Showing posts with label தீவிரவாதி. Show all posts
Showing posts with label தீவிரவாதி. Show all posts

Friday, 27 November 2015

தமிழியத்தின் வகைகள்

தமிழியத்தின் வகைகள்:

தமிழியம் மூன்று வகைப்படுகிறது.
அவையாவன,

அ) தமிழ்நாட்டாண்மை அல்லது தமிழ்த் தேசியம்.
ஆ) தனித் தமிழியம்
இ) தீவிரத் தமிழியம்.

முதலில் தமிழ்நாட்டாண்மை என்பது,
 
தமிழரின் தாயக நிலத்தில் பல்வேறு இனங்களை இணைத்து தலைமையை தமிழரிடம் வைத்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டை அமைப்பது ஆகும்.
இது இருவகைப்படும்.
அ) அறவழித் தமிழ்நாட்டாண்மை
ஆ) ஆயுதவழித் தமிழ்நாட்டாண்மை

இரண்டாவது தனித்தமிழியம்,
 
தமிழரின் தாயக நிலத்தில் தமிழரல்லாதோரை அவரவர் தாய்நிலத்திற்கு அனுப்பிவிட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழ்க்குடிகளை தமிழ்த் தாயக நிலத்திற்கு மீள்குடியேற்றி தமிழரே தமிழரை 100% ஆளும், ஆளப்படும் நாட்டை நிறுவுவது.

மூன்றாவது தீவிரத் தமிழியம்,
 
நாடு என்கிற வரையறையில்லாத உலகில் உள்ள அத்தனை மக்களும் தமிழரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவந்து உலகைத் தமிழர் ஆள்வதை வலியுறுத்துவது.

இதில் எது சரி எது தவறு என்பதை காலம் முடிவு செய்யும்.

தனித்தமிழியம் மற்றும் தீவிரத் தமிழியத்திற்கு அறவழி என்பது கிடையாது.

மக்கள் எந்தவொரு கொள்கையிலும் மென்மையில் இருந்து தீவிரத்திற்கு நகர்வார்கள்.

நாம் அறவழித் தமிழ்நாட்டாண்மையிலும் ஆயுதவழித் தமிழ்நாட்டண்மையிலும் தோற்றுவிட்டோம்.

இப்போது அடுத்த கட்டமான தனித்தமிழியத்திற்கு காலம் நம்மை நகர்த்துகிறது.

இதிலும் தோற்றால் தீவிரத்தமிழியத்தைத் தமிழர்கள் கையிலெடுக்கும் நிலை வரலாம்.

அப்போது,
ஒன்று உலகம் என்றுமில்லாத நன்மையை அடையும்
அல்லது என்றுமில்லாத நாசத்தை அடையும்.
.

