Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Thursday, 18 January 2024

திமுகவும் ஜல்லிக்கட்டும்

திமுகவும் ஜல்லிக்கட்டும்

 2017 இல் தமிழர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடி ஜல்லிக்கட்டு தடையை உடைத்தனர்.
 ஆனால் அப்போது முக்கியமான போராட்டஙகள் செய்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கு இப்போது வரை நடந்து வருகிறது.
 ஜல்லிக்கட்டுக்கு தடை 2006 இல் போடப்பட்டு சில மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தது.
 அப்போதில் இருந்து 2017 வரை திமுக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குறிப்பிடத் தகுந்த ஆதரவு நடவடிக்கை எதையும் செய்யவில்லை (அப்படி செய்ததாக காட்டிக்கொள்ள கார்த்திகேய சிவசேனாபதி யை விலைக்கு வாங்கியது).
 திமுக ஜூலி போன்றவர்களை அனுப்பி போராட்டத்தில் புகுந்து விளம்பரம் மட்டும் தேடிக் கொண்டனர்.
 தற்போது ஆட்சிக்கு வந்தபிறகும் ஜல்லிக்கட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்துவருகின்றனர்.
 உச்சகட்டமாக ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அதற்காக துரும்பையும் அசைக்காத கருணாநிதி பெயரை வைத்துள்ளது.
 ஆனால் போராடியவர்கள் 1000 பேர் வரை இன்றும் 7 ஆண்டுகளாக நீதிமன்றம் அலைந்துகொண்டு இருக்கின்றனர்.
 (அதிமுக தேர்தலுக்கு முன் சிறுசிறு சிவில் வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டது)
 இவர்களில் சிபிசிஐடி வழக்கு உள்ள 150 க்கும் மேற்பட்டோர் அடக்கம். இவர்களுக்கு ஆதரவாக  ‘ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு’ ஒன்றை தன்னார்வ வழக்கறிஞர்கள் உருவாக்கி வழக்கு நடத்தி வருகின்றனர்.
 ஜல்லிக்ககட்டு போராட்டத்திலேயே குறிப்பிடத் தகுந்த போராட்டம் பாலத்தில் ரயிலை மறித்த மாணவர் போராட்டம். இதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். அதில் முன்னணியில் நின்ற 24 பேர் வழக்கு பாய்ந்தது. அவர்களை இக்குழு 2022 இல் அவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது.
 2023 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழக சட்டதிருத்தம் திருத்தம் செல்லும் என்று இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டது.
 இதைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் உட்பட பலரும் அரசுக்கு போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க கோரிக்கை வைத்தனர்.
 திமுக அரசு ஒரு நியாயமான அரசு என்றால் தமிழக அரசு போட்ட வழக்குகளை வாபஸ் வாங்கி சிபிசிஐடி வழக்குகளைத் தாமே நடத்தி மேற்கண்ட போராட்டக் காரர்களை விருது வழங்கி கவுரவப்படுத்தி வழக்கு நடத்திய காலத்துக்கு நிவாரணம் வழங்கியிருக்கவும் வேண்டும். ஆனால் ஜல்லிக்கட்டுக்காக இன்னுயிரை ஈந்த சேலம் மாணவர் யோகேஸ்வரனுக்கு கூட இந்த அரசு நிவாரணம் வழங்கவில்லை (ஆனால் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்தார்). 
 
தமிழகத்தில் மொழிப்போர் காலத்தில் இருந்து எந்தவொரு போராட்டத்தையும் மக்கள் திரண்டு நடத்துவதும் கடைசியில் திமுக அதன் மீது தன் போர்வ்வையைப் போர்த்தி அமுக்கிக் கொள்வதும் தொட்டர்ச்சியாக நடக்கிறது.
 மொழிப்போர் தியாகிகள் இன்றுவரை கௌரவிக்கப் படவில்லை. சிலைகள் இல்லை. அவர்களது கல்லறைகள் கழிவிடங்கள் போல ஆகிவிட்டன. குமரியை மீட்ட தியாகிகளும் கடைசிவரை நிவாரணம் கேட்டு அலைந்து செத்துப் போயினர். 

