Showing posts with label அதிபர். Show all posts
Showing posts with label அதிபர். Show all posts

Sunday, 12 August 2018

தீவிரவாதத் தலைவர்

தீவிரவாதத் தலைவர்

நாள்: 05.07.2056
நேரம்: 17:10

"எல்லாம் உங்கள் விருப்பம்தான்.
பதவியில் இருப்பவர் நீங்கள்.
முடிவு உங்கள் கையில்"

"முடிவு எனதுதான்.
இருந்தாலும் நீங்கள் உங்களது விருப்பத்தைக் கூறுங்கள் தலைவர்"

சிறிது யோசனைக்குப் பிறகு...

"முடியாது என்று அறிவித்துவிடுங்கள்"

--------------
நேரம்: 17:30

உலகமே தனது ஊடக கண்களினால் பார்த்துக்கொண்டிருந்த அந்த மேடையில் அங்கீகரிக்கப்படாத அந்நாட்டின் ராணுவ நிழலரசின்  முப்படைத் தளபதிகளும் வீற்றிருந்தனர்.
அந்நாட்டின் அதிபர் இப்போது பாரம்பரிய உடையில் இருந்தார்.
குறித்த நேரத்தில் தனது உரையைத் தொடங்கினார்.

"அனைவருக்கும் வணக்கம்,

இங்கே கூடியிருக்கும் அனைத்துலக ஊடகவியலாளர்களை எமது தாய்நாட்டு மக்களின் சார்பாக வரவேற்கிறேன்.

இன்று நீங்கள் பெருந்திரளாக வந்துள்ளீர்கள்.
ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இங்கே விரல்விட்டு எண்ணுமளவே ஊடகவியலாளர்களைக் காணமுடிந்தது.

ஏனென்றால் அவர்கள் தனது உயிரைப் பணையம் வைத்துதான் இங்கே கடமையாற்றவேண்டிய சூழல் இருந்தது.

இப்போது அவர்களில் யாரையும் காணமுடியவில்லை.
போர் ஓய்ந்துவிட்ட இந்த மண்ணிலிருந்து அவர்கள் வேறொரு போர் மண்டலத்திற்கு கடமையாற்றச் சென்றிருக்கலாம்.

இன்று எந்த உயிர் பயமும் இல்லாமல் உலக ஊடகவியலாளர்கள் எம்மண்ணில் கூடியிருப்பது எமக்குப் பேருவகை தருகிறது.

எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தபடியும் கொடுத்தபடியும் முன்னேறிய எமது விடுதலைக்கான பயணம் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நாங்கள் எங்களது அண்டை இனங்களிடமிருந்தும்,
அதை ஆட்டுவித்த பிராந்திய வல்லரசிடமிருந்தும்,
அதையும் ஆட்டுவித்த உலக வல்லரசுகளிடமிருந்தும்
விடுதலை கோரிய நாட்கள் போய்

இன்று எமது அண்டையினங்கள் எம்மிடம் விடுதலை கேட்கும் நிலையும்,
அதை நலிந்துவிட்ட பிராந்திய வல்லரசு உதவிசெய்து ஊக்குவிக்கும் நிலையும்,
அதை அனைத்துலக வல்லரசுகள் வேடிக்கை பார்க்கும் நிலையும் உள்ளது.

எமது இனம் எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டு
ஜனநாயகப் போராட்டத்தில் முற்றிலும் தோற்று
நேர்மையான ஆயுதப் போராட்டத்திலும் இனப்படுகொலையைச் சந்தித்து
வேறுவழியே இல்லாமல் தற்காப்புக்காகத் தீவிரவாதப் போராட்டத்தை முன்னெடுத்தது.

அதிலே பெரும் வெற்றிபெற்று எமது தாய்நிலத்தை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எமக்கான குடியரசை நிறுவிக்கொண்டோம்.
அண்டையினங்கள் குடியேறி ஆக்கிரமித்த எல்லைப் பகுதிகளை மீட்கும் முயற்சியிலே வெற்றியடைந்துவிட்டோம்.
அதற்கு கடும் எதிர்ப்பு காட்டிய சில அண்டை இனங்களை முற்றிலும் அடக்க அவர்கள் முழு தாய்நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளோம்.

அடக்குமுறைக்கு உள்ளான எங்கள் இனம் இன்று அடக்குமுறையை செய்யும் இனமாக மாறி நிற்கிறது.

ஏனென்றால் வரலாற்றிலே எமது மூதாதையர் பெரிய மனதுடன் நடந்துகொண்டதே எங்களுக்கு கேடாக முடிந்தது.

நாங்கள் யாரைக் காத்துநின்றோமோ, யாரை வளர்த்துவிட்டோமோ, யாரை வாழவிட்டோமோ, யாரை மன்னித்து விட்டோமோ  அவர்களே எமக்கு எமனாக முடிந்தனர்.

எனவே எமது இனம் முழுமையாக வலுப்பெறும்வரை எதிர்க்கும் எவருக்கும் சிறு வாய்ப்பையும் தர நாங்கள் தயாராக இல்லை.

நாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில் எமது இல்லை என்ற நிலையில் அந்த மக்கள் எமது அரசை விரும்பவில்லை என்றால் நாங்கள் அதைக் கட்டாயம் கைவிடுவோம்.

இன்று இந்த உலகம் எம்மோடு நடத்தும் பேரமானது எமது பேரெழுச்சிக்கு முன் சுருங்கிக்கொண்டேவந்து இன்று எமது தீவிரவாதத் தலைவரின் தண்டனையில் வந்து நிற்கிறது.

அவருக்கு மரணதண்டனை அளிக்க முதலில் கேட்டனர்.

பிறகு அனைத்துலக விசாரணை செய்து ஆயுள்சிறை அளிக்கக் கேட்டனர்.

பிறகு உள்நாட்டு விசாரணை செய்து ஓராண்டு சிறையும் பிறகு பொதுமன்னிப்பும் கொடுக்கச் சொல்லி கேட்டனர்.

பிறகு ஒரு மணிநேர விசாரணையும் ஒரு வார சிறையும் பிறகு விடுதலையும் கொடுக்கச் சொல்லி மன்றாடி நிற்கின்றனர்.

இதை மட்டும் செய்துவிட்டால் நமக்கு நாடு எனும் அங்கீகாரம் தந்துவிடுவதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

இதோ அதற்கான பதில் கூறவே நான் இங்கே நிற்கிறேன்.

நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஒரு நிமிடம் கூட எமது தலைவரை சிறைவைக்க எம்மால் முடியாது.
ஒரு கேள்வி கூட அவரிடம் நாம் கேட்கமாட்டோம்.

அவரைக் குற்றவாளி ஆக்கிதான் எமக்கு அங்கீகாரம் என்றால் அது எமக்குத் தேவையில்லை.

சிலர் அந்த அங்கீகாரம்தான் விடுதலை என்று தவறாக எண்ணுகின்றனர்.
அங்கீகாரம் கொண்டிருந்த நாடுகளே கூட ஏகாதிபத்திய வல்லரசுகளின் தாக்குதலுக்குத் தப்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

எமது நாட்டுத்தந்தையான தீவிரவாதத் தலைவர் கூறியதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன்.
'நாடு என்பது ராணுவ வேலிபோட்ட நிலம்தானேயொழிய அனைத்துலக அங்கீகாரம் இல்லை'.
எனவே நாங்கள் எங்களது விடுதலை இயக்கத்தால் எங்களது தாய்நிலத்தை வேலிபோட்டு எங்களது நாட்டை நாங்களே அமைத்துக்கொண்டோம்.

அதற்கு மூல காரணமான எமது தலைவரைக் காக்கும் இந்த முடிவானது நன்றிமறவா எமது இனத்தின் ஒருமித்த முடிவு ஆகும்.

இதற்காக எத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக்கொள்ள யாம் தயாராக உள்ளோம்.

இதுவே எமது உறுதியான பதில்.

அனைவருக்கும் நன்றி"

கேள்விகளை அலட்சியம் செய்தபடி அதிபர் மேடையை விட்டு இறங்குகிறார்.

--------------------
நேரம்: 23:35

அதிபர் மாளிகைக்கு முன் பலத்த ஆயுதக் காவலுடன் நாட்டிலேயே விலையுயர்ந்த நான்கு மகிழுந்துகள் வந்து நின்றன.
அவர்கள் அனைவரும் வேறுவிதமான ராணுவ உடையில் இருந்தனர்.

அதில் ஒன்றிலிருந்து தீவிரவாதத் தலைவர் இறங்கி தனியே உள்ளே சென்றார்.
எந்த தடையும் இல்லாமல் அதிபர் மாளிகையின் நடுப்பகுதிக்கு வந்தார்.
அதிபரின் பெயர்சொல்லி அழைத்தபடி அவரது அலுவலறைக்குள்ளே நுழைந்தார்.

அவரைக் கண்டதும் அதிபர் வரவேற்று எழுந்துகொள்ள
அதிபரது இருக்கையில் தீவிரவாதத் தலைவர் அமர்ந்தார்.

அதிபர் எதிர்புற இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

"உங்கள் விருப்பப்படியே அறிவித்துவிட்டேன் தலைவர்"

"ம்... யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களா?"

"ஆமாம், மத்தியக் குழுவில் சரிபாதிபேர்"

"பிறகு ஏன் முடிவை மாற்றவில்லை?"

