Showing posts with label ஐயர். Show all posts
Showing posts with label ஐயர். Show all posts

Sunday, 2 November 2025

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

 உ.வே.சாமிநாத ஐயர் தம் சுயசரிதையில் 
“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று ஒருவர் கூற...
"இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!" கோபமாக கூறியுள்ளார்.

 மேலும் "பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!
 வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று. ‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன்." என்றும் எழுதியுள்ளார்.
 

Tuesday, 9 October 2018

வீரமணி ஐயரின் தமிழிசைத் தொண்டு

வீரமணி ஐயர் நினைவு நாள் இன்று (08 அக்டோபர்))

தமிழிசைக்குத் அளப்பரிய தொண்டு செய்த வீரமணி ஐயர் ஈழத்தின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாயம்மா" போன்ற பல பாடல்களை எழுதி இசையமைத்தவர்.

72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார்.

பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.

கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணி ஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார்.

அன்னாரின் நினைவைப் போற்றுவோம்!

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி

Sunday, 24 September 2017

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)

தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார்,பெங்களூரூ,மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer

நன்றி: சிவ் விஸ்வநாதன்.

Wednesday, 21 June 2017

மீனாட்சியம்மன் கோவில் ஆலயநுழைவு அரிய புகைப்படம்

வைத்தியநாதையர் அவர்கள், கக்கன் அவர்களுடன் மீனாட்சியம்மன் கோவிலில் 1939 ஆம் ஆண்டு ஆலயநுழைவு நடத்தியபோது எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருப்பவர்
பெருந்தமிழர் முத்துராமலிகத் தேவர் அவர்கள்தானா?

நான் ஏற்கனவே போட்ட 'ஐயர் செய்த ஆலயநுழைவு' பதிவில் தேவனார் அப்போது சிறையில் இருந்ததாகவும் ஆதரவாக துண்டு சீட்டு மட்டுமே விநியோகித்ததாகவும் போட்டிருந்தேன்.

அறிந்தவர்கள் கூறவும்.

Monday, 19 June 2017

வாஞ்சிநாதன் கடிதம் - உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் கடிதம்
- உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் பையில் கிடைத்த அந்த கடிதத்தின் வரிகளை சற்று நிதானமாகப் படியுங்கள்

" ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள்.

ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்,
கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta "

இதிலே "அழியாத ஸனாதன தர்மத்தை" என்ற இடமும் "கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்ற இடமும் தவறாகப் பொருள்கொள்ளப் படுகின்றன.

'சனாதன' என்றால் 'நிலைத்த' என்று பொருள்.
சனாதன தர்மம் என்பதே இந்து மதத்தின் பழைய பெயர்.
அதாவது உண்மையான பெயர்.
இதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் 'அழியாத சனாதன' என்று வாஞ்சி எழுதியுள்ளார்.
ஒருவேளை இரண்டிற்கும் ஒரே பொருள் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதாவது பலர் 'நடுசென்டர்' என்று கூறுவது போல.
தவிர சனாதான தர்மத்தை ஆங்கிலேயர் மிதிப்பதாகக் கூறுகிறார்.
இது 'சாதி அமைப்பு' என்றால் ஆங்கிலேயர் சாதியமைப்பை ஒழிக்க எதாவது செய்திருக்கிறார்களா என்றால் ஆங்கிலேயர் சாதியொழிப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை.

இன்னொன்று 'கோமாமிசம் அதாவது மாட்டிறைச்சி தின்பது' பற்றிய திரிபு.
அதாவது மாட்டிறைச்சி தலித்துகளின் உணவாம் அதனால் பிராமணர்கள் வெறுக்கிறார்களாம்.
அதனால் அது சாதிவெறியின் வெளிப்பாடாம்.
உண்மை என்னவென்றால் தாய்க்கு அடுத்து நமக்கு பால் தருவது பசு.
அதனால் அதைக் கோமாதா என்று அழைத்து அதைக் கொல்வதை பிற்கால இந்துத்துவம் தடைசெய்தது.
(இந்துமத வேதங்களில் மாட்டிறைச்சி உண்பது ஊக்குவிக்கப் படுகிறது).
வெள்ளைக்காரர்கள் காலத்தில் 'மாட்டைக் கொல்லும் கூடங்கள்'  பல ஏற்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆங்கில கல்லூரிகளில் மாட்டிறைச்சியும் விஸ்கியும் உண்பது புகுத்தப்பட்டது.
பசுக்களைக் காப்பது ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கையாக அப்போது எண்ணப்பட்டது.
இதற்கு பல இயக்கங்களும் நடத்தப்பட்டன.