 இப்படியான பின்னணி கொண்ட திமுக நம் கண் முன்னே  ஜல்லிக்கட்டு மைதானத்திலும் பரிசுகளிலும் உடைகளிலும் தனது முகரைக் கட்டையை ஒட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?!  
 நடிகைகளை மட்டும் அடக்கத் தெரிந்த உதயநிதி ஒய்யாரமாக ஜல்லிக்கட்டு பார்ப்பது எவ்வளவு கொடுமை?!
 தமிழர்கள் இனியும் தாமதிக்காமல் ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
 

Tuesday, 18 April 2023

சென்னையில் மீன் கொடி பறக்கட்டும்!

சென்னையில் மீன் கொடி பறக்கட்டும்!

சென்னை மீனவர்கள் மறியல் சட்ட ஒழுங்கு மீறலாம்!
 பின்னே?! 
சிங்களவனே சும்மா போனாலும்
 வம்படியாகப் போயாவது அவன் கையில் காலில் விழுந்தாவது அடிவாங்கிவிட்டு
கரையில் வந்து ஒப்பாரி வைத்து பேட்டி கொடுத்துவிட்டு
 யாருக்கும் வலிக்காமல் வேலைநிறுத்தம் என்கிற பெயரில் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு
மறுநாள் இதையே ரிப்பீட் செய்யும் ராமேஸ்வரம் மீனவர்கள் போல போராட வேண்டுமா?!

 மீனவர்களே! சென்னையில் மேட்டுக் குடிகள் அதாவது ஈசியார் ரோடு பங்களா ஓனர்கள் பெரும்பாலும் வந்தேறிகள்!
 அவர்களுக்கு உங்கள் நியாயம் புரியாது!

 எனவே நீங்கள் அதிரடியாகப் போராடுங்கள்!

 தமிழக மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்!
உங்களிடம் வெள்ளத்தின் போது உதவி பெற்றவர்கள் உங்களுக்காக வருவார்கள்!
 அதுவும் நசுக்கப்பட்டால் கடல் வழியாக ஆயுதம் கடத்தி கொண்டுவந்து ஆயுதம் தாங்கிப் போராடுங்கள்
 ஜல்லிக்கட்டு போராட்ட முடிவில் நீங்கள் காத்து நின்ற மாணவர்கள் உங்களுக்காக களத்தில் இறங்குவார்கள்!

 பாண்டியர் பரம்பரை நாங்கள்தான் என்று செவிட்டில் அறைந்தாற்போல தென்னாட்டு மீனவர்களுக்குக் காட்டுங்கள்!

தமிழர்களே!
 இன்று மீனவர்கள் இல்லாத சென்னை கேட்பர்!
நாளை தமிழர்கள் இல்லாத தமிழகம் கேட்பர்!
இப்படியான வந்தேறிகளின் பகல் கனவுகளில் மீனவர்களுடன் சேர்ந்து உப்பு மண்ணை அள்ளிப் போடுங்கள்! 

 சென்னை நமது தலை என்றால்
மீனவர் நம் கண்கள்! 

கண்ணைக் கொடுத்தேனும் மீனவர்களைக் காப்போம்!

Wednesday, 10 July 2019

கர்நாடகத் தமிழர் தோற்ற வரலாறு

பதிவர்: Paari Saalan

கோகாக் அறிக்கையும், மொழிப் படுகொலையும்:
கர்நாடக தமிழர்களின் கறுப்பு ஜூலை!

செய்தி: கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் அமைப்பினர்.

இலங்கை தமிழர்களின் சரித்திரத்தைப் போன்று கர்நாடகத் தமிழர்களின் சரித்திரத்திலும் ஒரு 'ஜூலை மாதம்' ஆறாத ரணங்களாலும், வடுக்களாலும் நிரம்பி இருக்கிறது.

  34 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் 3 தலைமுறைகளை கடந்தும் கர்நாடக தமிழர்களின் வாழ்வில் கறுப்பு தினமாக நிலைத்திருக்கிறது.

நெடிய வரலாறு:-

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா, பத்ராவதி, ஹூப்ளி, கொள்ளேகால் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.

1941-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெங்களூருவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 6 ஆயிரத்து760.

இதில் தமிழர்களின் மக்கள் தொகை 1 லட்சத்து 24 ஆயிரத்து 334.
ஆனால் கன்னடர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 899 மட்டுமே!