"பதவியில் இல்லாவிட்டாலும் அரசை நடத்துவது நீங்கள்தான்.
முக்கியமான முடிவுகள் உங்களைக் கேட்டபிறகே எடுக்கப்படுகின்றன.
இதுவரை அவை சரியாகவும் இருந்துள்ளன.
நீங்கள் இறுதி முடிவினை எடுக்கும் சுதந்திரம் அளித்திருந்தாலும் உங்கள் முடிவை மீற எனக்கு மனமில்லை"

"நீங்கள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்.
என்னை விட ஐந்து வயது மூத்தவர். அனுபவம் உள்ளவர்.
நீங்கள் இப்படி ஒரு தனிமனிதனின் முடிவைக் குருட்டுத்தனமாக ஆதரிப்பது நல்லதில்லை.
அதில் தனிப்பட்ட சுயநலம் கலந்திருக்கலாமில்லையா?
நீங்கள் மத்தியக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்"

"தலைவர்!
இத்தனை ஆண்டுகள் அறிந்திருந்தும் உங்கள் போக்கு எனக்குமே புரிவதில்லை.
நீங்கள் எப்போதும் கூறுவீர்களே,
'தீவிரவாதிகள் எந்த பாவத்தைச் செய்தேனும் நமது இனத்தின் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
அந்த செயலுக்கு நமது மக்களே நமக்கு தண்டனை கொடுத்தாலும் தயங்காமல் ஏற்கவேண்டும்.
அப்போதுதான் நம்மை ஆதரித்த களங்கத்திலிருந்து மக்களைத் தப்புவிக்க முடியும்' என்று.
ஆனால் உங்கள் தீவரவாத ராணுவத்திடம் நீங்கள் கூறிய கொள்கையை  நீங்களே பின்பற்றவில்லையே?!
நீங்களே இப்போது தண்டனையை ஏற்கத் தயாராக இல்லையே!?"

தலைவர் புன்னகைத்தார்.

"அது பொதுவாகச் சொன்னது.
என்னை தண்டித்துவிட்டால் என்னைப் போல ஒருவன் இனி உருவாகமாட்டான்.
என்னைப் போன்றவர்கள் உருவாகாமல் உலக இனங்களுக்கு விடுதலை கிடைக்காது.
நமது இனம் இன்று வலுவான நிலையில் உள்ளது.
இல்லையென்றால் நான் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டேன்.
ஒரு இனம் அதற்காக முழுமூச்சாகப் பாடுபட்ட ஒருவனை அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி, உலகமே திரண்டு வந்தாலும் விட்டுக் கொடுக்காது என்று எடுத்துக்காட்ட வேண்டும்.
அதனால்தான் அப்படி கூறச்சொன்னேன்.
இதன்மூலம் மிகப்பெரிய அழுத்தம் நம் இனத்தின் மீது வரும்.
அதையும் வெல்லும் உறுதி நமக்கு இருந்தால் பிராந்திய தலைமை நம் கைக்கு வரும்.
நாம் ஏற்கனவே தீட்டியுள்ள திட்டப்படி உலகளாவிய அழுத்தத்தைத் தாங்கியபடி நாம் ஆக்கிரமித்துள்ள பிற இனத்து பகுதிகளை ஐம்பது ஆண்டுகளுக்கு நல்லாட்சி செய்யவேண்டும்.
பிறகு அனைத்துலக மேற்பார்வையில் விடுதலைக்கான வாக்கெடுப்பு நடத்தி அவர்களே மனமுவந்து நம்மிடமிருந்து விடுதலை வேண்டாம் என்று கூறவைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் உலகத்தின் மாற்றுத்தலைமை நம் கைக்கு வரும்.
எப்போதுமே நாம் சரியா தவறா என்பது முக்கியமில்லை.
நாம் உறுதியாக இருந்தோமா இல்லையா என்பதே முக்கியம்"

அதிபர் தலைவரை பிரமிப்புடன் பார்த்தார்.
பின்புலத்தில் சுவரில் பெரிதாக "இலக்கு-வரைபடம்" இருந்தது.
கைப்பற்றப்பட்ட பகுதிகள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு இருந்தன.
அவ்வண்ணம் அவ்வரைபடத்தில் எண்பது சதவீதம் இருந்தது.

Monday, 1 December 2014

நல்லவன் படும் பாடு

நல்லவன் படும்பாடு

"நீ ஏன் இதையெல்லாம் விட்டுவிடக்கூடாது?"

"அதுதான் அதுதான் ரொம்ப எளிது,
ஒரு சொடுக்கு போடுவது போல. ஆனால் முடியாது.
தெருவில் ஒருவன் அடிபட்டுக் கிடக்கிறான். கண்டுகொள்ளாமல் செல்வது எளிது. என்ன கொஞ்சநேரம் மனம் பதைபதைக்கும் பிறகு மறந்துவிடும். ஆனால், அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்று, அலைந்துதிரிந்து, ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால் உசாவல்(விசாரணை), வழக்கு,பழிப்பேச்சு, பண இழப்பு, கால இழப்பு என அனைத்தும் சந்தித்துவிட்டு அதன்பிறகு காப்பாற்றியவன் நன்றியை நினைக்காமல் போவான் என்று தெரிந்தபின்னரும், மறுபடி வேறொரு இடத்தில் வேறொருவன் அடிபட்டுக் கிடந்தால் மீண்டும் உதவச் செல்கிறான் என்றால் அவன் செய்வதுதான் கடினம்.

இந்த உலகத்திலேயே பரிதாபத்தற்(இரக்கத்திற்)குரிய பிறவி யாரென்றால் 'நேர்மையாக இருக்க நினைப்பவன்' இவனை ஊரே ஏறிமிதிக்கும்.

