Showing posts with label தமிழ்ப் பார்ப்பனர். Show all posts
Showing posts with label தமிழ்ப் பார்ப்பனர். Show all posts

Thursday, 12 July 2018

ஓகோ! கோர்ட்டு கேசுனு போவோம்கறேள்!

ஓகோ! கோர்ட்டு கேசுனு போவோம்கறேள்!

மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இருந்தனர்.

மற்றவர்கள் வாய்கிழிய பேசிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் செயலில் இறங்கியதோ ஒரு பார்ப்பனர்!

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழக்குப் போட்டு மதிப்பெண் (நியாயம்) பெற்றுத் தந்த டி.கே.ரங்கராஜன் அவர்கள் பார்ப்பனர் குலத் தமிழர் ஆவார்.

கம்யூனிஸ்ட் என்றாலும் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் இனப்பற்றாளர் இவர்.

பார்ப்பனர் தமிழுக்கு உழைத்த வரலாறு போல தமிழர் உரிமைக்காக உழைப்பதிலும் சளைத்தவரில்லை.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் முன்பே 1921லேயே காங்கிரஸ் கட்சியை மொழிவாரி கிளைகளாகப் பிரித்தது ஒரு பார்ப்பனரான சத்தியமூர்த்தி ஐயர்.
[திருப்பதி சித்தூர் வரை தமிழகத்திற்கு கேட்டவர்]

இலங்கையின் முதல் தமிழ் பத்திரிக்கை தொடங்கி மலையகத் தமிழருக்காக்க் குரலெழுப்பியது ஒரு பார்ப்பனரான கோதண்டராம நடேசையர்.
[தமிழகத்தைச் சேர்ந்தவர்]

குமரி தமிழகத்துடன் இணைய தனது தினமலர் பத்திரிக்கை மூலம் ஊடகபலம் அளித்தது ஒரு பார்ப்பனரான டி.வி.ஆர்.
[தடையுத்தரவை மீறி குமரிக்கும் தமிழகத்திற்கும் தகவல் பரிமாற்றம் நடந்தது]

இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து "உங்களுக்கு முழு இந்தியாவும் வேண்டுமா அல்லது இந்தி பேசும் இந்தியா மட்டும் போதுமா?" என்று கேட்டவர் ஒரு பார்ப்பனரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி.

காவிரி உரிமையில் முதன்முதலாக வழக்கு போட்டு நியாயம் பெற்றுத் தந்தது ஒரு பார்ப்பனரான மன்னார்குடி ரங்கநாதன்.
[அடுத்த பதினொறு ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வந்தது]

இந்த வரிசையில் தற்போது டி.கே.ரங்கராஜன், குளறுபடியான 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் நீட் தேர்வு எழுதியோருக்குப் பெற்றுத் தந்துள்ளார்.

