணில் வட ஹிந்தியர்கள் அடிக்கடி இப்படி பெரும் எண்ணிக்கையில் கூடுவது ஏன்?
நமக்கு பயத்தை உருவாக்கத்தான்.
நாம் சிறுபான்மையாம்.
அவர்கள் 100 கோடியாம்.
இது அவர்கள் நாடாம்.
நாம் குறிஞ்சாக்குளத்தில் கூடப்போவது கிட்டத்தட்ட இதே நோக்கத்திற்காகத்தான்.
ஹிந்தியா இங்கே கூட்டம் கூட்டுவது ஆக்கிரமிப்பை நோக்கமாகக்கொண்டது.
நாம் குறிஞ்சாக்குளத்தில் கூட இருப்பது ஆக்கிரமிப்பை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டது.
தாய்நிலத்தில் ஒரு தமிழனை அவன் சாதியைக் காரணம்காட்டி ஒண்டவந்த வந்தேறுகுடிகள் ஒடுக்க நினைத்தால் மொத்த தமிழனும் வந்து நிற்பான் என்று காட்டவேண்டும்.
உள்ளூர் தமிழனுக்காகக் களத்தில் இறங்காத ஒரு தமிழன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்க்கமுடியும்?
நான் உங்களை
சோமாலியா பஞ்சத்திற்காகவோ
சிரியா அகதி பிரச்சனைக்கோ
தண்டகாருண்ய மாவோயிஸ்ட்களுக்காகவோ
போராட வரச்சொல்லவில்லை.
உங்கள் மண்ணின்
உங்கள் மக்களின் உரிமைப் பிரச்சனைக்காகத் தான் களத்திற்கு வரச்சொல்கிறேன்.
அதைக் கூட செய்யவிருப்பம் இல்லாவிட்டால்,
உங்களுக்கு நாளையே ஒரு பிரச்சனை வரலாம்,
அப்போது எவனும் வரமாட்டான்.
#சனவரி24குறிஞ்சாக்குளம்
Saturday, 16 January 2016
பறையும் ஆரியரும்
பறையும் ஆரியரும்
"ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும்”
குறுந்தொகையில் (7:3:5)
பறை ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
Saturday, 25 July 2015
ஒரு பறைத்தமிழன் விடாமல்
ஒரு பறைத்தமிழன் விடாமல் பறைசாற்றுங்கள்
*************************
*************************
பார்ப்பாரும் பறையரும் ஒருகுலத்தவரே.
வருங்காலத்தைப் பார்த்துக் கூறுபவர்,
தூதுசெல்வோர்,
பூசைமுடிந்ததும் பொருட்களைப் பெறுவோர் பார்ப்பனர் ஆவர்.
சோழர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய சதுர்வேதி மங்கலங்களில் சாகுபடி செய்யும் உரிமையும் அப்பார்ப்பனருக்கு இல்லை.
பூசை உரிமைகள் பார்ப்பனர் எனும் சாதிக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டவில்லை.
முறையறிந்த /
திறனுடைய எவரும் பூசை செய்யலாம்,
இவ்வுரிமை ஏலமும் விடப்பட்டுள்ளது.
பார்ப்பனருக்கான சிறப்புச் சலுகைகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.
சேர்ந்து வாழும்பகுதி 'சேரி' எனப்பட்டது.
கிரேக்கர் பகுதி ‘யவனச் சேரி’ எனப்பட்டது.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும்
ஊரில், பார்ப்பனரும், பாணரும் இருந்தனர்.
ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் பார்ப்பனச் சேரி ஆகும்.
தேவாரம் பாடும் தமிழ்மரபினர் பிடாரர் எனப்பட்டனர்.
பவன'பிடாரர்' தஞ்சை பெரியகோயிலின் தலைமைக்குரு.
பார்ப்பனர்கள் இவருக்கு கீழ்.
பறையர், என்போர் தமிழரின் அறிவு மரபினர்.
பள்ளர்
என்போர், தமிழரின் வேளாண் மரபினர்.
இராஜராஜன் தன்னாட்டுப் பார்ப்பனர்களைக் கொன்றான் என்கிறது சாளுக்கியக் கல்வெட்டு.
பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர்,
பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த
பிரிவினரே.
காஞ்சி சங்கராச்சாரி கருவறைக்குள் நுழையக்கூட அனுமதி கிடையாது.