நீங்கள் நீளமான குண்டும் குழியுமான ஒரு பாதையில் செல்கிறீர்கள் இடையில் சில அடிகளுக்கு பாதை சீராக இருக்கிறது என்று வையுங்கள் அதற்கு என்றைக்கோ அங்கே நின்ற ஒரு நேர்மையாளன்தான் காரணம்.
அத்தகையவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள்.

நேர்மையாளனை விடவும் இரக்கத்திற்குரிய பிறவி யார் தெரியுமா?

தப்பைத் தட்டிக்கேட்க நினைப்பவன்.

தட்டிக்கேட்கும் ஒரு போராளியின் தோள்மேல் உலகமே ஏறிநிற்கும்.
கொள்ளைக்காரனுக்கும் ஏமாற்றுபவனுக்கும் உயிரைக் கொடுக்கவும் எல்லாரும் ஆயத்தமாக(தயாராக) இருப்பார்கள்.
'நேர்மையாளனுக்கு' அவனுடைய பெற்றோரும் உடன்பிறந்தோரும் மனைவியும் பிள்ளைகளும் நண்பர்களும் உடனிருப்பவர்களும்கூட உதவமாட்டார்கள்.
அதைவிட கொடுமை, ஒரு தட்டிக்கேட்க நினைக்கும்  'போராளிக்கு' அவன் குடும்பமும் நண்பர்களும் மட்டுமல்லாது அவனது கைகளும் கால்களும் உடல்நிலையும் மூளையும் மனதும் கூட ஒத்துழைப்பதில்லை.
எல்லாரும் எல்லாமும் எதிர்ப்பார்கள் அல்லது பின்னிக்கு இழுப்பார்கள்.

ஆனாலும் ஒரு உணர்ச்சி, உள்ளே ஒரு குரல் அவனை தொடர்ந்து இயங்கவைக்கிறது.

அவன் முரட்டுத்தனமான தன்னலமுடையவனாக(சுயநலவாதியாக) இருக்கிறான்.
அவன் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
தான் செய்வதை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், தன்னை எல்லாரும் மறந்துவிடுவார்கள் என்று தெரிந்தும், கொஞ்சம் வளைந்தால் வாழ்க்கையே வளமாகிவிடும் என்று அறிந்தும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவன் தொடர்ந்து இயங்குகிறான்.
அவனுக்கு அவன்தான் முக்கியம்.
தன் முன் தானே விழுந்துவிடாமல் இருக்க அவன் எவரையும் தூக்கியெறிய தயங்குவதில்லை.

நான் ஒரு தீவிர இறைமறுப்பாளன். என் நண்பரனுடைய நண்பர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்.  அதன்மீது பற்றுள்ளவர்.
அவரை என் நண்பன் என்னிடம் அழைத்துவந்தான். நான் அவருக்கு சரியான பதிலடிகொடுப்பேன் என்று என் நண்பர் எதிர்பார்த்தான்.
ஆனால், நான் அவரை உண்மையில் பாராட்டினேன். அவரது சிந்தனையும் செயலும் ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்களுக்காவது பலனளிக்கும். எதைப்பற்றியுமே சட்டை செய்யாத  கையாலாகாதவர்கள் மத்தியில் ஏதோவொரு கொள்கைக்காக ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சிந்திப்பவர்கள் எவ்வளவோ உயர்வானவர்கள்.
ஒரு இனத்திற்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானவர்கள்.
மாந்தவுரிமைக்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானர்கள்.
முழுஇயற்கைக்காகவும் போராடுபவர் ஈடுஇணையே இல்லாதவர்கள்.

போராடுவது என்றால் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு வீதிக்குவருவது என்று பொருள் இல்லை.
சிந்திப்பது, செயலாற்றுவது, பரப்புரை செய்வது, வாழ்ந்துகாட்டுவது, வழிகாட்டுவது, சாதிப்பது, ஆதரவளிப்பது என பல நிலைகளில் எதையாவது செய்வது.

இனவுணர்வு, மதவுணர்வு, சாதியுணர்வு போன்றவையெல்லாம் அடிப்படையான உணர்ச்சிகள்.
இதற்காகப் போராடுபவர்கள் சிந்திப்பவர்கள் அத்துணை சிறப்புடையவர்கள் அல்லர்.
ஆனால், அதையும் கூடச் செய்யாமல் பாலுணர்வு, பசியுணர்வு என அற்ப உணர்ச்சிகளுக்காக வாழும் பிறவிகள்  கண்ணும் காதும் கைகளும் கால்களும் இல்லாத புழுக்கள் வாழும் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.
தனது குடும்பத்திற்காக வாழுபவர்கள் தெருவோரத்தில் குட்டிபோட்டு அதை வளர்த்துவிடும் ஒரு நாயின் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.