Wednesday, 7 February 2018

தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக பேசிய டி.கே.ரங்கராஜன்

புதுதில்லி;
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று டி.கே. ரங்கராஜன் பேசியதாவது:
நம் குடியரசுத்தலைவர் உரையானது, இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து, ஏராளமான புள்ளி விவரங்களை உள்ளடக்கி இருக்கிறது. தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு, தன்னுடைய தலையங்கத்தின் தலைப்பில், “குடியரசுத் தலைவர் கோவிந்த் அல்லது எகனாமிக் சர்வே” என்று குறிப்பிட்டிருக்கிறது. “இந்த அரசாங்கம், புள்ளி விவரங்களைத் தயாரிப்பதற்கு ஆணை பிறப்பித்திருக்கிறது,” என்று முன்னாள் பாஜக நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா இதுகுறித்துக் குறிப்பிட்டிருக்கிறார். இது எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. இவ்வாறு நான் கூறவில்லை என யஷ்வந்த் சின்கா கூறுகிறார்.
நீட் தேர்வு விலக்கு
என்னுடைய நண்பர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், “நீட்” தேர்வு குறித்துக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிவைத்த தீர்மானம் எப்படிக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று விளக்கினார். அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஒருவர் சென்னை வந்திருந்தபோது, “நீட்” தேர்விற்கு ஓராண்டு காலத்திற்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம் என்று உறுதியளித்தார்.
அதன்பின்னர்தான் அந்தச் சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட பின் அது குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிடும் என்று நாங்கள் நினைத்தோம். பின்னர் நான் ஒரு கடிதம் குடியரசுத் தலைவருக்கு எழுதினேன். குடியரசுத் தலைவர் அதற்கு எனக்குப் பதிலளித்திருக்கிறார். “உள்துறை அமைச்சகம் அந்தச் சட்டமுன்வடிவை எனக்கு அனுப்பவில்லை,” என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும் கிராமப்புற மாணவர்கள் “நீட்” தேர்வை எழுத முடியாது.
அவர்கள் வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, குஜராத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி அல்லது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. இம்மாநிலங்களில் வாழும் கிராமப்புற மாணவர்களால் இந்தத் தேர்வினை எழுத முடியாது.
எனினும் இதற்கு எதிராக தமிழ்நாடு தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இதேபோன்றுதான் ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் வெளிப்படுத்தியது. நீங்கள் தமிழ்நாட்டை எப்போதுமே வித்தியாசமாகத்தான் கருதுகிறீர்கள். மீண்டும் ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சனையானது. ஓர் அமைச்சர் மதுரை வந்திருந்தபோது, ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் “உங்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம்,” என்று கூறினார்கள்.
பாஜகவுடன் நாங்கள் என்றில்லை, உங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளே மகிழ்ச்சியற்று இருக்கின்றன. சிவ சேனை, தெலுங்கு தேசம் தங்கள் மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்தி இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் தன் உரையில் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்துப் பேசியிருக்கிறார். அமித்ஷா கூட இங்கே உரையாற்றும்போது, விவசாயிகள் பற்றிக் கவலைப்பட்டார். இவ்வாறு விவசாயிகள் குறித்து இந்த அரசாங்கம் மட்டுமா கவலைப்பட்டது? இல்லை. இதற்கு முன்பு, லால் பகதூர் சாஸ்திரியும் கவலைப்பட்டார். “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்று கோஷத்தைக் கூட அவர் உருவாக்கி இருந்தார். அவருக்குப்பின் வந்த அரசாங்கங்கள் அனைத்துமே விவசாயிகள் பற்றி கவலைகளைத் தெரிவித்திருக்கின்றன.
ஆனால் எதுவுமே அமல்படுத்தப்பட்டதில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஒவ்வோராண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது குடியரசுத் தலைவர் அவர்கள், மேலும் நான்கு ஆண்டுகளுக்குக் காத்துக் கொண்டிருங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்குள் விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வது பலமடங்கு அதிகரித்திருக்கும். எப்படி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப் போகிறோம்?
காவிரிப் பிரச்சனை
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் பாசனம் தொடர்பான பிரச்சனைகளை பலமுறை இந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு, காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் தேவை. தொடர்ந்து இருந்து வரும் அரசாங்கங்கள் காவிரி ஆற்று நீரில் சட்டப்பூர்வமாக அளிக்க வேண்டிய உரிய பங்கைத் தமிழ்நாட்டிற்கு அளிப்பதற்கு இன்றுவரை தவறிவிட்டன. மத்திய அரசாங்கம், காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரையிலும் அமைத்திடவில்லை.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடுக என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள போதிலும்கூட, அதை செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று ஒரு மத்திய அமைச்சரே, (ஆனந்த்குமார்) பேசுகிறார். அவர் ஒன்றும் கர்நாடக மாநிலக் குடிமகன் அல்ல. அவர் ஓர் மத்திய அமைச்சர். தமிழ்நாட்டில் பத்து லட்சம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் தேவை. இவ்வாறு பத்து லட்சம் ஏக்கரில் பாசனம் செய்வதற்குத் 15 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். கர்நாடகா ஏற்கனவே 80 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதார அவசியத்தைப் பரிசீலிப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் நிர்ப்பந்தங்களை பரிசீலிக்கின்றனர். இந்த அரசியல் நிர்ப்பந்தங்கள் காவேரிப் பிரச்சனையின் தலைவிதியைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.
ஞாயிற்றுக் கிழமையன்று பிரதமர் மோடி கர்நாடகாவில் ஒரு பேரணிப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் நம் சகோதரர்கள்தான், அவர்களுக்கு தண்ணீர் அளித்திடுங்கள் என்று அறிவுரை கூறியிருக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடக மக்களுக்கு அவர் அறிவுரை கூறியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவர் செய்திடவில்லை. இவ்வாறு அரசியல் நிர்ப்பந்தங்கள் அவர்களை ஆட்டிப்படைக்கின்றன. விரைவில் அங்கே தேர்தல் வர இருக்கிறது. எனவே மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் “தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் இல்லை” என்று கூறுகின்றன.
