Showing posts with label போராளி. Show all posts
Showing posts with label போராளி. Show all posts

Wednesday, 8 March 2017

தேர்தல் மாற்றத்தைக் கொணருமோ?

உலக பெண்கள் நாள்

"வாக்களிப்பது மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால்
இந்நேரம் அது தடைசெய்யபட்டிருக்கும்"

கூறியவர் ஒரு பெண் போராளி

Thursday, 16 February 2017

தனித்தமிழர்நாடு போராளி சுப.முத்துக்குமார் அண்ணனின் சாகச வரலாறு

அண்ணனின் நினைவுகள்

எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும்,
தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.
தந்தையின் தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வளர்கிறார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம் ஒரு காலத்தில் பொதுவுடமை சித்தாந்தம் பொங்கி வழியும் பூமியாக இருந்தது.
அதனால் ஈர்க்கபெற்று, சக மாணவர்கள் திரைப்பட ரசிகர்களாக அடையாளம் எடுத்தபோது அண்ணன் முத்துக்குமார் மணிக்கணக்கில் காரல் மார்க்சையும், சோவியத் யூனியனையும், மாவோவையும், சே'வையும் பற்றி பேசுவார் என்று விவரிக்கிறார்கள் அண்ணனை சிறுவயதில் அறிந்த தோழர்கள்!

பின்னர் சிறிதுசிறிதாக ஜெயவர்தனே மற்றும் அதுலத் முதலி காலங்களில் ஈழத்திலே பற்றி எறிந்த தீ மெதுவாக அண்ணனையும் பற்றிக் கொள்கிறது.
பழனியில் பள்ளிபருவத்திலேயே பல்வேறு அறப்போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.

ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ, தமிழக விடுதலையும் அத்துனை அவசியம் என்ற புரிதலுக்கு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தோழர் தமிழரசன் வழியில் ஆயுத போராட்டத்திற்கு வித்திடுகிறார்.

குட்டிமணி, தங்கத்துரைகளின் படுகொலைகள், ஈகி திலீபனின் தியாகம் போன்றவை முத்துகுமாரையும் ஈழத்திற்கு நேரிடையாக அழைக்கிறது.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத பயிற்சிக்காக தமிழீழம் சென்றார்.
அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலோடு சிங்கள படைகளுக்கு எதிராக விடுதலை புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கு பெறுகிறார்.

தொடர்ச்சியாக தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யபெற்று பணியாற்றுகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையை தலைமையேற்று வழிநடத்துகிறார்.
அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக புலிகளுக்கு தேவையான அனைத்தையும் தொடர்ச்சியாக வேதாரணியம் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளிலிருந்து அனுப்பி வருகிறார்.

தலைவர் பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ரோமியோ மற்றும் நான்கு பெண்போராளிகள் உட்பட பதினாறு போராளிகளை வேலூர் சிறையில் இருந்து தப்ப வைக்கும் அசைன்மென்ட் (பொறுப்பு) அண்ணன் முத்துகுமாரிடம் வழங்கபடுகிறது.

இப்போது அறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹாலிவுட் திரில்லர்களில் வரும் காட்சிகளைப்போல உலகே வியக்கும் வண்ணம் புலிகள் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள்.

அவர்கள் உட்பட 43 போராளிகளை மிகக்கடுமையான மத்திய காவல் மற்றும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்கு நடுவே கல்யாண வீட்டார் 'கெட்டப்'போடு (பாவனையில்) தமிழகத்தில் இருந்து தப்ப வைத்து விடுகிறார் முத்துக்குமார்.
அண்ணனின் சாதுர்யமும், சாமார்த்தியமும் பல போராளிகளையும், புலித்தலைமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பின் ஒருமுறை மணமேல்குடியில் விடுதலை புலிகளுக்கு அனுப்ப பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கபெற்றார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலை ஆகி தலைமறைவாகிறார்.

போராட்டம் சந்தனக்காட்டில் புதிய பரிமாணம் எடுக்கிறது.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் சேர்ந்து தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிச்சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.

