Showing posts with label வழக்கு. Show all posts
Showing posts with label வழக்கு. Show all posts

Friday, 20 June 2025

சாதிய கட்டப் பஞ்சாயத்து

 சாதிய கட்டப் பஞ்சாயத்து 

 தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் போலீஸ் வாகனத்துல் சிறுவன் கடத்தல் வழக்கில் உற்று நோக்கினால்.. 

 சம்பந்தப்பட்ட காதல் ஜோடியில் பெண் குடும்பம் நாயுடு சமூகத்தைச் சேர்த்தவர்கள்.
 பையன் வன்னியர் என்று சொல்கிறார்கள்.
இவர்களது காதல் திருமணத்தை ஏற்காக பெண்ணின் தந்தை வனராஜா நாயுடு தன் சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் தாதாவைத் தொடர்புகொள்கிறார்.
 இந்த மகேஸ்வரி காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர். 
 ஆனாலும் பல போலீஸ் உயரதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பைத் தொடர்பைப் பேணுகிறவர்.
 போலீஸ் அதிகாரிகள் ஆதரவுடன் கொடைக்கானலில் அடுக்கம் பகுதியில் வடயிந்தியர் ஒருவருக்கு சொந்தமாகன பெரிய எஸ்டேட்ட ஒன்றை இந்த பெண் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்.
 இவருக்கு மிக நெருக்கமானவர் ஏடிஜிபி ஜெயராம்.
 இவர் கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நபர்.
 வனராஜா தரப்பு மகேஸ்வரியிடம் காதல் ஜோடியைப் பிரித்து தம் சாதிய கௌரவத்தைக் காப்பாற்ற ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளது!
 இவர்கள் ஏடிஜிபி ஜெயராம் மூலம் அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி யை அணுகுகிறார்கள்.
 சாதிமறுப்புத் திருமணம் செய்யும் காதல்ஜோடிகளைப் பிடித்து கட்டப் பஞ்சாயத்து செய்யும் அனுபவம் உள்ள (பறையர் சமூகத்தைச் சேர்ந்த) ஜெகன்மூர்த்தி கும்பல் களத்தில் இறங்குகிறது.
 ஏடிஜிபி யின் அரசு வாகனத்திலேயே மகேஸ்வரி மற்றும் ஜெகன்மூர்த்தியின் ஆட்கள் காதல்ஜோடி தங்கியிருந்த வீட்டுக்குப் போகிறார்கள்.
 அங்கே அவர்கள் இல்லை அதனால் மாப்பிள்ளை பையனின் தம்பியை கடத்திக் கொண்டு போய் அவர்களது குடும்பத்தை மிரட்ட தொடங்குகின்றனர்.
 ஆனால் விசயம் வெளியே தெரிந்து பிரச்சனை பெரிதாக ஆக அந்த பையனை இறக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
 இதையடுத்து நேர்மையான ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் மகேஸ்வரி குழு கைது செய்யப்படுகிறது.
 பூவை மூர்த்தி கைதுக்கு பயந்து தலைமறைவாகிறார். 
 அவர் முன்ஜாமின் கேட்டு போட்ட மனு நீதிபதி வேல்முருகன் பார்வைக்கு வருகிறது.
 இந்த நேர்மையான நீதிபதிதான் ஜெகன் மூர்த்தியை நேரில் வரச் சொல்லியும் ஏடிஜிபி யை கைது செய்யவும் உத்தரவிடுகிறார்.
 இருவரையும் கடுமையாக எச்சரித்து விசாரணைக்கு அனுப்பிவைக்கிறார்.
 
 
 

Wednesday, 24 January 2024

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

 முதலில் இயல்பிலேயே தனி நாடான தமிழகத்திற்கும் அயோத்தி பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கூறிவிடுகிறேன்.

 ஆனால் கரிகாலன் காலத்தில் இருந்து வள்ளலார் காலம் வரை தமிழ் இலக்கியத்தில் இராமன் பற்றி உயர்வான வகையில் குறிப்புகள் இருக்கின்றன என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

 இங்கே நாம் பேசப்போவது வடயிந்திய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயான மோதல் பற்றி மட்டுமே!
 இந்த பிரச்சனையில் ஹிந்தி மொழிக்குடும்ப ஹிந்து மற்றும் முஸ்லிம்களுக்கும் தமிழக இந்து மற்றும் இசுலாமியருக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்கிற வகையில் வெளியில் நின்று (தமிழனாக) மூன்றாவது நபரின் பார்வையில் இதை அலசுகிறேன்.

 குழப்பத்தைத் தவிர்க்க இங்கே அயோத்தி என்றே தற்போதைய அயோத்தியைக் குறிக்கிறேன். அதன் பழைய பெயர் வேறு.