மூன்றாவது 'மிலேச்சன்' என்பது.
இது கீழ்சாதியைக் குறிக்குமாம்.
ஆனால் மிலேச்சன் அந்நியன், வெளிநாட்டவன் என்றே பொருள்படும்.
மிலேச்சன் என்று ஆங்கிலேயரை வாஞ்சி குறிப்பிட்டுள்ளது அந்நியன் என்ற பொருளில்தான்.
(சீவக சிந்தாமணி 2216)

நான்காவது 'பஞ்சமன்' எனும் சொல்.
நால்வர்ணத்திற்கும் கீழானோர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டு அது கீழ்சாதி பெயர் ஆனது என்கின்றனர்.
ஆனால் 'பஞ்சம்' எனும் சொல் 'ஐந்தாவது' என்றே பொருள்படும்.
வாஞ்சிநாதன் 'ஐந்தாம் ஜார்ஜ்' என்பதை 'ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதியுள்ளார்.
அதாவது 1911ல் இந்தியாவிற்கு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வருவதாக இருந்தபோது அவரைக் கொல்லப்போவதாக வாஞ்சிநாதன் கூறுகிறார்.

ஆக இந்துமத பற்றாளராக இந்துதேசப் பற்றாளராகவே அவர் அக்கொலையைச் செய்துள்ளார்.
தனது இந்து மதத்தைப் புகழும் அதே நேரத்தில் ஆங்கிலேயரின் மதத்தை அவர் திட்டவில்லை.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தையும் பழக்கவழக்கத்தையும் மட்டுமே திட்டியுள்ளார்.
ஆக அவரை பிற மதத்தை வெறுக்கும் மதவெறியர் என்றுகூட கூறமுடியாது.

அவரை சாதிவெறியர் என்று எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் பாருங்கள்.

வாஞ்சி வாழ்ந்த பகுதியான செங்கோட்டை மற்றும் குற்றாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956 வரை இருந்தது.
ஆஷ் திருநெல்வேலிக்கு சப்-கலெக்டர் மட்டுமே.
அவரது அதிகாரம் தென்காசி தாண்டி செல்லாது.
இருவரும் சந்தித்திருக்கவோ தனிப்பட்ட பகை இருந்திருக்கவோ வாய்ப்பில்லை.

ஆஷ் வாஞ்சிநாதன் பகுதியில் செய்த சில தலித் ஆதரவு செயல்பாடுகளாக கூறப்படுபவை கட்டுக்கதைகள் என்பதற்கு இதுவே சான்று.

சரி வாஞ்சிநாதனின் கடிதத்தில் கொலைமிரட்டல் விடுத்த பிறகும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தாரா?

ஆம் வந்தார்.
27.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் (George V) இந்தியா வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்தான் 'ஜன கன மன' எனும் இன்றைய ஹிந்திய தேசிய கீதம்.
(search எழுந்து நில் வெள்ளையனை வாழ்த்து வேட்டொலி)

வாஞ்சிநாதன் காணாப்பிணமாகி சாதிவெறியனாக வரலாற்றில் பதிவானதும்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்து தேசியகவி ஆனதும் எப்படி என்று புரிகிறதுதானே?!

சரி, தமிழ்தேசியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

அதாவது பார்ப்பனரை சாதிவெறியராக்குவது திராவிடம் தமிழருக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.

என்றால் இந்துமதப்பற்று ஹிந்தியர் ஊடுருவ வழிவகுக்காதா?

வாஞ்சிநாதன் காலகட்டத்தில் இந்திய விடுதலை உணர்வு இந்து மதப்பற்றுடன் கலந்திருந்தது.
அப்போதும் வெறிபிடித்த இந்துவாக அல்லாமல் ஒரு பற்றுள்ள இந்துவாக இருந்தது அத்தனை பெரிய குற்றமில்லை.

இன்று தமிழ்தேசியத்தின் காலம்.
இப்போது தமிழ் இனவுணர்வே  தேவை.
அவ்வுணர்வை சாதிவெறியாகத் திரிப்பது திராவிடத்தின் தலையாய வேலையாக உள்ளது.

இன்று தமிழ்தேசிய உணர்வாளனுக்கு முதலில் கிடைப்பது சாதிவெறியன் பட்டமே!

திரிப்புவேலைகளை புரிந்துகொள்ளத்தான் இந்த பதிவு.

Saturday, 13 May 2017

பாலக்காட்டு சித்தூர் தமிழர்கள்

1931 கொச்சி மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் உள்ள மொழி வரைபடம்.

சித்தூர் (பாலக்காடு அருகே உள்ளது) மலையாளிகளுக்கு ஏறத்தாழ இணையாக தமிழர்கள் இருப்பது பதிவாகியுள்ளது.

