Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

Wednesday, 28 November 2018

விடைதெரியாத கேள்விகள்

விடைதெரியாத கேள்விகள்

தீர்ப்பு வரும் முன்பே அதாவது ஆலை மூடப்பட்ட அடுத்தநாளே "விரைவில் ஆலை திறக்கப்படும்" என்று அனில் அகர்வால் உறுதியாகக் கூறியது எப்படி?

ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவில் ஒரு தமிழக உறுப்பினர் கூட இருக்கக்கூடாது என்று கேட்டு வாங்கிய அனில் அகர்வால் தரப்பு
சொந்த சாதிக்கார நீதிபதி தலைமையில் குழு அமைத்தது எப்படி?

"தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" தடை விதித்தால் அதை நீக்க "தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு" அதிகாரம் உள்ளது.
ஆனால் ஆலையை மூடியது தமிழக "அரசு".
இதை ஆய்வு செய்து "ஆலையை மூடியது தவறு" என்று கூட தே.ப.தீ. (NGT) க்கு என்ன அதிகாரம் உள்ளது?

துறை என்பதைத் தாண்டி அரசு என்கிற அதிகார மட்டத்திற்கு வந்துவிட்ட இந்த வழக்கை மத்திய மாநில அரசுகளைத் தாண்டிய அதிகாரமான உச்ச நீதிமன்றம்தான் தன்னிச்சையாக ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லையே?!

என்றால் தமிழக "அரசு" என்பது மத்திய அரசின் ஒரு "துறை"யை விட கீழானதா?!

பல ஆதாரங்கள் இருந்தும் போராட்டத்தில் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ  இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லையே ஏன்?!

சினிமாவில் வருவது போல போலீஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள், சிபிஐ என அனைத்துமே பணக்கார முதலாளிகளின் சட்டைப்பையில் உள்ளது உண்மைதானோ என்று ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறதே?!

என்றால் முப்பது ஆண்டுகளாக ஜனநாயக வழியிலும் சட்டரீதியாகவும் தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டம் அனைத்தும் வீண்தானா?!

இத்தனை உயிரிழப்புகள் வீண்தானா?!

இதற்கு பேசாமல் தூத்துக்குடி இளைஞர்கள் ஆலைக்கு பாம் வைத்து தகர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறதே?!

என்றால் இங்கே ஜனநாயகம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தானா?

Saturday, 16 June 2018

பேரறிவாளன் செய்த தவறு

பேரறிவாளன் செய்த தவறு

இதே பேரறிவாளன் ராஜீவ் காந்தியை உண்மையிலேயே கொலைசெய்தவர் என்றால்,
சிறையில் சகல உரிமைகளும் சலுகைகளும் பெற்று பத்தே ஆண்டுகளுக்குள்  வெளிவந்திருப்பார்.

வேண்டுமானால் பிற அரசியல் கொலைகாரர்கள் அடைந்த தண்டனையை திருப்பிப் பாருங்கள்.

ஆனால், ஜனநாயக வழியில் போராடுவோர் மீதும் ஏதுமறியா அப்பாவிகள் மீதும் வன்முறையும், பொய்வழக்கும், குண்டர் சட்டமும், தேசத்துரோக வழக்கும், அரசுக்கெதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.

சிறையில் அடியும் உதையும் பல்வேறு அவமானங்களும் சட்ட சிக்கலும் வந்து வாய்க்கும்.

வெளியே வந்தால் மாவோயிஸ்ட், நக்சலைட், தீவிரவாதி, ரவுடி என்ற பட்டத்துடனே பல்வேறு தொந்தரவுகளுடன் வாழவும் வேண்டும்.

ஒரு ஆயுதப் போராளிக்கு கிடைக்கும் சலுகையும் உதவியும் அங்கீகாரமும் ஒரு ஜனநாயகப் போராளிக்கும் கிடைக்காது.

ஏதுமறியா அப்பாவிகளுக்கோ ஏறெடுத்துப் பார்க்க ஆளிருக்காது.

ஆயுதப் போராளிக்கோ ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும், வளர்ந்துவரும் கட்சிகளும், இளைஞர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

வேண்டுமானால் பிடிபட்ட அல்லது சரசடைந்த ஆயுதப் போராளிகள் வரலாற்றினைப் புரட்டிப் பாருங்கள்.

இதுதான் நடைமுறை உண்மை!

ஆயுதம் தூக்கியவர்களை சுட்டுக் கொல்வார்கள் என்றால் அறவழி போராட்டம் நடத்துபவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை.

ஆக எது சிறந்த வழி என்பதை முடிவு செய்யுங்கள்.

Wednesday, 3 January 2018

ஜனநாயகம் என்பது என்ன?

ஜனநாயகம் என்பது என்ன?

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலமாம்.

  இங்கே ஜனநாயகம் என்பது என்ன?

பெரும்பான்மை பலத்தினால் பூனைகள் (சிறுபான்மையான) புலிகளை ஆள்வதுதான் ஜனநாயகம்.

இந்திய ஒன்றியத்தில் இருப்பதோ மோசமான ஜனநாயகம்.

அதாவது புலிகளுக்கு (தமிழர்களுக்கு) வாய்ப்பே கொடுக்காமல் தொடர்ச்சியாக பூனைகளே (ஹிந்தியர்களே) ஆள்வது.

புலிகள் வேட்டையைத் (வன்முறையைத்) தொடங்காமல் இதிலிருந்து தப்பிக்க முடியாது.

புலிகளுக்கும் பூனைகளுக்கும் தனித்தனி ஜனநாயகம்(நாடு) அமைவது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

Wednesday, 8 March 2017

தேர்தல் மாற்றத்தைக் கொணருமோ?

உலக பெண்கள் நாள்

"வாக்களிப்பது மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால்
இந்நேரம் அது தடைசெய்யபட்டிருக்கும்"

கூறியவர் ஒரு பெண் போராளி