 அயோத்தி என்கிற பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இமயமலை அடிவாரத்தில் இருந்து கங்கை வரை ஔத் அல்லது அவத் எனும் பகுதி இருந்துள்ளது. ஔதி அல்லது அவதி வட்டார மொழி பேசப்பட்டது. இதுவே புராணங்களில் வரும் அயோத்தி நகரம் (இந்தியில் அயோத்யா) என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. 

 பாபர் மசூதிக்கும் பாபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
 இப்ராஹிம் லோடியை தோற்கடித்து பாபர் ஆட்சிக்கு வருகிறார். கிபி 1526 - 1530 என நான்கு ஆண்டுகள்தான் இவர் ஆட்சியே செய்கிறார். பாபர்நாமா என்று இவரது சுயசரிதை கூட இருக்கிறது. இவர் கோவிலை இடித்ததாக எந்த சான்றும் இல்லை. பொ.மு. 1528 இல் இவர் கோவிலை இடித்ததாக ஆங்கிலேயர் தமது அரசிதழில் தவறான கருத்தை பதிவு செய்ததே குழப்பத்திற்கு காரணம்!
 இது அவர்கள் ஆரம்பத்தில் சிதைந்து போன கல்வெட்டுகளை அரைகுறையாக ஆய்ந்து மொழிபெயர்த்தபோது ஏற்பட்ட தவறு.

 william foaster என்பவர்  'early travels of india' (1583-1619) எனும் புத்தகம் வெளியிட்டுள்ளார். இது அக்பர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த 7 ஆங்கிலப் பயணிகளின் குறிப்புகளின் தொகுப்பு ஆகும். இதில் அயோத்தி வருகிறது ஆனால் ராமர் கோவில் பற்றியோ அல்லது மசூதி பற்றியோ குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த 7பேரில் 2 பேர் இங்கே அழிந்து போன பழமையான ராணிச்சந்த் எனும் கோட்டையின் சிதிலங்கள் இருந்ததாக பதிவு செய்துள்ளனர். இதில் பிராமணர்கள் பானைகளை வைத்துக்கொண்டு வரும் பக்தர்களின் பெயரைக் கேட்டு ஏதோ சடங்கு செய்ததாகவும் பதிவு செய்கின்றனர்.
 அருகில் ஆறும் ஓடுவதால் இது இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது போன்ற சடங்காக இருக்கலாம்.
 மேலும் thomas coryat என்பவர் "உலகிலேயே முகலாயர் ஆட்சியில்தான் ஒரு கிறித்துவனாகிய நான் மதங்கள் பற்றி சுதந்திரமாக பேச முடிகிறது. இங்கு போல நான் முகமது (நபி) பற்றி பாரசீகத்திலோ(ஈரான்) துருக்கியிலோ பேசியிருந்தால் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்" என்று 1620 களில் பதிவு செய்துள்ளார்.

 இதிலிருந்து பாபர் கோவிலை இடித்து மசூதி கட்டவில்லை என்பதும் அக்பர், ஜஹாங்கிர் காலம் வரை மதவெறியுடன் இல்லாமல் அரசாட்சி நடந்ததும் புலனாகிறது.

 கி.பி. 1660 இல் 15 கோவில்களை இடிக்கச் செய்தவர் அவுரங்கசீப். அயோத்தியில் மசூதி கட்டியவரும் இவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு உறுதியான சான்றுகள் இல்லை.

 கி்பி 1672 இல் லால் தாஸ் என்பவர் 'அவத விலாசம் (awadh vilas)' எனும் புத்தகத்தில் இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று கூறுகிறார். இதிலும் கோவில் பற்றியோ மசூதி பற்றியோ குறிப்பு இல்லை. ஆனால் திடீரென்று அந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் எழுதக் காரணம் அங்கே ஓரு மசூதி கட்டப்படப் போவதாக தகவல் பரவியதால் இருக்கலாம். 

ஔரங்கசீப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி செய்த ராஜபுத்திர மன்னர் ஸவாய் ஜெய் சிங் (ஜெய்ப்பூர் நகரை நிர்மணித்தவர்)  என்பவர் ஆதரவுடன் கிபி 1717 இல் இந்த மசூதியின் முன்பும் பக்கவாட்டிலும் ஹிந்துக்கள் இடம் வாங்கி (கோவில் என்றில்லாமல்) அங்கே ராமர் கோட்டம் எனும் திடல், சீதை சமையலறை எனும் மேடை, அனுமன் வாயில் எனும் நுழைவு வாசல் என மூன்று சிறிய கட்டமைப்புகளைக் கட்டி பூஜைகள் நடத்தினர் என்று கூறுகின்றனர். இதற்கு சான்றுகள் இல்லை. ஜெய் சிங் காலத்தில் வரைந்த பாபர் மசூதி போன்ற மூன்று கோபுரம் கொண்ட கோவில் வரைபடம் கூட இருக்கிறது. இது பாபர் மசூதி கட்டப்பட்டதும் அது போல ஹிந்துக் கோவில் ஒன்று கட்டப்பட போடப்பட்ட திட்ட வரைபடம் போலவே தெரிகிறது.

