Showing posts with label உ.வே.சா. Show all posts
Showing posts with label உ.வே.சா. Show all posts

Friday, 28 April 2017

வெறும் இராமசாமி ஈ.வே.ரா - பெருஞ்சித்திரனார் கட்டுரை

வெறும் இராமசாமி ஈ.வே.ரா
- பெருஞ்சித்திரனார் கட்டுரை

ஈ.வே.ரா 1965 மொழிப்போரில் இருந்து தொடர்ந்து வெளியிட்டு வந்த தமிழ் எதிர்ப்பு கருத்துகளைக் கண்டு சினமடைந்த பெருஞ்சித்திரனார் பதிலடியாக எழுதிய கட்டுரரையின் முக்கிய வரிகள் கீழே,

"கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று 'விடுதலை'யில்  ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம்.

அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றியுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.

அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி,
அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துள்ளதாகத் தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும்,
அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம்.

இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ ,
அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.

ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம்.

அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை.
தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான்.

பக்தவத்சலம் ஆரிய அடிமை.
பெரியார் திராவிட அடிமை.

இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ,
அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்.

இவர் பற்றி “திரு.வி.க.” அவர்கள் கூறியதாக ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
ஒருகால் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் (நாயக்கர்) , திரு.வி.க., ஈ.வே.ரா. மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம்.

அக்கால் திரு.வி.க. இவரிடம்
“ஏன், ஐயா ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று கூறுகின்றீர்களே!
அதை விட்டுத் ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்று கூறினால் நாங்களும் உங்களோடு இணைந்து கொள்ளுவோமே”
என்று கூறினாராம்.
அப்பொழுது பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களும் திரு.வி.க. கருத்தே சரி என்று கூறினாராம்.
சிறிதுநேரம் கழித்துத் திரு.வி.க. எழுந்து போய் மீண்டும் வந்தாராம்.
அவர் வருவதற்குள் ஈ.வே.ரா., பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களிடம்,
“ஏன் ஐயா, நீங்களும் அவரோடு சேர்ந்து கொண்டு 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கூப்பாடு போடச் சொல்கிறீர்களே,
அப்படியே தமிழ்நாடு கிடைத்தால் அதில் உங்களுக்கும் எனக்கும் எப்படி ஐயா இடமிருக்கும்?
முதலில் நம்மையன்றோ தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் ஓடச் சொல்லுவார்கள்.
இது தெரியாமல் நீங்களும் பேசுகின்றீர்களே”
என்று கூறினாராம்.

பா.வே.மாணிக்கம் அவர்கள் உண்மையான தமிழ்த் தொண்டாரனதால் அதைப்பற்றி ஒன்றும் கருத்துக் கூறவில்லையாம்.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரியாரின் உட்கோள் எவ்வாறு இருந்தது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
இதனை இங்கு ஏன் வெளிப்படுத்தினோம் எனில்,
பெரியார்க்குத் தமிழ் பற்றிய எண்ணமும் எந்த அளவில் இருந்தது, இருக்கின்றது என்பதைப் புலப்படுத்தவே ஆகும்.

ஆனால் திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையை இப்பொழுது இவரும் வற்புறுத்துவதில்லை.
தமிழ் நாடு பிரியவேண்டும் என்பதுதான் இப்பொழுது இவர் கொள்கையாக இருக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினராவது திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
ஆனால் இவரோ தம் திராவிட நாட்டுக் கொள்கையை மக்கள் உணராதவாறு சிறிது சிறிதாகப் பேச்சிலும் எழுத்திலும் கைநழுவவிட்டதுடன் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கொள்கையைச் சிறிதுசிறிதாக கைக்கொண்டும் விட்டார்.
இவர்தம் நாளிதழான “விடுதலை”யில் முன்பெல்லாம் தலைமுகத்துப் பொறித்து வந்த “திராவிட நாடு திராவிடர்க்கே” என்ற வேண்டுரை இப்பொழுது எடுபட்டுப் போய்விட்டது.

இவரைப் பின்பற்றும் அன்பர்களும் காலத்திற்குக் காலம் மாறுபட்டவர்கள்.
ஆகையால், அதுபற்றி ஒருவரும் கவலைப்பட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

இவர் அரசியல் வீழ்ச்சி இப்படியாக முடிந்துவிட்டாலும் குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றி கண்டுள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இத்துறையில் இவர் கண்ட வெற்றியே தமிழ்த் துறையிலும் இவரைப் இப்படிப் பேசச் செய்திருக்கிறது. //

// பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார்.
இவரோ “பண உதவி ஏதும் செய்யமுடியாது;
வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்;
நான் விற்றுத் தருகின்றேன்.”
என்று கூறினாராம்.
பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம்.

பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.

பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசித் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம்.
அவர்களை நாமும் பாராட்டுவதில்லை .
அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான்.

ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?

உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ?

ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்?

உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால்,
இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்கவேண்டும்? //

//தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism) தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை.//

// தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் ,
சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும்,
புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் ,
மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் ,
அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் ,
திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும்,
திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.

// இவர் அரசியல்காரர்;
அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ ,
வரலாற்றுப் பேராசிரியராகவோ,
மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட முடியாது.
அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.//

// மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.

இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார்.//

// ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்;
பகுத்தறிவு வழிகாட்டி;
அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். "

_ பாவலேறு பெருஞ்சித்தரனார்
தென்மொழி ஏடு,
1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்,
தலைப்பு “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி”.

நன்றி: tamilthesiyan.wordpress

சிலர் பெருஞ்சித்திரனார் எழுதிய தொண்டு செய்து பழுத்த பழம்' என்ற பாடலை வைத்துக்கொண்டு ஏதோ அவருக்கு ஈ.வே.ராதான் வழிகாட்டி என்பது போல எழுதுகிறார்கள்.

ஈ.வே.ராவின் சாயம் வெளுத்த பிறகு பாவலேறு, பாரதிதாசன், பாவாணர் ஆகியோர் பிற்காலத்தில் அவருக்கு எதிராக எழுதியதை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள்.

அது இனி நடக்காது.

Sunday, 29 November 2015

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?

))))))))))))))))))))))))))))))))))))))))))))

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத(ஐய)ர் தன்வரலாறு (சுயசரிதை)நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்னும் தமிழ் ஆசிரியரிடம் பாடம் கற்கச் சேர்ந்தபோது,
அவர் பெயரை ஆசிரியர் வினவ
"உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன்"
என்று பதிலளித்தாராம்.

உடனே அந்த ஆசிரியர் "பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருப்பதற்குச் சான்று” என்றாராம்.

‘வேங்கடம் அதாவது திருப்பதியில் இருப்பது முருகனே' என்ற கருத்து பலகாலமாக தமிழர்கள் மனதில் வேரூன்றி நின்றது புலனாகிறது அல்லவா?

முருகன் முகத்தை மறைக்குமாறு நாமத்தைப் போட்டு 'ஏழுகுண்டலவாடு' என்று ஆக்கி ஏமாற்றியதுதான்
இன்றும் ஏமாற்றுவதை "நாமம் போட்டுவிட்டான்" என்று சொல்லுவதற்கு காரணமாக உள்ளது.

அதாவது ஏமாற்றப்பட்டதின் உச்சகட்டம் தமிழரைப் பொறுத்தவரை அதுதான்.