கன்னட சூப்பர் ஸ்டார் கடத்தல் திட்டத்தை சிறையிலிருந்தே வகுக்கிறார்.
அந்த கடத்தல் வீரப்பனார் ஒப்புதலோடு தோழர்களால் செவ்வனே முடிக்கபெருகிறது.
தமிழர்களின் சீவாதார பிரச்சினைகளான காவிரிநீர், பெங்களூரில் பல ஆண்டுகளாக திறக்கபடாது மூடி கிடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு, மலைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மற்றும் போராளி முத்துக்குமார் விடுதலை போன்ற கோரிக்கைகள் முன்வைக்கபடுகிறது.

பிறகு சிறையிலிருந்து பிணையில் வருகிறார்.
ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் சனநாயக அரசியலில் நெருக்கமாக ஈடுபடுத்திகொள்கிறார்.

பின் மீண்டும் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டுசென்றதாக அண்ணன் கொளத்தூர் மணியுடன் கூட்டு அதிரடிப்படையால் கைதாகி கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கன்னட சிறையில் அடைக்கபடுகிறார்.
நான்கரை ஆண்டுகாலம் சிறைவாழ்க்கை, பின் மீண்டும் பிணையில் வருகிறார்.

மெல்ல மெல்ல ஈழத்தில் போர் உச்சத்தை எட்டுகிறது.
தமிழ் தேசிய சனநாயக அரசியலில் தீவிரமாகிறார்.
தொடர்ந்து இயன்ற வழிகளில் எல்லாம் புலிகளுக்கு தேவையானவற்றை அனுப்புகிறார்.
ஈழம் மெல்ல மெல்ல அழிகிறது!

ராமேஸ்வரம் பிரச்சினையில் மதுரையில் பிணை இடுவதற்காக தங்கி இருந்த சீமானை சந்தித்து தனி தீவிர போர்க்குண அரசியல் பாதையை ஊக்குவிக்கிறார்.
தோழர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் அந்த பகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிதமபரத்தை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தோற்க்கடிக்கிறார்
(ஆனால் அதன் பின் தேர்தலில் சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது சிதம்பரம் மற்றும் கருணாவின் தனித்திறமை சார்ந்தது).

மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்.
நாம் தமிழர் கட்சி பணிகளை தொடங்கி முழுமூச்சுடன் ஈடுபடும் வேளையில் புதுக்கோட்டை பெ.தி.க மாவட்ட பொறுப்பாளர் கரு. காளிமுத்து அவர்களின் புதல்வி மாதரசியை சாதி மறுப்பு மணம் முடிக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் கொடி அறிமுகம் தஞ்சையில் முடித்து திரும்பும் வழியில் ஈழத்திற்கு மருந்துகள், ரத்த பைகள் அனுப்பியதாக கருணாநிதி அரசால் ஜாபர் சேட்டால் கைது செய்யபடுகிறார்.

ஒன்றரை மாதம் கழித்து வழக்கை உடைத்து வெளிவந்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பம்பரமாய் சுழன்ற அவர், அந்த பகுதிகளில் பல புலிக்குட்டிகளை வளர்த்தெடுக்கிறார்!

இவருடைய காலம் இதுவரையான நாம் தமிழர் வரலாற்றில் புதுக்கோட்டை, காரைக்குடி, தென் தஞ்சை மாவட்டங்களின் பொற்காலம் எனலாம். இந்த மூன்று மாவட்டங்களிலுமே அப்போதைய கருணாவின் ஆளுங்கட்சிக்கு இணையான செயல்பாடுகளை நாம் தமிழர் கொண்டிருந்தது என்பது ஆளுங்கட்சியினரே ஏற்றுக்கொண்ட வாதம்.
ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வளர்த்தெடுத்தார்.

இந்த தமிழினத்தின் அறிவிக்கபடாத தளபதி மர்ம நபர்களால் புதுகை நகரின் மத்தியில், அண்ணா சிலை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடத்தில் பிப்ரவரி 16, 2011 அன்று கயவர்களால் வெட்டி வீழ்த்தபட்டார்.

இந்த பாதகத்தை செய்தது தனிப்பட்ட எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை,
ஏனெனில் இது எதிரியும் அவனை சார்ந்த உற்றார் உறவினரும் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்பதை எளிதில் அவதானிக்க முடியும்.

ஆகவே, இது அரச பயங்கரவாதமா என்பது சிவகங்கை தொகுதியை உள்ளடக்கிய புதுகை மாவட்டத்தின் 'சிதம்பர ரகசியம்'!

அண்ணனின் இறுதிச்சடங்கில் அப்போது பேசிய அய்யா நெடுமாறன், முத்துகுமாரின் வீர தீரங்களை தாண்டி, எனக்கே சில நேரம் விளங்காத அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் வல்லவன் முத்துகுமார் என்றார்.