 ஐரோப்பிய ஏசு சபை (european jesuit missionary) சார்பாக இந்த வட்டாரத்தில்  தங்கியிருந்த Joseph Tiefenthaler "ஔரங்கசீப் ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்படும் ராம்கோட் கோட்டையை இடித்து மசூதி கட்டினார் ஆனால் சிலர் பாபர்தான் இதைச் செய்தார் என்று கூறுகின்றனர்"  என 1767 இல் முதன்முதலாக பதிவு செய்கிறார்.

 [என்னுடைய யூகம் முகலாயர் வருகைக்கு முன்பே கங்கைக் கரையில் ஒரு சிறிய குன்றின் மீது அழிந்துபோன பழமையான  கோட்டையின் அஸ்திவாரம்  இருக்கிறது. ஊருக்கு வெளியே இருந்த அந்த இடத்தில் பிராமணர்கள் சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர்.
 அந்த அஸ்திவாரத்தின் மேலே ஒரு மசூதியை ஔரங்கசீப் காலத்தில் முஸ்லிம் அதிகாரி யாரோ கட்டியிருக்கிறார்.
 இது கட்டப்பட்ட காலம் 1690-1710.
 அதைப் பார்த்து அதுபோல தானும் கோவில் கட்ட ராஜஸ்தான் மன்னர் திட்டமிடுகிறார்.
மசூதி இருக்கும் குன்றின் பெயர் ராம் கோட் என்று இருந்தது முதல் குழப்பத்திற்கு காரணம்.
 அப்பகுதி அவ்த் என்கிற பெயரில் வழங்கப்பட்டதும் புராணங்களில் ராமர் பிறப்பிடம் அயோத்யா என்று இருந்ததும் அடுத்த குழப்பம்.
 இந்த 'ராமர் பிறந்த இடத்தில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டினர்' எனும் கருத்து ஏசு சபையின் மதமோதலை ஏற்படுத்தி மதமாற்ற உள்நோக்கம் கொண்டதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக தெரிகிறது.
 தாங்கள் சடங்குகள் செய்யும் காலி இடத்தில் மசூதி வந்ததால் பிராமணர்கள் மேற்படி கருத்தை ஆதரித்து பேசத் தொடங்கியுள்ளனர்.]

  பிற்காலத்தில் தோன்றிய மசூதிகள் நல்ல வளர்ச்சி அடைந்திருக்க இந்த முகலாயர் கால மசூதி அந்த வட்டாரத்தில் கூட பிரபலம் ஆகவில்லை. வட்டார முஸ்லிம்கள் இந்த மசூதியை பெரிதாக ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் அங்கே மிகச் சிறுபான்மை என்பதும் ஒரு காரணம். ஊருக்கு வெளியே இது இருப்பதும் இதை பொதுமக்கள் அவ்வளவாக பயன்படுத்தாமல் விட்டுவிடக் காரணமாக இருக்கலாம்.

மசூதியின் முதல் புகைப்படம் (ஓவியம்) பொ.மு 1783 இல் william hodges என்பவர் வரைந்தது. இதுவே மசூதி இருந்தது பற்றிய முதல் வலுவான சான்று.
 
 முகலாயர் வீழ்ந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தபோது இப்பகுதியில் அகழ்வாய்வு செய்யப்பட்டது.
 1813 இல் பச்சனான் (buchanan) என்பவர் இப்பகுதியில் கல்வெட்டு ஆய்வுசெய்து பாதியில் விட்டுவிட்டார் (இதை பிற்காலத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தேடி எடுத்த எழுத்தாளர் கிஷோர் குணால் என்பவர் அது தொடர்பான செய்திகளை வெளியிட்டார். அதில் சிதைந்து கிடந்த கல்வெட்டுத் துண்டுகளில் பாபர் பெயரும் ஔரங்கசீப் பெயரும் இருப்பதை கண்டறிகிறார். ஆனால் காலத்தை கணிக்க முடியவில்லை.
 அப்போதே அந்த மசூதி பராமரிப்பின்றி கல்வெட்டுகள் சிதைந்து போய் இருந்துள்ளன).