நிறைமாத கருவை சுமந்துகொண்டு ஒரு சிறுத்தை வேட்டைக்குச் செல்கிறது. ஓடிப் பிடித்த இரையை உண்டுவிட்டு யார் துணையுமின்றி குட்டிகளை ஈனுகிறது. உடனே மீண்டும் வேட்டைக்குச் செல்கிறது. அந்த குட்டிகள் தானே வேட்டையாடும் வரை அவற்றிற்கு உணவளிக்கிறது. தாய்க்கு வயதான பிறகு அக்குட்டிகள் தாயை கவனிப்பதில்லை. இறுதியாக அந்த தாய்சிறுத்தை முதிர்ச்சியடைந்து வேட்டையாடமுடியாமல்  பசியால் இறந்துவிடுகிறது.
இப்போது சொல்லுங்கள் ஒரு மானிடப் பெண்ணின் தாய்மை அந்த சிறுத்தையின் தாய்மைக்கு சிறிதும் ஈடாகுமா?.
தனக்காக தனது குடும்பத்திற்காக வாழ்பவர்கள் பிடுங்குபவர்களாக மட்டுமே இருக்கின்றனர். தாங்குபவர்களாகவும் கொடுப்பவர்களாகவும் இருக்கும் நேர்மையாளரையும் போராளிகளையும் இவர்கள் ஏளனம் செய்து தம்மை பெருமையாக வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.

ஒரு போராளிக்கு எப்போது உண்மையான மனநிறைவு(நிம்மதி) கிடைக்கிறது தெரியுமா?

அவன் சாகும்போது.

எப்படி போர்களத்தில் வீரமரணம் அடையும் நொடியில் ஒரு மறவனுக்கு பெருமகிழ்ச்சி கிடைக்குமோ அதேபோல.
கடைசி நொடியில் அவன் தன்னை நினைத்து பெருமையோடு சாகிறான்.

இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஒரு போராளி என்றால் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மற்றவர்கள் மாறுவார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம்.
ஏனென்றால் அது நடக்காது என்று பாதிவாழ்க்கைக்குப் பிறகுதான் உங்களுக்குத் தெரியும்.

*உங்களுக்குள் ஒரு போராளி இருந்தால் இந்தநொடி உயிர்பெறட்டும்*

இப்போதும் நீங்கள் ஒரு போராளியாக உணரவில்லையென்றால் இப்படியே மீதிவாழ்வையும் கழித்துவிடுங்கள்.
போராளியாக மாற முயற்சிக்கவேண்டாம்.
ஏனென்றால் அது உங்களால் முடியாது.
ஒரு பதிவைப் படித்து போராளியாக எவனும் ஆகமுடியாது.
கொஞ்சநேரம் உசுப்பேறிவிட்டு சரியாகிவிடுவீர்கள். ஆனால்,
போராளி பிறக்கிறான். பிறந்த மறுநொடி தாயை தூக்கியெறியும் துணிச்சலுடன், எதையும் மனதால் பார்க்கும் கண்களுடன், அணையாத உள்நெருப்புடன், கடலளவு நேயத்துடன் ஒரு காவியநாயகனாக இந்த மண்ணில் தோன்றுகிறான்.
அவனுக்கு யாரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அவன் வாழ்வதில்லை.
கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தபிறகு தன்போன்ற போராளிகள் தொடர்ந்தும் பிறந்துகொண்டிருப்பார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் அவன் மரணத்தை மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்கிறான்.

என் மரணமும் அப்படியே அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

( மூன்றாம் தலைவர்
https://m.facebook.com/photo.php?fbid=4
98313006939024&id=100002809860
739&set=a.108935022543493.9865
.100002809860739 )