மத்தியஅரசு, தமிழ்நாட்டை, இந்தியாவின் ஓர் அங்கம் என்று கருதுகிறதா, இல்லையா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது, தமிழ்நாட்டில் உள்ள காவேரிப் பாசனப் பகுதி விவசாயிகளாவர். தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற அனைத்துப் பொருள்களுமே நம் நாட்டிற்காகத்தான். ஆனால் அவர்களுக்கு உரிய பங்கை அளித்திட நீங்கள் மறுக்கிறீர்கள். வேளாண் உற்பத்தித்திறன் மீது பருவநிலைசெலுத்திடும் தாக்கம் குறித்து பொருளாதார ஆய்வறிக்கை அதிகமாகவே கூறியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் 2022இல் இரட்டிப்பாகும்? நிச்சயமாக இது ஒரு மடத்தனமான கூற்றாகும். மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு சொல்லப்படுகிறதே தவிர, வேறல்ல.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு குறித்தும் ஏராளமாகக் கூறியிருக்கிறீர்கள். 2015-16 வேலையின்மை ஆய்வறிக்கையின்படி, நாட்டில் உள்ள தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரிபாதிப்பேர் – அதாவது 46.6 சதவீதத்தினர் – சுய வேலை பார்ப்பவர்கள். சுய வேலைபார்ப்பது என்பது மோசமான ஒன்று என்று நான் பார்க்கவில்லை. ஆனால் அவர்களை “பக்கோடா விற்பவர்கள்” என்று சொல்ல மாட்டேன். சுய வேலை பார்ப்பவர்களின் வருமானம் மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய். ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவு.
அவர்களால் உயிர்பிழைத்திட முடியுமா? ஒரு கணவன், ஒரு மனைவி, இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ள குடும்பம் எப்படி பிழைக்க முடியும்.
முறையான வேலைவாய்ப்பு கிடைக்காததால் மக்கள் சுய வேலை செய்பவர்களாக மாறுகிறார்கள். இன்றைய தினம், ஆட்டோரிக்சா ஓட்டுநர்களில் பி.ஏ., எம்.ஏ., படித்தவர்கள் பலரை நீங்கள் பார்க்க முடியும். நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவால் வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குறைந்த ஊதியத்திலான முறைசாரா தொழிலாளர்களையும், முறைசார்ந்த தொழில்களில் ஒப்பந்த ஊழியர்களையும் தான் இதுஉருவாக்கி இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட இப்போது ஒப்பந்த அடிப்படையில்தான். பொருளாதார மந்தமும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் வேலை வாய்ப்புகளையே அழித்து ஒழித்துவிட்டது. கிராமப்புற வேலைவாய்ப்புகள் சுருங்கி இருப்பதும் நிலைமையை மோசமாக்கி இருக்கின்றன. இத்தகு பின்னணியில், வேலைவாய்ப்பு தொடர்பாக அரசு அளித்துள்ள விவரங்களுக்கும் உண்மை நிலைக்கும் வெகுதூரமாகும்.
இந்தியா தலையிட மறுப்பது ஏன்?
குடியரசுத் தலைவர், தன்னுடைய உரையைத்தொடங்கும்போது, “வாசுதைவ குடும்பகம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது வேறொன்றுமில்லை. நாம் கூறும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதுதான். ஆனால் பர்மாவிலிருந்து அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை திருப்பித் துரத்தி அனுப்புகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும், நாம் ரோஹிங்யா பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒருபங்களிப்பினைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்பிரச்சனையில் மவுனம் சாதிக்கிறது. பிரச்சனையை எதிர்கொள்ள மறுத்து, திரும்பிக்கொள்கிறது. ஏன்? போப், தாக்காவிற்குப் போகிறார்.
அமெரிக்கா தன் அமைச்சர் ஒருவரை அனுப்பி வைக்கிறது. கிரேட் பிரிட்டன், கனடா அமைச்சர்களும்கூட அங்கே போகிறார்கள். ஆசிய நாடுகள் போகின்றன. ஆனால் இந்தியா போக மறுக்கிறது. இந்தியா தலையிட மறுக்கிறது. ஏன்? இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு சீனா முயற்சிக்கிறது. அவர்கள் சமாதானக்காவலர்களாக வெளிப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு எதிர்மறையாக இருக்கிறது. ஏன் அவ்வாறு இருக்கிறது? அவர்கள் பின்பற்றுகிற வகுப்புவாத சித்தாந்தத்தின் நிர்ப்பந்தம்தான் இவ்வாறு அவர்களை ஆட்டுவிக்கிறது. ரோஹிங்யாக்கள் அனைவரும் முஸ்லீம்கள். அதுதான் காரணம்
சீனா ஒரு மத்தியஸ்தர் பங்களிப்பினை மிகச்சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது. சீன அயல்துறை அமைச்சர் அங்கே சென்று அனைத்துக் கட்சிகளுடனும் பேசியிருக்கிறார்.
ஏழ்மை நிலை
குடியரசுத்தலைவர் உரையில் ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்களின் வளர்ச்சிகுறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 2017இல் இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருப்பவர்கள் 73 சதவீத செல்வத்தையும், 99 சதவீதமாக இருப்பவர்கள் மீதம் உள்ள 47 சதவீதத்தைப்பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கிறார்கள். உலகில் பட்டினி கிடப்போர் அட்டவணையில் இந்தியா மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. ஆனால் இது குறித்து குடியரசுத்தலைவர் உரை மவுனம் சாதிக்கிறது. அதேபோன்று ஊட்டச்சத்துக் குறைவும் மிக மோசமான அளவில்இருக்கிறது. நாட்டில் 14.6 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாக நோய்க்கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
கீழடி அகழாய்வு
நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதால் தமிழ்நாடு தொடர்பாக ஒருசிலவற்றைக் குறிப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறேன். மதுரை அருகே கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தொடர்ந்து ஒரு சதவீத வேலைகூட செய்யப்படவில்லை. அங்கே தொடர்ந்து 2018இல் அகழ்வாராய்ச்சிப்பணியைத் தொடர மத்திய அரசால் அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு அனுமதியை அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதனை நான் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும்நேரத்தில் இந்த அவையில் எழுப்பியபோது துணைத்தலைவர் உட்பட அனைத்துக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் என்னுடன் இணைந்துகொண்டார்கள். மாநில அரசாங்கம், அந்த இடத்தில் கீழடியில் அகழ்வாராய்ச்சியின்போது எடுக்கப்பட்ட 5000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை, கைத்திறன் பொருட்களை அருங்காட்சியகம் ஒன்றை நிறுவி அதில் வைப்பதற்காக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுநாள்வரை அந்த இடத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆரம்பவேலைகளைக்கூட மத்திய அரசு இன்னமும் துவங்கவில்லை. கீழடியில் கண்டுள்ள விவரங்கள் மனிதகுல நாகரிக வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும். எனவே, இந்த அரசாங்கம் மதிப்பிடற்கரிய அகழ்வாராய்ச்சிப்பணிகளைத் தொடர இதுதொடர்பாக உரிய ஆணைகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பட்டாசுத் தொழிலாளர்கள்
பட்டாசுத் தயாரிப்புக்குத் தடை விதிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தமிழ்நாட்டில் சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எட்டு லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. அங்கே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியஅதே சமயத்தில் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. பண்டிகைக் காலங்களில், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்திட முன்வர வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் சிலை
நிறைவாக ஆனால் மிக முக்கியமான ஒன்று. நாம் நம் நாட்டில் தேசியப் பறவை, தேசிய மலர் என்று அறிவித்திருப்பதுபோல மதிப்பு மிக்க கருத்துக் கருவூலங்களையும் மனிதகுல முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் முறையிலும் அமைந்துள்ள தமிழர்களின் புனித நூலான திருக்குறளை, தேசியப் நூலாக அறிவிக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருவள்ளுவரின் சிலையை நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நிறுவிடவும் இந்த அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழில்: ச.வீரமணி
நன்றி: தீக்கதிர் (07.02.2018)