Sunday, 4 October 2015

செம்படை காக்கும் கரும்படை

செம்படை காக்கும் கரும்படை

@@@@@@@@@@@@@@@@

நாள்: 27-12-2218

அவர்களுக்கு மன்னிப்பு கிடையாதுதான்.
117 பெண்கள், 76 ஆண்கள், 30 முதியவர்கள், 8 குழந்தைகள் தமிழ்க் குடியரசுத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு.
என் கண் முன்னே நடந்த அந்த நிகழ்வை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை.
மனது இன்று சரியில்லை அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு என் மலேசியநண்பன் வீட்டுக்குச் சென்றேன்.
அங்கே அவனுடைய ஒரு தமிழ்நண்பன் அமர்ந்து தொலைக்காட்சியில் ஓடிய அந்த படுகொலை பற்றிய செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் அவனிடம் என் ஆதங்கத்தை வெளிப்படுத்த அருகில் சென்று அமர்ந்து
"இந்தக் கப்பலில் நானும் இருந்தேன்" என்று பேச்சை ஆரம்பித்தேன்.
"அப்படியா என்ன நடந்தது அன்று?"
என்று கேட்டான்.
"நான் அந்த உல்லாச கப்பலின் பாதுகாப்புக்கு பொறுப்பான நிறுவனத்தில் வேலைசெய்பவன் என்ற வகையில் உலகமகா கோடீசுவரர்கள் மட்டுமே பயணம் செய்யமுடிந்த அந்த ஆடம்பரக் கப்பலில் காவலாளியாகச் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
2200 பேர் பயணம் செய்த அந்த கப்பலில் இதே நாளில் நான்கு வருடங்கள் முன்பு நாங்கள் மேல்தளத்தில் கண்கானிப்பிலிருந்தபோது பின்பக்கம் பக்கவாட்டில் பெரியவெடிச்சம் கேட்க என்னவென்று ஓடிச்சென்று பார்த்தோம்.
அங்கே பெரிய குண்டு வெடித்து ஓட்டை விழுந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
அந்த வெளிச்சத்தில் நாங்கள் தெளிவாகப் பார்த்தோம்.
இன்னொரு படகை வேகமாகச் செலுத்திக்கொண்டு வந்த கறுப்பு மனிதர்கள் படகிலிருந்து பாதியில் குதித்துவிட அந்த வெடிமருந்து நிரம்பிய படகு மட்டும் ஏற்கனவே சேதமடைந்த பகுதிக்கு அருகில் மோதி வெடித்தது.
கப்பல் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது.
பாதுகாப்புக்கு நின்ற நாங்கள் மேலேயிருந்து சுட்டோம்.
ஆனால் அவர்கள் உடலில் கட்டியிருந்த நீர் உந்துகள் மூலம் வெகுசீக்கிரம் பின்னோக்கி சென்றுவிட்டனர்.
நான் உடனே கப்பலின் தளகருத்தா(கேப்டன்) அறைக்கு சென்று பார்த்தேன்.
அங்கே வானொலியில் எங்களை சரணடையச் சொன்னார்கள்.
தளகருத்தாவோ தான் பக்கத்து நாடுகள் உதவியைக் கோரியதாகவும் அவர்கள் விமானம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி சரணடைய மறுத்தார்.

மறுநிமிடம் முன்பக்கம் எதிர்பக்கவாட்டில் இன்னொரு படகு வந்து மோதியது. சாய்ந்த கப்பல் நேராக ஆரம்பித்தது.
முன்பக்க காவலாளி வந்து அவர்கள் கறுப்பு உடையில் கறுப்பு படகில் நீரில் முடிந்த அளவு அமிழ்ந்திருப்பதாகவும் இந்த இருளில் தாக்கமுடியாது என்றும் 5படகுகள் இருக்கலாம் எனது பேசியில் கூறினான்.

பின்பக்கத்திலே தாக்கப்படாத பக்கத்தில் இருந்த காவலாளியோ கறுப்பு மனிதர்கள் காந்தம், கொக்கி, ஈட்டி போன்றவற்றை பயன்படுத்தி கப்பல் மேல் ஏறுவதாகவும் அவர்கள் ஊசலாடிக்கொண்டே ஏறுவதாலும் இருளில் இருக்கும் படகிலிருந்து துப்பாக்கிசூடு நடத்தி நாம் தாக்காதவாறு பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் கூறினான்.

நான் அந்த முட்டாள் தளகர்த்தாவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சரணடையக் கட்டாயபபடுத்தினேன்.
அவன் சரணடைவதாக அறிவித்தான்.
அதற்குள் தமிழ்தீவிரவாதிகள் எங்கள் கப்பலில் நுழைந்திருந்தனர்.