1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பெங்களூரு மற்றும் அதனையொட்டி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பல பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
இதனால் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை ஒடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது.

1961-க்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைத்துக்காட்டும் சதிச்செயல்களில் ஈடுபட்டது.

எனவே பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் கணிசமாக வாழ்ந்த தமிழர்கள் மொழி சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டது.

தொடக்கத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெரும்பான்மையான பதவிகளை வகித்த தமிழர்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய நிலையில் இருந்தனர்.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த கன்னடர்களை முன்னேற்றுவதற்கு கர்நாடக அரசு பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது.
கன்னடர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கன்னட மொழியை வளர்க்கவும் ஆராய்வதற்கு எழுத்தாளரும், முன்னாள் துணைவேந்தருமான வி.சி.கோகாக் தலைமையில் 1980-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி குழு ஒன்றை அமைத்தது.

குரல்வளையை நெறி
த்த கோகாக் அறிக்கை:-

கோகாக் குழு கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்று ஆராய்ந்து, 1982-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
அதில்,
* கர்நாடகாவில் கன்னடத்தை ஆட்சி மொழியாக்க வெண்டும் .
* அனைத்து பள்ளிகளிலும் கன்னடத்தை கட்டாய முதல்பாடமாக்க வேண்டும்.
* மூன்றாம் மொழியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை தவிர்த்து அனைவரும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி யை படிக்க வேண்டும்.
* கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
* அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
என வலியுறுத்தியது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட குண்டுராவ் தலைமையிலான கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப் போவதாக அறிவித்தது.

கோகாக் அறிக்கையால் தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது உள்ளிட்ட மொழி சிறுபான்மையினருக்கு தாய்மொழியில் கல்வி உரிமையும், வேலை வாய்ப்பு உரிமையும் பறி போனது.
எனவே கர்நாடகாவில் உள்ள தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், உருது, துளு, குடவா உள்ளிட்ட மொழி அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மொழி சிறுபான்மையினரின் குரல்வளையை நெறிக்கும் கோகாக் அறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும் என வலியுறுத்தின.
இதனால் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் போராட்டக்காரர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன.

பெங்களூரு, கோலார் தங்கவயல் ஆகிய இடங்களில் தமிழர்களும்...
பெல்காம், ஹூப்ளி ஆகிய
இடங்களில் மராட்டியர்களும்...
பெல்லாரி, பீஜாப்பூர் ஆகிய இடங்களில் தெலுங்கர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்க கோரியும், கோகாக்கு அறிக்கையை திரும்பப்பெறக் கோரியும் தமிழ் அமைப்புகள் 1982-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெங்களூருவில் மாபெரும் பேரணியை நடத்தின.
ஆயிரக்கணக்கான தமிழர்களுடன் ஊர்வலமாக சென்ற தமிழ் அமைப்பினர் அன்றைய கர்நாடக ஆளுநர் கோவிந்த் நாராயணையும்,  முதல்வர் குண்டுராவையும் சந்தித்து மனு அளித்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்:-

தமிழ்ப்பற்று கொளுந்து விட்டெரிந்த கோலார் தங்கவயலில் கோகாக் அறிக்கையை கண்டித்து அன்றாடம் போராட்டங்கள் வெடித்தன.

1982-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் உலக தமிழ் கழகம், தன்மான தமிழர் பேரவை, திமுக உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாக கோகாக் அறிக்கையை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கோகாக் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இதனால் போலீஸாருக்கும் தமிழ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதே போல ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.

ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களும், தமிழ் அமைப்பினரும் இந்த போராட்டத்தில் குதித்ததால் கோலார் தங்கவயல் போர்க்களமாக மாறியது.

கன்னட திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழிக் கல்வி உரிமை கோரியும் மாரி குப்பம், சாம்பியன் ரீஃப், ஊரிகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் அமைப்பினர் மாபெரும் பேரணி நடத்தினர்.

கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கோலார் தங்கவயலே முடங்கியது.

தங்கவயல் தமிழர்களின் ஓயாத போராட்டத்தை ஒடுக்கும் வகையில் போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை களைத்தனர்.
சிதறி ஓடிய தமிழ் இளைஞர்களை குறி வைத்து போலீஸார் சட்டத்துக்கு விரோதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் தங்கவயலை சேர்ந்த பரமேஸ்வரன், பால்ராஜ், மோகன், உதயகுமார் ஆகிய 4 தமிழ் இளைஞர்களும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தாய்மொழி உரிமைக்காக போராடிய 500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.

பெங்களூருவில் சிவாஜிநகர், அல்சூர், ஸ்ரீராமபுரம் ஆகிய இடங்களில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதால் வன்முறை வெடித்தது.
போலீஸாரின் சரமாரி தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் நையப்புடைக்கப்பட்டார்கள்.
இந்த தாக்குதலின் போது கூட்டத்தில் கலந்த கன்னட அமைப்பினரும், நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்களும் தமிழர்களை குறி வைத்து வேட்டையாடினர்.

பெங்களூருவில் இருந்த தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள், கட்டிடடங்கள், வீடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் சொல்லொண்னா பாதிப்புகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்.

தாய்மொழி அறியா
தமிழ்ப்பிள்ளைகள் :-

கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்பினரின் திட்டமிட்ட ஒடுக்குமுறையால் தமிழர்கள் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
தாய்மொழி கல்வி உரிமையையும், வேலைவாய்ப்பு உரிமையையும் இழந்து இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டனர்.
தமிழ் மொழி வழி கல்வி நிலையங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தப்படுவதால் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

கோகாக் அறிக்கைக்கு பிறகு கடந்த 34 ஆண்டுகளில் கர்நாடக அரசு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை, போதிய வசதியின்மை உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, 75 சதவீதமான தமிழ் பள்ளிகளை மூடிவிட்டது.

தாய்மொழி கல்வியை கற்கும் வசதி இல்லாததால் லட்சக்கணக்கான தமிழர்கள் கன்னடமும், ஆங்கிலமும் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் மொழி கல்வி மறுக்கப்பட்ட தமிழர்கள் இப்போது தாய்மொழி அறியா பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட மொழிப் படுகொலை :-

குறிப்பாக கோகாக் அறிக்கை வெளியான 1982-ம் ஆண்டுக்கு  பிறகு பிறந்த 90 சதவீதமான தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது.
கர்நாடக தமிழர்களின் மத்தியில் வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழ் சுருங்கிப் போயுள்ளது.
கன்னடம் மற்றும் ஆங்கில வழிக்கல்வியை கற்ற தமிழர்களின் வீடுகளில் தற்போது தமிழில் பேசும் நிலையும் மாறிவிட்டது.
தமிழ் மொழியை அறியாததால் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் இழந்து தற்போது கன்னடர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாகவும் மாறியுள்ளனர்.

பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட சில இடங்களில் ஓரிரு தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மரணிக்கும் நிலையில் உள்ள இந்த பள்ளிகளில் மிக சொற்பமான எண்ணிக்கையிலே மாணவர்கள் பயில்கின்றனர்.
பெரும்பான்மையான தமிழ் மாணவர்கள் ஆங்கில கல்விக்கு மாறிவிட்டதால், தமிழ் வேகமாக அழிந்து வருகிறது.

கிட்டத்தட்ட ஒருகோடி தமிழர்கள் வாழும் கர்நாடகாவில் ஓரிரு லட்சம் பேருக்கும் மட்டுமே தமிழ் எழுதப்படிக்க தெரியும்.
அதில் பெரும்பான்மையானவர்கள் 60 வயதை கடந்தவர்கள்.
90 சதவீதமான இளைய தலைமுறைக்கு தாய்மொழியான தமிழே தெரியாது என்ற அவலநிலையே தொடர்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து பிழைக்க வந்த கூலித் தொழிலாளர்களால் மட்டுமே தமிழ் மொழி ஒரளவுக்கு வாழ்கிறது.

'ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களது மொழியை அழிப்பார்கள்.
அதன்பிறகு அவர்களது வரலாற்றையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிப்பார்கள்.
பின்னர் அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும்' என வரலாற்றியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள்.

கர்நாடகாவில் துப்பாக்கி தோட்டாவாலும், ஆட்சியின் அதிகார பேனா முனையாலும் தமிழ் மொழி மீது புதுவித யுத்தம் தொடங்கப்பட்டது.
கத்தியால் மக்களை கொல்லாமல், கோகாக் அறிக்கையால் தமிழர்களின் மொழி மீது மவுன படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் சொல்கிறார்கள்.

