Showing posts with label தமிழ்த்தேசியம். Show all posts
Showing posts with label தமிழ்த்தேசியம். Show all posts

Monday, 3 April 2017

வேட்டொலி இணையம் ஏன்?

கடந்த மாதத்தில் தமிழ்தேசிய இணையமான (எனது) வேட்டொலி வலைத்தளம் பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

திராவிட எதிர்ப்பு,
ஈ.வே.ராமசாமி பற்றிய உண்மைகள்,
ஹிந்திய அரசிடமிருந்து தமிழர்நாடு அடைதலுக்கான தேவைகள், திட்டங்கள் மற்றும் சிந்தனைகள்,
தமிழ் மொழி பழமை,
தமிழர் வரலாறு,
உலகத் தமிழர் பற்றிய விபரங்கள்,
தனித் தமிழர் நாட்டில் வருங்கால திட்டங்கள்,
இழந்த மண் மீட்பு,
தமிழ் தேசிய வரைபடங்கள்,
தமிழுக்காகப் போராடிய தலைவர்கள் வரலாறு,
ஈழ போராட்ட நிகழ்வுகள் மற்றும் சாதனைகள்,
வீரப்பனார் பற்றிய தகவல்கள்,
தமிழ் இசுலாமியர் மற்றும் தமிழ்ப் பார்ப்பனர் பற்றிய தகவல்கள்,
தமிழ்ச் சாதிகளின் வரலாறு மற்றும் இலக்கிய சான்றுகள்,
பழந்தமிழர் வாழ்வியல்,
தமிழர் இன்று சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்,
தமிழக அரசியல்

என முழுக்க தமிழ்தேசியத்திற்கான வலை இது. vaettoli. blogspot

இதில் மிக முக்கியமானவை மண்மீட்பு பதிவுகள் அதற்கென தனிவலை wordpress ல் தொடங்கி அதிலும் இடுகிறேன். vaettoli. wordpress

தமிழ், தமிழர், தமிழர்நாடு தொடர்பான எந்த தகவலானாலும் கூகுளில் தேடும்போது 'வேட்டொலி' என்று சேர்த்துப்போட்டு தேடுங்கள்.

(தமிழ்தேசியம் தவிர்த்து உலக இனங்களின் போராட்டங்கள் பற்றி சில பதிவுகள் உண்டு.
மற்றபடி வேறு தகவல்கள் இது கிடைக்காது)
---------------
முகநூலில் தமிழ்தேசிய பதிவர்கள் பலர் போட்ட பதிவுகள் பிறகு அழிந்துவிடும்.

அதை சேமிக்கும் நோக்கில் மற்றவர்களின் பதிவுகள் (தோராயமாக 2500 பதிவுகள்)
'தமிழர்நாடு தகவல் திரட்டு' (fbtamildata. blogspot) என்ற வலையில் கிடைக்கும்.

வேட்டொலியில் கிடைக்கவில்லை எனில் fbtamildata என்று சேர்த்துப்போட்டு தேடுங்கள்.

நன்றி.

_ ஆதி பேரொளி

Friday, 7 October 2016

நான்.

நான்.

2012, 2013களில் முகநூல் தமிழ்தேசியவாதிகள் எத்தனைபேர் தெரியுமா?

வெறும் 5,6 பேர்.

அவர்களும் கத்துக்குட்டிகள்.

அன்று 30,35 வயது இளைஞர்கள் ம.தி.மு.க வில் இருந்தனர்.
இணையம் முழுக்க அவர்களே நிரம்பிக் கிடந்தனர்.

அன்று அந்த 5,6 தமிழ்தேசியர்கள் இல்லையென்றால் ஈழ ஆதரவை மொத்தமாக வாரிச்சுருட்டி ம.தி.மு.க மூன்றாவது கட்சியாக வளர்ந்திருக்கும்.

இது நடக்காமல் தடுத்தவர் சீமான் என்று பலரும் நினைப்பார்கள்.
அதுதான் இல்லை.

சீமான் அண்ணன் அப்போது இயக்கம்தான் ஆரம்பித்தார்.
அவருக்கு வந்தேறிகளை அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

தமிழ்பேசும் தமிழரல்லார்தான் அனைத்திற்கும் காரணம் என்ற விழிப்புணர்வை முதன்முதலில் முகநூலில் பரப்புரை செய்தவர் "தமிழறிவன் தே" என்பவர் ஆவார்.

அவர்தான் எனக்கு வழிகாட்டி.

பார்ப்பனர் தமிழரே என்பதையும்

இந்தியா நமக்கான நாடு கிடையாது, தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பதையும்

ஈ.வே.ராவின் உண்மையான முகத்தையும்

தமிழ்பேசுவோர் அனைவரும் தமிழர் அல்லர் என்பதையும்

தமிழகத்தை ஆண்ட,ஆள்கிற அத்தனை பேரும் தமிழர் அல்லாதார் என்பதையும்

தமிழ் என்பது பிறப்புவழி இன அடையாளம் ஆதலால் உலகம் முழுவதும் தமிழை மறந்த தமிழினத்தவரும் நம்மினமே என்பதையும்

பார்ப்பனர் தமிழரே என்பதையும்

தமிழ்த்தாய் வாழ்த்தை வந்தேறிகள் தம் வசதிக்கேற்றவாறு திருத்தியுள்ளனர் என்பதையும்

திராவிடம் என்பதே வந்தேறிகளின் கூடாரம் என்பதையும்

எனக்கு காட்டியவர் அவர்தான்.
ஆனால் அவர் சைவப்பற்று கொண்டவராகவும் இசுலாமிய கிறித்துவ தமிழர்களை வெறுப்பவர்களாகவும் இருந்தார்.

2013களில் தமிழறிவன் போய்விட்டார்.

அந்த காலகட்டம் பேசியில் தமிழ் எழுத்துகூட தெரியாத காலகட்டம்.
தமிழ்தேசியவாதிகளுக்கு அரசியல் அறிவோ
புள்ளிவிபரங்களோ வரலாறோ
எதுவுமே தெரியாது.

திராவிடவாதிகள் (அதிலும் குறிப்பாக மதிமுகவினரில் "வால்டேர் வில்லியம்ஸ்" "ஹரி ஹரன்"  போன்றோர் ) தமிழ்தேசியவாதிகளை ஈவு இரக்கமே இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்து விவாதத்தில் தோற்கடிப்பார்கள்.
பதில் அளிக்க தெரியாத தமிழ்தேசியர்கள் ஏடாகூடமாக பதில் சொல்ல அது குடுமிப்பிடி சண்டையில் போய் முடியும்.