நான் விரைந்து சென்று அந்த கப்பலில் இருந்த ஒரு தமிழரை அழைத்து வந்து சமாதானம் பேசச்செய்தேன்.
அவர்கள் தமிழில் ஏதோ பேசிக்கொண்டனர்.
கப்பலை பெரிய நிகோபர் தீவுக்கு (மாநக்காவரம்) மூழ்குவதற்குள் செலுத்தக் கூறினார்.
பாதிவழியில் அந்த சேதமடைந்த கப்பல் நின்றுவிட அந்தக் கப்பலில் இருந்த உதவிப் படகுகளையும் இறக்கி அனைவரையும் படகுகள் மூலம் விரைவாக தீவுக்கு கரையேற்றினோம்.
உதவிக்கு வந்த விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
உதவிக்கு கப்பல்கள் வரவில்லை வந்திருந்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்.
அங்கே அவர்களிடம் எங்களைப் பற்றிய விபரங்கள் ஏற்கனவே இருந்தது.
அவர்கள் எங்களில் 117 பெண்கள், 76ஆண்கள், 30முதியவர்கள், 8குழந்தைகளை தனியே பிரித்து கூட்டிச் சென்றுவிட்டனர்.
நாங்கள் இரண்டாயிரம் பேரும் ஒன்றும் புரியாமல் ஆயுதமுனையில் நிறுத்தப்பட்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் ஒரு பெண்தீவிரவாதி வந்தாள்.
அவள் மூன்றுமாதங்கள் முன்பு தமிழ்ப்பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்து தமிழ்க்குடியரசில் போரிடும் பன்னாட்டு படையினர் முன்னேறி வந்ததாகவும் அவர்களைத் தடுக்க வேறுவழியின்றி தமதுபொதுமக்களையும் சேர்த்து கொல்லவேண்டிவந்ததாகவும் அதில் பலியான மக்களின் எண்ணிக்கையே 117பெண்கள், 76ஆண்கள், 30முதியோர், 8குழந்தைகள் ஆவர்.
அவர்களைப் பணையக் கைதியாக வைத்து முன்னேறிய படையில் எந்த எந்த இனத்தவர் எவ்வளவு இருந்தனர் என்று பார்த்து அதற்குத் தகுந்தவாறு அந்த இனத்தைச் சேர்ந்த மக்களை எங்களுடன் இருந்த 231பேரை பிரித்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் மற்றவர்களை விடுவிப்பதாகவும் கூறினர்.
உறவுகளைப் பிரிந்தவர்கள் அலறித் துடித்தனர்.
விட்டுவிடும்படி கெஞ்சினர்.
எங்களோடு வந்த தமிழரும் கூடக் கெஞ்சினார்.
அவரிடம் அவள் தமிழில் ஏதோ கூறினாள்.
பிறகு அவர் எங்களிடம் பன்னாட்டுப் படை மன்னிப்பு கோரினால் அவர்களை விடுவித்துவிடுவார்கள் என்றார்.

உலகளாவிய தொண்டு நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கப்பல் அனுப்பி எங்களை மீள எங்கள் இடத்திற்கு அனுப்பினர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த பொதுமக்களை கடத்திய அன்றே நெற்றியில் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஏன் நீங்கள் இவ்வளவு கொடூரர்களாக இருக்கிறீர்கள்?
பணையக்கைதிகளை வைத்து முன்னேறிய பன்னாட்டுப் படையினர் 500பேரைத்தான் கொன்றுவிட்டீர்களே.
5தமிழர்களை உயிரோடு மீட்டீர்களே.
அன்று கடத்திய பொதுமக்களை பன்னாட்டுப்படை மன்னிப்பு கேட்காவிட்டால் கொன்றிருக்கலாம்.
ஆனால் நீங்கள் எங்களிடம் பொய்சொல்லிவிட்டு அன்றே கொன்றுவிட்டீர்களே?!
குழந்தைகளைக்கூடக் கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? இந்த உலகமே தமிழரை விரட்டி விரட்டி அடிக்கிறது சரி என்று ஆகிறதே?!"
என்று ஆவேசமாகக் கேட்டேன்.

அந்தத் தமிழன் பொறுமையாக "அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?!
முதலில் தமிழ் குடியரசைப் பற்றி அறியுங்கள்.
தமிழ்க்குடியரசில் இரண்டு விடுதலை இயக்கங்கள் உள்ளன.
ஒன்று செம்படை. அது 80% நிலப்பரப்பையும்
இரண்டாவதான கரும்படை 20% நிலத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இது பலருக்குத் தெரியாது.
உங்களை கடத்தியவர்கள் செம்படையாக இருந்தால் பெரிய கப்பல்கள் சூழ்ந்து சேதமே இல்லாமல் கடத்தியிருப்பார்கள்.
உங்களைக் கடத்தியது கரும்படையின் சிறிய படகுகள்.
தவிர மாநக்காவரத்தில் இயங்குபவர்கள் அவர்கள்தான்.
மாநக்காவரம், யாழ்ப்பாணம், வன்னி, கன்னியாகுமரி, பொதிகை, வடக்கே சத்தியமங்கலம் என அடர்த்தியான வனப்பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த உலகம் செம்படையை அங்கீகரிப்பதன் காரணம் கரும்படை மீதான அச்சம்தான் காரணம்.
தமிழர் நிலத்தில் தமிழர் மட்டுமே வாழவேண்டும் என்ற தனித்தமிழியக்கொள்கை கொண்டவர்கள்.
செம்படையைப் போல வேற்றினத்தவரை இணைத்துக்கொள்வது கிடையாது.
தவிர இரு இயக்கங்களும் எந்தச் சூழ்நிலையிலும் தமிழரைக்கொல்லமாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள்.
அதனால்தான் படுதோல்வியைத் தழுவிய பன்னாட்டுப் படை தமிழரையே கேடயமாக நிறுத்தி முன்னேறியது.
செம்படை பின்வாங்க அது கரும்படையினர் பகுதிவரை முன்னேறியது.