Tuesday, 12 September 2017

நடைமுறை ஆரியம்

நடைமுறை ஆரியம்

ஹிந்தியத்தை திராவிடம் காப்பது எப்படி தெரியுமா?

ஓநாய் (ஹிந்தியா) தாக்கவரும்போது

என்றோ இறந்த வேறொரு ஓநாயின்(ஆரியம்) தோலை

பிராமணன்(வடுகன்) மீது போர்த்தி

அவனை பார்ப்பானை(தமிழன்) பின்னாலிருத்து கட்டிப் பிடித்துக்கொள்ள சொல்லி

திசைதிருப்புவான் திராவிடன்(வந்தேறி வடுகன்)

தமிழனும் உண்மையான ஓநாயை விட்டுவிட்டு செத்த ஓநாயின் தோலினுள் இறுக்கமாக பிடிக்கப்பட்டிருக்கும் தன்னினத்து பார்ப்பானைப் போட்டு அடிவெளுப்பான்.

ஆரியம் என்றோ அழிந்தொழிந்து போய்விட்டது!

ஹிந்தி மக்களின் ஆதிக்கம் அதாவது ஹிந்தியம் என்பதே நடைமுறை ஆரியம் !

அதன் அடியாட்கள் வடுக பிராமணீயம் மற்றும் வடுக திராவிடம் !

ஹிந்திய, வடுகத்தின் பல்வேறு வடிவங்களை தொடக்கத்திலிருந்து இன்றுவரை எதிர்த்து நிற்பது தமிழியம்!

அதில் பார்ப்பனரும் ஒரு அங்கம்!

Saturday, 26 August 2017

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

* பார்ப்பனர் ஏன் தமிழில் தொழுவதில்லை?
அவர்களது புனிதநூல் ஏன் தமிழில் இல்லை?

* பார்ப்பனர் திருமண முறை ஏன் வேறுபட்டதாக உள்ளது?

* பார்ப்பனர் முடிவெட்டிக்கொள்ளும் முறை  ஏன் விசித்திரமாக உள்ளது?

* பார்ப்பனர் உடையணிவது ஏன் வேறுமாதிரி உள்ளது?

* பார்ப்பனர் வணக்கம், வாழ்த்து சொல்வது ஏன் தமிழல் இல்லை?

* பார்ப்பனர் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள், உறவுமுறை கூறி அழைப்பது போன்றவை வேறு மொழியில் ஏன் உள்ளன?

* பார்ப்பனர் ஏன் குலதெய்வ வழிபாடு செய்வதில்லை?

* பார்ப்பனர் வெளியிலிருந்து வந்த இனம் என்று சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறார்களே?

* பார்ப்பனரின் மூதாதையர்கள் ஆட்சி செய்தபோது மக்களை கொடுமைப்படுத்தியதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் வீட்டிற்குள் வேறுமொழி பேசுவதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் ஏன் தமிழில் பெயர்வைப்பதில்லை?

* பார்ப்பனர் என்றால் நிறமாகத்தான் இருப்பார்கள்.

* பார்ப்பனர்கள் அனைவருமே மதவெறி பிடித்தவர்கள் என்று கூறப்படுகிறதே?

* பார்ப்பனர்கள் இன உணர்வு இல்லாதவராக உள்ளனரே?

* பார்ப்பனர்கள் வேறு ஒரு மொழியை படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள் நடத்துகின்றனரே?

* பார்ப்பனர் தமது புனித தலங்களாக தமிழகத்திலிருந்து வெகுதூரத்தில் உள்ள இடங்களைச் சொல்கிறார்களே?

மேற்கண்ட அனைத்திலும் பார்ப்பனர் என்று வரும் இடத்தில் இசுலாமியர் என்று போட்டு ஒரு முறை படிக்கவும்.

விளையாட்டில்லை ஒருமுறை படியுங்கள்.

தமிழினத்து இசுலாமியர் எப்படி தமிழரோ அப்படியே பார்ப்பனரும் தமிழரே!

பிற இனத்து பிராமணரை தமிழினத்து பார்ப்பனருடன் குழப்புவதென்பது
உருது முஸ்லீம்களை தமிழினத்து இசுலாமியருடன் குழப்புவது போன்றது.

பார்ப்பனரை ஆரியருடன் தொடர்பு படுத்துவதென்பது
இசுலாமியரை அராபியருடனும்
கிறித்தவரை ஐரோப்பியருடனும் தொடர்புபடுத்துவது போன்றது.

மேலும் அறிய,

தேடுக: பார்ப்பனீயம் பிராமணீயம் வேறுபாடு வேட்டொலி

தேடுக: பார்ப்பனர் பிராமணர் வேறுபாடு வேட்டொலி

Thursday, 13 July 2017

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு

முதலில் மிகவும் பிற்காலத்தில் தோன்றி நீண்டகாலம் நீடிக்காமல் என்றோ ஒழிந்துபோன ஆரியரை
பழம்பெருமை உடைய தமிழருக்கு எதிரியாகக் காட்டி
அவர்களை நாகரீகத்திலும் பழமையிலும் தமிழருக்கு சமமாக ஆக்குவதை நிறுத்துங்கள்.

பூணூல் என்பது தமிழர் பயன்படுத்தியதே!

