Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Wednesday, 16 July 2025

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

 ஈ.வே.ரா தன் வாழ்நாளில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தார் என்றால் அது அவரது பெண்களைப் பற்றிய நிலைப்பாடுதான்!

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
- "குடியரசு' (6.4.1930)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)

---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது. பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.  பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்."
- ஈ.வே.ரா (நூல்: உயர்ந்த எண்ணங்கள்) 
----------------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக் கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
ஈவேரா சொன்னவற்றை சுருக்கமாகச் சொன்னால்
 "ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெறாமல் வாழவேண்டும் அதுதான் பெண் சுதந்திரம்" 

06.09.2017 அன்றைய முகநூல் பதிவை மேம்படுத்திய பதிவு 

Monday, 11 March 2019

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

ஒரே பேச்சுக்கு இந்த உலகத்தின் ஆண்களெல்லாம் இறந்து ஒரே ஒரு ஆரோக்கியமான ஆண் மட்டும் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

  அவனுடைய இரண்டு வார கால விந்து உற்பத்தியில் உள்ள விந்தணுக்கள் மட்டுமே போதும்,
இந்த உலகில் உள்ள அனைத்து பருவமெய்திய பெண்களுக்கும் தலைக்கொரு விந்தணுவை வழங்க முடியும்.
அதைவைத்து செயற்கை கருவூட்டல் மூலம் தாயாகிக் கொள்ளலாம்.

ஆணின் பிறப்புறுப்பு ஏன் இந்த வடிவத்தில் இருக்கிறது என்றால் ஏற்கனவே செலுத்தப்பட்ட வேறொரு விந்துவை வெளியே எடுத்துவிட்டு தனது விந்துவை செலுத்திவிடும் நோக்கத்திற்காகத்தான்.
முன்பின் அசைவும் இதனாலேயே தேவைப்படுகிறது.

ஒரு ஆண் பருவமெய்திய காலம் முதல் அவனது விந்து உற்பத்தி சாகும்வரை நடக்கும்.

பெண்களின் கருமுட்டை எண்ணிக்கை மிக மிக குறைவு.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு கருமுட்டைகள் அழிந்தும்விடும்.

மேற்கண்ட செய்திகளின் மூலம் பெண்ணை விட ஆணுக்கு பாலியல் எவ்வளவு முதன்மையாது என்பதை கணிக்கலாம்.

புரியும்படி கூறினால் மனித இனத்தில் ஆண்களுக்கு இயற்கை இட்ட தலையாய கட்டளை என்னவென்றால்,
"ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தகுதியான உடலுடன் இருந்தால் அவளுடைய சம்மதம் இருக்கிறதோ இல்லையோ அவளுக்குள் உன் கருவை எப்படியேனும் விதைத்தே ஆக வேண்டும்".

ஏனென்றால் இயற்கையின் பார்வையில் மனித ஆணும் பெண்ணும் இனப்பெருக்கத்திற்கு சோம்பல் படுவார்கள்.
எனவே உலகில் ஈடில்லாத இன்பம் கலவிக்கு வழங்கப்பட்டு அந்த இன்பத்திற்காகவாவது கலவி நடந்து கருவுறுதல் ஏற்படும் என்று இயற்கை எண்ணுகிறது.

இதில் பத்துமாதம் கருவைச் சுமந்து உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற பெண் அதிகம் சோம்பல் படுவாள் என்று இயற்கை ஆணுக்கு அனைத்து சலுகையையும் வழங்கி அதற்கு எதிரான பெண்ணின் தற்காப்பை குறைத்து வழங்கியுள்ளது.

மனித சமுதாயத்திற்கு என்று சில சட்டங்கள் உள்ளன.
ஆனால் இயற்கை வகுத்த விதிகள் அதைவிட கடுமையானவை.
மாற்றவே முடியாதவை.

வன்புணர்வு செய்தோரை எவ்வளவு கொடுமைப் படுத்தி வெட்டவெளியில் வெளிப்படையான தண்டனை வழங்கினாலும் வன்புணர்ச்சி நின்றுவிடாது.

இன்றைய சூழலில் நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இயற்கைக்கு எதிரானது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வயதுவந்து பல ஆண்டுகள்வரை கலவி கிடைப்பதில்லை.
திருமணம் முடிந்து முதல் கரு உருவாகும்வரை மட்டுமே நிறைவான கலவி கிடைக்கிறது.

அதன்பிறகு அவர்கள் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும்போது கிடைக்கிறது.

மற்றபடி பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளில் ஆணின் விந்து கலப்பது ஏறத்தாழ நிகழ்வதே இல்லை.

