Friday, 20 June 2025
சாதிய கட்டப் பஞ்சாயத்து
Wednesday, 24 January 2024
தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை
Thursday, 29 June 2023
தீட்சிதர்கள் ஆதரித்த வள்ளலார்
Wednesday, 28 November 2018
விடைதெரியாத கேள்விகள்
விடைதெரியாத கேள்விகள்
தீர்ப்பு வரும் முன்பே அதாவது ஆலை மூடப்பட்ட அடுத்தநாளே "விரைவில் ஆலை திறக்கப்படும்" என்று அனில் அகர்வால் உறுதியாகக் கூறியது எப்படி?
ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவில் ஒரு தமிழக உறுப்பினர் கூட இருக்கக்கூடாது என்று கேட்டு வாங்கிய அனில் அகர்வால் தரப்பு
சொந்த சாதிக்கார நீதிபதி தலைமையில் குழு அமைத்தது எப்படி?
"தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" தடை விதித்தால் அதை நீக்க "தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு" அதிகாரம் உள்ளது.
ஆனால் ஆலையை மூடியது தமிழக "அரசு".
இதை ஆய்வு செய்து "ஆலையை மூடியது தவறு" என்று கூட தே.ப.தீ. (NGT) க்கு என்ன அதிகாரம் உள்ளது?
துறை என்பதைத் தாண்டி அரசு என்கிற அதிகார மட்டத்திற்கு வந்துவிட்ட இந்த வழக்கை மத்திய மாநில அரசுகளைத் தாண்டிய அதிகாரமான உச்ச நீதிமன்றம்தான் தன்னிச்சையாக ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லையே?!
என்றால் தமிழக "அரசு" என்பது மத்திய அரசின் ஒரு "துறை"யை விட கீழானதா?!
பல ஆதாரங்கள் இருந்தும் போராட்டத்தில் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லையே ஏன்?!
சினிமாவில் வருவது போல போலீஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள், சிபிஐ என அனைத்துமே பணக்கார முதலாளிகளின் சட்டைப்பையில் உள்ளது உண்மைதானோ என்று ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறதே?!
என்றால் முப்பது ஆண்டுகளாக ஜனநாயக வழியிலும் சட்டரீதியாகவும் தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டம் அனைத்தும் வீண்தானா?!
இத்தனை உயிரிழப்புகள் வீண்தானா?!
இதற்கு பேசாமல் தூத்துக்குடி இளைஞர்கள் ஆலைக்கு பாம் வைத்து தகர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறதே?!
என்றால் இங்கே ஜனநாயகம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தானா?
Wednesday, 24 October 2018
இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.
இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.
இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.
இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.
இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.
கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.
மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.
இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.
அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.
மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.
ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.
இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.
இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!
நன்றி: Tamilri.com (TRI)
Saturday, 29 September 2018
பரியேறும் பறையர்
பரியேறும் பறையர்
சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.
106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.
1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.
'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.
ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.
ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.
1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.
1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.
ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.
சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.
(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)
இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.
பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.
திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.
இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.
1914 க்குப் பிறகு பறையன் இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.
நாம் கூறவிரும்புவது....
தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.
தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.
விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு
படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)
பரியேறும் பறையர்
பரியேறும் பறையர்
சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.
106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.
1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.
'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.
ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.
ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.
1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.
1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.
ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.
சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.
(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)
இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.
பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.
திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.
இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.
1914 க்குப் பிறகு பறையன் இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.
நாம் கூறவிரும்புவது....
தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.
தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.
விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு
படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)