ஆரியர் பூணூல் அணிந்திருந்ததாக எந்த சான்றும் இல்லை.

சொல்லப்போனால் பூணூல் ஒரு நாகரீக வளர்ச்சியின் அடையாளம்

அதாவது பருத்தி விவசாயம் செய்து அதிலிருந்து நூலெடுத்து தறி இயந்திரம் மூலம் ஆடை நெய்த குடி நாம் என்பதன் அடையாளம்.

காட்டுமிராண்டி ஆரியரால் இத்தனை நவீனமாக செயல்பட்டிருக்க முடியுமா?

தனது மேன்மையையும் அதிகாரத்தையும் காட்ட கேவலம் ஒரு நூல்தான் அணியவேண்டுமா?

(மேற்கண்ட சிந்தனையை
முன்வைத்தவர் ம.பொன்ராஜ் காலாடி அவர்கள்)

இது புரியாமல் எதற்கெடுத்தாலும் பூணூல் பூணூல் என்று கத்துவானேன்?

பூணின் நூல் என்பது வில்லின் நாண் எனவும் அது அளவைக்கு பயன்பட்டதையும்
முப்புரிநூல் பூணூல் கிடையாது எனவும் ஏற்கனவே சான்றுகளுடன் போட்டாயிற்று.

(தேடுக:- பூணூல் வில்லின் நாண் வேட்டொலி
தேடுக:- தொல்காப்பியம் முப்புரிநூல் பூணூலா வேட்டொலி)

இறந்துபோன ஆரியத்திற்கு பூணூலை மாட்டி அதை அறுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று இனப்பகை திராவிடம் சொல்கிறது.
உண்மையான பகைவரிடம் இருந்து நம்மை திசைதிருப்புகிறது.

மூளையுள்ள தமிழினம் யோசிக்கவேண்டுமா? இல்லையா?

சங்ககாலத்தில் நான்கு வகை குடிகளும் அதில் ஏற்றத்தாழ்வும் இருந்தனதான்.
ஆனால் ஏற்றத்தாழ்வு மிகமெல்லிய அளவே இருந்தது.

முதலில் குடியானது பிறப்பால் அமையாமல் செய்யும் தொழிலால் அமைந்தது.
அதாவது ஒரு விவசாயி மகன் கற்கவேண்டியதை கற்று பார்ப்பனராக முடியும்.
பிறகு ஒரே தொழில் புரிந்தோர் தமக்குள் திருமணம் செய்துகொண்டனர்.
தமது அடுத்த தலைமுறைக்கு அந்த தொழிலைக் கற்றுக்கொடுத்தனர்.
இது குடி அடையாளம் பிறப்புவழியாக அமையக் காரணமானது

குடியானது பிறப்பு அடையாளமாக மாறிய பிறகும் பார்ப்பனர் பிற சாதிகளை விட கொஞ்சமே கொஞ்சம் அதிக ஆதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.
இதைப் பார்ப்பனீயம் எனலாம்.
பார்ப்பனீயம் பிற சாதிகளை ஒடுக்கியதில்லை.
(தேடுக:- இழிசினர் வேட்டொலி)

ஆனால் இந்த பார்ப்பனீயத்தை விட 100 மடங்கு கொடியது பிராமணீயமும் அதன் நால்வர்ண கொள்கையும்.

கி.பி.850 க்கு பிறகு தமிழக நதிக்கரை ஓரங்களில் கற்களால் பெருங்கோயில்கள் சோழர்களால் கட்டப்படுகின்றன.
  வேலைவாய்ப்பு கிடைப்பதால் சோழ நாட்டு பார்ப்பனர்கள் தமிழகம் முழுவதும் பரவுகின்றனர்.
(இதுவே பார்ப்பனர் பேசும் தமிழ் அவர்களின் வட்டார வழக்குடன் அதாவது சோழநாட்டு காவிரிக்கரை பாணியில் உள்ளது)

இதே வேலைவாய்ப்புக்காக தமிழகத்திற்கு வடக்கே இருந்த பிறமொழி பிராமணரும் தமிழகத்திற்கு வருகின்றனர்.
அவர்களுக்குத் வடமொழியில் பூசை செய்கிறார்கள்.
பிறகு கோயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் பல தெய்வங்களுடன் பெரிதாகவும் முழுநேரமும் இயங்குமாறும் ஆக்கப்படுகின்றன.

பூசாரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அப்போது முதலில் பல்லவர்களும் பிறகு சோழர்களும் கங்கைக் கரையிலிருந்தும் நர்மதைக் கரையிலிருந்து பிறமொழிப் பிராமணர்களை அழைத்துவந்து குடியேற்றுகிறார்கள்.
இவர்கள் வடமா என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுடன் உள்ளே நுழைந்த வைதீக முறையையும் பிராமணீயத்தையும் பார்ப்பனர்கள் ஆகமம் என்ற முறையை உருவாக்கி தடுக்கிறார்கள்.
தமிழ் அரசர்கள் ஆண்டவரை ஆகம முறையே கோவில்களில் நடைமுறையில் இருந்தது.
இதன்படி யாரும் பூசாரி ஆகலாம்.
கடவுளின் பெயரால் யாரையும் தாழ்த்தமுடியாது.
(தேடுக: தமிழர் படைத்த ஆகமம் கேடயம் வேட்டொலி)

கருவறையில் பூசாரி மட்டுமே நுழையமுடியும் என்ற விதி கிடையாது.
தஞ்சை பெரியகோவில் லிங்கத்தை இறுத்தியவர் கருவூர்த் தேவர் என்பவர் ஆவார்.