 அகழ்வாராய்ச்சி முடிவுகளை எதிர்பார்த்திருந்த இரு தரப்பினரும் ஏமாற்றம் அடைந்து அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இதுவே ஹிந்து முஸ்லிம் என மதரீதியான சட்டரீதியான முதல் மோதல்.
  1838 இல் மான்ட்கோமரி மார்ட்டின் என்பவரை ஆங்கிலேயர் நியமித்து இது பற்றி அறிக்கை கேட்டனர்.
 இவர் விசாரித்து ஆராய்ந்து மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்தது உண்மைதான் ஆனால் அதை இடித்து மசூதி கட்டியதாக கூறமுடியாது என்று குழப்பமான அறிக்கையை வெளியிடுகிறார்.
அதாவது அஸ்திவாரம் பழமையானது மசூதி கொஞ்சம் புதியது என்பதால் இப்படி கூறியிருக்கலாம்.
 ஆனால் அயோத்தி ஒரு ஹிந்துக்கள் பெரும்பான்மைப் பகுதி என இவர் குறித்துள்ளார். 
 
 இதுவரை சட்டப்படி அமைதி வழியில் நடந்த பிரச்சனை 1853 இல் முதன்முதலாக மசூதியில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த அனுமன் கோவில் மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்முகி அகாடா எனும் அமைப்பு 'ராமர் கோவிலை மீட்போம்' என்று மசூதியை நோக்கி பேரணியாக சென்றனர். இப்போது முதல் மதமோதல் ஏற்படுகிறது.
 அதாவது முதல் அடாவடியான நடவடிக்கையை ஹிந்துக்கள்தான் தொடங்கியுள்ளனர்.

 1855 இல் பதிலுக்கு 'அனுமன் கோவில் மசூதியை இடித்து கட்டியது' என்று ஷா குலாம் ஹுசைன் என்பவர் தலைமையில் 500 முஸ்லிம்கள் அனுமன் கோவிலை நோக்கி சென்றனர். அப்போது அங்கே 8000 ஹிந்து பைராகி சாமியார்கள் திரட்டப்பட்டு இருந்தனர். இருவரும் மோதிக்கொள்ள 75 முஸ்லிம்கள் இறக்கின்றனர். இதுவே முதல் ரத்தக் களரியான கலவரம் (இதற்குப் பிறகு முஸ்லிம்கள் ஏறத்தாழ கடைசிவரை களத்தில் இறங்கவே இல்லை).

 இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் மசூதி நிலத்திற்கும் ஹிந்துக்கள் பூஜை செய்யும் இடத்திற்கும் இடையே தடுப்பு சுவர் கட்டுகின்றனர்.
 பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

 1858 இல் பஞ்சாபில் இருந்து 25 பேர் கொண்ட சீக்கியர் குழு ஒன்று மசூதியை முற்றுகை இட்டு மசூதி வளாகத்தில் நுழைந்து வேள்வி நடத்துகின்றனர். மசூதி சுவர்களில் ராம் ராம் என்று எழுதுகின்றனர்.
 ஹிந்து பகுதியை மணல் நிரப்பி உயர்த்தி பூஜைகள் செய்கின்றனர்.
 
 இது பற்றி மசூதி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்கிறது. பிறகு காவல்துறை வந்து சீக்கியர்களை அப்புறப்படுத்துகிறது.

 1885 இல் மகந்த் ரகுவர் தாஸ் எனும் ராமர் கோட்டத்து பூசாரி ராமருக்கு ஹிந்து இடத்தில் சிறிய கோவில் கட்ட அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார். 'அவர் நிலத்தின் முதலாளி இல்லை எனவே கோவில் கட்ட உரிமை இல்லை' என்று கூறி வழக்கு தள்ளுபடி ஆகிறது.

 வெகுகாலம் அமைதியாக இருந்த பின் 1934 இல் ஒரு பசு மாடு அயோத்தி அருகே ஷாஜகான்பூர் எனும் முஸ்லீம் பகுதியில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடிக்கிறது.
 இப்போது ஹிந்துக்கள் திரண்டு வந்து மசூதியில் மதில் சுவரை உடைத்து மசூதியையும் இடிக்க முயற்சிக்கின்றனர். ஆங்கில அரசு கலவரக்காரர்களை அடித்து விரட்டி உடைந்த பகுதிகளை சரிசெய்து அளிக்கிறது.

 1949 இல் ஹிந்து அமைப்பு ஒன்று ராமர் கோட்டத்தில் ராமாயண கச்சேரி நடத்துகிறது இவர்கள் இரவோடு இரவாக பயன்பாட்டில் இல்லாத மசூதியின் உள்ளே திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு சிலை தானே தோன்றியதாக வதந்தி பரப்புகின்றனர்
(இந்த சிலை கடைசி வரை அகற்றப் படவில்லை).
 