1335ல் மதுரை முகமதிய ஆட்சியை எதிர்த்து தென்னிந்தியாவில் இருந்த பிராமண ஆதரவாளர் இணைந்து அமைத்த அரசே விஜயநகரப்பேரரசு.
அதன் ’நாயக்கர்களில்’ கணிசமானோர் தமிழரல்லாத பார்ப்பனர்.
கிருஷ்ண தேவராயர் தன்மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பிராமண அமைச்சரைக் கொல்லவில்லை.
’திராவிடர் என்போர் தென்னாட்டுப் பார்ப்பனரே’.
ராசராசனின் தமக்கையார் ஒரு தேவரடியார் என்றால் (நாயக்கர்களின்)தேவதாசி போன்ற இழிவானவர் அல்ல என்பது புரியும்.
அந்தணர் என்பார் பிராமணர் அல்லர்.
பிராமண ஆதிக்கம்சாதி ஏற்றத்தாழ்வு நாயக்கராட்சியில் திணிக்கப்பட்டது.
மேலும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்.
அதிர்ச்சியான தகவல்கள்.
ம.செந்தமிழனின் 'திராவிட அவதூறும் தமிழர் மரபும்'
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5875&Itemid=139
பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11707&Itemid=139
Thursday, 10 July 2014
ஒரு பறைத்தமிழன் விடாமல்

ஒரு பறைத்தமிழன் விடாமல் பறைசாற்றுங்கள்
*************************
*************************
பார்ப்பாரும் பறையரும் ஒருகுலத்தவரே.
வருங்காலத்தைப் பார்த்துக் கூறுபவர், தூதுசெல்வோர்,பூசைமுடிந்தது
திறனுடைய எவரும் பூசை செய்யலாம், இவ்வுரிமை ஏலமும் விடப்பட்டுள்ளது; பார்ப்பனருக்கான சிறப்புச் சலுகைகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை; சேர்ந்து வாழும்பகுதி 'சேரி' எனப்பட்டது; கிரேக்கர் பகுதி ‘யவனச் சேரி’ எனப்பட்டது; சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும்
ஊரில், பார்ப்பனரும், பாணரும் இருந்தனர்; ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் பார்ப்பனச் சேரி ஆகும்; தேவாரம் பாடும் தமிழ்மரபினர் பிடாரர் எனப்பட்டனர்; பவன'பிடாரர்' பெரியகோயிலின் தலைமைக்குரு; பார்ப்பனர்கள் இவருக்கு கீழ்; பறையர், என்போர் தமிழரின் அறிவு மரபினர். பள்ளர்
என்போர், தமிழரின் வேளாண் மரபினர்; இராஜராஜன் தன்னாட்டுப் பார்ப்பனர்களைக் கொன்றான் என்கிறது சாளுக்கியக் கல்வெட்டு; பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர்,
பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த
பிரிவினரே; காஞ்சி சங்கராச்சாரி கருவறைக்குள் நுழையக்கூட
அவருக்கு அனுமதி கிடையாது; 1335ல் மதுரை முகமதிய ஆட்சியை எதிர்த்து தென்னிந்தியாவில் இருந்த பிராமண ஆதரவாளர் இணைந்து அமைத்த அரசே விஜயநகரப்பேரரசு; அதன் ’நாயக்கர்களில்’ கணிசமானோர் பார்ப்பனர்; கிருஷ்ண தேவராயர் தன்மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பார்ப்பன அமைச்சரைக் கொல்லவில்லை; ’திராவிடர் என்போர் தென்னாட்டுப் பார்ப்பனரே’; ராசராசனின் தமக்கையார் ஒரு தேவரடியார் என்றால் (நாயக்கர்களின்)தேவதாசி போன்ற இழிவானவர் அல்ல என்பது புரியும்; அந்தணர் என்பார் பிராமணர் அல்லர்; பிராமண ஆதிக்கம்சாதி ஏற்றத்தாழ்வு நாயக்கராட்சியில் திணிக்கப்பட்டது;
அடுக்கடுக்கான ஆதாரங்கள்;
அதிர்ச்சியான தகவல்கள்;
ம.செந்தமிழனின் 'திராவிட அவதூறும் தமிழர் மரபும்'
http://www.keetru.com/
பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்
http://www.keetru.com/
https://www.facebook.com/photo.php?fbid=403824759721183&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739