ஒருகோடி தமிழர்கள் உயிர்கொடுத்து மீட்ட எங்கள் தாய்மண்ணையும் அதில் வாழும் பத்துக்கோடித் தமிழ்மக்களையும் காக்க வேறுவழியின்றி பணயக்கைதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் போரிட்டது கரும்படை.
அந்த மோதலில் வெறும் ஐந்துபேரை மட்டுமே மீட்கமுடிந்தது.
தமிழ்ப்பொதுமக்கள் இறந்துவிட்டனர்.
பன்னாட்டுப்படையைத் தொடர்ந்து விரட்டி அடித்து 500பேரை கொன்றுவிட்டது.
ஆனாலும் தமிழ்ப்பொதுமக்களை தமது கையாலேயே கொல்லவேண்டிவந்ததே தமது தோல்வியெனக் கருதினர்.
பன்னாட்டு படை மீண்டும் இதேபோல செய்யமுனைவதாக தகவல்கள் வந்தன.
அதைத் தடுக்கவும் பின்விளைவுகளை ஏற்படுத்தி அச்சத்தை விளைவிக்கவும் இவ்வாறு பதிலுக்கு பொதுமக்களைக் கொன்றதாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் நினைத்திருந்தால் உங்கள் அனைவரையும் கொன்றிருக்கலாம், அல்லது பேரம்பேசியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை.
சேதமடைந்த கப்பலுக்கு நட்ட ஈடு கொடுத்துள்ளனர்.
அதெல்லாம் செய்திகளில் வராது.
தவிர போரில் யாரைக்கொன்றாலும் அவர்கள் உடலின் படத்தையும் அடையாளங்களையும் வெளிவிடுவார்கள்.
இறந்தவர் வீட்டுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்புவார்கள்.
நல்லமுறையில் அடக்கம் செய்யும் படங்களையும் நினைவிடத்தின் படங்களையும் வெளிவிடுவார்கள்.
ஆனால், அன்று கடத்திய செல்வச்சீமான்கள் படமோ உயிருடன் இருக்கையில் எடுக்கப்பட்டது.
நினைவிடத்தின் படம் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது.
அங்க உடல் அடையாளங்களோ, இரங்கல் கடிதமோ, அடக்கம் செய்யும் படமோ எதுவும் வழக்கம்போல வெளிவரவில்லை.
நான்கு ஆண்டுகள் ஆகிறதுதான்.
ஆனாலும் அவர்களை மறைத்துவைத்திருக்கலாம், அல்லது பெரியவர்களைக் கொன்றுவிட்டு குழந்தைகளை அவர்களே வளர்த்துவரலாம், அல்லது எதிர்ப்புகள் உச்சமடைந்தால் வெளிக்காட்டலாம்.
அவர்கள் பொதுமக்களை கொல்லவில்லை என்பதை மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளனர்.

கரும்படையினர் இதுபோன்ற பழிகளை ஏற்றுக்கொள்வது புதிதுமல்ல.
செம்படைக்கு ஆதரவு பெருகுவதை அவர்கள் விரும்புகிறார்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் ஐந்தாண்டுகளுக்கு முன் ஆசுத்திரேலியாவின் கல்லூரியில் தமிழ்மாணவர் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சிறியவிமானத்தில் நான்கேபேர் சென்று கல்லூரியைக் கைப்பற்றி அடித்த மாணவர்களை மூளைச்சலவை செய்து பைத்தியமாக்கிவிட்டு திரும்பியதுபோல பல நாடுகளுக்கும் சென்று பன்னாட்டுப் படையினர் குடும்பங்களைப் பழிவாங்கியிருக்கலாம்.
ஆனால், அவர்கள் அந்த கோடிசுவரக் கப்பலை மடக்கியது காரணமாகத்தான்.
அப்போதுதான் பெருமுதலாளிகள் நடத்தும் தேவையற்ற போர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பியது மாதிரி இருக்கும்".
என்றான்.