வந்தேறி பிராமணர் யாரும் பூர்விக தமிழ்ப் பார்ப்பனருடன் ஒட்டிவோ கலக்கவோ இல்லை.
ஆனால் தமிழ்ப் பார்ப்பனர் பயன்படுத்தும் பட்டங்களை இவர்களும் பயன்படுத்துவதால் குழப்பம் நிலவுகிறது.

தமிழராட்சி நடந்தவரை கோயில்கள் பார்ப்பனர் நிர்வாகத்தில் இருந்ததில்லை
இராசராசன் காலத்தில் தஞ்சை பெரியகோவில் தலைமை பார்ப்பனரல்லாத பவணபிடாரர் என்பவரிடம் இருந்தது.
கடைசிப் பாண்டியன் காலத்தில் மதுரை மீனாட்சி கோவில் தலைமை அபிசேகப் பண்டாரம் என்பவரிடம் இருந்தது.

தமிழராட்சி வீழ்ந்து வேற்றின விஜயநகர ஆட்சி பரவிய பிறகுதான் பிராமணீயம் தமிழகத்தில் தலைதூக்குகிறது.
சாதிய ஏற்றத்தாழ்வு உச்சத்தை அடைந்து தீண்டாமை நடைமுறைக்கு வருகிறது.
(சோழர் காலத்து தீண்டாச்சேரி நோயாளிகள் பராமரிப்புப் பகுதி.
சேரி என்பது குடியிருப்பு என்றே பொருள்படும்.
பார்ப்பன சேரி கூட உண்டு)

கோவில்களில் இருந்து பார்ப்பனர், பறையர், பண்டாரம், பிடாரர், ஓதுவார் ஆகியோர் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் நிரப்பப்பட்டு தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.
(தேடுக:- பார்ப்பனர் தமிழில் ஏன் ஓதுவதில்லை வேட்டொலி
தேடுக:- தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?)

சமஸ்கிருதம் படித்து வைதீக பூசைமுறையை ஏற்று நாயக்கர் ஆட்சியில் சமரசம் செய்துகொண்ட பார்ப்பனர் தவிர பெரும்பான்மையான பார்ப்பனர்கள் வீழ்ந்துவிட்டனர்.
சமரசம் செய்துகொண்ட பார்ப்பனர்கூட தமிழைக் கைவிடவில்லை.
அவர்கள் தமது வட்டார வழக்கைக்கூட கைவிடவில்லை.
பார்ப்பனர் பேசும் தமிழ் தூய தமிழுக்கு நெருக்கமானது.
(தேடுக: பாலக்காட்டில் பேசப்படுவது தமிழே வேட்டொலி
தேடுக: வெதுப்பகம் வேட்டொலி)

ஆக அவாளும் நம்மவாளே!
அவிய்ங்களும் நம்மவிய்ங்களே!
அவியளும் நம்மவியளே!
அவுகளும் நம்மவுகளே!

நாயக்கர் ஆட்சியில் அனைத்து பதவிகளிலும் உயர்சாதியினரும் பிராமணரும் அமர்த்தப்படுகின்றனர்.
(தமிழராட்சியில் அவ்வாறு இல்லை.
தேடுக: கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர் வேட்டொலி
தேடுக: பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்)

இதோடு நில்லாது நாயக்கர் ஆட்சியில் நிலவுடைமைச் சமூகம் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்கள் (அதிலும் குறிப்பாக பள்ளர்கள்) அளவுக்கதிகமாகச் சுரண்டப்பட்டனர்.
பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டன.
(தேடுக:- தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை வேட்டொலி)

நாயக்கர்கள் தமிழை வெறுத்தனர்.
தமிழ்ப் புலவர்கள் ஆசிரியர்கள் மிகவும் வறிய நிலையை அடைந்தனர்.
அவர்களது தெலுங்கு கன்னட மொழி அப்போதுதான் உருவாகி ஆரம்பநிலையில் இருந்தது.
அதனால் தமிழை ஒழிக்கமுடியவில்லை.
(தேடுக: நாயக்கர் காலத்தில் தமிழ்)

தமிழ் இசை திருடப்பட்டு கர்நாடக சங்கீதம் ஆனது.
தமிழ்ப் பாடகர்கள் நடனமாடுவோர் என அத்தனை பேரும் வேலையிழந்தனர்.
(தேடுக: கர்நாடக சங்கீதம் தமிழிசையே வேட்டொலி)

ஆனால் இது அத்தனையையும் ஈடுகட்டியோர் பார்ப்பனரே !

ஆக 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நுழைந்த பிராமணீயத்தை 3500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆரியருடன் தொடர்புபடுத்துவது நகைப்பிற்குரியது.

பார்ப்பனர் நிறமாக இருப்பதை வைத்து ஆரியருடன் தொடர்புபடுத்துவோர் அது அவர்கள் தொழிலின் காரணமாக ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
ஆரியரின் தோற்றமும் பார்ப்பனரின் தோற்றமும் முற்றிலும் வேறுபட்டவை.
( தேடுக: மஞ்சள் முடி ஆரியர் வேட்டொலி)

சங்ககால அந்தணர் வேறு பார்ப்பனர் வேறு என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு எனப்
" பார்ப்பார் " ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
" அந்தணர் " தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென
" ஐயர் " வாய்பூசுறார் ஆறு
(பாரிபாடல்-திரட்டு 2:50-63)

இப்பாடலில் பார்ப்பார், அந்தணர், ஐயர் ஆகிய மூவரும் ஒரே மாதிரியாக குறிப்பிடப்படுவதை உற்றுநோக்குக.

