Showing posts with label ஆப்பிரிக்கா. Show all posts
Showing posts with label ஆப்பிரிக்கா. Show all posts

Sunday, 12 November 2023

தான்சானியா தந்த பாடம்

 தான்சானியா தந்த பாடம்

 zanzibar புரட்சி பற்றி தமக்கு அதிகம் தெரியாது. கி.பி.1698 இல் ஓமன் நாட்டு அரேபியர் தெற்கே கடலில் பயணித்து ஆப்பிரிக்கா கண்டத்தை ஒட்டி சில தீவுகளில் குடியேறி தமது ஆளுமையை நிறுவினர். 
 இவர்களது அரசாட்சி ஆப்பிரிக்க நிலத்திற்கு உள்ளேயும் பரவியது. சில தலைமுறைகள் கழித்து கி.பி. 1856 இல் வாரிசுரிமைப் போரில் ஓமன் தனியரசாகவும் அதன் ஆப்பிரிக்க காலணி தனியரசாகவும் ஆனது. 
 இந்த அரேபிய வந்தேறிகள் ஐரோப்பியர் ஏகாதிபத்திய காலத்தில் அவர்களுக்கு பணிந்து அரசு நடத்தினர். ஐரோப்பிய காலனிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தபோது தமது விசுவாசிகளான அவர்களிடமே  அந்த தீவுகளின் அரசாட்சியை கொடுத்துச் சென்றனர்.
 இதை மண்ணின் மைந்தர்களான ஆப்பிரிக்கர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
 1963 இல் அரேபியர் மக்களாட்சி அறிவித்து தேர்தல் நடத்தி அதிலும் தாங்களே வெற்றிபெற்றனர்.
 ஆப்பிரிக்கர்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மொத்தமாகச் சேர்ந்து அரேபியர்களை அடித்து துரத்தினர்.
 இப்படியாக 250 ஆண்டுகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய அரேபியர்களிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
 தீவுகள் தான்சானியாவுடன் இணைந்தன.
 தாய்நிலமான ஓமனுக்கு ஓடியது அரச குடும்பம். 
அங்கே அரசர் தவிர பிறருக்கு அடைக்கலம் கிடைத்தது. அந்த வந்தேறி அரபு அரசர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார். 

"அடிமை முறையை சட்டமியற்றி முடிவுகட்டிய நல்லவர்கள்" என்றோ "30 தலைமுறைகளாக இங்கேயே வாழ்கிறார்கள் அவர்கள் நம்மவர்" என்றோ "ஜனநாயக முறைப்படி அரசைக்  கைப்பற்றினார்கள்" என்றோ தான்சானியர் நியாயம் பேசிக்கொண்டு இருக்கவில்லை.
 
தகவலுக்கு நன்றி: கார்த்திகேயன் மதுரை

Saturday, 19 July 2014

தென்னாப்பிரிக்கத் தீவிரவாதி

தென்னாப்பிரிக்கத் தீவிரவாதி
- - - - - - - - - - - - - - - - - - - - - - --
1960, ஷார்ப்வில்லி என்ற இடத்தின் காவல்நிலையம்
முன்பு 5000மக்கள் தென்னாப்பிரிக்க
நிறவெறி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில்
திரண்டனர்; பீரங்கிகளும் துப்பாக்கிகளும் முழங்கின;
69 கறுப்பின மக்கள் பலியானார்கள்; 200பேர்
காயமடைந்தனர்.
1960,மே30; ஒரு கமுக்கமான(ரகசியமான)
ஊடகவியலார் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந
்தது; திடீரென்று அங்கே தலைமறைவாக இருக்கும்
நெல்சன் மண்டேலா தோன்றினார்;
"இனி ஆயுதம்தான் எங்கள் வழி" என்று அறிவித்தார்;
1961ல் மண்டேலாவின் அமைப்பினர் வைத்த குண்டுகள்
வெடித்தன; அரசு அதிர்ச்சியில் உறைந்தது.
தீவிரமாகத் தேடப்பட்ட மண்டேலா பல்வேறு ஆப்பிரிக்க
நாடுகளுக்கும் தலைமறைவாக சுற்றுப்பயணம்
சென்று ஆதரவு திரட்டிவந்தார்; மீண்டும் நாட்டுக்குள்
நுழைந்தபோது எதிர்பாராத விதமாகப் பிடிபட்டார்.
1962,அக்டோபர் 2, பிரிட்டோரியா வழக்குமன்றம்
பரபரப்பாக இருந்தது; காவல்துறை வண்டிகள்
சத்தம்போட்டபடி குழுமியிருந்த மக்கள் மத்தியில்
நின்றன;
புலித்தோல் போர்த்திய தமது பாரம்பரிய உடையில்
வெளிவந்தார் மண்டேலா;
முட்டியை உயர்த்தி 'அமெண்டோ' என்று உரக்கக்
கூறினார்;
சுற்றியிருந்த மக்களும் 'அமெண்டோ' (உறுதி)
என்று முழங்கினார்கள்.
1964,ஜூன்12; பிடிபட்ட ஆயுதப்போராளிகளான 7
கூட்டாளிகளோடு குற்றம்சாட்டப்பட்டு 27ஆண்டுகள்
சிறைத்தண்டனை பெறுகிறார் மண்டேலா; ராபன் தீவிலுள்ள
சிறையில் அடைக்கப்படுகிறார்; சிறையிலும்
பல்வேறு அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல்
போராடுகிறார்.
1986,
மண்டேலாவை விடுதலை செய்யக்கோரி அரசுக்கு எதிரான
மிகப்பெரிய கலவரம்; அரசு அசைந்துகொடுக்கவில்லை.
1990,பிப்ரவரி,11; சிறைக்கதவுகள் 27ஆண்டுகள்
கழித்து மண்டேலாவுக்காக உற்சாகமாகத்
திறந்துகொண்டன;
வெளியே கூடியிருந்த மக்களை கூர்ந்து பார்த்தார்
வயதாகிப்போன மண்டேலா;
முட்டியை உயர்த்தி கூறினார்
"அமெண்டோஓஓஓஓ".
(எந்த பிரிட்டோரியா வழக்காடுமன்றம் அவரைக்
குற்றவாளியாக அறிவித்ததோ அதே மன்றத்தில்
அவரது உருவப்படம் இருக்கிறது;
எந்த நாடாளுமன்றம் அவரைத்
தீவிரவாதி என்று அறிவித்ததோ அதே நாடாளுமன்ற
வளாகத்தில் அவரது சிலை நிமிர்ந்து நிற்கிறது).
https://m.facebook.com/photo.php?fbid=468290996607892&st=6&_rdr