Sunday, 26 October 2014

பணக்காரத் தீவிரவாதி (2/2)

'பெரும்பாலும் மக்களுக்கு வரும் பிரச்சனைகள் சிலரால்தான் வரும். பிரச்சனை வரும்போதுதான் அவர்களை தீர்த்துக்கட்டி தேவையானதைப் பறித்துக்கொள்ள நல்லவாய்ப்பு அமைகிறது. மக்களுக்கும் நல்லது நடக்கிறது. மற்றபடி நாங்கள் மக்களுக்கு எந்த உதவியும் செய்வதே கிடையாது. மக்கள் எங்களுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை'.

'இதுவரை கைதாகியிருக்கிறீர்களா?'
'இல்லை, என் கூட்டாளிகளில் ஒருவரைக் கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.ஒன்று பணம் கொடுத்து அவர் குற்றமற்றவர் என்றாக்க வேண்டும் அல்லது தாக்குதல் நடத்தி காவலை உடைத்து மீட்கவேண்டும் என்ற நிலை. பணம்கொடுத்து சட்டநடவடிக்கை மூலம் அவரை மூன்று மணிநேரத்தில் வெளியேகொண்டுவர ஆணை பிறப்பிக்கவைத்தேன். ஆனால், அவர்கள் விடுதலை செய்யுமுன் அதிரடி நடவடிக்கை மூலம் அவரை மீட்டிருந்தேன். அதன்பிறகு பெரிய படையை அனுப்பினார்கள். எங்களுடன் மோதியதில் அதில் ஒருவர்கூட மிஞ்சவில்லை. அதன்பிறகு  பட்டாளத்தை அனுப்பினார்கள் கடுமையான சண்டைக்குப் பிறகு பேச்சுவார்தை நடத்தி போர்நிறுத்தம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்'.
'எப்படி?'
'நேர்மையான ஒருங்கிணைக்கப்பட்ட படையாகவும் எங்களால் இயங்கமுடியும், நேர்மை இல்லாமல் குறுக்குவழியில் தீவிரவாதிகளாகவும் இயங்கமுடியும். உயிரைப்பற்றி கவலையும் இல்லை, ஈவிரக்கம் காட்டுவதும் இல்லை. எங்களுக்கு ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகளே உள்ளன.
உலகில் நவீனமாக சந்தைக்கு வரும் தொழில்நுட்பத்தை கள்ளசந்தையில் உடனடியாக வாங்கிவிடுவோம்.  இந்த வீட்டுக்கு மேலே கூட இரண்டு தாக்குதல் வானூர்திகள் உள்ளன'
'எப்படி இதையெல்லாம் செய்தீர்கள்?'
'நேர்வழியில் இது முடியாது, குறுக்குவழியில் வந்ததுதான். அதுவும் பத்தே ஆண்டுகளில்'.
'நீங்கள் இயங்கும் பகுதிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?'
'என்மொழி பேசும் மக்கள் வாழும் இடம் அத்தனையும் சில பகுதிகள் நேரடியாகவும் சில பகுதிகள் மறைமுகமாகவும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கே நான் என்ன நினைக்கிறேனோ அது நடக்கும். எந்தவொரு தலைவனுக்கும் அவன் மொழி, வட்டாரம், சாதி, மத மக்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கவே செய்யும்'.
'அரசியலில் உங்கள் பங்கு என்ன?'.
'ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு ஆதரவு வழங்குகிறேன். அவர்கள் நேரடியாக அரசியல்கட்சியாக இல்லாமல் அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள்தான் எங்கள் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். மற்றபடி நான் தீர்மானிக்கும் கட்சிதான் ஆட்சிக்கு வரும்'.
'உங்களுக்கு அஞ்சாதவர்களும் உண்டா?'