Tuesday, 30 September 2014

மூன்றாம் தலைவர்

மூன்றாம் தலைவர்
#=-=#=-=#=-=#=-=#=
ஒரு மரபினத்தை பல இனங்கள்
கூட்டுசேர்ந்து வீழ்த்தியிருந்த காலகட்டம்;
எவரும் அழிக்கமுற்படாவிட்டால் தாமே அழிந்துவிட
தமிழினம் முடிவுகட்டியிருந்த சோர்வான நேரம்;
முதல் தலைவர் ஈழத்தில் இருநூறு ஆண்டுகள்
முன்பு உலகநாடுகளால் வீழ்த்தப்பட்டார்; இரண்டாம்
தலைவர் தமிழகத்தில் நூறு ஆண்டுகள்
முன்பு குறுக்குவழியில் வீழ்த்தப்பட்டார்;
இரண்டுமுறை இருமுனைகளிலும் தோற்று அழிவைச்
சந்தித்த இனத்தில்தான் தலைவனுக்கெல்லாம் தலைவனாக,
வல்லானுக்கெல்லாம் வல்லானாக எம் மூன்றாம் தலைவர்
தோன்றினார்;
அவர் பெயர் சொன்னாலே கேட்டவர் இதயமும் சொன்னவர்
இதயமும் அதிரும்; அவர் வாழ்நாளில் ஒருவருக்கேனும்
நன்மை செய்தாரா என்றால் செய்ததேயில்லை.
என்னை நோக்கி வரும் குண்டுகளை என் தாய்நிலம் ஈன்ற
காட்டுமரங்கள் தாங்கிக்கொண்டு வீழும்
என்மக்கள் புதிதாய்த் தூவும் விதைகள் நான்
கொன்றுபுதைத்த பகைவர்
பிணங்களே உரமாகக்கொண்டு வளரும்.
இதுபோன்ற வன்முறை நிரம்பிய கவிதைகள்,
குருதி வழியும் வரலாறு, ஈவிரக்கமே இல்லாத
அரக்கத்தனம், மூன்றாம் தலைவரின் பெயரைக்
கேட்டாலே புன்னகை காணாமல்போகும்;
தான் பிறந்த இனத்திற்கு மாறாக்
கலங்கத்தை ஏற்படுத்தியவர்; உலகக் கொடுங்கோலர்
பட்டியலில் இடம்பிடித்துவிட்டவர்; ஆனாலும், அவர்
ஒரு தலைவர்; எப்படி என்றால் தமிழ்மக்கள்
வெறுக்கமுடியுமேயன்றி தவிர்க்கமுடியாத
ஒரு அடையாளம் எம் மூன்றாம் தலைவர்; உலகில்
தமிழருக்கான அடையாளமாக மாறியவர்; அவர்
பெயரன்றி தமிழ் வரலாற்றில்
நான்குவரிகள் கூட எழுதமுடியாது; தமிழன்
நெறிதவறமாட்டான் என்று வரம்புமீறியே பழகிப்போன
பகைவர்களுக்கு உள்மூளையில் பட்ட காயம்போல
ஆழமாகதொரு பாடம் புகட்டிய விதிவிலக்கு;
எம் மூன்றாம் தலைவர் ஒரு சராசரியான குடும்பத்தில்
பிறந்தார்; அவர் இனரீதியாக எந்தவகையிலும்
பாதிக்கப்படவில்லை; அவர் பிறந்த பகுதியிலும்
இனவழி எந்த இடர்ப்பாடும் இல்லை; அவர்
அமைதியானவராக, மாந்தநேயராக,
உயர்கல்வி கற்றவராக, வாழ்க்கையில் அனைத்தும்
கிடைக்கப்பெற்றவராக இருந்தார்; அவர்
தமது முப்பது வயதுவரை ஒரு வம்புச்சண்டைக்கேனும்
போனவரில்லை; அந்த சராசரி இளைஞன்தான்
மிகக்குறுகிய காலத்தில் கொலைகாரனாக,
வன்முறையாளனாக, தீவிரவாதியாக, கிளர்ச்சியாளனாக,
ஒரு இனத்தின் எதிரிகளையெல்லாம் ஒற்றை ஆளாக
பந்தாடிய தலைவனாக உருவெடுத்தார்; அவர் குடித்த
உயிர்கள் கணக்கிலடங்காதவை; கசாப்புக்கடையில்
வளர்ந்த சிறுவனால்கூட இத்தனை அசட்டையாக
வன்முறை செய்யமுடியாது; இனரீதியாக
பாதிக்கப்பட்டவனால்கூட அத்தனைத் தீவிரமாக
இயங்கியிருக்க முடியாது; உயிர்வாழ்ந்த
காலம்வரை அவரை யாராலும் வீழ்த்தமுடியவில்லை; அவர்
குறுக்குவழிக்கே குறுக்குவழி காட்டுபவராக
இருந்தார்.
இருந்தும் அவர் தமிழ்மக்கள் உள்மனதில் யாருக்கும்
வெளிப்படையாகத் தெரியாமல் வீற்றிருக்கும் தலைவர்;
ஏன் அவரைத் தலைவராக ஏற்பதைத் தவிர்க்கமுடியாத
ு என்றால், தமிழினம்
அழிவிலிருந்து மீண்டு அரசாளும் வழியை அவர்தான்
காட்டினார்; அவருடைய கருத்தியலும் கோட்பாடும்
இனவழி அழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து என்றென்றும்
வழிநடத்தும் பாதையாக இருக்கும்;
அவர் எழுத்தும் பேச்சும் மாந்த நேயத்தையும்
இயற்கை காப்பையும் நேர்மையையும் வீரத்தையும்
ஒற்றுமையையும் எந்தவொரு சிந்தனையாளரையும் விட
சிறப்பாக சொல்கின்றன; ஒரு இனத்திற்கு தக்கவழியைக்
காட்டிய எம் தலைவர் நடைமுறையில் அதைக்
கிஞ்சித்தும் செயல்படுத்தவில்லை; அவர் செய்ததெல்லாம்