Thursday, 16 October 2014

பார்ப்பனத் தமிழ்த் தாத்தா

பார்ப்பனத் தமிழ்த் தாத்தா

©©©©©©©©©©©©©©

இன்று நாம் கொண்டாடும் புறநானூறு,
சிலப்பதிகாரம். மணிமேகலை போன்ற
காப்பியங்களை மக்கிந ஓலைச்சுவடிகளிலி
ருந்து மீட்டுத் தந்தவர்.
தமிழ் இன்று செம்மொழி என்றால் அது இந்தத்
தனிமனிதரின் கடுமையான உழைப்பே காரணம்.
அம்மாமனிதர் அழியவிருந்த
ஓலைச்சுவடிகளை அலைந்து திரிந்து தொகுத்து அச்சிட்டு வெளியிட்ட
புத்தகங்கள்:-
1 -அழகர் கிள்ளை விடு தூது 1938
2 -ஆற்றூர்ப் புராணம் 1935
3 -இயற்பகை நாயனார் சரித்திரக்
கீர்த்தனை 1936
4 -உதயண குமார காவியம் 1935
5 -உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
6 -ஐங்குறு நூறு 1903
7 -கச்சி ஆனந்தருத்திரேசர்
வண்டு விடுதூது 1888
8 -கடம்பர் கோயிலுலா 1932
9 -கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
10- கலைசைக் கோவை 1935
11 -களக்காட்டு சத்தியவாகீசர்
இரட்டை மணிமாலை 1932
12 -கனம் கிருணயைர் 1936
13 -குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்
திரட்டு 1939
14 -குறுந்தொகை 1937
15 -கோபால கிருஷ்ண பாரதியார் 1936
16 -சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
17 -சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
18 -சங்கரலிங்க உலா 1933
19 -சிராமலைக் கோவை 1937
20 -சிலப்பதிகாரம் 1892
21 -சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
1932
22 -சிவசிவ வெண்பா 1938
23 -சீகாழிக் கோவை 1903
24 -சீவக சிந்தாமணி 1887
25 -சூரைமாநகர்ப் புராணம் 1904
26 -செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
27 -தக்கயாகப் பரணி 1930
28 -தண்டபாணி விருத்தம் 1891
29 -தணிகாசல புராணம் 1939
30 -தமிழ்நெறி விளக்கம் 1937
31 -தமிழ்விடு தூது 1930
32 -தனியூர்ப் புராணம் 1907
33 -திரு இலஞ்சி முருகன் உலா 1935
34 -திருக்கழுக்குன்றச்
சிலேடை வெண்பா 1933
35 -திருக்கழுக்குன்றத்துலா 1938
36 -திருக்காளத்திநாதர் இட்டகாமிய
மாலை 1938
37 -திருக்காளத்தி நாதருலா 1904
38 -திருக்காளத்திப் புராணம் 1912
39 -திருக்குடந்தைப் புராணம் 1883
40 -திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
41 -திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
42 -திருநீலகண்டனார் சரித்திரம் 1936
43 -திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
1908
44 -திருப்பூவண நாதருலா 1904
45 -திருப்பெருந்துறைப் புராணம் 1892
46 -திருமயிலைத் திரிபந்தாதி 1888
47 -திருமயிலை யமக அந்தாதி 1936
48 -திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
49 -திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
50 -திருவாரூர்க் கோவை 1937
51 -திருவாரூர்த் தியாகராச லீலை 1905
52 -திருவாரூருலா 1905
53 -திருவாலவாயுடையார் திருவிளையாடற்
புராணம் 1906
54 -திருவாவடுதுறைக் கோவை 1903
55 -தேவையுலா 1907
56 -நல்லுரைக் கோவை பகுதி 1 1937
57 -நல்லுரைக் கோவை பகுதி 2 1937
58 -நல்லுரைக் கோவை பகுதி 3 1938
59 -நல்லுரைக் கோவை பகுதி 4 1939
60 -நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
61 -நன்னூல் மயிலை நாதருரை 1925
62 -நான் கண்டதும் கேட்டதும் 1936
63 -நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
64 -நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
65 -நீலி இரட்டை மணிமாலை 1874
66 -பத்துப் பாட்டு மூலம் 1931
67 -பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
68 -பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
69 -பதிற்றுப் பத்து 1904
70 -பரிபாடல் 1918
71 -பழமலைக் கோவை 1935
72 -பழனி இரட்டைமணி மாலை 1935
73 -பழனி பிள்ளைத் தமிழ் 1932
74 -பாசவதைப் பரணி 1933
75 -புகையிலை விடு தூது 1939
76 -புத்த சரித்திரம், பெளத்த தருமம்,
பெளத்த
சங்கம் 1898
77 -புதியதும் பழையதும் 1936
78 -புறநானூறு 1894
79 -புறநானூறு மூலம் 1936
80 -புறப்பொருள் வெண்பா மாலை 1895
81 -பெருங்கதை 1924
82 -பெருங்கதை மூலம் 1936
83 -மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
84 -மகாவைத்தியநாதையைர் 1936
85 -மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
86 -மணிமேகலை 1898
87 -மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
88 -மத்தியார்ச்சுன மான்மியம் 1885
89 -மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்
கோவை 1932
90 -மதுரைச் சொக்கநாதர் உலா 1931
91 -மான் விடு தூது 1936
92 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 1 1933
93 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 2 1934
94 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
பிரபந்தத் திரட்டு 1910
95 -வலிவல மும்மணிக் கோவை 1932
96 -வித்துவான் தியாகராச செட்டியார் 1942
97 -வில்லைப் புராணம் 1940
98 -விளத்தொட்டிப் புராணம் 1934
99 -வீரவனப் புராணம் 1903
100- வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878
கேட்டால் அய்யர் என்பான் பார்ப்பான்
என்பான் ஆரியன் என்பான் உருப்படியாக
ஒரு சிலைவைக்காத இன்றைய தமிழன்.
நன்றி http://hayyram.blogspot.in/2010/06/
blog-post_24.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=414378071999185&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739