என்னதான் அறுவை சிகிச்சை, உறைகள், வெளியே எடுத்துவிடுதல் என்று மாற்றுவழகள் செய்தாலும் இன்றைய மனிதருக்கு நிறைவான கலவி கிடைப்பதேயில்லை.

இந்த பாலியல் பசியானது வளர்ந்து வெறியாக மாறுகிறது.
சிலருக்கு இயற்கையாகவே இந்த வெறி அதிகம் உள்ளது.

பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வழிதவறிச் செல்லவும் ஆபத்தை விலைக்கு வாங்கவும் இத்தகையோர் தயங்குவதில்லை.

வேலிதாண்டுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

பொள்ளாச்சி தொடர் வன்புணர்வு சம்பவத்தில் நான் பெண்களைத்தான் குற்றம் சொல்வேன்.
அவர்கள் மீதுதான் தவறு.
ஆண்கள் மீது தவறே இல்லையா என்றால்,
நிச்சயம் இருக்கிறது.
ஆனால் முதல் தவறு பெண்கள் மீதுதான்.

பாதுகாப்பற்ற சூழலில் அதிகம் அறிந்திராத ஆணை நம்பி சென்றிருப்பது
ஆண்களை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

வெளிப்படையாகப் பேசினால்,
அந்த வீடியோவை பார்த்த ஆண்கள் வெளிப்புறத்தில் கொந்தளித்தாலும் உள்ளூற அதை ரசிக்கவே செய்வார்கள்.
இப்படி வீடியோ வந்துள்ளது என்று தெரிந்தால் அதை பார்க்கத் துடிப்பார்கள்.
முதல்முறை அதைப் பார்த்து முடித்த பிறகுதான் மனசாட்சி உறுத்தும்.

99% ஆண்களுக்கு இது பொருந்தும்.
ஆண்கள் எந்தவொரு பெண்ணையும் முதலில் உடலாகத்தான் பார்க்கிறார்கள்.
பிறகுதான் மனிதராகப் பார்க்கிறார்கள்.

ஒரு பெண் கலவிக்கு அழைத்தால் 99% ஆண்களால் மறுக்க முடியாது.

ஒரு பெண்ணின் உடல்மீது ஒரு ஆண் வைத்திருக்கும் வேட்கை கற்பனைக்கு எட்டாத ஒன்று.
இது தவிர்த்து ஆண்களுக்கு பெரிதாக எந்த ஆசையும் கிடையாது.
மிஞ்சிப்போனால் ஒரு வாகனம், அவ்வளவுதான்.

கணினியில் தமிழ் தட்டச்சு வந்தபோது கூகுள் செர்ச் பார் இல் "அ" என்று தட்டினால் "அம்மா மகன் உடலுறவு" "அக்கா தம்பி உடலுறவு" என்று வந்து நிற்கும்.

அதிகம் தேடப்பட்டது முதலில் இடம்பெறும் வழக்கத்தால் இப்படி இருந்தது.
பிறகுதான் கூகுளிடம் முறையிட்டு மாற்றினார்கள்.

"நீ வேணா அப்பிடி இருக்கலாம்.
நாங்கள்லாம் அப்படி இல்லை" என்று கூறும் ஆண்கள் கட்டாயம் பொய் சொல்கிறார்கள்.
அல்லது அந்த விட்டுப்போன 1% ஆண்களாக இருக்கலாம்.

பெண்களே உங்கள் அருகில் ஒரு ஆண் இருக்கிறானா?
அவன் மனதளவிலேனும் உங்களை வன்புணர தயாராக இருக்கிறான் என்பதை உணருங்கள்.
அதற்காக எல்லாரும் செயலில் இறங்கிவிட மாட்டார்கள்.
பெரும்பாலும் மனசாட்சி தடுத்துவிடும்.

குழந்தைகளை வன்புணர்ச்சி செய்தவர்களை இப்படி நியாயம் சொல்லமுடியாது.
வன்புணர்ச்சி தவிர்த்த உடல்சிதைவுகளுக்கும் இந்த நியாயம் பொருந்தாது.

பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை விட மிக மோசமான வன்புணர்ச்சி குற்றவாளிகள் வரலாற்றில் இருந்துள்ளனர்.

ஒரு பெண்ணைக் கொலை செய்து சமைத்து சாப்பிட்ட மனிதன் பிறகு திருந்தி சட்டத்தாலும் சமூகத்தாலும் மன்னிக்கப்பட்டு சாதாரணமாக தெருக்களில் நடமாடிய வரலாறு கூட உண்டு.