 இப்போதும் சன்னி வக்பு வாரியம் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். மசூதி பூட்டப்படுகிறது. ராமர்சிலையை வெளியே எடுக்க நேரு மற்றும் வல்லபாய் படேல் உ.பி அரசுக்கு உத்தரவிட உ.பி மாநில அரசு கலெக்டருக்கு உத்தரவிட அதை நிறைவேற்ற மறுத்து அன்றைய வட்டார காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் கலெக்டர் ஆன கே.கே.நாயர் மறுக்கிறார். மக்கள் கூடும்வரை சிலையை எடுக்காமல் தாமதிக்கிறார். கடைசியில் ராஜினாமாவும் செய்கிறார். இதனால் சிறிது நாட்களில் ஹிந்துக்கள் பகுதியும் சேர்த்து பூட்டப் படுகிறது.

 ஆனாலும் பூசாரிகள் மட்டும் உள்ளே சென்று ராமர் கோட்டத்தில் பூஜை செய்ய அனுமதிக்கிறது. 

 இனி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இப்படியே தொடரும் என்று அறிவிக்கிறது்

 1950 இல் எல்லா வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வழக்காக நடக்கிறது. ஹிந்து தலைமையாக நிர்மூகி அகாடா முஸ்லிம் தலைமையாக சன்னி வக்பு வாரியம் என வழக்கு நடக்கிறது.

 1984 வரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ரத யாத்திரை தொடங்குகிறது.
 வெவ்வேறு நகரங்களில் இருந்து ராமர் தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஊர்வலமாக அயோத்தி நோக்கி செல்கின்றன.

 இந்த நேரத்தில் ஹிந்து பொதுமக்கள் உள்ளே சென்று தங்கள் இடத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு வருகிறது. 

 இந்த நேரத்தில் முஸ்லிம்கள் 'பாபர் மசூதி செயல் குழு' என்று ஒன்றைத் தொடங்கினர் ஆனால் ராமர் சிலையை அகற்ற கோரிக்கை வைத்ததைத் தவிர அவர்கள் பெரிதாக செயல்படவில்லை.

 1989 இல் பகவான் இராமர் இந்த வழக்கில் பங்கேற்கிறார். அதாவது கோவில் தொடர்பான வழக்குகளில் தெய்வத்தின் சார்பாக ஒரு பக்தர் ஆஜராகி கோவில் தரப்பு நியாயங்களை அந்த தெய்வம் வாதிடுவது போலவே வாதிடலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி தியோகி நந்தன் அகர்வால் எனும் முன்னாள் நீதிபதி ராமரை இந்த வழக்கில் சேர்க்கிறார் (இந்த ராமர்தான் வழக்கை வெற்றி பெற்றதாக இறுதி தீர்ப்பு வந்தது)

 1989 கும்ப மேளாவில் ஹிந்து அமைப்புகள் கூட்டாக ராமர் கோட்டத்தில் அஸ்திவாரக் கல் வைக்கும் போராட்டத்தை அறிவிக்கின்றன. இதன்பிறகு சாமி கும்பிட வரும் பக்தர்கள் ஒரு செங்கலில் ராம் என்று எழுதி ராமர் கோட்டத்தில் வைத்தனர். இப்படி மூன்றரை லட்சம் செங்கற்கள் சேர்ந்தன. இதை உள்துறை அமைச்சர் முன்னிலையில் அடித்தளமாக அடுக்கி பூஜை செய்தனர்.

 இப்போது வாஜ்பாய் நீக்கப்பட்டு அத்வானி தலைமையில் பாஜக இந்த விடயத்தில் குதிக்கிறது.
இதற்கு காரணம் அன்று இந்த விடயத்தில் ஹிந்துக்கள் காட்டிய பேராதரவு.
  அத்வானி தலைமையில் மோடி திட்டமிடலில் VHP செய்தது போலவே குஜராத்தில் இருந்து ஒரு  ரத யாத்திரை அயோத்தி நோக்கி தொடங்குகிறது. இது செல்லுமிடங்களில் கலவரங்கள் மூண்டன இதனால் 1990 இல் இது பீகாரில் நுழைந்த போது லாலு பிரசாத் யாதவ் தடுக்கிறார். அத்வானியை கைது செய்கிறார்.

 ஆனாலும் RSS தொண்டர்கள் யாத்திரை நின்ற இடத்தில் இருந்து தொடங்கி அயோத்தி நோக்கி வந்தனர். தடைகளை மீறி ராமர் கோட்டத்துக்குள் நுழைய முயன்ற அவர்கள் மீது முலாயம் சிங் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதில் 30 பேர் உயிரிழக்கின்றனர்.

 2 தொகுதிகளை வென்றிருந்த பாஜக அடுத்த தேர்தலில் ஹிந்துக்களின் பேராதரவோடு நான்கு மாநிலங்களில் 85 தொகுதிகளில் வெல்கிறது. 

 1991 இல் உத்திர பிரதேச தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.
கல்யாண் சிங் முதலமைச்சர் ஆகிறார். இவர் பிரச்சனைக்குரிய மொத்த நிலத்தையும் அரசின் சுற்றுலா தளம் அமைப்பதாக கூறி கையகப்படுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் ஒரு அறக்கட்டளைக்கு வெறும் ஒரு ரூபாய் க்கு குத்தகைக்கு விடுகிறார். இங்கே சுற்றுலா தளமாக ராமாயணப் பூங்கா வரவுள்ளதாக அறிவிக்கிறார். 

