Monday 11 March 2019

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

ஒரே பேச்சுக்கு இந்த உலகத்தின் ஆண்களெல்லாம் இறந்து ஒரே ஒரு ஆரோக்கியமான ஆண் மட்டும் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

  அவனுடைய இரண்டு வார கால விந்து உற்பத்தியில் உள்ள விந்தணுக்கள் மட்டுமே போதும்,
இந்த உலகில் உள்ள அனைத்து பருவமெய்திய பெண்களுக்கும் தலைக்கொரு விந்தணுவை வழங்க முடியும்.
அதைவைத்து செயற்கை கருவூட்டல் மூலம் தாயாகிக் கொள்ளலாம்.

ஆணின் பிறப்புறுப்பு ஏன் இந்த வடிவத்தில் இருக்கிறது என்றால் ஏற்கனவே செலுத்தப்பட்ட வேறொரு விந்துவை வெளியே எடுத்துவிட்டு தனது விந்துவை செலுத்திவிடும் நோக்கத்திற்காகத்தான்.
முன்பின் அசைவும் இதனாலேயே தேவைப்படுகிறது.

ஒரு ஆண் பருவமெய்திய காலம் முதல் அவனது விந்து உற்பத்தி சாகும்வரை நடக்கும்.

பெண்களின் கருமுட்டை எண்ணிக்கை மிக மிக குறைவு.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு கருமுட்டைகள் அழிந்தும்விடும்.

மேற்கண்ட செய்திகளின் மூலம் பெண்ணை விட ஆணுக்கு பாலியல் எவ்வளவு முதன்மையாது என்பதை கணிக்கலாம்.

புரியும்படி கூறினால் மனித இனத்தில் ஆண்களுக்கு இயற்கை இட்ட தலையாய கட்டளை என்னவென்றால்,
"ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தகுதியான உடலுடன் இருந்தால் அவளுடைய சம்மதம் இருக்கிறதோ இல்லையோ அவளுக்குள் உன் கருவை எப்படியேனும் விதைத்தே ஆக வேண்டும்".

ஏனென்றால் இயற்கையின் பார்வையில் மனித ஆணும் பெண்ணும் இனப்பெருக்கத்திற்கு சோம்பல் படுவார்கள்.
எனவே உலகில் ஈடில்லாத இன்பம் கலவிக்கு வழங்கப்பட்டு அந்த இன்பத்திற்காகவாவது கலவி நடந்து கருவுறுதல் ஏற்படும் என்று இயற்கை எண்ணுகிறது.

இதில் பத்துமாதம் கருவைச் சுமந்து உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற பெண் அதிகம் சோம்பல் படுவாள் என்று இயற்கை ஆணுக்கு அனைத்து சலுகையையும் வழங்கி அதற்கு எதிரான பெண்ணின் தற்காப்பை குறைத்து வழங்கியுள்ளது.

மனித சமுதாயத்திற்கு என்று சில சட்டங்கள் உள்ளன.
ஆனால் இயற்கை வகுத்த விதிகள் அதைவிட கடுமையானவை.
மாற்றவே முடியாதவை.

வன்புணர்வு செய்தோரை எவ்வளவு கொடுமைப் படுத்தி வெட்டவெளியில் வெளிப்படையான தண்டனை வழங்கினாலும் வன்புணர்ச்சி நின்றுவிடாது.

இன்றைய சூழலில் நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இயற்கைக்கு எதிரானது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வயதுவந்து பல ஆண்டுகள்வரை கலவி கிடைப்பதில்லை.
திருமணம் முடிந்து முதல் கரு உருவாகும்வரை மட்டுமே நிறைவான கலவி கிடைக்கிறது.

அதன்பிறகு அவர்கள் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும்போது கிடைக்கிறது.

மற்றபடி பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளில் ஆணின் விந்து கலப்பது ஏறத்தாழ நிகழ்வதே இல்லை.

என்னதான் அறுவை சிகிச்சை, உறைகள், வெளியே எடுத்துவிடுதல் என்று மாற்றுவழகள் செய்தாலும் இன்றைய மனிதருக்கு நிறைவான கலவி கிடைப்பதேயில்லை.

இந்த பாலியல் பசியானது வளர்ந்து வெறியாக மாறுகிறது.
சிலருக்கு இயற்கையாகவே இந்த வெறி அதிகம் உள்ளது.

பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வழிதவறிச் செல்லவும் ஆபத்தை விலைக்கு வாங்கவும் இத்தகையோர் தயங்குவதில்லை.

வேலிதாண்டுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

பொள்ளாச்சி தொடர் வன்புணர்வு சம்பவத்தில் நான் பெண்களைத்தான் குற்றம் சொல்வேன்.
அவர்கள் மீதுதான் தவறு.
ஆண்கள் மீது தவறே இல்லையா என்றால்,
நிச்சயம் இருக்கிறது.
ஆனால் முதல் தவறு பெண்கள் மீதுதான்.

பாதுகாப்பற்ற சூழலில் அதிகம் அறிந்திராத ஆணை நம்பி சென்றிருப்பது
ஆண்களை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

வெளிப்படையாகப் பேசினால்,
அந்த வீடியோவை பார்த்த ஆண்கள் வெளிப்புறத்தில் கொந்தளித்தாலும் உள்ளூற அதை ரசிக்கவே செய்வார்கள்.
இப்படி வீடியோ வந்துள்ளது என்று தெரிந்தால் அதை பார்க்கத் துடிப்பார்கள்.
முதல்முறை அதைப் பார்த்து முடித்த பிறகுதான் மனசாட்சி உறுத்தும்.