சீமான் பேசும்போது, நான் சமகாலத்தில் சந்தித்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவன் முத்துக்குமார், அவன் எனக்கு அரசியல் ஆசான் என்றார்.
முத்துகுமார் தூக்கிய ஆயுதத்தை விட அவன் சிந்தனை பேராபத்து என்று உணர்ந்தவர்கள் தான் அவனை சிதைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

சமீபத்தில் உரையாடும்போது தோழர் ஏகலைவன், அண்ணனோடு நெருங்கி பழகியதை வைத்து, போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, போராளிகளாகவே பிறக்கிறார்கள் என்பது உண்மையானால் இவன் அவ்வாறு பிறந்தவன் என்றார்.

சுருக்கமாக,
10 ஆண்டுகாலம் தமிழ் தேசிய விடுதலைக்காக சிறை வாழ்வு,
5 ஆண்டுகாலம் தலைமறைவு ஆயுத போராட்ட வாழ்வு,
4 ஆண்டுகாலம் மக்கள் சனநாயக அரசியல் வாழ்வு.

சாகத் துணிந்தவன் சரித்திரம் ஆகிறான்!
சாகப் பயந்தவன் தரித்திரம் ஆகிறான்!

நன்றி: Saravanan Thangappa

Friday, 16 December 2016

பீர் முகமது

பீர் முகமது

இதுதான் “தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள்”
என்று சூளுரைத்து,
வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்த புலவர் மகிபை பாவிசைக்கோவின் இயற்பெயர்.

Saturday, 23 July 2016

இல்லற வாழ்க்கை பாதுகாப்பானதா?

பலரும் மக்கள் பிரச்சனையில் தலையிடாமல் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பதை பாதுகாப்பாக நினைக்கிறார்கள்.

நீங்கள் இல்லறத்தில் ஈடுபட்டு பிள்ளைபெற்று அதை சீராட்டி பாராட்டி வளர்த்தாலும்

நாளை அது உங்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடாது என்று எந்த உறுதியும் இல்லை
சொந்த குருதி உறவுகள் கூட உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்று உறுதியாக நம்பமுடியாதபோது மக்களும் அவ்வாறுதானே

Thursday, 21 July 2016

பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்

பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்

வந்தேறிகள் எப்போதும் மண்ணுக்காகப் போராடுவதில்லை.
அதிசயத்திலும் அதிசயமாக ஒரு மார்வாடி இயற்கைக்காகப் போராடியுள்ளார்.

அதெல்லாம் சரி.

இன்று பியூஷ் கியூஷ் என்று கத்துபவர்களும்
கட்டுரை எழுதுபவர்களும்
கண்ணீர் விடுபவர்களும்,

சரியாக இரண்டு மாதங்கள் முன்பு பியூஷை விட வீரியமான போராளி, தோழர்.முகிலன்,
போடி பேருந்துநிலையத்தில் வைத்து மக்கள் மத்தியில் ஏவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு,
கைது செய்யப்பட்டு,
சிறையிலும் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் சீர்குலைந்து  கவலைக்கிடமாகிக் கிடந்தபோது

எங்கடா போனீங்க?

தமிழ்நாட்டில் ஒரு பியூஸ் மட்டும் இல்லை.
பல நூறு பியூஸ்களும்
பியூஸுக்கு அப்பனுக்கு அப்பனும் இருக்கிறார்கள்.

என்று மறையும் இந்த வேற்றின மோகம்????!!!!!

Monday, 1 December 2014

நல்லவன் படும் பாடு

நல்லவன் படும்பாடு

"நீ ஏன் இதையெல்லாம் விட்டுவிடக்கூடாது?"

"அதுதான் அதுதான் ரொம்ப எளிது,
ஒரு சொடுக்கு போடுவது போல. ஆனால் முடியாது.
தெருவில் ஒருவன் அடிபட்டுக் கிடக்கிறான். கண்டுகொள்ளாமல் செல்வது எளிது. என்ன கொஞ்சநேரம் மனம் பதைபதைக்கும் பிறகு மறந்துவிடும். ஆனால், அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்று, அலைந்துதிரிந்து, ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால் உசாவல்(விசாரணை), வழக்கு,பழிப்பேச்சு, பண இழப்பு, கால இழப்பு என அனைத்தும் சந்தித்துவிட்டு அதன்பிறகு காப்பாற்றியவன் நன்றியை நினைக்காமல் போவான் என்று தெரிந்தபின்னரும், மறுபடி வேறொரு இடத்தில் வேறொருவன் அடிபட்டுக் கிடந்தால் மீண்டும் உதவச் செல்கிறான் என்றால் அவன் செய்வதுதான் கடினம்.

இந்த உலகத்திலேயே பரிதாபத்தற்(இரக்கத்திற்)குரிய பிறவி யாரென்றால் 'நேர்மையாக இருக்க நினைப்பவன்' இவனை ஊரே ஏறிமிதிக்கும்.

நீங்கள் நீளமான குண்டும் குழியுமான ஒரு பாதையில் செல்கிறீர்கள் இடையில் சில அடிகளுக்கு பாதை சீராக இருக்கிறது என்று வையுங்கள் அதற்கு என்றைக்கோ அங்கே நின்ற ஒரு நேர்மையாளன்தான் காரணம்.
அத்தகையவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள்.

நேர்மையாளனை விடவும் இரக்கத்திற்குரிய பிறவி யார் தெரியுமா?

தப்பைத் தட்டிக்கேட்க நினைப்பவன்.

தட்டிக்கேட்கும் ஒரு போராளியின் தோள்மேல் உலகமே ஏறிநிற்கும்.
கொள்ளைக்காரனுக்கும் ஏமாற்றுபவனுக்கும் உயிரைக் கொடுக்கவும் எல்லாரும் ஆயத்தமாக(தயாராக) இருப்பார்கள்.
'நேர்மையாளனுக்கு' அவனுடைய பெற்றோரும் உடன்பிறந்தோரும் மனைவியும் பிள்ளைகளும் நண்பர்களும் உடனிருப்பவர்களும்கூட உதவமாட்டார்கள்.
அதைவிட கொடுமை, ஒரு தட்டிக்கேட்க நினைக்கும்  'போராளிக்கு' அவன் குடும்பமும் நண்பர்களும் மட்டுமல்லாது அவனது கைகளும் கால்களும் உடல்நிலையும் மூளையும் மனதும் கூட ஒத்துழைப்பதில்லை.
எல்லாரும் எல்லாமும் எதிர்ப்பார்கள் அல்லது பின்னிக்கு இழுப்பார்கள்.

ஆனாலும் ஒரு உணர்ச்சி, உள்ளே ஒரு குரல் அவனை தொடர்ந்து இயங்கவைக்கிறது.

அவன் முரட்டுத்தனமான தன்னலமுடையவனாக(சுயநலவாதியாக) இருக்கிறான்.
அவன் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
தான் செய்வதை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், தன்னை எல்லாரும் மறந்துவிடுவார்கள் என்று தெரிந்தும், கொஞ்சம் வளைந்தால் வாழ்க்கையே வளமாகிவிடும் என்று அறிந்தும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவன் தொடர்ந்து இயங்குகிறான்.
அவனுக்கு அவன்தான் முக்கியம்.
தன் முன் தானே விழுந்துவிடாமல் இருக்க அவன் எவரையும் தூக்கியெறிய தயங்குவதில்லை.

நான் ஒரு தீவிர இறைமறுப்பாளன். என் நண்பரனுடைய நண்பர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்.  அதன்மீது பற்றுள்ளவர்.
அவரை என் நண்பன் என்னிடம் அழைத்துவந்தான். நான் அவருக்கு சரியான பதிலடிகொடுப்பேன் என்று என் நண்பர் எதிர்பார்த்தான்.
ஆனால், நான் அவரை உண்மையில் பாராட்டினேன். அவரது சிந்தனையும் செயலும் ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்களுக்காவது பலனளிக்கும். எதைப்பற்றியுமே சட்டை செய்யாத  கையாலாகாதவர்கள் மத்தியில் ஏதோவொரு கொள்கைக்காக ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சிந்திப்பவர்கள் எவ்வளவோ உயர்வானவர்கள்.
ஒரு இனத்திற்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானவர்கள்.
மாந்தவுரிமைக்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானர்கள்.
முழுஇயற்கைக்காகவும் போராடுபவர் ஈடுஇணையே இல்லாதவர்கள்.

போராடுவது என்றால் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு வீதிக்குவருவது என்று பொருள் இல்லை.
சிந்திப்பது, செயலாற்றுவது, பரப்புரை செய்வது, வாழ்ந்துகாட்டுவது, வழிகாட்டுவது, சாதிப்பது, ஆதரவளிப்பது என பல நிலைகளில் எதையாவது செய்வது.

இனவுணர்வு, மதவுணர்வு, சாதியுணர்வு போன்றவையெல்லாம் அடிப்படையான உணர்ச்சிகள்.
இதற்காகப் போராடுபவர்கள் சிந்திப்பவர்கள் அத்துணை சிறப்புடையவர்கள் அல்லர்.
ஆனால், அதையும் கூடச் செய்யாமல் பாலுணர்வு, பசியுணர்வு என அற்ப உணர்ச்சிகளுக்காக வாழும் பிறவிகள்  கண்ணும் காதும் கைகளும் கால்களும் இல்லாத புழுக்கள் வாழும் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.
தனது குடும்பத்திற்காக வாழுபவர்கள் தெருவோரத்தில் குட்டிபோட்டு அதை வளர்த்துவிடும் ஒரு நாயின் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.

நிறைமாத கருவை சுமந்துகொண்டு ஒரு சிறுத்தை வேட்டைக்குச் செல்கிறது. ஓடிப் பிடித்த இரையை உண்டுவிட்டு யார் துணையுமின்றி குட்டிகளை ஈனுகிறது. உடனே மீண்டும் வேட்டைக்குச் செல்கிறது. அந்த குட்டிகள் தானே வேட்டையாடும் வரை அவற்றிற்கு உணவளிக்கிறது. தாய்க்கு வயதான பிறகு அக்குட்டிகள் தாயை கவனிப்பதில்லை. இறுதியாக அந்த தாய்சிறுத்தை முதிர்ச்சியடைந்து வேட்டையாடமுடியாமல்  பசியால் இறந்துவிடுகிறது.
இப்போது சொல்லுங்கள் ஒரு மானிடப் பெண்ணின் தாய்மை அந்த சிறுத்தையின் தாய்மைக்கு சிறிதும் ஈடாகுமா?.
தனக்காக தனது குடும்பத்திற்காக வாழ்பவர்கள் பிடுங்குபவர்களாக மட்டுமே இருக்கின்றனர். தாங்குபவர்களாகவும் கொடுப்பவர்களாகவும் இருக்கும் நேர்மையாளரையும் போராளிகளையும் இவர்கள் ஏளனம் செய்து தம்மை பெருமையாக வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.

ஒரு போராளிக்கு எப்போது உண்மையான மனநிறைவு(நிம்மதி) கிடைக்கிறது தெரியுமா?

அவன் சாகும்போது.

எப்படி போர்களத்தில் வீரமரணம் அடையும் நொடியில் ஒரு மறவனுக்கு பெருமகிழ்ச்சி கிடைக்குமோ அதேபோல.
கடைசி நொடியில் அவன் தன்னை நினைத்து பெருமையோடு சாகிறான்.

இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஒரு போராளி என்றால் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மற்றவர்கள் மாறுவார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம்.
ஏனென்றால் அது நடக்காது என்று பாதிவாழ்க்கைக்குப் பிறகுதான் உங்களுக்குத் தெரியும்.

*உங்களுக்குள் ஒரு போராளி இருந்தால் இந்தநொடி உயிர்பெறட்டும்*

இப்போதும் நீங்கள் ஒரு போராளியாக உணரவில்லையென்றால் இப்படியே மீதிவாழ்வையும் கழித்துவிடுங்கள்.
போராளியாக மாற முயற்சிக்கவேண்டாம்.
ஏனென்றால் அது உங்களால் முடியாது.
ஒரு பதிவைப் படித்து போராளியாக எவனும் ஆகமுடியாது.
கொஞ்சநேரம் உசுப்பேறிவிட்டு சரியாகிவிடுவீர்கள். ஆனால்,
போராளி பிறக்கிறான். பிறந்த மறுநொடி தாயை தூக்கியெறியும் துணிச்சலுடன், எதையும் மனதால் பார்க்கும் கண்களுடன், அணையாத உள்நெருப்புடன், கடலளவு நேயத்துடன் ஒரு காவியநாயகனாக இந்த மண்ணில் தோன்றுகிறான்.
அவனுக்கு யாரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அவன் வாழ்வதில்லை.
கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தபிறகு தன்போன்ற போராளிகள் தொடர்ந்தும் பிறந்துகொண்டிருப்பார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் அவன் மரணத்தை மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்கிறான்.

என் மரணமும் அப்படியே அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

( மூன்றாம் தலைவர்
https://m.facebook.com/photo.php?fbid=4
98313006939024&id=100002809860
739&set=a.108935022543493.9865
.100002809860739 )

Saturday, 19 July 2014

தென்னாப்பிரிக்கத் தீவிரவாதி

தென்னாப்பிரிக்கத் தீவிரவாதி
- - - - - - - - - - - - - - - - - - - - - - --
1960, ஷார்ப்வில்லி என்ற இடத்தின் காவல்நிலையம்
முன்பு 5000மக்கள் தென்னாப்பிரிக்க
நிறவெறி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில்
திரண்டனர்; பீரங்கிகளும் துப்பாக்கிகளும் முழங்கின;
69 கறுப்பின மக்கள் பலியானார்கள்; 200பேர்
காயமடைந்தனர்.
1960,மே30; ஒரு கமுக்கமான(ரகசியமான)
ஊடகவியலார் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந
்தது; திடீரென்று அங்கே தலைமறைவாக இருக்கும்
நெல்சன் மண்டேலா தோன்றினார்;
"இனி ஆயுதம்தான் எங்கள் வழி" என்று அறிவித்தார்;
1961ல் மண்டேலாவின் அமைப்பினர் வைத்த குண்டுகள்
வெடித்தன; அரசு அதிர்ச்சியில் உறைந்தது.
தீவிரமாகத் தேடப்பட்ட மண்டேலா பல்வேறு ஆப்பிரிக்க
நாடுகளுக்கும் தலைமறைவாக சுற்றுப்பயணம்
சென்று ஆதரவு திரட்டிவந்தார்; மீண்டும் நாட்டுக்குள்
நுழைந்தபோது எதிர்பாராத விதமாகப் பிடிபட்டார்.
1962,அக்டோபர் 2, பிரிட்டோரியா வழக்குமன்றம்
பரபரப்பாக இருந்தது; காவல்துறை வண்டிகள்
சத்தம்போட்டபடி குழுமியிருந்த மக்கள் மத்தியில்
நின்றன;
புலித்தோல் போர்த்திய தமது பாரம்பரிய உடையில்
வெளிவந்தார் மண்டேலா;
முட்டியை உயர்த்தி 'அமெண்டோ' என்று உரக்கக்
கூறினார்;
சுற்றியிருந்த மக்களும் 'அமெண்டோ' (உறுதி)
என்று முழங்கினார்கள்.
1964,ஜூன்12; பிடிபட்ட ஆயுதப்போராளிகளான 7
கூட்டாளிகளோடு குற்றம்சாட்டப்பட்டு 27ஆண்டுகள்
சிறைத்தண்டனை பெறுகிறார் மண்டேலா; ராபன் தீவிலுள்ள
சிறையில் அடைக்கப்படுகிறார்; சிறையிலும்
பல்வேறு அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல்
போராடுகிறார்.
1986,
மண்டேலாவை விடுதலை செய்யக்கோரி அரசுக்கு எதிரான
மிகப்பெரிய கலவரம்; அரசு அசைந்துகொடுக்கவில்லை.
1990,பிப்ரவரி,11; சிறைக்கதவுகள் 27ஆண்டுகள்
கழித்து மண்டேலாவுக்காக உற்சாகமாகத்
திறந்துகொண்டன;
வெளியே கூடியிருந்த மக்களை கூர்ந்து பார்த்தார்
வயதாகிப்போன மண்டேலா;
முட்டியை உயர்த்தி கூறினார்
"அமெண்டோஓஓஓஓ".
(எந்த பிரிட்டோரியா வழக்காடுமன்றம் அவரைக்
குற்றவாளியாக அறிவித்ததோ அதே மன்றத்தில்
அவரது உருவப்படம் இருக்கிறது;
எந்த நாடாளுமன்றம் அவரைத்
தீவிரவாதி என்று அறிவித்ததோ அதே நாடாளுமன்ற
வளாகத்தில் அவரது சிலை நிமிர்ந்து நிற்கிறது).
https://m.facebook.com/photo.php?fbid=468290996607892&st=6&_rdr