 இப்போதும் முஸ்லிம்கள் வழக்கு போடுகின்றனர். நீதிமன்றம் கல்யாண் சிங் முயற்சிகளுக்கு தடை விதிக்கிறது.  
 
 கல்யாண் சிங் இப்பகுதியில் இருந்த தடுப்பு வேலிகளை அகற்றி பாதுகாப்பைக் குறைக்கிறார்.

 1992 பிப்ரவரியில் RSS, VHP, BJP, Bajrang dal ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூடி மசூதியை உடைக்க திட்டம் தீட்டுகின்றனர்.

 இதை உளவுத்துறை மத்திய அரசிடம் கூறுகிறது ஆனாலும் காங்கிரஸ் அரசு பேசாமல் இருந்து விடுகிறது.

 கல்யாண் சிங் "ஆட்சியே போனாலும் ராமர் கோவில் கட்டுவேன்" என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.

 1992 மத்தியில் VHP தலைவர் "மூன்று மாத காலத்திற்குள் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கு செல்வோம்" என்று அறிவிக்கிறார்.

 VHP "மசூதி இருக்கும்வரை கோவில் கட்டமுடியாது" என்று பரப்புரை செய்கிறது.

 1992 நவம்பரில் டெல்லியில் கூடிய ஹிந்து அமைப்புகள் பாபர் மசூதியை டிசம்பர் 6 இல் இடிப்பதாக முடிவு செய்கின்றனர்.

 அந்த தேதியில் தொண்டர்களைத் திரட்டி அனைவரும் கைப்பிடி அளவு மணல்  அள்ளி குவிக்கும் போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் திரட்டப்படுகின்றனர்.

 இது தொடர்பான வழக்கில் கல்யாண் சிங் நீதிமன்றத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதியளிக்கிறார். இதை நிறுத்தினால் கலவரம் வரலாம் என்றும் கூறுகிறார்.

 டிசம்பர் 6 அன்று கல்யாண் சிங் காவல்துறைக்கு துப்பாக்கிச்சூடு மட்டும் நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறார். இதன் பொருள் 'வேடிக்கை மட்டும் பார்' என்பதாகும்.

அங்கே எல்லா ஹிந்து அமைப்புகளும் கூடி இருந்தன. மேடையில் பேசும்போது அத்வானி 'தொண்டர்கள் பலி கொடுக்கத் தயாராகுங்கள்' என்கிறார். வாஜ்பாய்  'இந்த நிலம் நாம் உட்கார முடியாமல் இருக்கிறது. இதை சம மட்டம் ஆக்குங்கள்' என்கிறார்.

 அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு கும்பல் எழுந்து மசூதியை உடைக்கத் தொடங்குகிறது. பிறகு மொத்த கூட்டமும் அப்படியே சென்று மசூதியை உடைக்கின்றனர். அனைவருக்கும் இடிக்கும் கருவிகள் வழங்கப்படுகின்றன.

 11:30 - 4:00 மணி வரை இடிக்கும் செயல் நடக்கிறது. மசூதி முழுவதுமாக இடிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு ராமர் சிலை வைத்து பூஜை நடக்கிறது.

 பிறகு 6:00 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்படுகிறது. 
 ஆட்சியைக் கலைக்கும் முன் கல்யாண் சிங் தாமே ராஜினாமா செய்துவிடுகிறார்.
 பாஜக ஆளும் மூன்று மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்படுகிறது.

செய்தி பரவியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மதக் கலவரம் வெடிக்கிறது. 2000 பேர் இறக்கின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

 இந்த இடிப்பு சம்பவம் பற்றி விசாரிக்க லிபரான் அயோத்தி கமிஷன் நியமிக்கப்பட்டு இது திட்டமிட்ட செயல் என்று அறிக்கை வருகிறது.

 பிறகு வழக்கு சிபிஐ வசம் போய் இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர்.

1993 இல் பிரச்சனைக்குரிய நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி இந்திய அகழ்வாய்வுத் துறை மூலம் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு அதன்படி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. 

 ஆனாலும் 2003 இல் தான் அகழ்வாய்வு தொடங்குகிறது.
 இதில் அடித்தளம் ஆராயப்பட்டு அது முகலாயர் பாணியில் இல்லை என்பது அறிவிக்கப்படுகிறது.
ஆனால் முகலாயர் இதை இடித்துதான் மசூதி கட்டினர் என்று கூறமுடியாது என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
 
 2005 இல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் இந்த தற்காலிக கோவிலைத் தாக்க முயல்கின்றனர். CRPF படை அவர்களைக் கொல்கிறது.