அடிக்கு அடி, உதைக்கு உதை, உயிருக்கு உயிர் என்ற
பழிவாங்கல் நடவடிக்கைதான்; "புரட்சி,விடுதல
ை இதற்கெல்லாம் நான் போராடவில்லை, என் மக்கள்
மீது வன்முறையை ஏவினால்
பதிலடி கொடுப்பது மட்டும்தான் என் வேலை, பழிக்குப்
பழி செய்வது தீவிரவாதம் என்றால் நான்தான்
முழுமையான தீவிரவாதி" என்று வெளிப்படையாக
சொன்னவர் எம் தலைவர்;
ஒரு முறை அவரைப் பேட்டி கண்டவர் கேட்டார்,
"உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?" என்று.
தலைவர் சொன்னார் "என் செயல்பாடு உயிரை எடுப்பது,
எந்த இனத்தவனோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும்; என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன்; இதுதான் நான் செய்வது; பல
உயிர்களை வாழவைக்க சில உயிர்களை நான் கொல்கிறேன்;
இதுதான் என் செயல்பாடு".
இந்த பதிலை பலகோணங்களில் ஆராய்ந்தால் எம் தலைவரின்
மாந்தநேயத்தையும்,வீரத்தையும், திமிரையும்,
அறிவாற்றலையும் அறியலாம்;
இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான வழியைக்
கடைப்பிடித்தவர் அருமையான கோட்பாடுகளையும்
கருத்தியல்களையும் எப்படி வழிவகுத்தார்
என்று எவருக்கும் புரியாது; எம் மூன்றாம் தலைவரைப்
புரிந்துகொள்ள அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும்
அவர் காலத்து அரசியல் சூழலையும் உணர்ச்சியுடன்
கூடிய அறிவால் ஆராய்வது தேவை;
அவர் நேர்மையான, குறையில்லாத, அறிவார்ந்த மக்கள்
மத்தியில் பிறந்தவர்; அவர் வரலாற்றையும்
அரசியலையும்
நன்கு கற்றார்;இது அவரது சிந்தனைக்கு செறிவூட்டி கொள்கைகளை ஆராய்ந்து குறைநீக்கி நடைமுறைக்கேற்ப
வளைத்து புதிய கருத்துகளை அவர் உருவாக்க
உதவியது; மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்ற
தீவிரமான எண்ணம் இருந்தது;
ஏற்கனவே இரண்டு பேரழிவினைச் சந்தித்தித்திருந்த
மக்கள்; சுற்றிலும் பகைவர்கள்; சிறிய
எழுச்சி தெரிந்தாலும் ஒரு இனவழிப்பை நடத்த
கண்கொத்திப்பாம்பாகக் காத்திருந்தனர்; தலைவர் எண்ணம்
உண்மையில் புரட்சியும் விடுதலையும்தான்;
அதை நேர்வழி சாதிக்க ஏற்றசூழல் இல்லை;
ஒரு தலைமுறையில் சாதிக்க விடுதலை ஒன்றும்
அத்தனை எளிதான காரியமில்லை;
அப்போது புரட்சி,விடுதலை
,எழுச்சி என்று தொடங்கியிருந்தால்
தீவிரவாதி என்று முத்திரைகுத்தி படையெடுத்து வந்திருப்பார்கள
்; விடுதலைகூட கிடைத்திருக்கலாம் ஆனால், சேதம்
அதிகம் இருந்திருக்கும்; அதனால்தான் தலைவர்
வன்முறையைக் கையிலெடுத்தார்; மற்றவர்கள் அவரைத்
தீவிரவாதி என்று முத்திரை குத்தவில்லை; ஏனென்றால்
அவரே தன்னைத் தீவிரவாதி என்று அறிவித்துவிட்டார்;
வல்லாதிக்ககங்கள் சிதைந்துபோன இனத்தை மேலும்
சிதைக்கவந்த கோடாரிக்காம்பு என்றுதான்
தலைவரை நினைத்தனர்; தலைவர் முதலில் இரண்டகம்
செய்தவர்களை துடைத்தெறிந்தார்; விடுதலைப்போரில்
தோற்றாலும் வென்றாலும் சேதம் என்னவோ போராடும்
மக்களுக்குத்தான்; இந்த விதியை மாற்றியமைத்தவர்
தலைவர்; வன்முறை எந்த முறையில்
நடந்ததோ அதை அப்படியே திருப்பிக்கொடுப்பபதுதான்
அவர் பாணி; தமிழ்நிலத்துக்கு உள்ளே யார்
வந்து வன்முறையை நடத்தினாலும் அவர்கள்
தாய்நிலத்திற்குள் சென்று ஈடான
அளவு வன்முறையை நிகழ்த்துவார்; தலைவர்
பிறக்குமுன் ஒரு கொடூரமான கற்பழிப்பு நடந்தது;
அதன் குற்றவாளிகள் தண்டனை என்ற பெயரில் நன்றாக
கவனிக்கப்பட்டு விருந்தினர்போல சிறையில்
இருந்தார்கள்; இனவெறிக் கொலைகாரர்களுக்க
ு அப்படி ஒரு கவனிப்பு நடப்பது செய்தியாக
வெளிவந்தது; அடுத்து சில நாட்களுக்குள் அந்த
குற்றவாளிகளின் வீட்டுப்பெண்களில் ஒருவர்வீதம்