99% ஆண்களுக்கு இது பொருந்தும்.
ஆண்கள் எந்தவொரு பெண்ணையும் முதலில் உடலாகத்தான் பார்க்கிறார்கள்.
பிறகுதான் மனிதராகப் பார்க்கிறார்கள்.

ஒரு பெண் கலவிக்கு அழைத்தால் 99% ஆண்களால் மறுக்க முடியாது.

ஒரு பெண்ணின் உடல்மீது ஒரு ஆண் வைத்திருக்கும் வேட்கை கற்பனைக்கு எட்டாத ஒன்று.
இது தவிர்த்து ஆண்களுக்கு பெரிதாக எந்த ஆசையும் கிடையாது.
மிஞ்சிப்போனால் ஒரு வாகனம், அவ்வளவுதான்.

கணினியில் தமிழ் தட்டச்சு வந்தபோது கூகுள் செர்ச் பார் இல் "அ" என்று தட்டினால் "அம்மா மகன் உடலுறவு" "அக்கா தம்பி உடலுறவு" என்று வந்து நிற்கும்.

அதிகம் தேடப்பட்டது முதலில் இடம்பெறும் வழக்கத்தால் இப்படி இருந்தது.
பிறகுதான் கூகுளிடம் முறையிட்டு மாற்றினார்கள்.

"நீ வேணா அப்பிடி இருக்கலாம்.
நாங்கள்லாம் அப்படி இல்லை" என்று கூறும் ஆண்கள் கட்டாயம் பொய் சொல்கிறார்கள்.
அல்லது அந்த விட்டுப்போன 1% ஆண்களாக இருக்கலாம்.

பெண்களே உங்கள் அருகில் ஒரு ஆண் இருக்கிறானா?
அவன் மனதளவிலேனும் உங்களை வன்புணர தயாராக இருக்கிறான் என்பதை உணருங்கள்.
அதற்காக எல்லாரும் செயலில் இறங்கிவிட மாட்டார்கள்.
பெரும்பாலும் மனசாட்சி தடுத்துவிடும்.

குழந்தைகளை வன்புணர்ச்சி செய்தவர்களை இப்படி நியாயம் சொல்லமுடியாது.
வன்புணர்ச்சி தவிர்த்த உடல்சிதைவுகளுக்கும் இந்த நியாயம் பொருந்தாது.

பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை விட மிக மோசமான வன்புணர்ச்சி குற்றவாளிகள் வரலாற்றில் இருந்துள்ளனர்.

ஒரு பெண்ணைக் கொலை செய்து சமைத்து சாப்பிட்ட மனிதன் பிறகு திருந்தி சட்டத்தாலும் சமூகத்தாலும் மன்னிக்கப்பட்டு சாதாரணமாக தெருக்களில் நடமாடிய வரலாறு கூட உண்டு.

எனவே, பெண்கள் கவனமாக பாதுகாப்பாக இருங்கள்.
"ஆண்களுக்கு நீங்கள் சளைத்தவர் இல்லை" என்று யாராவது கூறினால் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதை உணருங்கள்.
உங்கள் விருப்பம் இல்லாமல் உங்களை வன்புணர்வு செய்யமுடியும்.
சினிமாவில் வருவதுபோல ஒரு ஆணால் தனியாக முடியாது, என்றாலும் பெண்களுக்கு உடல்ரீதியான தற்காப்பு குறைவு.

சூழல் அமைந்துவிட்டால்
ஒரு ஆணுக்கு இயற்கை அளித்துள்ள சாபத்தை மீறி அவனது மனசாட்சியைத் தவிர உங்களை யாராலும் எதுவாலும் காப்பாற்ற முடியாது.

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

இதுதான் தீர்வு!

வன்புணர்ச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது தற்காலிக தீர்வு மட்டுமே!

எனவே பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சனைகளை ஆய்வு நோக்கில் அறிவியல் ரீதியில் அணுக வேண்டும்.

வயதுவந்தோருக்கான கல்வித் திட்டதில் ஆண்கள் பெண்கள் என்று பிரித்து தனித்தனியாக பாலியல் பற்றிய அடிப்படை புரிதல் வழங்கப்பட வேண்டும்.

வன்புணர்ச்சி எண்ணம் அதிகம் இருப்பவர்கள் முன்கூட்டியே உளவியல் சிகிச்சையை ரகசியமாக எடுத்துக்கொள்ள வழி இருக்கவேண்டும்.

பாலியல் வழக்குகள் ரகசியமாக விசாரிக்கப்பட வேண்டும்.

திருமண வயது வந்ததும் திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மது ஒழிக்கப்பட வேண்டும்.

பாலியல் பசி கணக்கிடப்பட்டு தேவை அதிகம் இருப்போர் துணை இல்லாத நிலையில் பரத்தையரை நாடிச் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் ஒரு நல்ல அரசாங்கத்தால் மட்டுமே செய்யமுடியும்.

இந்த வழியில் வன்புணர்ச்சி மறைந்துபோக பல ஆண்டுகள் ஆகலாம்.

அதுவரை, பெண்களே கவனம்!
உடன்பிறந்த அண்ணன், தம்பி, பெற்ற தந்தை, கட்டிய கணவன், பெற்ற மகன் ஆகியோரைத் தவிர எந்த ஆணையும் நம்பாதீர்கள்!

No comments:

Post a Comment