"உயிர் இருக்கும் எவனும் எனக்கு அஞ்சிதான் ஆகவேண்டும்".
'உங்கள் முன்மாதிரி யார்?'
'உலகில் பட்டாளத்தையே முறியடித்த நிழலுகப் பெருந்தலைகள் இருந்திருக்கிறார்கள். எல்-சாப்போ, வீரப்பன் போன்றவர்கள் என் முன்மாதிரிகள்'.
'போதைப்பொருட்களை கடத்துவதாகச் சொல்கிறார்களே?'.
'ஆம், ஆயுதம் வாங்கும் கள்ளச்சந்தையில் சிலசமயம் போதைப்பொருட்களையும் கைமாற்றவேண்டிவரும். மற்றபடி போதைப்பொருட்களை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் சொத்துக்களில் சரிபாதி போதைப்பொருள் விற்றவர்களிடம் பறித்ததுதான்.
எங்கள் குழுவினர் எந்த தீயபழக்கமும் இல்லாதவர்கள். அவர்களுக்கு போதை அவர்கள் வாழும் வாழ்க்கைதான்'.
'யாரும் வழிதவறியதே இல்லையா?'.
'இல்லை, குழுவில் சேருமுன் போதைக்கு அடிமையாக இருந்தவர்களை பயிற்சி மூலம் விடுவிப்போம். சிலர் வழிதவறியதால் விண்ணுலகம் அனுப்பிவிட்டோம்'.
'கொலைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று நினைக்கிறீர்களா?'.
'வேறு தீர்வே இல்லாத சிலருக்கு, தெரிந்தே வரம்பு மீறும் சிலருக்கு, உயிர்வாழத் தகுதியில்லாத சிலருக்கு ஒரே எளிதான தீர்வு ஒரு தோட்டா உடனடி மரணம்'.
'உங்களுக்கு எதிரிகள் உண்டா?'
'எதிரியாக வரலாம் என்று யாரையெல்லாம் சந்தேகிக்கிறேனோ அவர்களை தீர்த்துவிடுவேன்.ஆனாலும், பல எதிரிகள் இருக்கிறார்கள். சரிக்கு சரியான எதிரிகள் சிலர்தான். அவர்களையும் விரைவில் ஒழித்துவிடுவேன்'.
'இது எத்தனை நாளைக்கு?'
'தெரியவில்லை, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நடைமுறை மாறும்வரை'.
'நீங்கள் அதிகம் பகட்டாக இருப்பதாகத் தோன்றுகிறதே? கொஞ்சம் மக்களுக்கும் கொடுக்கக்கூடாதா?'.
'ஏழை போலவும் எளிமையாக இருப்பதாகவும் பிரபலங்கள் நடிக்கிறார்கள். ஏனென்றால், இங்கே ஏழைகள் அதிகம். ஏழைகளே இல்லாத நாட்டில் ஏழையாக நடிப்பது பலனளிக்காது அல்லவா? யாரும் விரும்பி ஏழையாக இருப்பதில்லை. மக்கள் எப்போதும் உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையில் இடையூறு செய்யாமல் இருந்தால் அவர்கள் வாழ்ந்துகொள்வார்கள். என்னுடைய நோக்கம் தவறான வழியில் சேர்த்துவைப்பவன் இருக்கக்கூடாது. இருந்தால் விட்டுவைக்கமாட்டேன். நாங்கள் பறிப்பதை நாங்களே வைத்துக்கொள்கிறோம். மக்களிடம் பறிப்பது எளிது. ஆனால் பணமுதலைகளிடம் பறிப்பது உயிரைப் பொருட்படுத்தாமல் துணிந்தால்தான் நடக்கும். உயிரைப் பணயம் வைத்து செயல்படுகிறோம். பெரிதாக எதாவது கிடைத்தால்தான் நாங்கள் பெரிதாக செயல்படமுடியும்'.
'உங்களுடைய இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'.
'நான் ஏன் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, என்னைப் போன்று எங்கள் குழுவினரைப்போன்று வாழாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையே அல்ல.ஏதோ செய்கிறேன். ஆனால் செய்வது சரி என்றுமட்டும் சொல்வேன்'.

