Thursday 14 March 2019

நாம் தமிழருக்கே ஆதரவு

நாம் தமிழருக்கே ஆதரவு!

நாம்-தமிழர் எத்தனையோ குறைகளைக் கொண்டிருந்தாலும்
பிற கட்சிகளுடன் ஒப்பிடும்போது நூறு மடங்கு அதிகம் தமிழருக்கு நன்மை பயக்கும் என்றே தோன்றுகிறது.

ஒரு மாற்றத்தைக் கொண்டுவர இரண்டு செயல்பாடுகளைச் செய்யவேண்டும்.

முதலாவது குறைசொல்லுதல்!
இரண்டாவது தீர்வு சொல்லுதல்!

முதலாவதை பலரும் சிறப்பாகச் செய்கின்றனர்.
தோலுரிக்கச் சொன்னால் துகிலுரித்து விடுகின்றனர்.

  குறை சொல்வதை அதாவது விமர்சிப்பதை பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளரும், சமூக வலைத்தள பதிவர்களும் ஏன் திரைத்துறையினரும் கூட திறம்பட செய்கின்றனர்.

ஆனால் தீர்வு சொல்ல எவராலும் முடிகிறதா என்றால் கட்டாயம் இல்லை.
ஏனென்றால் முதலாவது எளிது.
இரண்டாவது கடினம்.

திரைத்துறையினர் இதற்கு முயற்சித்துள்ளனர்.
சர்கார், எல்.கே.ஜி என இவர்களால் நன்றாக துகிலுரிக்க முடிந்ததே தவிர சரியான தீர்வு சொல்ல முடியவில்லை.

ஆனால் நாம்தமிழர் அப்படியில்லை,
வசைபாடுவதோடு நிறுத்திக்கொள்ளமல் தீர்வையும் சேர்த்தேதான் பேசுகிறார்கள்.
அதில் நடைமுறைச் சிக்கல்கள் வரலாம்தான்.
அதற்காக அத்தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களின் கனவை புறந்தள்ள முடியாது.

என்னைக் கேட்டால் நாம்தமிழரின் தனித்துவம் இதுதான் என்று கூறுவேன்.

நாம்தமிழர் முதலில் நோட்டா வாக்குகளை தம் பக்கம் மாற்றவேண்டும்.

எவனோ "நோட்டா அதிகம் விழுந்தால் மத்திய அரசே ஆடிவிடும்" என்று பரப்பிய வதந்தி இன்று வரை வேலை செய்கிறது.
49-O மற்றும் 49-P ஆகியன எதற்குமே உதவாதவை என்கிற உண்மையை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

மற்றபடி பா.ம.க "மாதிரி அமைச்சரவை",  "மாதிரி நிதிநிலை அறிக்கை" என மாற்று தீர்வுகளை முன்வைத்த செயல்பாட்டை வைத்து அவர்களை நாம்தமிழரின் முன்னோடியாகக் கூறலாம்.

பா.ம.க தாக்குப்பிடிக்க முடியாமல் சோரம்போய்விட்ட இன்றைய நிலையில் நாம்தமிழரை ஆதரிக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கிறோம்.
இல்லையென்றால் நா.த.க இன்னொரு பா.ம.க ஆகிவிடும்.

"சீமானை எனக்கு பிடிக்காது , அவ்வளவுதான்" என்று ஒரு வரியில் விவாத்தை முடிக்கும் மேதாவிகளுக்கு இரண்டாம் வாய்ப்பாக இருக்கவே இருக்கிறார்  தினகரன்.

No comments:

Post a Comment