Thursday 18 January 2024

திமுகவும் ஜல்லிக்கட்டும்

திமுகவும் ஜல்லிக்கட்டும்

 2017 இல் தமிழர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடி ஜல்லிக்கட்டு தடையை உடைத்தனர்.
 ஆனால் அப்போது முக்கியமான போராட்டஙகள் செய்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கு இப்போது வரை நடந்து வருகிறது.
 ஜல்லிக்கட்டுக்கு தடை 2006 இல் போடப்பட்டு சில மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தது.
 அப்போதில் இருந்து 2017 வரை திமுக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குறிப்பிடத் தகுந்த ஆதரவு நடவடிக்கை எதையும் செய்யவில்லை (அப்படி செய்ததாக காட்டிக்கொள்ள கார்த்திகேய சிவசேனாபதி யை விலைக்கு வாங்கியது).
 திமுக ஜூலி போன்றவர்களை அனுப்பி போராட்டத்தில் புகுந்து விளம்பரம் மட்டும் தேடிக் கொண்டனர்.
 தற்போது ஆட்சிக்கு வந்தபிறகும் ஜல்லிக்கட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்துவருகின்றனர்.
 உச்சகட்டமாக ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அதற்காக துரும்பையும் அசைக்காத கருணாநிதி பெயரை வைத்துள்ளது.
 ஆனால் போராடியவர்கள் 1000 பேர் வரை இன்றும் 7 ஆண்டுகளாக நீதிமன்றம் அலைந்துகொண்டு இருக்கின்றனர்.
 (அதிமுக தேர்தலுக்கு முன் சிறுசிறு சிவில் வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டது)
 இவர்களில் சிபிசிஐடி வழக்கு உள்ள 150 க்கும் மேற்பட்டோர் அடக்கம். இவர்களுக்கு ஆதரவாக  ‘ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு’ ஒன்றை தன்னார்வ வழக்கறிஞர்கள் உருவாக்கி வழக்கு நடத்தி வருகின்றனர்.
 ஜல்லிக்ககட்டு போராட்டத்திலேயே குறிப்பிடத் தகுந்த போராட்டம் பாலத்தில் ரயிலை மறித்த மாணவர் போராட்டம். இதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். அதில் முன்னணியில் நின்ற 24 பேர் வழக்கு பாய்ந்தது. அவர்களை இக்குழு 2022 இல் அவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது.
 2023 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழக சட்டதிருத்தம் திருத்தம் செல்லும் என்று இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டது.
 இதைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் உட்பட பலரும் அரசுக்கு போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க கோரிக்கை வைத்தனர்.
 திமுக அரசு ஒரு நியாயமான அரசு என்றால் தமிழக அரசு போட்ட வழக்குகளை வாபஸ் வாங்கி சிபிசிஐடி வழக்குகளைத் தாமே நடத்தி மேற்கண்ட போராட்டக் காரர்களை விருது வழங்கி கவுரவப்படுத்தி வழக்கு நடத்திய காலத்துக்கு நிவாரணம் வழங்கியிருக்கவும் வேண்டும். ஆனால் ஜல்லிக்கட்டுக்காக இன்னுயிரை ஈந்த சேலம் மாணவர் யோகேஸ்வரனுக்கு கூட இந்த அரசு நிவாரணம் வழங்கவில்லை (ஆனால் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்தார்). 
 
தமிழகத்தில் மொழிப்போர் காலத்தில் இருந்து எந்தவொரு போராட்டத்தையும் மக்கள் திரண்டு நடத்துவதும் கடைசியில் திமுக அதன் மீது தன் போர்வ்வையைப் போர்த்தி அமுக்கிக் கொள்வதும் தொட்டர்ச்சியாக நடக்கிறது.
 மொழிப்போர் தியாகிகள் இன்றுவரை கௌரவிக்கப் படவில்லை. சிலைகள் இல்லை. அவர்களது கல்லறைகள் கழிவிடங்கள் போல ஆகிவிட்டன. குமரியை மீட்ட தியாகிகளும் கடைசிவரை நிவாரணம் கேட்டு அலைந்து செத்துப் போயினர். 

 இப்படியான பின்னணி கொண்ட திமுக நம் கண் முன்னே  ஜல்லிக்கட்டு மைதானத்திலும் பரிசுகளிலும் உடைகளிலும் தனது முகரைக் கட்டையை ஒட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?!  
 நடிகைகளை மட்டும் அடக்கத் தெரிந்த உதயநிதி ஒய்யாரமாக ஜல்லிக்கட்டு பார்ப்பது எவ்வளவு கொடுமை?!
 தமிழர்கள் இனியும் தாமதிக்காமல் ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
 

No comments:

Post a Comment