Saturday 6 January 2024

பேருந்து நிலைய அரசியல்

பேருந்து நிலைய அரசியல்

 *தினமும் 6000 பஸ்கள் ஓட்டுநர் நடத்துநர் பற்றாக்குறையால் ஓடாமல் நிற்கின்றன.

* இதில் அதிகம் சென்னை பஸ்கள் (600 - 900)

*போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் 8 ஆண்டுகளாக நிரப்பப் படவில்லை.

*பணியில் இறந்தவர்களின் வாரிசுகள் அந்த வேலைக்காக 13 ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

*புதிய பென்சன் முறையை எதிர்த்து வழக்கு நடப்பதால் கடந்த எட்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஓட்டுநர் நடத்துநர் பென்சன்  பெறவில்லை.

*கடந்த 8 ஆண்டுகளாக பணியில் இறந்தவர்களுக்கு பழைய முறைப்படி பென்சன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அது நடக்கவில்லை.

*இருக்கும் ஓட்டுநர் நடத்துநர்களும் அதிகமான வேலைப்பளுவில் உள்ளனர்.

*ஓடும் பேருந்துகளும் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளன.

*பஸ்கள் குறைந்து மக்கள் பைக், வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது தனியாருக்கு லாபம்.

*பஸ் பயணம் இல்லாமல் தனித்தனியாக பயணிப்பது சுற்றுச் சூழலுக்கும் கேடு, போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும்.
 
*பஸ்சை நம்பியிருக்கும் அடித்தட்டு மக்கள் வேலை, தொழில் பாதிப்பு.

மேற்கண்டவை CITU சௌந்தர்ராஜன் பேட்டி மூலம் அறியக் கிடைப்பவை.

 இது மட்டுமில்லை கடும் நட்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத் துறையில் மகளிர் இலவசம் என்பது அதன் உயிர்மூச்சை நிறுத்தும் செயல்.
 இதனால் இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து துறை 5341 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
 
சுருக்கமாகக் கூறினால் தினமும் 6000 பஸ்கள் ஓட்ட ஆளில்லாமல் தண்டமாக நிற்கின்றன. அதில் பெரிய பாதிப்பு சென்னைக்கு. 8 ஆண்டுகளாக இருக்கும் பஸ்களை ஒழுங்காக ஓட்ட துப்பில்லாத திராவிட அரசுகள் பிரம்மாண்ட பெரிய பேருந்து நிலையம் கட்ட காரணம் என்ன?!

 அதிலும் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு மாவட்டத்தில் போய் விவசாய நிலத்தை கையகப்படுத்தி பெரும் பொருட்செலவில் கட்டியது ஏன்?!

அது பிரயோஜனம் இல்லை என்று மக்கள் எதிர்ப்பு வந்தபிறகு மாநில நிதியில் அருகே ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது சரியா?!

 சென்னை நகர மத்தியில் மிகப்பெரிய அரசு நிலத்தை குதிரைப் பந்தயம் விட்டு அனுபவித்து கொண்டு பல கோடி வாடகை பாக்கி வைத்திருக்கும் கிண்டி ரேஸ் கோர்ஸ் ஏன் பேருந்து நிலையமாக மாற்றப்பட வில்லை?!

 எதற்கு நகர மத்தியில் அல்லு அர்ஜுன் நிறுவனம் நடத்தும் கார் ரேஸ் மைதானம்? அதற்கு அரசு பணம் 14 கோடி செலவு?!

கோயம்பேடு பழைய பஸ் ஸ்டான்ட் நிலத்தை லூலூ மால் கட்ட தனியார் கார்ப்பரேட் டுக்கு தாரை வார்க்க திட்டம் உள்ளதாக சீமான் வைக்கும் குற்றச்சாட்டு உண்மையா?!

 நகர மத்தியில் பெருமுதலாளிகள் சுகமாக இருக்க பொதுமக்கள் பேருந்து இல்லாமல், பேருந்து நிலையம் இல்லாமல், இடைஞ்சலான சாலைகளில் வடிகால் வசதி இல்லாமல் அவதி படுவதுதான் திராவிட மாடலா? 

 

 

No comments:

Post a Comment