எனவே, பெண்கள் கவனமாக பாதுகாப்பாக இருங்கள்.
"ஆண்களுக்கு நீங்கள் சளைத்தவர் இல்லை" என்று யாராவது கூறினால் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதை உணருங்கள்.
உங்கள் விருப்பம் இல்லாமல் உங்களை வன்புணர்வு செய்யமுடியும்.
சினிமாவில் வருவதுபோல ஒரு ஆணால் தனியாக முடியாது, என்றாலும் பெண்களுக்கு உடல்ரீதியான தற்காப்பு குறைவு.

சூழல் அமைந்துவிட்டால்
ஒரு ஆணுக்கு இயற்கை அளித்துள்ள சாபத்தை மீறி அவனது மனசாட்சியைத் தவிர உங்களை யாராலும் எதுவாலும் காப்பாற்ற முடியாது.

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

இதுதான் தீர்வு!

வன்புணர்ச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது தற்காலிக தீர்வு மட்டுமே!

எனவே பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சனைகளை ஆய்வு நோக்கில் அறிவியல் ரீதியில் அணுக வேண்டும்.

வயதுவந்தோருக்கான கல்வித் திட்டதில் ஆண்கள் பெண்கள் என்று பிரித்து தனித்தனியாக பாலியல் பற்றிய அடிப்படை புரிதல் வழங்கப்பட வேண்டும்.

வன்புணர்ச்சி எண்ணம் அதிகம் இருப்பவர்கள் முன்கூட்டியே உளவியல் சிகிச்சையை ரகசியமாக எடுத்துக்கொள்ள வழி இருக்கவேண்டும்.

பாலியல் வழக்குகள் ரகசியமாக விசாரிக்கப்பட வேண்டும்.

திருமண வயது வந்ததும் திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மது ஒழிக்கப்பட வேண்டும்.

பாலியல் பசி கணக்கிடப்பட்டு தேவை அதிகம் இருப்போர் துணை இல்லாத நிலையில் பரத்தையரை நாடிச் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் ஒரு நல்ல அரசாங்கத்தால் மட்டுமே செய்யமுடியும்.

இந்த வழியில் வன்புணர்ச்சி மறைந்துபோக பல ஆண்டுகள் ஆகலாம்.

அதுவரை, பெண்களே கவனம்!
உடன்பிறந்த அண்ணன், தம்பி, பெற்ற தந்தை, கட்டிய கணவன், பெற்ற மகன் ஆகியோரைத் தவிர எந்த ஆணையும் நம்பாதீர்கள்!

Tuesday, 13 February 2018

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்.

<3<3<3<3<3<3<3<3<3<3<3

காதல் என்றாலே மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் நினைவுக்கு வருகிறது.
ஆனால், இது பெண்கள் காதலுக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறவும் வழி செய்கிறது.
இதற்கான பதிலடியானது தாஜ்மகாலுக்கு அருகிலேயே ஷாஜகானின் குடும்பத்திலேயே இருக்கிறது .
அதுதான் ஹுமாயூனுக்காக அவரது மனைவி கட்டிய தோட்டக்கல்லறை.

ஷாஜகானுக்கு 9மனைவிகள். அதில் அவருக்கு விருப்பமானவர் மும்தாஜ்.
இவர் 13வது குழந்தையைப் பெறும்போது உதிரப்போக்கு காரணமாக இறந்துவிடுகிறார்.
இது ஷாஜகானை வேதனைகக்குள்ளாக்குகிறது.
உடனே 20,000 தொழிலாளர்களைக்கொண்டு 22ஆண்டுகள் பல்வேறு நாடுகளின் அறிஞர்களையும் பொருட்களையும் கலைகளையும் கொணர்ந்து பெரிய பொருட்செலவில் 1000 யானைகளை வைத்து நினைவிடம் கட்டிமுடிக்கப்பட்டது.

இதே போல் வேறொன்று உருவாகக்கூடாது என்று கட்டியவர்கள் கைகளை வெட்டினார் என்றும், மக்கள் மீது வரி மேல் வரி விதித்து படாதபாடு படுத்தினார் என்றும், மும்தாஜின் தங்கையின் கணவரைக் கொன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
அத்தனையையும் விஞ்சி நிற்கிறது மும்தாஜ் மீதான அவரது காதல்.

ஆனால், 1571ல் அதாவது தாஜ்மகால் கட்டத் தொடங்குவதற்கு 61ஆண்டுகளுக்கு முன்பே ஹுமாயுன் நினைவிடம் கட்டப்பட்டுவிட்டது.

ஹுமாயூன் இறந்து 9ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதைக் கட்டத்தொடங்குகிறார்கள்.
அது ஏன்?

இதற்குப்பின்னால் ஒரு மாவீரனின் பெயர் ஒளிந்திருக்கிறது.
அவன் தான் வடஹிந்தியாவின் நெப்போலியன் என்றழைக்கப்படும் ஹேமு.
(தென்னிந்திய நெப்போலியன், மாமல்லனால் தோற்கடிக்கப்பட்ட புலிகேசி ஆவான்).

ஹேமு ஒரு நடுத்தர ஹிந்து குடும்பத்தில் பிறந்து ஆப்கானிய இசுலாமியரான ஷேர்கான் அரசில்(சுர் பேரரசு) அடிமட்டத்திலிருந்து பல்வேறு பதவிகள் வகித்து பிறகு படையமைச்சராக உயர்கிறான்.
அரசனுக்காக பல்வேறு போர்களில் பலரை தோற்கடித்து மாவீரன் என்று பெயர்பெறுகிறான்.
அரசனை விட செல்வாக்கு பெருகுகிறது.
அரசனின் இறப்புக்குப் பிறகு அரசனாக அரியணை ஏறுகிறான்.
இசுலாமிய ஹிந்து மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் வலிமை பொருந்திய மொகலாயர்களை எதிர்க்கிறான்.

இந்த நேரத்தில் முகலாயப் பேரரசனான ஹுமாயூன் இறந்துவிட வங்காளத்தில் இருந்த ஹேமு தன் படைகளோடு டெல்லிநோக்கி வருகிறான்.

ஹேமு பெயரைக் கேட்டதுமே எல்லாரும் ஓடிவிடுகிறார்கள்.
ஆக்ராவரை முன்னேறிய ஹேமு முகலாயர் தலைநகரான டெல்லியைத் தாக்கி கைப்பற்றுகிறான்.
அங்கே பேரரசனாக முடிசூட்டிக்கொள்கிறான்.

350 ஆண்டுகள் இசுலாமிய ஆட்சிக்குப் பிறகு ஒரு ஹிந்து அரசனாக வந்ததால் ஹிந்து புராணங்களின் வரும் அரசனான விக்ரமாதித்ய என்கிற பெயர் அவனுக்கு அளிக்கப்படுகிறது.

மொகலாயர்கள் மிகவும் சுருங்கி இறுதிப்போருக்கு ஆயத்தமாகிறார்கள்.
இரண்டாம் பானிபட் போர் துவங்குகிறது.

மொகலாயர்களிடம் இருந்தது வெறும் 20,000 வீரர்கள்.
எதிரே நிற்பதோ தொடர்ச்சியாக 22வெற்றிகளைக் கண்டவனும் தன் வாழ்நாளில் ஒரு தோல்வியையும் காணாதவனும் ஹிந்து இசுலாமிய கூட்டாதரவு பெற்ற நாயகனுமான ஹேமு.
ஹேமுவின் படையானது 30,000 வீரர்களையும், 1000யானைகளையும், 51 பீரங்கிகளையும் கொண்டது.

முகல் அரசு இத்தோடு முடிந்தது என்று எல்லாரும் முடிவே கட்டிவிட்டனர்.
இந்த இடத்தில்தான் வரலாறு எதிர்த்திசையில் திரும்புகிறது.

5, நவம்பர்,1556 இல் போர் தொடங்குகிறது.
முகலாயர்கள் தமது திறமையான வில்வீரர்களை பாதுகாப்பாக முன்னேற்றி அழைத்துச் சென்று யானை மேலிருந்து போரை வழிநடத்திவரும் ஹேமுவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், ஹேமுவின் உடல் முழுவதும் கவசம் மூடியிருக்க அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை.
ஆனால், ஒரு மொகலாய வீரன் குறிபார்த்து ஹேமுவின் கண்ணில் அம்பு எய்துவிடுகிறான்.

அவன் விட்ட ஒரு அம்பு போரைத் தலைகீழாக மாற்றிவிடுகிறது.
ஹேமு நினைவிழந்துவிட படைகள் ஒருங்கிணைப்பு இழந்து சிதறுண்டன.
அதன்பிறகு மொகலாயர்கள் கை ஓங்கியது.
முகலாயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர்.
ஹேமுவின் தலையை வெட்டி காபூலிலும் உடலை அவன் முடிசூடிய கோட்டையிலும் தொங்கவிடுகின்றனர்.

அவனுக்கு உதவிய அனைவரையும் துரத்தி துரத்தி படுகொலை செய்து தலையை வெட்டி மண்டையோடுகளால் கோபுரங்கள் அமைத்தனர்.
அதன் பிறகு மொகலாய ஆட்சியானது இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி பங்களாதேஷ் வரை ஜம்மு தொடங்கி மதுரை வரை பரவுகிறது.

குறுக்கு வழியில் முன்னேறிய, இசுலாமியரை வெறுத்த சிவாஜியைக் கொண்டாடும் வடஹிந்திய ஹிந்து தலைவர்கள் தூயவீரனான ஹேமுவை கண்டுகொள்வதில்லை.
ஹேமுவை இன்று யாருக்குமே தெரியாது.
அவன் தோற்றுவிட்டானல்லவா? அவனது பெயர் வரலாற்றுப் பக்கங்களை மட்டுமே ஆள்கின்றது.

முகலாயர்கள் மீண்டும் தனது அரசை கைப்பற்றியபிறகு முகலாய அரசி பேகா பேகம் தனது காதல் கணவரான ஹுமாயுனுக்கான நினைவிடத்தை  பாரசீகத்திலிருந்து (பெர்சியா) நிபுணர்களை வரவழைத்து  பெரும்பொருட்செலவில் அமைத்து கணவரின் உடலை தோண்டியெடுத்து அதனுள் அடக்கம் செய்கிறார்.

இதுதான் தாஜ்மகாலை அமைக்கும் எண்ணத்தை ஷாஜகானுக்கு ஏற்படுத்தியது.
மகனால் சிறையில் தள்ளப்பட்ட ஷாஜகான் இறந்தபிறகு தாஜ்மகாலில் உள்ள மும்தாஜ் கல்லறைக்கு அருகிலேயே 1666ல் புதைக்கப்பட்டார்.

ஆனால், 1582லேயே தன் கணவருடன் தான் கட்டிய தோட்டக்கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தார் பேகா பேகம்.

பெண்களின் காதல் ஒன்றும் சளைத்தது அல்லவே!

(2 டிசம்பர் 2014 அன்று முகநூலில் இட்டது)

Friday, 8 September 2017

வந்தேறி பெண்கள்

வந்தேறி பெண்கள்

"அனிதா நல்ல மார்க் எடுத்திருந்தால் அட்மிஷன் கிடைத்திருக்கும்.
அனிதா சாகவேண்டும் என்பது அவரது தலைவிதி.
இதில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட முடியாது."

_ லலிதா குமாரமங்கலம்
( தலைவர் - தேசிய மகளிர் ஆணையம் )

இவரும் தமிழர் கிடையாது.
இவரது தாயார் ஒரு வங்காளி பிராமணர்.

தேர்தலிலேயே போட்டியிடாமல் பாதுகாப்பு அமைச்சராக ஆகியுள்ள நிர்மலா சீதாராமன் ஒரு தெலுங்கு பிராமணர்.
இவர் கர்நாடகத்தில் தனது அடையாளத்தை மறைத்து பதவியில் இருந்துகொண்டு காவிரி தமிழகத்துக்கு கிடைக்க கூடாது என்று பேசிவந்தவர்.

இவருக்கு தமிழச்சி பட்டம் கொடுத்து வாழ்த்திய பா.ஜ.க மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் ஒரு கன்னடர் (ஒக்கலிக கவுடா)

கிருஷ்ணசாமி எனும் தெலுங்கரை அவரது மகளுக்கு குறுக்குவழியில் டாக்டர் சீட் வாங்கிய விவகாரத்தில்  அம்பலப்படுத்திய முன்னாள் ச.ம.உ பாலபாரதி கூட ஒரு கன்னட ஒக்கலிகா கவுடா ஆவார்.

மாநில, தேசிய அளவில் பெரிய பெரிய பதவிகளில் தமிழகத்தில் பிறந்த வேற்றின வந்தேறிகளே உள்ளனர்.
பெண்களும் இதில் விதிவிலக்கு கிடையாது.

இவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டும் வருகின்றனர்.

Sunday, 6 August 2017

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது.
நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும்.
ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும்.
(இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)"
- ஈ.வே.ரா (குடியரசு, 16-11-1930)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)
--------
"100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்"
- ஈவெரா (விடுதலை 6.3.1962)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது’’
--------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
சுருக்கமாக,
உலகத்தில் ஆண்கள் இருக்கக்கூடாது.
ஆண்கள் போல பெண்கள் மாறி அவர்கள் செய்வதை விட கூடுதலாக அட்டூழியம் செய்யவேண்டும்.
யாரும் குழந்தையும் பெறக்கூடாது.
திருமணம் செய்யாமல் ஒழுக்கமின்றி வாழவேண்டும்.

இதுதான் ஈ.வே.ரா முன்வைக்கும் பெண்விடுதலை.