 2010 இல் உயர்நீதிமன்றம் பிரச்சனைக்குரிய நிலத்தை பிரித்து சன்னி வாரியம், ராமர், நிர்மூகி அகாடா ஆகிய மூவருக்கு வழங்குகிறது.
 
 மூவருமே மேல்முறையீடு செய்கின்றனர். ஆனால்
2017 இல் தான் மீண்டும் வழக்கு தொடங்குகிறது. 
 
 2019 இல் இறுதித் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாக வருகிறது.

இதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானவை
1) இந்திய பாணி அஸ்திவாரம் இருக்கிறது என அகழ்வாய்வுத் துறை தந்த அறிக்கை.
 இதன்மூலம் நிலம் ஹிந்துக்களுக்கு சொந்தம் என்று உறுதியானது.

2) அக்பர் கால ஆங்கிலேயப் பயணிகள் புற முஸ்லிம் தளங்களைக் குறித்தது போல அயோத்தியை முஸ்லிம் புனித தலமாக குறிக்காதது
அதேவேளை பிராமணர் இருந்ததைக் குறித்தமை.

3) பாபர் மசூதி பெரும்பாலும் இயக்கத்தில் இல்லாமலே இருந்தது.
ஆனால் ஹிந்துக்கள் அங்கே பூஜை செய்வதை எப்போதுமே நிறுத்தவில்லை.

 எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் உத்திர பிரதேச முஸ்லிம்கள் இந்த பிரச்சனையில் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துக்கள் ஒற்றுமையாக தீவிரமாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்ததே இங்கே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. 

 ராமர் சிலையை அகற்றாமல் விட்டது,  அகழ்வாராய்ச்சி நடத்தாமலே இருந்தது, 
மசூதியை இடிக்கும் வரை வேடிக்கை பார்த்தது என இந்த பிரச்சனையை காங்கிரஸ் கையாண்ட விதம் ஏற்கும் வகையில் இல்லை. இவ்வளவு நீண்டகாலம் இழுத்தடித்து வேறு பிரச்சனைகள் முற்றும் போது மக்களை மடைமாற்ற இந்த பிரச்சனையை பயன்படுத்தி வந்துள்ளது.

பாஜக இதை வைத்து எல்லா பிரச்சனைகளையும் மடைமாற்றம் செய்து அரசியல் செய்து வந்துள்ளது. 
 
 
  முடிவாக, 
ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பது முழுக்கப் பொய்!
மசூதியை இடித்தது கண்டிப்பாக குற்றச்செயல்!
தற்போது ராமர் கோவில் கட்டப்படுவது குறுக்குவழியில் கிடைத்த வெற்றி!

 
பி.கு: இணையத்தில் தேடி ஆராய்ந்து எனது யூகத்தை எழுதியுள்ளேன். 
 சான்றுகளைக் காட்டினால் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நன்றி:-
Nitish rajput (yt)
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு நகல்
விக்கிபீடியா

 

Thursday, 29 June 2023

தீட்சிதர்கள் ஆதரித்த வள்ளலார்

தீட்சிதர்கள் ஆதரித்த வள்ளலார்

 ஒரு பொய்க்கதை உலா வருகிறது...
 அதாவது சிறந்த சிவ பக்தராக இருந்த வள்ளலார் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களால் அவமானப் படுத்தப் பட்டதாகவும் அதனாலேயே சைவத்தில் இருந்து வெளியேறி தனி மதம் படைத்ததாகவும் சிதம்பரத்துக்கு போட்டியாக அருகிலேயே ஞான சபை எனும் கோவில் கட்டி கருவறை வரை செல்லும் சாதி பாகுபாடு இல்லாத முறையைக் கொண்டு வந்ததாகவும் அந்த கதை கூறுகிறது.

 இது உண்மை இல்லை!

இருந்தால் சான்று தரவும்! 

 வள்ளலார் தனது நூல்களில் பல விடயங்களை இடித்துரைத்து எழுதியுள்ளார். ஆனால் எங்கும் தீட்சிதர் பற்றியோ சிதம்பரம் கோவில் முறைமைகளைப் பற்றியோ இடித்துரைக்கவில்லை.
 தனி வழிபாட்டு முறை நிறுவிய நோக்கம் பற்றி கூறும்போதும் தீட்சிதர் அல்லது தில்லை அம்பலம் பற்றி எதுவும் கூறவில்லை. 

 வள்ளலார் நெடுங்காலம் சைவ அடியாராக இருந்தார் பிற்பாடு அவருக்கு ஞானம் பிறந்தது. வழிபாடு என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தனியாக எளிமையான ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தினார். சிலை வழிபாட்டில் எளிமைக்கு அதிக வாய்ப்பில்லை. எனவே ஜோதி வடிவமாக இறைவனை உருவகப் படுத்தினார் (அவர் சைவத்தை விட்டு வெளியேறவில்லை. தன் கோவிலுக்கு வந்து அருளுமாறு சிதம்பர நடராஜரை அழைத்து பாடலும் எழுதுகிறார். இதை வைத்தே தீட்சிதர்கள் மீதான பொய் கட்டமைக்கப் படுகிறது).

 வள்ளலாரின் இந்த கொள்கையைய எதிர்த்தவர் தீவிர சைவ மதப் பற்றாளரான யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்!
 இவருக்கும் வள்ளலாருக்கும் கருத்தியல் மோதல் பல ஆண்டுகளாக நடந்துவந்தது.

 மோதல் உச்சத்திற்கு போக வள்ளலார் சைவ தலைமை பீடமான சிதம்பரத்தின் பூர்வ அந்தணர் குடிகளான தீட்சிதர்களிடம் உதவி கேட்கிறார். 

அவர்கள் சபா  நடேச தீட்சிதர் என்பவர் தலைமையில் ஒரு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்து நாவலருக்கு எதிராகப் பேசுகின்றனர். வள்ளலாரும் இதில் பேசுகிறார். இது நடந்தது கி.பி.1869 இல்! 
இதற்கு பதிலடியாக நாவலர் மானநஷ்ட வழக்கு போடுகிறார்.
 அவ்வழக்கில் முதல் 5 குற்றவாளிகள் தீட்சிதர்கள்!
ஆறாவது குற்றவாளிதான் வள்ளலார்!
வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி கடுமையாகப் பேசிய சபா நடேச தீட்சிதருக்கு ரூ.50 (அப்போது மிகப் பெரிய தொகை) தண்டம் விதித்தும் மென்மையாகப் பேசிய மற்றவரையும் வள்ளலாரையும் விடுதலை செய்துவிடுகிறார்.
இது ஆவணப் படுத்தப்பட்ட சான்று.

 ஆக வள்ளலாருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய தீட்சிதர்கள் மீதே பழியைப் போட்டு வள்ளலாரைக் கோவிலை விட்டு தீட்சிதர்கள் துரத்தியதாக கதை எழுதியுள்ளனர் திராவிட அடிப்பொடிகள்!


 

 

Wednesday, 28 November 2018

விடைதெரியாத கேள்விகள்

விடைதெரியாத கேள்விகள்

தீர்ப்பு வரும் முன்பே அதாவது ஆலை மூடப்பட்ட அடுத்தநாளே "விரைவில் ஆலை திறக்கப்படும்" என்று அனில் அகர்வால் உறுதியாகக் கூறியது எப்படி?

ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவில் ஒரு தமிழக உறுப்பினர் கூட இருக்கக்கூடாது என்று கேட்டு வாங்கிய அனில் அகர்வால் தரப்பு
சொந்த சாதிக்கார நீதிபதி தலைமையில் குழு அமைத்தது எப்படி?

"தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" தடை விதித்தால் அதை நீக்க "தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு" அதிகாரம் உள்ளது.
ஆனால் ஆலையை மூடியது தமிழக "அரசு".
இதை ஆய்வு செய்து "ஆலையை மூடியது தவறு" என்று கூட தே.ப.தீ. (NGT) க்கு என்ன அதிகாரம் உள்ளது?

துறை என்பதைத் தாண்டி அரசு என்கிற அதிகார மட்டத்திற்கு வந்துவிட்ட இந்த வழக்கை மத்திய மாநில அரசுகளைத் தாண்டிய அதிகாரமான உச்ச நீதிமன்றம்தான் தன்னிச்சையாக ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லையே?!

என்றால் தமிழக "அரசு" என்பது மத்திய அரசின் ஒரு "துறை"யை விட கீழானதா?!

பல ஆதாரங்கள் இருந்தும் போராட்டத்தில் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ  இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லையே ஏன்?!

சினிமாவில் வருவது போல போலீஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள், சிபிஐ என அனைத்துமே பணக்கார முதலாளிகளின் சட்டைப்பையில் உள்ளது உண்மைதானோ என்று ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறதே?!

என்றால் முப்பது ஆண்டுகளாக ஜனநாயக வழியிலும் சட்டரீதியாகவும் தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டம் அனைத்தும் வீண்தானா?!

இத்தனை உயிரிழப்புகள் வீண்தானா?!

இதற்கு பேசாமல் தூத்துக்குடி இளைஞர்கள் ஆலைக்கு பாம் வைத்து தகர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறதே?!

என்றால் இங்கே ஜனநாயகம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தானா?

Wednesday, 24 October 2018

இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.

இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.

மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.

மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.

ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.

இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!

நன்றி: Tamilri.com (TRI)

Saturday, 29 September 2018

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)