Friday 27 November 2015

தமிழ்நாட்டு விடுதலையில் வீரப்பனாரின் இணைவு

வீரப்பன்டா……எங்க வீரப்பன்டா……
்்்்்்்்்்்்்்்்்்்்்்்

தமிழ்நாட்டு விடுதலையில் வீரப்பனாரின் இணைவு:
  
1995,96 களில் சென்னை சிறையில் வீரப்பனார் படையைச் சேர்ந்தவர்களும் தமிழகம்-தமிழீழம் இணைந்த பரந்த தமிழ்நாட்டை மீட்கப் போராடிவரும் தமிழ்நாடு மீட்சிப்படை(TNRT)ஐச் சேர்ந்தவர்களும் இருந்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.

அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்ததும் தத்தமது இடத்திற்குச் சென்று இருபடையினரும் இணைய வழிவகுத்தனர்.

ஏற்கனவே தமிழர்களுக்காகப் பலமுறை ஓங்கிக் குரல்கொடுத்தவரும் தமிழ்த்தேசியத்தின் அழிக்கவியலா அடையாளமுமான வீரப்பனாரைச் சந்திக்க தநாமீப-வின் தளபதி சுப.முத்துக்குமார் (நாம் தமிழர் இயக்கத்தை நிறுவி வேரூன்றவைத்ததில் பெரும்பங்காற்றியவர்) அவருடைய சந்தனக்காட்டுக்குச் சென்றார்.

பரந்துவிரிந்த காடு, எத்தனைப் பெரிய படையும் நுழையமுடியாத அளவுக்கு வீரப்பனாரின் வலிமையான அந்தக் கோட்டையை பார்த்து அசந்துபோனார் முத்துக்குமார்.

முத்துக்குமாரையும் அவரது தநாமீப படையையும் அவர்களுக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பையும் நன்கு அறிந்திருந்த வீரப்பனார் முத்துக்குமாரைப் பார்த்ததும் ஆரத்தழுவி அணைத்துக்கொண்டார்.

18000 சதுர கி.மீ பரப்பளவுள்ள காட்டில் கிட்டத்தட்ட 6000ச.கி.மீ பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரும்,
தலைக்கு 40லட்சம்(1990களில்) அறிவிக்கப்பட்டிருந்தவரும்,
இந்திய ராணுவப்பிரிவையே தோற்கடித்தவரும்,
தமிழக காவல் மற்றும் வனத்துறை,
கன்னட காவல் மற்றும் வனத்துறை,
போதாக்குறைக்கு மத்திய ரிசர்வு படை அத்தனைக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிவருபவருமான வீரப்பனாரைச் சந்தித்ததை பெரும்பேறாக எண்ணினார் சுப.முத்துக்குமார்.

முத்துக்குமாரும் சாதாரணமானவரல்ல.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவந்த தநாமீப-வின் முன்னனித் தளபதி,
கிட்டத்தட்ட அதன் தலைவர் போன்றவர்.
தமிழ்நாட்டின் வரைபடத்தில் மூக்குபோன்ற பகுதிக்கு கீழே இருக்கும் கடற்கரைப்பகுதி(புதுக்கோட்டை மாவட்டம்) வழியாக இலங்கை- இந்திய ராணுவத்தை மீறி புலிகளுக்குத் தேவையான அனைத்தையும் தமிழகத்திலிருந்து கொடுத்து வாங்கும் அளவுக்கு நெருக்கம்.
ஈழத்தின் தேசியத்தலைவராம்,
தமிழ்த்தாயின் தலைமகனாம்,
பிரபாகரனைச் சந்தித்து சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்றவர்.
வீரப்பனாரிடம் புலிகளின் படைவலிமையையும் நவீன ஆயுதங்கள் பற்றியும் தமிழ்மக்களின் விடுதலை பற்றியும் நீண்டநேரம் கலந்துரையாடினார்.

அதோடு நிற்கவில்லை, தமது இயக்கத்தினர் சிலரை வீரப்பனாரிடம் அனுப்பிவைத்தார்.
வீரப்பனாரின் படையினர் சிலரைத் தம்மோடு இணைத்துக்கொள்ளவும் இருந்தார்.
அதோடு நில்லாமல் பெரம்பலூரில் முந்திரிக்காட்டில் இயங்கிவந்த தமிழ்நாடு விடுதலைப் படையினரையும்(TNLA) தொடர்பு கொண்டு வீரப்பனாருடன் இணைய வழிவகுத்தார்.

கியூபா போராட்டத்தில் 'சே'யும்- 'ஃபிடல் காஸ்ட்ரோ'வும் இணைந்தது போன்ற மாற்றங்கள் நிகழவிருந்தன.

ஆனால், தமிழ்மக்களின் தலைவிதி, முத்துக்குமார் காவல்துறையிடம் பிடிபட்டுவிட்டார்.
இருந்தும் அவர்செய்த அரிய செயல்கள் பலனளிக்கவே செய்தன.
அடுத்தடுத்த காவல்நிலையத் தாக்குதல்கள், அரசியல்புள்ளிகளின் கடத்தல்கள் என வீரப்பனாரின் நீண்டகால அமைதிக்குப் பிறகான புலிப்பாய்ச்சல் நிகழ்ந்தது.

No comments:

Post a Comment