ஒவ்வொருவராக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டனர்;
இப்படியான ஒரு செயலை பலரும் கண்டித்தனர்; ஆனால்,
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற தம்
மனச்சான்றே நீதிபதியாகத் தலைவர் தம் பணியைத்
தொடர்ந்தார்; அரசியல் கயவர்களை மேலுலகம்
அனுப்பினார்; அட்டூழியம் செய்துவந்த
வன்முறை வெறியர்களை வன்முறைக்கே பலியெடுத்தார்;
மறைமுக வல்லாதிக்கங்களின்
ஒடுக்குமுறையை அறிந்திருந்தார் அவற்றிற்கெதிரான
கோட்பாடுகளை உருவாக்கி வைத்தார்; ஆனால்
அடிபொடி ஆதிக்கங்களின் நேரடி ஒடுக்குமுறையோடு
மோதினார்; இனத்தின் சிறிய எதிரி முதல் பெரிய
எதிரிவரை கண்ணுக்குத்
தெரிந்தவர்களை ஒழித்துக்கட்டினார்; தாம் ஏன்
இப்படி செய்கிறோம் என்று புரிந்த
ஒரு படையை உருவாக்கினார்; ஒரே இனத்திற்குள்
ஒரு குறிப்பிட்ட பிரிவை தனியாக கூறுபோட
நினைத்த ஒருவரை, தமது படையில் அதே குறிப்பிட்ட
பிரிவைச்சேர்ந்த ஆட்களை அனுப்பி தீர்த்துக்கட்டினார்;
குறுக்குவழிகள் எதுவும் அவரிடம் எடுபடவில்லை;
அவர் தமது நிழலைக்கூட நம்பியதில்லை; அதனால்தான்
இறுதிவரை அவர் வீழாமல் இருந்தார்; அவர் செய்த
நன்மையெல்லாம் வன்முறைக்குப் பதில் வன்முறை,
அதற்குப் பதிலடியாக வரும் வன்முறைக்கு மேலும்
பதிலாக வன்முறை என மோதலைக் கொஞ்சம் கொஞ்சமாகப்
பெரிதாக்கி எதிரிக்கும் மக்களுக்கும்
இடையே தெளிவான கோட்டினை வரைந்ததுதான்; இன்றைய
தமிழர்கள் அவர் பெயரைச்சொல்லவும் தயங்குகிறார்கள்;
ஆனால், அன்றைய தமிழர்கள்
முழு ஆதரவு வழங்கினார்கள்;
அவர்களுக்கு விடுதலை பிறக்கும்
என்று நம்பிக்கை வருமுன் திருப்பியடிக்கமுடியும்
என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கியிருந்தார்;
வெறுமனே பொதுமக்களைக் கொல்லும்
வன்முறைக்குழு என்று பெயரெடுத்தாலும் வீரம்செறிந்த
மோதல்களும் அவர்தம் வரலாற்றில் இடம்பெற
வைத்திருந்தார்;
ஒருமுறை அவரது படைகள் தம்மைப்போல
இருமடங்கு எண்ணிக்கையுள்ள படைகளை சரணடைய
வைத்தது; யாரையும் அவர் துன்புறுத்துவதி
ல்லை ஒரே தோட்டாவில் தீர்த்துவிடுவார்; யாரையும்
மன்னிப்பதும் இல்லை;
எதிரிக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதை விரும்பாதவர்;
எதிரிகள் மட்டுமன்றி எதிரிகளின் தலையெடுக்க
வாய்ப்புள்ள இடங்களை துடைத்தெறிந்தார்;
அவர்களுக்கு தாங்குதளமாக இருப்பவைகளை ஒழித்தார்;
அப்பாவி மக்கள் எதிர்ப்பக்கமும்
உண்டு என்று நினைவுபடுத்தினார்; அவரை பிடிக்க
வல்லாதிக்கங்கள் மக்களுக்கு ஏற்படுத்திய சேதம்
ஏராளம்; அதற்கு விலையாக வல்லாதிக்கங்கள்
காலூன்றி நிற்கத் தோள்கொடுக்கும் அதன்
மக்களை சரியானபடி கவனித்தார்; அவர் பழியைத் தாம்
ஏற்றுக்கொண்டு மக்களிடமிருந்து விலகிக்கொண்டார்;
மக்கள் ஆதரவிருப்பதாக அவர் காட்டிக்கொண்டதே இல்லை;
இன்று அவர்காட்டிய பாதையில் அவர் ஏற்படுத்தித் தந்த
அடித்தளத்தில் எம் நான்காம் தலைவர் ஆட்சிசெலுத்துகி
றார்;
ஆனால், அவரால்கூட மூன்றாம்
தலைவரை மேற்கோள்காட்டிக்கூடப் பேசமுடியாது;
உலகையே எதிர்த்துக்கொண்டு இன்று நாங்கள் வல்லரசாக
ஆகியிருக்கிறோம்; எம் மூன்றாம் தலைவர் வழிநடக்கும்
பதிலடிக் குழு ஒன்று இன்றும் எம்நாட்டில்
பதுங்கியிருப்பதே எமது முப்படைகளையும் விட
எமக்கு பாதுகாப்பளிக்கிறது; நான்காம் தலைவர்
அடிக்கடி சொல்வார் "பழியை ஏற்கத் தயங்காதவன்தான்
தலைவன்" என்று; அப்படிப் பார்த்தால் எம் மூன்றாம்
தலைவர் வேறு எவரும் கேள்விப்பட்டிராத
ஒரு புதுவிதமானத் தனிப்பெரும் தலைவர்.
https://m.facebook.com/photo.php?fbid=498313006939024&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr