Sunday 29 November 2015

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?

))))))))))))))))))))))))))))))))))))))))))))

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத(ஐய)ர் தன்வரலாறு (சுயசரிதை)நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்னும் தமிழ் ஆசிரியரிடம் பாடம் கற்கச் சேர்ந்தபோது,
அவர் பெயரை ஆசிரியர் வினவ
"உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன்"
என்று பதிலளித்தாராம்.

உடனே அந்த ஆசிரியர் "பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருப்பதற்குச் சான்று” என்றாராம்.

‘வேங்கடம் அதாவது திருப்பதியில் இருப்பது முருகனே' என்ற கருத்து பலகாலமாக தமிழர்கள் மனதில் வேரூன்றி நின்றது புலனாகிறது அல்லவா?

முருகன் முகத்தை மறைக்குமாறு நாமத்தைப் போட்டு 'ஏழுகுண்டலவாடு' என்று ஆக்கி ஏமாற்றியதுதான்
இன்றும் ஏமாற்றுவதை "நாமம் போட்டுவிட்டான்" என்று சொல்லுவதற்கு காரணமாக உள்ளது.

அதாவது ஏமாற்றப்பட்டதின் உச்சகட்டம் தமிழரைப் பொறுத்தவரை அதுதான்.

No comments:

Post a Comment