பணக்காரத் தீவிரவாதி (1/2)

பணக்காரத் தீவிரவாதி

terrorist,rebellion, smugler,businessman, don,leader, murderer,revolutionist, billioner,gangster, racist, humantarian, god father, politician and
ANY PERSONALITY THAT IS EXTREME

அந்த பரவலான தலைவரை பேட்டிகாண பெருமுயற்சி செய்து இசைவு கிடைத்தது,
தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.
மறைவிடத்தில் இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரது வீடு ஒரு நகரத்தின் நடுவில் இருந்தது முதல் வியப்பு.
அந்த வீடைப் பார்க்கவேண்டுமே மிகப்பெரிய வீடு, சுற்றி தோட்டம், ஆயுதம் ஏந்திய காவல், பகட்டின் உச்சம் அதையும் மிஞ்சும் கலைநயம். இந்தவீடு அவர் அவ்வப்போது வந்து போவதாம். இதைவிடப் பத்துமடங்கு பெரிய வீடுகள் பல்வேறு நகரங்களில் இருக்கிறதாம்.
ஒரு அறையில் காத்திருக்கச்.சொன்னார்கள். அங்கே அவரது படங்கள் இருந்தன.
அவரைப் பற்றி பலரும் எச்சரித்தார்கள். அதிலும் நான் ஒரு பெண். இருந்தாலும் துணிந்து சென்றேன். அவர் வரைந்த ஓவியங்களும் இருந்தன. அதெப்படி சாதனை நாயகர்கள் அனைவரிடமும் வரையும் பழக்கம் இருக்கிறது?!
'அவர் வந்துவிட்டார்' என்று உடனிருந்தவர் கூற வாசலைப்பார்த்தேன்.
அவர் ஒரு இருசக்கரவண்டியில் கறுப்புகண்ணாடியைக் கழட்டியவாறு வந்திறங்கினார்.
நான் எழுந்து நிற்க, அவர் என்னைக் கடந்துசெல்லும்போது முறைப்பது போல் கூர்மையாகப் பார்த்துவிட்டு ஒரு அறைக்குள் சென்றார். 'மரியாதைக்காக எழுந்துநிற்பது அவருக்குப் பிடிக்காது' என்றார் உடனிருந்தவர். 'அப்படியா? ஏன்?' 'அது அப்படித்தான். எழுத்து நிற்பது, சல்யூட் அடிப்பது, காலில் விழுவது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. வணக்கம்கூட லேசாக தலையை அசைத்தால் போதும்'.
அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தார்.
இருக்கையில் அமர்ந்தார்.
உயர்தரமான ஆடைகள் ஆனால் நகைகள் எதுவும் அவர் அணிந்திருக்கவில்லை.
ஆனால் அத்தனை மிடுக்கு.
பால் கலக்காத தேநீரை அவரே தயாரித்து எடுத்துவந்திருந்தார்.
'நாங்கள் பால் பயன்படுத்துவது கிடையாது, அது கன்றுக்காக தாய்ப்பசு சுரப்பது, தவிர பாலில் உள்ள லாக்டோஸ் செறிக்கவும் முடியாமல் கழிவாக வெளியேறவும் முடியாமல் உடலிலேயே தங்குகிறது. இது உடல்நலத்துக்குக் கேடு. இன்று பெண்கள் சீக்கிரமே வயதுக்கு வருவதும் மற்ற விலங்குகளை விட மனிதர்களே அதிகம் பாலியல் வல்லுறவு செய்வதற்கும் பாலருந்துவது ஒரு காரணம். ஏனென்றால் கன்றுதான் விரைவில் பருவமடையும்' என்று கூறினார்.
எனக்கு நான் பார்க்கவந்த ஆள் இவர்தானா? என்று ஐயமேற்பட்டது.
'எந்த மொழியில் பேட்டியை வைத்துக்கொள்ளலாம்?' என்று கேட்டார். 'எனக்கு உங்கள் மொழி நன்றாகத் தெரியும், அதிலேயே வைத்துக்கொள்ளலாம்' என்றேன். 'இல்லை எங்கள் தாய்மொழியை வேற்றுஆட்களுடன் நாங்கள் பேசுவதில்லை, தொடர்புமொழியில் வைத்துக்கொள்ளலாம்' என்றார்.
அதன்பிறகு ஆங்கிலத்தில் பேட்டி தொடர்ந்தது.
'உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?'
"என் செயல்பாடு உயிரை எடுப்பது, அவன் யாரோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும், என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன், இதுதான் நான் செய்வது, பல
உயிர்களை வாழ வழிசெய்ய சில உயிர்களை நான் கொல்கிறேன்,
இதுதான் என் செயல்பாடு".
'உங்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி கவலையில்லையா?'.
'இல்லை, அரசாங்கத்தை விட நவீனமான ஆயுதங்கள் என்னிடம் இருக்கும்வரை, சொல்லப்போனால் அரசாங்கமே நான் நடத்துவதுதான்'.
'இருசக்கரவண்டியில் சுற்றுகிறீர்களே, பாதுகாப்பு தேவையில்லையா?'.
'இல்லை, நான் போகும் முன்பே என் உளவு ஆட்களும் பாதுகாவலர்களும் அங்கே பாதுகாப்பை உறுதி செய்திருப்பார்கள்'.
'இதுவரை எத்தனைபேரைக் கொன்றிருப்பீர்கள்?'.
'தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருக்கும்'.
'ஏன்?'.
'என் வழியில் குறுக்கே வருபவர்களை, எதிர்ப்பவர்களை, அவர்கள் தலைதூக்கும் முன்பே நான் தீர்த்திருப்பேன்'.
'வெளிப்படையாகக் கூறுகிறீர்களே பயமில்லையா?'.
'இல்லை'.
'பேட்டி வெளியானபிறகு அரசாங்கம் படையெடுத்து வரலாம்'.
'தோற்றுப்போவார்கள்'.
'எப்படி?'.
'நான் உருவாக்கியுள்ள கூட்டம் அப்படி, அவர் தங்கள் பெருமையை, திமிரைக் காப்பாற்றவேணும் உயிரை பணயம் வைத்து போராடுவார்கள்'.
'எப்படி இதை உருவாக்கினீர்கள்?'.
'அடுத்தவனுக்காக உழைக்காமல், எவனுக்கும் அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி கொள்ளைக்காரர்களிடம் கொள்ளையடிக்கிறோம். அந்தப் பணத்தைக்கொண்டு நன்றாக வாழ்கிறோம். இப்படி ஒரு வாழ்க்கைக்கு உயிரையே கொடுக்கலாம் என்று எண்ணுபவர்கள் என் படையினர்'.
'எத்தனைபேர் இருப்பார்கள்?'.
'துல்லியமாகத் தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்'.
'எங்கிருந்து இது தொடங்கியது?'.
'நான் உலகத்தின் புரட்சியாளர்களைப் படித்து புரட்சிகரமாக எதையாவது செய்யவேண்டும் என்று செயல்பட்டு குற்றவாளியானேன். ஆனால், பெரிய அளவில்  குற்றம்புரிபவர்கள் வாழ்வாங்கு வாழ்வதைப் பார்த்தேன். பணக்கார முதலாளிகள்தான் போரையும், வெற்றி தோல்வியையும், பேச்சுவாழ்த்தையையும், தீர்ப்புகளையும்,ஒப்பந்தங்களையும், புரட்சிகளையும், ஆட்சிகளையும், வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக மாற நினைத்தேன். வழி அவர்கள் வழிதான். உயிரைப் பற்றி கவலைப்படாமல், எதற்கும் துணிந்த கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, ஆயுதங்களை பயன்படுத்தி பணத்தை பறிப்பது, அவர்களுக்கே எதிராக அதைப் பயன்படுத்துகிறேன். அவர்கள் சராசரி மக்களைக் கொள்ளையடித்து சேர்த்துவைந்திருப்பதை நான் பிடுங்கிக்கொள்கிறேன். இன்று உலகத் தீவிரவாத அமைப்புகளில் பணக்காரக் குழு நாங்கள்தான்'.
'இதற்கு தலைவனாக எப்படி ஆனீர்கள்?'
'முதலில் நான்தான் சில நண்பர்களுடன் தொடங்கினேன். தப்பான வழியில் பணம் சேர்ப்பவர்களை கொள்ளையடித்து, கடத்தி, மிரட்டி, கொன்று பணத்தை எடுத்துக்கொள்வோம். இது பெரும்பாலான இளைஞர்களை ஈர்க்கவே குழு பெரிதானது.எங்கள் குழுவிலேயே சிலர் மக்களைத் துன்புறுத்தத் தொடங்க அவர்களை நான் தீர்த்துக்கட்டிவிட்டேன். பிறகு சிலர் தனியே பிரிந்து குழு தொடங்கினர். அவர்களையும் ஒழித்துக்கட்டியபிறகு வேறுவழியில்லாமல் என்னையே தலைவனாக்கிவிட்டனர்'.
'நீங்கள் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கிறீர்களா?.