அதாவது இன்று திராவிடவாதிகள் எவ்வளவு பரிதாப நிலையில் இருக்கிறார்களோ
அதைவிட மோசமான நிலையில் தமிழ்தேசியவாதிகள் இருந்தோம்.

ஈழத் தமிழர்களுக்கோ வைகோவை எதிர்க்க மனமில்லை.
அன்று மதிமுகவை விட இணையம் அதிகம் பயன்படுத்திவந்தோர் ஈழத்தமிழர்களே.
அவர்கள் சமாதானம் செய்யத்தான் முயற்சித்தார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் 8கோடி தமிழர்கள் 100கோடி இந்தியரின் ஆதரவை பெற்று ஈழம் அமைய வழிசெய்யவேண்டும் என்பதுதான்.
இதற்கு ஏற்றாற்போல "ஸ்ரீனிவாஸ் திவாரி" போன்றவர்கள் இந்தியா ஈழம்பெற்றுத் தரும் என்று வலம்வந்தனர்.
பிறகு விரக்தி அடைந்து ஈழத்தமிழர்கள் 2012 வாக்கில் முகநூலில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஆக அன்று எங்களிடம் தெளிவு இல்லை.
தரவுகள் இல்லை.
ஈழத்தமிழர் ஆதரவு இல்லை.
ஒரு பதிவு போட்டால் நூறு எதிர்பதிவுகளைச் சந்திக்கவேண்டி இருந்தது.
வழிகாட்ட யாருமில்லை.
ஆனாலும் ஒரு வெறி.
நாங்கள் தொடர்ந்து இயங்கினோம்.

பிறகு நாங்கள் 2,3 பேர்தான் இருந்தோம்.
2014ல் அவர்களும் காணாமல் போய் நான் மட்டும்தான் இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறேன்.
(காணாமல் போன தமிழ்தேசியர்களில் "மாணிக்கவாசகம்" அண்ணன் மீண்டும் தற்போது திரும்பியுள்ளார்)

2014க்குப் பிறகுதான் திறன்பேசிகளின் வரவால் பல சராசரி இளைஞர்களுக்கும் முகநூல் மூலமாகப்
படிப்படியாக விழிப்புணர்வு பரவியது.

2014ன் முடிவில் சிங்கள தலைவர்களே வடுக தெலுங்கர்கள்தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை "இசைப்பிரியா தம்பி" என்பவர் ஆராய்ந்து வெளியிட்டார்.

அதன்பிறகுதான் வடுக வந்தேறிகளின் உண்மையான முகம் பலருக்கும் தெரிந்தது.
(ஆனாலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் இன்னமும் திருந்தவில்லை)

திராவிட எதிர்ப்பாளர்கள், தமிழ் மொழிப்பற்றாளர்கள், இந்துத்துவவாதிகள், சாதியவாதிகள் என பலரும் திராவிடத்திற்கு எதிராக முகநூலில் களம் இறங்கினர்.

இன்று முகநூல் முழுவதும் திராவிடம் மண்ணைக் கவ்விக்கொண்டு இருக்கிறது. தமிழ்தேசியம் கொடிகட்டிப் பறக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் அன்று திராவிடத்தோடு இறுதிவரை மல்லுகட்டிய கத்துக்குட்டிகள்தான்.
அந்த ஆரம்பகால போராளிகளில்

தமிழறிவன் தே
மதிமுகிலன் தமிழ்வேங்கை
கிருஷ்ணா தமிழ்டைகர்
அகழ்வான் கணேசன்
சாரதாதேவி சத்தியமூர்த்தி

ஆகியோரே என் நினைவுக்கு வருகின்றனர்.

ஆனாலும் தமிழ்தேசியம் ஒரு பலமான இயக்கமாக, ஒரு வலுவான கட்சியாக இன்னும் வளரவில்லை என்பது கவலையளிக்கிறது.

தமிழ்தேசியம் தனக்கென ஒரு ஊடகம் இல்லாவிட்டாலும் ஒரு சமூக வலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்று தமிழ் இளைஞர்கள் மனதில் வேரூன்றி வருகிறது.
இதற்கு நான் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளேன் என்பதே எனக்கு மனநிறைவாக உள்ளது.

தாய்நிலத்திலிருந்து பலநூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு திறன்பேசியையும் 2ஜி இணையத்தையும் வைத்துக்கொண்டு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.

ஆனாலும் செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.

அன்று 'இந்தியா என் தாய்நாடு' என்று பிதற்றிக்கொண்டு aathi1947 என்று முகநூல் ஆரம்பித்த நான் இன்று எவ்வளவு தெளிந்துவிட்டேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது.

2013லிருந்து பதிவுபோட தொடங்கிய நான் தமிழ்தேசியத்திற்கு தேவையான அத்தனை தகவல்களையும் திட்டங்களையும் பதிவு போட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

அதற்காக முகநூலிலிருந்து போய்விடமாட்டேன்.
தொடர்ந்து இயங்குவேன்.

Monday, 25 January 2016

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை
*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥

இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்குவந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர்(indians) என்று எங்கும் வரவில்லை
இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்றுதான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்

"இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே!

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு(nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே!

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,
எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்றுதான் சொல்கிறது"

Friday, 27 November 2015

தமிழியத்தின் வகைகள்

தமிழியத்தின் வகைகள்:

தமிழியம் மூன்று வகைப்படுகிறது.
அவையாவன,

அ) தமிழ்நாட்டாண்மை அல்லது தமிழ்த் தேசியம்.
ஆ) தனித் தமிழியம்
இ) தீவிரத் தமிழியம்.

முதலில் தமிழ்நாட்டாண்மை என்பது,
 
தமிழரின் தாயக நிலத்தில் பல்வேறு இனங்களை இணைத்து தலைமையை தமிழரிடம் வைத்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டை அமைப்பது ஆகும்.
இது இருவகைப்படும்.
அ) அறவழித் தமிழ்நாட்டாண்மை
ஆ) ஆயுதவழித் தமிழ்நாட்டாண்மை

இரண்டாவது தனித்தமிழியம்,
 
தமிழரின் தாயக நிலத்தில் தமிழரல்லாதோரை அவரவர் தாய்நிலத்திற்கு அனுப்பிவிட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழ்க்குடிகளை தமிழ்த் தாயக நிலத்திற்கு மீள்குடியேற்றி தமிழரே தமிழரை 100% ஆளும், ஆளப்படும் நாட்டை நிறுவுவது.