தமிழக அரசு கைக்கொடுக்குமா? :-

இந்திய அரசியலமைப்பு சட்டம் தாய்மொழி கல்வி உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்திருக்கிறது.
அதை கர்நாடக அரசும், தனியார் பள்ளிகளின் தலைமையும் தமிழர்களுக்கு தரமறுக்கின்றன.
கோகாக் அறிக்கையின் தாக்கம், உலகமயமாக்கலின் அசூர பாய்ச்சல் ஆகியவற்றின் காரணமாக மூன்று தலைமுறை தமிழர்கள் தாய்மொழியை கல்வி உரிமையை இழந்துள்ளனர்.

கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர்.
100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.

2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).

இதே நிலை நீடித்தால் ஆப்பிரிக்க தீவுகளிலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழும் மொழியை இழந்த தமிழர்களைப் போல கர்நாடக தமிழர்களும் மாறிப் போய் விடுவார்கள்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவை அனுசரிக்கும் இந்த கறுப்பு ஜூலையில், கர்நாடகாவில் சிதறிக் கிடக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து தாய்மொழி கல்விக்காக செயலாற்ற வேண்டும்.

கருத்து மாறுபாடு, சாதி வேறுபாடு, வர்க்க பேதங்களை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் கைக்கோர்க்க வேண்டும்.

கர்நாடக அரசை மட்டுமே வெறுமனே குறைகூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும்.
தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் தொடங்கி தெருக்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும், வழிப்பாட்டு தளங்களிலும், திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும், ஐ.டி. கம்பெனிகளிலும் தாய்மொழியான தமிழை சொல்லி தர வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் இளைய தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டும்.

கர்நாடகாவில் தமிழ் மீண்டும் தளைப்பதற்கும் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் தாமதமின்றி நிரூற்ற வேண்டும்!
---------
மேலும் அறிய,

http://vaettoli.blogspot.com/2017/05/blog-post_3.html?m=0
கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்

vaettoli.blogspot.com/2017/05/blog-post_64.html
கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்

vaettoli.blogspot.com/search/label/கோலார்?m=0

Sunday, 2 December 2018

ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்

ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்

இந்த புகைப்படத்தில் இருப்பவர்தான் சாந்துபட்டர்.

1939 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த ஆலயப் போராட்டத்தின் பின்விளைவுகளை தன் வாழ்நாள் முழுவதும் சந்தித்தவர்.

ஆலயதுழைவுக்கு எதிராக அப்போது மீனாட்சியம்மன் கோவில் பூசாரிகள் 13 பேரில் 12 பேர் வேலைநிறுத்தம் தொடங்க தனியாளாக கோவிலை நடத்தியவர்.

திருநெல்வேலியில் இருந்து 12 பூசாரிகள் வரவழைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அனுமதி வழங்கி கோவில் தொடர்ந்து நடக்க முக்கிய காரணம் இவரே!

1945 இல் மற்ற பூசாரிகளும் வேலைக்கு வந்துவிட்டனர்!

போராட்டம் நடத்தியோர் பெயர் வாங்கிக்கொண்டு போய்விட்டனர்!

பட்டியல் மக்களும் ஆலயத்திற்கு வந்துபோக ஆரம்பித்துவிட்டனர்!

ஆனால் இவரது குடும்பம் மட்டும் அவரது சமூகத்திலிருந்தே ஒரு தலைமுறைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கு பிறகே இவரது குடும்பம் ஒதுக்கலில் இருந்து மீண்டது.

இது பற்றி விரிவாக "லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில்" மானுடவியல் பேராசிரியராக இருக்கும் சி.ஜே. ஃபுல்லர், தனது Servants of the Goddess புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

நன்றி: பிபிசி தமிழ்
தகவலுக்கு நன்றி: யோகேஸ்வரன்

Monday, 26 November 2018

1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி

1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி

அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!

1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.

அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.

1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.

அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.

ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.

மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.

காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.

இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.

மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!

அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!

பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!

நன்றி: கதிர் நிலவன்