பார்ப்பனர்கள் தமது தாய்மொழியான தமிழுக்கு தொடர்ந்து தொண்டு செய்தே வந்துள்ளனர்.
தமிழரில் 1% மட்டுமே இருக்கும் (2% பிற பிராமணர்) பார்ப்பனர் அளவுக்கு தமிழுக்கு தொண்டு செய்த வேறொரு சமூகத்தைக் காட்டமுடியாது.

வைணவத்தில் சாதீயத்தை பிராமணர் புகுத்தியபோது அதை எதிர்த்து அவர்களை வடகலை என்று ஒதுக்கி  தென்கலை என்ற (பெரும்பான்மை) பிரிவைத் தக்கவைத்தோர் பார்ப்பனர்கள் !
இருவருக்கும் இடையேயான மோதல் 1880 களில் பல வழக்குகள் நடந்து மேல்முறையீடு லண்டன் வரை சென்றது
ஆனாலும் தென்கலையே சரி என்று தீர்ப்பு வந்தது.

(தேடுக: தென்கலை ஐயங்கார் சாதி எதிர்ப்பு கொள்கை fbtamildata)
 
சக்கிலியரான பொம்மக்கா திம்மக்காவை காதலித்து மணந்த முத்துப்பட்டர் வரலாற்றில் உண்டு!

தாழ்த்தப்பட்டோருக்கு பூணூல் போட்ட பாரதியும் உண்டு!

மீனாட்சி கோவிலில் ஆலயநுழைவு நடத்திய வைத்தியநாத ஐயரும் வரலாற்றில் உண்டு!

மலையகத்தில் உழைக்கும் மக்களுக்காக தன் ஊரையும் தொழிலையும் விட்டுவிட்டு இலங்கையின் முதல் தமிழ் பத்திரிக்கை தொடங்கி தமிழ்த் தோட்டத் தொழிலாளருக்காகப் போராடிய கோதண்டராம நடேசையர் வரலாற்றில் உண்டு.

பிராமணரையும் பார்ப்பனரையும் குழப்பவேண்டாம்
திராவிட விசத்தை தலைக்கு ஏற்றிக்கொண்டு திரியவேண்டாம்.

ஆங்கிலேயர் காலத்தில் படித்து பதவிகளுக்கு வந்த தமிழ்ப் பார்ப்பனரை கீழே இறக்க வந்தேறிகள் உருவாக்கியதே திராவிடம்.

  நம்மை பிரித்தாள ஆங்கிலேயர் உருவாக்கி தமது நிழலில் வைத்திருந்ததே திராவிடம்!

தமிழகத்தின் முக்கால்வாசி நிலவுடைமையை கையில் வைத்திருக்கும் வந்தேறிகளின் அமோக ஆதரவுடன் வளர்ந்ததே திராவிடம்!

வந்தேறி உயர்சாதி வெறியர்களின் கூடாரமே திராவிடம்!

திராவிடம் எதிர்த்தது பார்ப்பனரையே! பிராமணரை அல்ல!
(தேடுக: திராவிடலு தொடர் வேட்டொலி)

முன்னேறிய சமூகமான பார்ப்பனர் மீதான பிற தமிழரின் பொறாமையே திராவிடத்தின் ஆணிவேர்.

கைவிடுவோம் அந்த பொறாமையை!
பிடுங்கி எறிவோம் திராவிட ஆணிவேரை!

பிராமணர் பார்ப்பனர் வேறுபாடு அறிந்து கொள்வோம்!

உரக்கச் சொல்வோம் பார்ப்பனர் தமிழரே!

படம்: 1890 களில் எடுக்கப்பட்ட தில்லை அந்தணர் படம்

Friday, 30 June 2017

மஞ்சள் முடி ஆரியர்

மஞ்சள் முடி ஆரியர்
-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-

ஆரியரின் வர்ணம் அதாவது உடல் நிறம் பற்றி வேதங்கள் கூறும் குறிப்புகளைப் பார்ப்போம்.

ஆரியர் என்ன நிறமாக இருந்தனர் என்பதை அவர்கள் தமது கடவுளரை வர்ணிப்பதில் இருந்து கணிக்கமுடியும்.
அதாவது எந்த மக்களும் தாம் வணங்கும்  கடவுளை தமது உருவமாகவே சித்தரிப்பார்கள் அல்லவா?!
இதை 'யதன்னம் புருஷோ ஹ்யத்தி, ததன்னம் தஸ்ய தேவதா' என்று ரிக் வேதமும் கூறுகிறது.
--------------
'மஞ்சள் நிறத் தாடியுடன், வெண்ணிற பற்களுடன், ஈடிணையற்ற மாபெரும் பலசாலியாவார்' (5-7-7)
என்று 'இஷ்' எனும் முனிவர் ரிக் வேதத்தில் அக்னிதேவனின் தாடியை வர்ணிக்கிறார்.

'அவர் மஞ்சள் நிற மீசை தாடியும், கூந்தலும் கொண்டு பாறையைப் போல திடமானவர்'
'நாங்கள் அந்த அற்புத வேகங்கொண்ட பச்சை, மஞ்சள் முடியுடைய ஒளிமயமான அக்னியை புதிய செல்வம் வேண்டி தொழுகிறோம்' (10-16-8)
என்று 'வரு' வர்ணிக்கிறார்.
-------------
'பொன்னிறக் கூந்தலுடையவர், மேகங்களைச் சிதறடிக்கும் புயலைப்போன்ற வேகமுடையவர்' (1-79-1)
என்று கோதம்-ராஹூ வர்ணிக்கிறார்கள்.

அதாவது பொன்னிற கூந்தலும் (அதாவது மஞ்சள் நிறத்தில் பளபளப்பான) மீசையும் தாடியும் 'ஹரிகேசம்' அல்லது 'ஹிரண்ய கேசம்' என்று கூறப்படுகிறது.
------------
'இவ்விதம் மஞ்சள் வண்ணமுடையோனான இந்திரன் நல்ல வரவேற்புக்கு உரியவர்' (6-29-6)
என்று பரத்வாஜர் வர்ணிக்கிறார்.
-------------
'விதிப்படி தெற்குநோக்கி கூந்தலை முடிந்துகொள்ளும் வெள்ளைநிற வசிஷ்ட இனத்தவர் என்னை மகிழ்விக்கின்றனர்' (7-33-1)
என்று வசிஷ்டர் தமது இனத்தைப் பற்றி கூறுகிறார்.

அவரே மற்றொரு இடத்தில் 'சுயமாகவே வலிமை படைத்த சூரியனைப் போன்ற சருமஸ் (நிறம்) கொண்ட 'மருத்' தேவர்களே' என்று 'மருத்' எனும் தேவர்களை விளிக்கிறார்.
------------
'நீ அபாலாவை சூரிய ஒளி போன்ற சருமத்தினள் ஆக்கினாய்' (8-80-7)
என்று 'அபாலா' எனும் பெண் தனது தோல் நோயை நீக்கி பழையபடி இந்திரன் ஆக்கியதை நன்றியுடன் கூறுகிறாள்.
------------
'தேவனே! எமக்கு வெண்ணிறமான நீடூழி வாழும் வேகங்கொண்ட தெய்வ பக்தனான வீரக் குழந்தையை அருள்வாயாக!' (23-10)
என்று கிருத்ஸமத் எனும் ரிஷி வேண்டுகிறார்.
------------
அதாவது ஆரியர்கள் வெள்ளை அல்லது சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகத் தோல் உள்ளவர்கள்.
அதோடு மஞ்சள் நிற முடி உள்ளவர்களாக இருந்துள்ளனர்.

'வெண்மை நிறம், புனித ஆசாரத்தைப் பின்பற்றுதல், தாமிர வண்ண, மஞ்சள் நிறக் கூந்தல் ஆகியவை பிராமணர் என்பதற்கான அடையாளங்கள்'
என்று ரிக் வேதகாலத்திற்கு ஐந்நூறு ஆண்டுகள் கழித்து பிராமணர் உருவம் பற்றி 'மகா பாஷ்யம்' எனும் நூலில் (2-2-6) பதஞ்சலி கூறுகிறார்.

தகவல்களுக்கு நன்றி: 'ரிக் வேத கால ஆரியர்கள்'
_ ராகுல சாங்கிருத்தியாயன்
__________________________

மேற்கண்ட சாயலில் ஒரு உருவத்தை பாகிஸ்தான் தாண்டி ஈரான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்கூட இன்று பார்க்கமுடியாது.
ஐரோப்பாவில்தான் பார்க்கமுடியும்.
(பார்க்க: வரைபடம்)
அதனால்தான் ஆங்கிலேயர் தமது நுழைவை நியாயப்படுத்த ஆரிய நுழைவு கருத்தியலை கொண்டுவந்தனர்.

ஆனால் தமிழ் பூசாரிகளான பார்ப்பனரை அவர்கள் மற்ற தமிழர்களை விட கொஞ்சம் நிறமாக இருப்பதை வைத்து ஆரியர்களுடன் திரிக்கிறார்கள்.
என்றால் உடல் நிறத்தை விட மிக முக்கியமான அடையாளமாக கூறப்படும் மஞ்சள் முடி என்ன ஆனது?

மூன்று தலைமுறைக்கு முன்பு தமிழகத்திற்கு குடிவந்த மார்வாடிகள் கூட கருப்பாக ஆகிவிடுகிறார்கள்.

அப்படி இருக்கும் போது 3500 ஆண்டுகளாக இங்கே பார்ப்பனர் அதே நிறத்துடன் எப்படி இருக்கமுடியும்?

பார்ப்பனரின் நிறம் அவரது தொழிலின் காரணமாக வந்தது.
ஈரானுக்கு வந்தேறிய ஐரோப்பிய முன்னோர்களான ஆரியருக்கும்
தமிழர்களான பார்ப்பனருக்கும் 1% கூட குருதிவழி தொடர்பு கிடையாது.
வடயிந்திய பிராமணர் மற்றும் உயர்சாதி மக்களுக்கு வேண்டுமானால் 5% வரை தொடர்பிருக்கலாம்.
ஆனால் ஆங்கிலேயர் வரும்வரை ஹிந்தியாவுக்கு அடிபணியாமல் தனியரசு செலுத்திய தமிழகத்தின் எந்த மக்களோடும் ஆரிய தொடர்பிருக்க வாய்ப்பேயில்லை.

இது பொதுமையான அறிவு கொண்டு சிந்தித்தாலே அனைவருக்கும் புரியும்.

முன்னேறிய சமூகமான பார்ப்பனர் மீது பிற தமிழ்ச்சாதிகள் கொண்ட பொறாமையை வந்தேறிகள்  பயன்படுத்திக்கொண்டனர்.
ஆங்கிலேயர் தந்திரத்தை கடன்வாங்கி தமிழினத்திற்குள் ஊடுறுவி திராவிடம் எனும் பெயரில் தாம் ஆள வழிசெய்து கொண்டனர்.

வீழ்ந்தது பார்ப்பனர் மட்டுமல்ல!
தமிழர் அனைவரும்தான்!

பார்ப்பனர் தமிழரே!