மூன்றாவது தீவிரத் தமிழியம்,
 
நாடு என்கிற வரையறையில்லாத உலகில் உள்ள அத்தனை மக்களும் தமிழரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவந்து உலகைத் தமிழர் ஆள்வதை வலியுறுத்துவது.

இதில் எது சரி எது தவறு என்பதை காலம் முடிவு செய்யும்.

தனித்தமிழியம் மற்றும் தீவிரத் தமிழியத்திற்கு அறவழி என்பது கிடையாது.

மக்கள் எந்தவொரு கொள்கையிலும் மென்மையில் இருந்து தீவிரத்திற்கு நகர்வார்கள்.

நாம் அறவழித் தமிழ்நாட்டாண்மையிலும் ஆயுதவழித் தமிழ்நாட்டண்மையிலும் தோற்றுவிட்டோம்.

இப்போது அடுத்த கட்டமான தனித்தமிழியத்திற்கு காலம் நம்மை நகர்த்துகிறது.

இதிலும் தோற்றால் தீவிரத்தமிழியத்தைத் தமிழர்கள் கையிலெடுக்கும் நிலை வரலாம்.

அப்போது,
ஒன்று உலகம் என்றுமில்லாத நன்மையை அடையும்
அல்லது என்றுமில்லாத நாசத்தை அடையும்.
.

தமிழ்நாட்டு விடுதலையில் வீரப்பனாரின் இணைவு

வீரப்பன்டா……எங்க வீரப்பன்டா……
்்்்்்்்்்்்்்்்்்்்்்்

தமிழ்நாட்டு விடுதலையில் வீரப்பனாரின் இணைவு:
  
1995,96 களில் சென்னை சிறையில் வீரப்பனார் படையைச் சேர்ந்தவர்களும் தமிழகம்-தமிழீழம் இணைந்த பரந்த தமிழ்நாட்டை மீட்கப் போராடிவரும் தமிழ்நாடு மீட்சிப்படை(TNRT)ஐச் சேர்ந்தவர்களும் இருந்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.

அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்ததும் தத்தமது இடத்திற்குச் சென்று இருபடையினரும் இணைய வழிவகுத்தனர்.

ஏற்கனவே தமிழர்களுக்காகப் பலமுறை ஓங்கிக் குரல்கொடுத்தவரும் தமிழ்த்தேசியத்தின் அழிக்கவியலா அடையாளமுமான வீரப்பனாரைச் சந்திக்க தநாமீப-வின் தளபதி சுப.முத்துக்குமார் (நாம் தமிழர் இயக்கத்தை நிறுவி வேரூன்றவைத்ததில் பெரும்பங்காற்றியவர்) அவருடைய சந்தனக்காட்டுக்குச் சென்றார்.

பரந்துவிரிந்த காடு, எத்தனைப் பெரிய படையும் நுழையமுடியாத அளவுக்கு வீரப்பனாரின் வலிமையான அந்தக் கோட்டையை பார்த்து அசந்துபோனார் முத்துக்குமார்.

முத்துக்குமாரையும் அவரது தநாமீப படையையும் அவர்களுக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பையும் நன்கு அறிந்திருந்த வீரப்பனார் முத்துக்குமாரைப் பார்த்ததும் ஆரத்தழுவி அணைத்துக்கொண்டார்.

18000 சதுர கி.மீ பரப்பளவுள்ள காட்டில் கிட்டத்தட்ட 6000ச.கி.மீ பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரும்,
தலைக்கு 40லட்சம்(1990களில்) அறிவிக்கப்பட்டிருந்தவரும்,
இந்திய ராணுவப்பிரிவையே தோற்கடித்தவரும்,
தமிழக காவல் மற்றும் வனத்துறை,
கன்னட காவல் மற்றும் வனத்துறை,
போதாக்குறைக்கு மத்திய ரிசர்வு படை அத்தனைக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிவருபவருமான வீரப்பனாரைச் சந்தித்ததை பெரும்பேறாக எண்ணினார் சுப.முத்துக்குமார்.

முத்துக்குமாரும் சாதாரணமானவரல்ல.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவந்த தநாமீப-வின் முன்னனித் தளபதி,
கிட்டத்தட்ட அதன் தலைவர் போன்றவர்.
தமிழ்நாட்டின் வரைபடத்தில் மூக்குபோன்ற பகுதிக்கு கீழே இருக்கும் கடற்கரைப்பகுதி(புதுக்கோட்டை மாவட்டம்) வழியாக இலங்கை- இந்திய ராணுவத்தை மீறி புலிகளுக்குத் தேவையான அனைத்தையும் தமிழகத்திலிருந்து கொடுத்து வாங்கும் அளவுக்கு நெருக்கம்.
ஈழத்தின் தேசியத்தலைவராம்,
தமிழ்த்தாயின் தலைமகனாம்,
பிரபாகரனைச் சந்தித்து சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்றவர்.
வீரப்பனாரிடம் புலிகளின் படைவலிமையையும் நவீன ஆயுதங்கள் பற்றியும் தமிழ்மக்களின் விடுதலை பற்றியும் நீண்டநேரம் கலந்துரையாடினார்.

அதோடு நிற்கவில்லை, தமது இயக்கத்தினர் சிலரை வீரப்பனாரிடம் அனுப்பிவைத்தார்.
வீரப்பனாரின் படையினர் சிலரைத் தம்மோடு இணைத்துக்கொள்ளவும் இருந்தார்.
அதோடு நில்லாமல் பெரம்பலூரில் முந்திரிக்காட்டில் இயங்கிவந்த தமிழ்நாடு விடுதலைப் படையினரையும்(TNLA) தொடர்பு கொண்டு வீரப்பனாருடன் இணைய வழிவகுத்தார்.

கியூபா போராட்டத்தில் 'சே'யும்- 'ஃபிடல் காஸ்ட்ரோ'வும் இணைந்தது போன்ற மாற்றங்கள் நிகழவிருந்தன.

ஆனால், தமிழ்மக்களின் தலைவிதி, முத்துக்குமார் காவல்துறையிடம் பிடிபட்டுவிட்டார்.
இருந்தும் அவர்செய்த அரிய செயல்கள் பலனளிக்கவே செய்தன.
அடுத்தடுத்த காவல்நிலையத் தாக்குதல்கள், அரசியல்புள்ளிகளின் கடத்தல்கள் என வீரப்பனாரின் நீண்டகால அமைதிக்குப் பிறகான புலிப்பாய்ச்சல் நிகழ்ந்தது.

அத்தியாவசியக் கொலைகள்

ஆண்டு 2153, நவ07.

அத்தியாவசியக் கொலைகள்:
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
மூலிகை வாசனை வீசும் மனிதர்கள் செய்யும் அத்தியாவசியக் கொலைகள்:-

மரம், செடிகொடிகளின் பச்சை வாசனை தூய்மையான காற்றில் கலந்து வீசும் எங்கு நோக்கினும் பச்சை பசேல் என்ற தோற்றம்.
ஆம்; நான் வந்திறங்கியது 'தமிழ்குடியரசு' என்று பூவுலக சொர்க்கத்தில்.
ஆமாம் சொர்க்கமேதான்.
பரபரப்பான இந்த விமான நிலையம் அடர்த்தியான வனம்போல காட்சியளிக்கிறது என்றால் அப்படித்தானே சொல்லவேண்டும்.
மரங்களை விட இயற்கையானவர் இந்தக் குடியரசின் மக்கள்.
இவர்களை இங்கே வர்ணித்தே ஆகவேண்டும்.
இரண்டடி தூரத்திலேயே இவர்கள் மேல் வீசும் மூலிகை வாசனை உங்களை வரவேற்கும்.
பெரும்பாலும் கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள்.
ஆனால், சிகப்பான மனிதர்களைவிட அழகானவர்களாக இருப்பார்கள்.

பொலிவான முகம், ஈரம் தோய்ந்த வெள்ளையான கண்கள், மினுமினுக்கும் தோல், மிகமிக அடர்த்தியான கருப்பு நிறத்தில் கண்மைபோல கண்களைச்சுற்றிய முடிகள், அதே கரியநிறத்தில் புருவம், அதே அடர்கருப்பில் வயதானாலும் நரைக்காத பளபளப்பான தலைமுடி, புன்னகைத்த உதடுகளுக்குள் பளிச்சிடும் வெள்ளைவெளேரென்ற பற்கள், வயதானாலும் உருக்குலையாத வடிவான உடலமைப்பு, சிறிய குழந்தையிலிருந்து பெரிய மனிதர் வரை மரியாதையாக பேசும் நாகரீகம்.

வெயில் காலத்தில் தளர்வான வெண்ணிற ஆடை, குளிர்காலத்தில் இறுக்கமான கறுப்பு ஆடை, நேர்த்தியாகத் தரமாக அணிவார்கள்.
உடலில் உடையைத் தவிர செருப்பு, இடுப்புக்கச்சை, கைகுட்டை மட்டும் அணிவார்கள் மற்றபடி எதுவும் அணியமாட்டார்கள்.
ஆண்களும் பெண்களும் காதுகுத்தி இருப்பார்கள், சில பெண்கள் இடதுபக்கம் மூக்கு குத்தியிருப்பார்கள் ஆனால் அதில் எதுவும் அணிவதில்லை.
கடவுள் நம்பிக்கை எதுவும் கிடையாது.
ஆனால், சகமனிதர்களை கடவுள் என்று பொருள்படும்படி 'சாமி' 'எல்லே' 'ஆண்டை' என்றே அழைப்பார்கள்.

இயற்கையை மிகவும் நேசிப்பார்கள்.
தமது மொழியின் மீதும் இனத்தின் மீதும் நாட்டின் மீது அழுத்தமான பற்று வைத்திருப்பார்கள்.
இவர்கள் நாட்டைப் பற்றியும் இங்கு கூறவேண்டும்.
இங்கே தனிமனிதருக்கு என்று எதுவும் சொந்தம் கிடையாது.
அத்தனையும் அரசுக்கு சொந்தம்.
அரசு என்பது ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்குப்பதிவு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
அதில் சிறப்பு எதுவும் இல்லை.
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு அதைச்சுற்றிய தோட்டம் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு இருசக்கர வண்டி, ஒரு நாற்சக்கர சொகுசு வண்டி வழங்கப்பட்டிருக்கும் அவையும் மின்சாரத்தில் ஓடும்,
புகைகக்கும் வாகனங்களை அறவே வெறுப்பவர்கள் அதனால் அத்தகைய வாகனங்கள் படையினரிடம் மட்டுமே உண்டு.
வீட்டுக்குத் தேவையான அத்தனையும் சீப்பு முதல் குளிர்சாதனப் பெட்டிவரை அரசாங்கம் கொடுத்திருக்கும்.
எது பழுதடைந்ததோ அதை சரிசெய்து தருவார்கள் அதுமுடியாத நிலையில் பழையதை திருப்பி அளித்துவிட்டு புதிது பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஊருக்கும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு செய்யப்பட்டிருக்கும்.
ஒவ்வொருநாளும் அரசு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று என்ன தேவை என்று நேரடியாக விசாரித்து தேவையானதை குறித்துக் கொண்டு மொத்தமாக வாங்கிவந்து கொடுத்துவிடுவார்கள்.
அத்தனை பேருக்கும் அரசே வேலை கொடுக்கும்.
அதாவது எல்லாவேலைகளுமே அரசுதான் செய்யும்.
நிலத்தை உழுவது, பொருட்களைத் தயாரிப்பது, கடைகள் நடத்துவது என அத்தனையும் அரசே செய்யும்.
வாரத்திற்கு ஐந்துநாட்கள் வேலைஇரண்டுநாட்களில் ஒருநாள் அரசு நடத்தும்கருத்தரங்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடக்கும்அங்கே செல்லவேண்டும்.
அதில் நாட்டின்நிலைமை குடிமக்களின்கடமை பற்றி வகுப்பு எடுக்கப்படும் அதுவும்மூன்றுமணிநேரம் அதற்கும் தேநீர், நொறுக்குத் தீனி,அசைவ உணவு வழங்கிவிடுவார்கள.
மீதி அரைநாள்கலை நிகழ்ச்சிகள், இசை, விளையாட்டு, மனவளக்கலைகள்,போர் பயிற்சி எதிலாவது பங்கு பெறலாம்.

தேவையானதை கடைகளுக்குச்சென்று எடுத்துக்கொண்டு அரசு அளித்துள்ளகுடியுரிமை எண்ணை பதிவு செய்துவிட்டால் தானாகவங்கிக் கணக்கிலிருந்து தொகை கழிக்கப்பட்டுவிடும்.
அதுவும் இத்தனை தொகைவரைதான் நீங்கள் கடைகளில்வாங்கலாம் என்று வரைமுறை உண்டு.
உணவகங்களிலோ வீட்டிலோ தங்களுக்குத் தேவையானதைத்தாங்களே எடுத்துக் கொள்ளவேண்டும், தாம் பயன்படுத்தியபொருளை தாங்களே சுத்தம்செய்துவைக்கவேண்டும்.
துப்புரவாளர் என்று யாரும்எங்கும் கிடையாது.
அரசு நடத்தும்கடைகளிலோ உணவகங்களிலோ, ஆலைகளிலோ,காவல்துறையிலோ, வீட்டில் சிறுதொழிலோ,வேளாண்மையோஎதில் வேலைசெய்தாலும்வேலைச்சுமை என்பது அனைவருக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும்.
கடினமாக உழைக்கவேண்டிய அவசியமில்லை.
வேலைக்குச் செல்பவர்களில் உயர்பதவியில் உடலுழைப்பு இல்லாமல்வேலைசெய்பவர்களுக்கு 8மணிநேரம் வேலை தேவையானசம்பளம்.
அதே உடலால் உழைப்பவர்களுக்கு 6மணிநேரவேலை கொஞ்சம் சம்பளம் கூடக் கிடைக்கும்.
அதுவும்கையில் கிடைக்காது வங்கியில் உங்கள் கணக்கில்சேர்க்கப்படும்.

அதாவது தமிழ்க்குடியரசில் பணம்என்கிற காகிதம் கிடையாது.
ஒரு குழந்தை பிறந்ததுஅதற்கு ஒரு குடியுரிமை எண்ணும் வங்கிக்கணக்கும்ஆரம்பித்து குறிப்பிட்ட தொகை முதலீடு செய்யப்படும்.
அந்தக் குழந்தைக்கு படிப்பு அரசே அளிக்கும்.
அத்தனை பள்ளிகளும் அரசு நடத்துவதால் ஒரே தரத்துடன்இருக்கும்.
தாய்மொழியில்தான் கல்வி.
இணைப்புமொழியாஆங்கிலம் சொல்லிக் கொடுப்பார்கள்.
குழந்தைகள்ஆறுமணிநேரம் பாடம், இரண்டு மணிநேரம்உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக்கலைகள், வாரம் ஒருநாள் விளையாட்டும் கருத்தரங்கும் ஒரு நாள் விடுமுறை;
16வயதில் கட்டாய உடற்பயிற்சிகள், 18வயதில்போர்ப்பயிற்சி மற்றும் விருப்பமான மேற்படிப்பு,21வயதில் அரசுவேலை.
எல்லாம் அரசே செய்யும்.

18வயதுக்கு மேல் திருமணம் செய்யலாம்.
திருமணம்செய்ததும் ஒருவீடு, தோட்டம், தேவையானஅனைத்து பொருட்களும் தரப்படும்.
ஒரு வேளை வேறு ஊருக்கு குடிபெயர்ந்தால் அந்தவீடு மற்றும் பொருட்களை அங்கே விட்டுவிட வேண்டும்;குடியேறும் ஊரில் வேறுஒரு வீடு கிடைக்கும்.
வீடுகளுக்கு தண்ணீர், மின்சாரம், மரக்கன்றுகள் மற்றும்அத்தனை பொருட்களும் அரசு தரும்.
மக்களுக்கு மருத்துமும், காப்பீடும்அரசே வழங்குகிறது.

இத்தனைக்கும் பணம்அரசுக்கு எங்கிருந்து வருகிறது என்றால்,
அரசே நிலத்தை உழுது உணவை உற்பத்தி செய்கிறது,அரசே புகை கக்காத(அல்லது புகையை சுத்திகரித்துவிடும்)ஆலைகள் மூலம்பொருட்களைத் தயாரிக்கிறது, அரசே மக்களிடம்வேலை வாங்குகிறது, அரசே கடைகள் நடத்தி வணிகம்செய்கிறது, உள்நாட்டில் பயன்பட்டது போகமீதியை உற்பத்தி செய்து அந்த வருமானத்தில்தேவையானதை இறக்குமதி செய்கிறது.
இறக்குமதி செய்வது மிகமிகக் குறைவு ஏனெனில்தேவையான அனைத்தும் தாமே தரமாக தயாரித்துக்கொள்கிறது.
உற்பத்தி செய்வது பெரும்பாலும் உணவுப்பொருட்களும் மூலிகைகளுமே அதுவும் மக்கள் தம்வீட்டிலேயே தேவையானவற்றை விளைவித்துக் கொள்வதால்அரசாங்க நிலத்தில் விளைவதில் அரிசி, கோதுமை போகமற்ற வேளாண்பொருட்கள் 60% மிஞ்சிவிடுவதால்அவை இயற்கையான முறையில்பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதுவும் ஏழைநாடுகளுக்கு குறைந்த விலையில்கொடுப்பார்கள்.
தவிர இங்கே பாதுகாக்கப்பட்டவனப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகள் மூலம்செய்யப்பட்ட மருந்துகள் உலகம் முழுதும் வரவேற்பைப்பெற்றுள்ளன.

மின்சாரம் என்பது என்பது நீர்வீழ்ச்சி, சூரிய ஒளி,காற்றாலை போன்ற இயற்கையான முறையில்தயாரிக்கப்படுகிறது.
மக்களுக்கும் சிக்கனமாகபயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நபர்மீதான தனிநபர்கடன் என்பது நாட்டின் சொத்துகள் அனைத்தையும் அரசாங்கஎடுத்துக் கொண்டு பெரிய பணக்காரர்களின் செல்வங்கள்நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் மூலம்சரிசெய்யப்பட்டு இன்று ஒவ்வொரு தனிநபர் மீதும்வங்கிக்கணக்கில் அவர்கள் வாழ்நாள் முழுதும்உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு வைப்பு உள்ளது.
ஆனால் பலருக்கு இது தெரியாது, அதை அவர்கள் பயன்படுத்தவாய்ப்பும் இல்லை.

வெளிநாடு செல்லும் தமிழர்தான் இதை தெரிந்து வைத்துள்ளனர் ஏனெனில்அவர்கள்தான் இதை பயன்படுத்தமுடியும் அப்படியே அவர்கள் பயன்படுத்த தகுந்த காரணம் சொல்லவேண்டும்.
அதற்கேற்ப பணம்அனுப்பப்படும்.
ஆனால், பெரும்பாலும் குடிமக்கள்வெளிநாடு செல்வதில்லை தேவையான அனைத்தும்நாட்டிலேயே இருக்கும்போது அவர்கள் வெளிநாடு செல்லவிரும்புவதும் இல்லை,
அரசும் அதை ஊக்குவிப்பதில்லை.

நூறு வருடம் முன்பு உலகம் முழுவதும் பரவியிருந்ததமிழர்கள்தாய்நிலத்திற்கு அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டனர்.
இப்போதும் உலகில் தமிழர்கள் ஆராய்ச்சியாளராகவும்,மொழியாளர்களாகவும் உள்ளனர்.
அவர்கள்தான்அவ்வப்போது சென்று வருகின்றனர். பலநாடுகளில்விடுதலைப் போரில் வல்லரசுகளுக்கு எதிராகப் போரிடதமிழ்ப்படையில் உள்ள தமிழருக்கு அரசே பணம் அனுப்பிவிடும்.
வெளிநாட்டிலிருந்து வருபவர் அரசிடம் பணம்செலுத்தி அதற்கான எண் பெற்றுக் கொண்டு அதற்குள்செலவு செய்யவேண்டும்.
அரசவேலையாகவெளிநாட்டிலிருந்து வருபவருக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் பணம் ஒதுக்கப்படும்.

மற்றபடி வருடத்திற்கு ஒரு மாதம் அரசே சுற்றுலா செல்லஏற்பாடு செய்கிறது அதாவது குடியரசின்
ஒருமூலையில் இருக்கும் மக்கள் இன்னொரு மூலைக்கு இருக்கும் தமிழன்னைக் கோவிலுக்கு சுற்றுலா செல்வதன் மூலம் மக்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகின்றனர்.
கோவிலில் தமிழர் கட்டடக்கலையும், ஓவியக்கலையும், சிற்பக்கலையும் கண்டுகளிக்கலாம்.
கடவுள் வழிபாடு கிடையாது.
அங்கே மூன்று நாட்கள் வரை தங்கி தமிழரின் ஆடல்,பாடல்,வரலாற்று நாடகங்களைக் கண்டுகளிக்கலாம்.
தமிழருக்கான தனிமதத்துக்கு மாறாத சிறுபான்மை மக்களான கிறித்தஇசுலாமியத் தமிழரும் அந்தக்கோவில்களுக்குச் செல்கின்றனர்.
தமிழர் எந்த மதத்தினரோ எந்த நாட்டில் வாழ்பவரோ அவரகள்ஒருதாய்ப்பிள்ளைகள் என்றே கருதிக்கொள்கின்றனர்.

தமிழில்பேசும்போது தவறாக ஒருவார்த்தையை தவறாக உச்சரித்தால்சட்டென்று பேச்சை நிறுத்தி தவறுக்கு வருந்துவார்கள்.
வேறு ஒரு மொழிச் சொல்லை தவறியும் தமிழுடன் கலக்கமாட்டார்கள்.
மற்ற மொழியினர் தமிழ்கற்பதை இவர்கள்விரும்புவதில்லை தத்தமது மொழியை கற்பதை வலியுறுத்துவர்.
வெளியாட்கள் தமிழ் தெரிந்தவர் என்றாலும் ஆங்கிலத்தில்பேசுவார்கள்.
தமிழ்தெரியாதத் தமிழர் தமிழ்கற்பதை ஊக்குவிக்கின்றனர்.
தமிழில் நவீன இலக்கியம்முதல் தொழில்நுட்பம் வரை அத்தனையும் உருவாக்கியுள்ளனர்.
வருடத்திற்கு ஒரு சுற்றுலா, பொங்கல் என்ற பண்டிகை தவிரஆன்மீகம் என்ற எதுவும் இல்லை.
கடவுள் இல்லையென்றுநம்புகிறார்கள்.
நடப்பவை அத்தனைக்கும்மனிதரே பொறுப்பு என்பது கொள்கை.
இவர்கள்மனிதனுக்கு மேலாக மதிப்பது இயற்கையை.
சாலைகளின்குறுக்கே சீரான இடைவெளிகளில் மேம்பாலம் அமைத்து செடிகொடிகளை நட்டு விலங்குகள்இடையூறின்றி ஒருபகுதியிலிருந்து மறுபகுதி கடக்கும் வகையில் அமைத்திருப்பார்கள்.

வீட்டின் நாலாபுறமும் மரம்நட்டுவளர்ப்பார்கள்.
வீட்டை ஒட்டி நச்சுகொண்ட உயிர்களை விரட்டும் செடிவகைகள் நடப்பட்டு இருக்கும்.
ஒரு வெளி, ஒரு வரவேற்பறை, ஒரு கூடம், இரு படுக்கையறைகள், கழிவறை, குளியலறை கொண்ட 5பேர்வசதியாக வாழும் வீடு ஒவ்வொரு குடும்பத்துக்கும்அளிக்கப்படுகிறது.
இதே போல தரைக்குக் கீழேயும் இருக்கும்.
குளிர்காலங்களிலும் போர்க்காலங்களிலும் தங்கிக்கொள்வர்.

தோட்டத்தில் பெரியமரங்களும் முன்வெளியில் சிறயவகை மரங்களும் மொட்டைமாடியில் சிறுசெடிகளும் நடப்பட்டிருக்கும்.
வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், மூலிகைகள், பூக்கள் போன்றவை வீட்டிலேயே விளைவிக்கப்படும்.
வீட்டிலிரக்கும் பெண்கள் இதைப் பராமரிக்கின்றனர்.
ஆண்கள் தோட்டவேலைகளைச் செய்கின்றனர், குழந்தைகள் சிறுசிறு உதவிகள்செய்கிறார்கள்
பொதுவாக வீட்டிற்குள் யாரும்இருப்பதில்லை தோட்டத்தில் புல்வெளியில்தான் அமர்ந்திருப்பர். தூங்குவதும் அங்கேதான்.
மனிதர் மட்டுமல்லாது தாவரங்களும்கேட்கும் வகையில் எல்லா இடங்களிலும் இனிமையான மெல்லிய தமிழிசை ஒலித்தபடி இருக்கும்.
வீட்டிலும் உடல்மேலும்நச்சுஉயிரிகள் அண்டாத மூலிகை தைலங்களை தடவியிருப்பர்.
இது அவர்கள் உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
வியர்த்தால்மூலிகைவாசனைதான் வரும்.
குளிக்க, பல்துலக்க இயற்கையான பொருட்களையே பயன்படுத்துவர்.
நச்சுஉயிரிகள் கடித்தாலும் அவற்றைக் கொல்லமாட்டார்கஒவ்வொரு ஆண்டும் விலங்குகளைக் கணக்கெடுத்து அதற்குத்தக்கபடி உணவுக்காகக் கொல்வதை வரம்புடன் அனுமதிப்பர்.

தேவையான மூலிகை மருந்துகள் எப்போதும் வைத்திருப்பர்.
பெரும்பாலும் மருத்துவரிடம் செல்லும் அவசியமே இல்லை.
இங்கே வாழ்வோரின் சராசரி ஆயுள் உலகில் மற்றவரை விட அதிகம்.
முடிநரைக்காத வடிவான தேறிய உடற்கட்டு கொண்டதொண்ணூறு வயதுக்கு மேற்பட்டோர் இங்கே எல்லாத்தெருக்களிலும் உள்ளனர்.
வேதியியல் கலந்த மருந்தையோ, பானங்களையோ,உணவையோ இவர்கள் உட்கொள்வதில்லை.

எந்த தீய பழக்கவழக்கங்களும் போதைப் பொருட்களும் தமிழ்க்குடியரசில் இல்லை.
இயற்கையான பழச்சாறு, இளநீர், பதநீர்,கரும்புச்சாறு போன்றவை மட்டுமே.
சாரயம் குடிகாரர்களைத் திருத்தும் மையங்களில் குடிகாரர் திருந்தும்வரை பயன்படுத்தப்படுகிறது.
உளவியல் சிகிச்சை மூலம் மெல்ல மெல்ல குடிப்பழக்கம்குறைக்கப்பட்டு ஒரு மாதத்தில்குடிவெறியை மனதிலிருந்து அகற்றிவிடுவார்கள்.

இங்கே உளவியல்தான் எல்லாமே.
குற்றம் புரிபவர்களை பிடித்து அவரது நினைவுகளில் உள்ள கசப்பான கடந்தகால நிகழ்ச்சிகளை அழித்துவிடுவார்கள்.
அல்லது தண்டனை அளிக்காமலேயே தண்டனை அளித்ததாகபயத்தை மனதில் உருவாக்கிவிடுவார்கள்.
அப்படியும் திருந்தாதவர்களை சகலவசதிகளுடன் சிறையில்வைத்துவிடுவார்கள்.
அவர்கள் உள்ளேயே வேலை,பொழுதுபொக்கு, படிப்பு,விளையாட்டு உண்டு.
மாதம் ஒருமுறை காவலுடன் குடும்பத்தினரைப் பார்க்க செல்லலாம்.
துன்புறுத்தும் தண்டனைகள் கிடையாது.
குற்றங்கள் மிகவும் குறைவு.
எல்லாருக்கும் எல்லாம்கிடைத்தபிறகு குற்றங்கள் நிகழ்வது சாத்தியமில்லை.
குடும்பத்தில் ஏற்படும் பூசல்கள்,அண்டை மனிதருடனானதகராறுஎன சகலமும் உளவியல் ரீதியான அறிவுறுத்தல்மூலமே தீர்க்கப்படுகின்றன.

இங்கே கணிகைக்கூடங்களும் உள்ளன.
அதில் தமது உடலை பாலியல்தேவைக்காக மற்றவர் பயன்படுத்த அனுமதிக்கும் ஆண்களும் பெண்களும்இருப்பார்கள்.
துணை உள்ளவர்கள் அங்கே போகத்தடை.
துணையை இழந்தவர்களை அல்லது துணை நோய்வாய்ப்பட்டவர்களை மனரீதியாக ஆராய்ந்து உடல்நிலைக்கு ஏற்ப மாதத்திற்கு இத்தனைமுறை என்ற வரம்பு விதித்து தக்க பாதுகாப்புடன் அனுமதிப்பர்.
இந்தப் பாலியியல் தொழில் செய்பவர்களுக்கு அரசே சம்பளம் கொடுக்கிறது.
இவர்கள் சமூகத்தால் சேவையாளராகமதிக்கப்படுகின்றனர்.

கருத்து சுதந்திரம், போராடும் உரிமை, சட்டரீதியானபாதுகாப்பு அனைவருக்கும் உள்ளது.
நடுஇரவில் தனியே ஒரு இளம்பெண் எங்கும் சென்றுவரும் அளவுக்கு காவலும்பாதுகாப்பும் பேணப்படுகின்றன.

இவர்களின் படையைப் பற்றி கூறவேண்டுமே!
உடல் ஊட்டமாகமக்கள், 18வயதுக்கு மேற்பட்ட அனைவரும்போர்பயிற்சி பெற்றவர்கள்,
வீட்டுக்கு ஒரு நவீன ஆயுதம். படைவீரர்களோ இதற்கு ஒரு படிமேல்.
நான் போனமுறை வந்தபோது,'எதிரிப்படைகள் நெய்யாற்றைக் கடந்துவிட்டார்கள் புறப்படுங்கள்'என்று ஒலிபெருக்கியில் அறிவித்ததும் நான் இருந்த ஊரில் வீட்டுக்கு குறைந்தது ஒருவர்ஆயுதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்.
நானும்சென்றேன்.
அங்கேயிருந்து 40கிமீ தூரத்தில் கொடூரமான போர் நடந்தது எனக்குத் தெரியாத அளவுக்கு அமைதியாக இருந்தது நான் இருந்த பகுதி.
நான் செல்லும்போது வழியில் நின்ற மக்கள் பதற்றமோ அச்சமோ சிறிதும் இல்லாமல் போர்நடப்பதையும்திரும்பிச் செல்லும்படியும் என்னைப் பார்த்து புன்னகையுடன் எச்சரித்தனர்.
பலர் பூத்தொட்டிகளைக்கூட பத்திரமாக சுரங்கத்திற்கு எடுத்துச்சென்றதைப் பார்த்தேன்.
இரண்டு மணிநேரத்தில் நான் அந்தஆற்றங்கரைக்குப் போய்விடலாம்.
வழிநெடுக ஆயுதங்களைச்சுமந்தமக்கள் தம் தாய்மண்ணுக்கு ஆபத்து என்றதும் காப்பாற்றவிரைந்துகொண்டிருந்தனர்.
அப்பகுதியை நெருங்கவும் பல்குழல் பீரங்கிகளால் எதிர்தரப்பிலிருந்து தாக்குதல்நடந்தபடி இருந்தது.
குண்டுதாக்குதலால் விழுந்தமரங்களை அம்மக்கள் கவலையுடன் பார்த்தனர்.
ஒரு இடத்தில்நான்குமரங்கள் சாய்ந்துவிட்டன.
அதைச் சுற்றி சோகம் கப்பிய முகத்துடன் நின்றிருந்தனர்.
தமிழ்மக்கள் பெரும்பாலும்அழுவதில்லை.
நான்போய்ச்சேருமுன்னே அந்தப்பகுதி மீட்கப்பட்டிருந்தது.
பார்க்கவேண்டுமே! இந்த அமைதியான மக்களுக்குள்இப்படி ஒரு வீரமா என்று வாயடைத்துப்போனேன்.
ஒரே பிணக்குவியல்தமிழர்படையைச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைவு,எங்கு நோக்கினாலும் எதிரிப்படையினரின் சடலங்கள்.
தமிழ்ப்படை தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது.
எனக்கு அதற்கு மேல் செல்ல இசைவு மறுக்கப்பட்டது.
காலில்காயம்பட்டதால் மருத்துவ வண்டி ஒன்றில் ஏறினேன்.
அதில் வயிற்றிலும் இடது விலாவிலும் பலத்த காயம்பட்ட ஒருபெண்ணை ஏற்றினர்.
ஆனால், அவள்வலியின்றி நிதானமாக என்னுடன் பேசியபடி வந்தாள்.
முன்னனிப் படைப்பிரிவைச் சேர்ந்தவள்.
அந்தப் படையில் இருப்பவர்கள் ஒரு வாரம் வரை கூட தூங்காமல், சாப்பிடாமல், தண்ணீர்கூட அருந்தாமல் தொடர்ந்து இயங்கும் அளவுக்கு தயார்செய்யப்பட்டவர்கள்.
காயம் சீக்கிரம் ஆற, வலி உணர்வு குறைய தேவையான தைலங்கள் குருதியிலேயே கலந்துவிடப்பட்டுள்ளன.
தமிழ்ப் படையினர் நினைத்த மாத்திரத்தில் உயிர்விட ஒருநிமிடம் மூச்சை நிறுத்தினால் போதும் குருதியில் பரவி உயிரை மாய்க்கும் நஞ்சும் இவர்கள்உடலில் வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் குணமாக ஒருவாரம் போதும் என்று கூறினார்கள்.
அத்தனை வீரியமான மூலிகை மருத்துவம் தமிழ்ப்புத்தகங்களில் இருந்து எடுத்து நவீன வழியில்ஆராய்ந்து மேம்படுத்தியுள்ளனர்.
இவர்களின் நீர்மேலாண்மை, கல்வி, உடல் மற்றும் மனவளக்கலைகள் அனைத்தும் பண்டைய தமிழ்இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
போர்த்தந்திரம், கப்பல் கட்டுதல், கட்டிடக் கலை,இல்லறவியல், உளவியல் என அனைத்துமே நவீன அறிவியலில் இருந்து பெறாமல் பழம்பெரும் நூல்களில் இருந்தே எடுக்கின்றனர்.
நான்திரும்பி வந்தபோது பார்த்தேன்.
போர்ப்பகுதியை நெருங்கியஊர்க்காரர்கள்தமது பிள்ளைகளை அப்படியே விட்டுவிட்டு போர்முனைக்கு சென்றுவிட அதற்கு அடுத்த ஊரில் உள்ள மக்கள் வந்து அந்தப்பிள்ளைகளை போர்நடக்கும் பகுதியிலிருந்து சற்று தள்ளிதமது வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
போர் ஓய்ந்ததும் திருப்பி கொண்டு வந்து விடுகின்றனர்.
ஒருவேளை பெற்றோர் வீரச்சாவு அடைந்துவிட்டால் பிள்ளைகளைதம்முடனேயே வைத்துக்கொள்ளவும் தயாராகஇருக்கின்றனர்.
எதிரிப்படையினர் கொல்லப்பட்ட வீரர்களைகுறைத்துக்காட்ட தமது வீரர்களின் சடலங்களை வாங்கமறுத்துவிட்டனர்.
அந்த எதிரிநாட்டு வீரர்களை அக்கறையுடன் அடையாளம் கண்டறிந்து விபரங்களை வெளியிட்டு அவர்கள்உடலங்களை சரியான முறையில் எரியூட்டினர்.
நான் போர்ப்பகுதிக்கு மீண்டும் சென்றபோது ஒரு தமிழ்ப்படைவீரர்எதிரிப்படையினர் உடலங்களில் இருந்த அரைகுறையானமுகவரிகளுக்கு இறந்தவரின் படம் மற்றும் அங்கஅடையாளகுறிப்பிட்டு இந்த வீரரை இந்த முறையில் இவ்வாறு கொன்றோம்அதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு மன்னிப்பும் கோருவதாக எழுதி அனுப்பியபடி இருந்தார்.
என்னிடம் பணம் என்கிறதாள் இருந்திருந்தால் அதையும்கூட இறந்தவர்குடும்பத்திற்கு அனுப்பியிருப்பேன் என்றார் அவர்.

இந்த மக்களை ஏன் கொல்லநினைக்கிறார்கள்?
உலகை ஆண்டுவரும் பெருமுதலாளிகள் அனைவரும் சமமாக வாழவைக்கும் இந்த நாட்டின் கோட்பாட்டை ஏற்கமாட்டார்கள்தான்.
ஆனால், பல்வேறு ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காகத் தோள்கொடுத்துப் போராடும் இந்தக் குடியரசுநாடு ஒருநாள் வென்றே தீரும்.