இது மேலும் அறிய,
search பாலக்காட்டுச் சித்தூரில் தமிழ்த் திருவிழா

Tuesday, 25 April 2017

பார்ப்பனர் தமிழரே! (பதிவுகளின் தொகுப்பு)

பார்ப்பனர் தமிழரே
அறிந்துகொள்ளவேண்டிய பதிவுகள்

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு
vaettoli.blogspot.nl/2017/04/blog-post_30.html?m=1

தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?
vaettoli.blogspot.in/2016/10/blog-post_42.html?m=1

யார்தான் ஆரியர் ?
vaettoli.blogspot.in/2017/03/blog-post_19.html?m=1

ஈழப் பார்ப்பனர் மூவர்
vaettoli.blogspot.in/2015/07/blog-post_19.html?m=1

புலிப் பார்ப்பனர்
vaettoli.blogspot.in/2017/04/blog-post_0.html?m=1

பாவாணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்
vaettoli.blogspot.in/2016/03/blog-post_19.html?m=1

பாவாணர் போற்றும் பார்ப்பனர்கள்
vaettoli.blogspot.in/2016/04/blog-post_70.html?m=1

தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்
vaettoli.blogspot.in/2016/11/blog-post_6.html?m=1

தெலுங்கனுக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே! பாரதியார் வேதனை!
vaettoli.blogspot.in/2016/11/blog-post_40.html?m=1

ஐயர் செய்த ஆலய நுழைவு
vaettoli.blogspot.com/2014/08/blog-post_9.html?m=1

பூணூல் = வில்லின் நாண்
vaettoli.blogspot.in/2017/03/blog-post_25.html?m=1

ஆரியர் பற்றி தமிழ் இலக்கியங்களில்..
vaettoli.blogspot.in/2017/03/blog-post_42.html?m=1

ஆ.. ஊ..னா ஆரியன்
vaettoli.blogspot.in/2017/02/blog-post_25.html?m=1

நவீன தீண்டாமை
vaettoli.blogspot.in/2015/11/blog-post_23.html?m=1

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?
vaettoli.blogspot.in/2017/04/blog-post_98.html?m=1

ஆணிவேர் அறிஞர்.குணா எழுதிய சிறுநூல்
vaettoli.blogspot.nl/2017/04/blog-post_44.html?m=1

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு
http://vaettoli.blogspot.in/2017/07/blog-post_13.html?m=1

பூணூல் போட்டக் குயவர்
http://vaettoli.blogspot.in/2017/10/blog-post_5.html?m=1

Monday, 24 April 2017

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு

ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ

பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே

இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)
சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு,

1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி]

2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி]

3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி]

4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்)

5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி]

இவர்கள் போக,

தென்கலை வைணவர் (நம்பி)
நயினார் [திருவாரூர்]

திருசுதந்திரர் [திருச்செந்தூர்]

சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்]

குருக்கள் (ஐயர்) [மதுரை]

சோழியர் (ஐயர், ஐயங்கார்)

முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்]

ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே!
______________________

பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்

பிரகச்சரணம் (ஐயர்)
வாத்திமா (ஐயர்)
அஷ்டசகஸ்ரம் (ஐயர்)
கேசியர்
வடகலை வைணவர்
மத்தியானப் பறையர்
பட்டஸ்ய
வடமா (ஐயர்)
வடமா தீட்சிதர்
நம்பூதிரி

இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன.

அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.

(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.
உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும்.
சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)

ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.

மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே.

அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால்
நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.

ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர்.
இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.

ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.

தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.

தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர்.
35% மட்டுமே பார்ப்பனர்.

(இது ஆரம்பகட்ட ஆய்வுதான்.
பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன.
ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும்
வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.

ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)

Monday, 17 April 2017

கரண் தப்பினால் மரணம்

'கரணம் தப்பினால் மரணம்'

இதில் கரணம் என்பது திருமணத்தைக் குறிக்கும்.

உலகில் திருமணம் என்ற சடங்கு தோன்றியிராத காலத்தில் (ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இருந்தது)
பெண்ணும் ஆணும் களவு நெறியில் ஈடுபடுவர். (தற்போதைய மேலைநாட்டு வழக்கமான டேட்டிங் போல) இதன் விளைவாக பெண் கருவுறுவாள்.
ஒருவேளை அந்த ஆண் அவளோடு வாழமாட்டேன் என்று கைவிட்டுவிட்டால் அந்தப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருந்தது.
இதுதான் கரணம் தப்பினால் மரணம் (கரண் = திருமணம்).
இத்தகைய தற்கொலைகள் அதிகமானதால் ஊரறிய திருமணம் செய்துகொள்வது விதியாக்கப்பட்டது.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண் என்ப"
_தொல்காப்பியம்

Saturday, 19 March 2016

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

"பல திராவிட இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின்,
தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின்,
அது தமிழுக்கும் உலை வைப்பதாகும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சியாட்சியிலாவது
காங்கிரசு ஆட்சியிலாவது
*பார்ப்பனத் தமிழனும்* எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை.

தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின்,
தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து
தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியதுதான்!

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால்
அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின்,
எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆயின், பெரும்பான்மை பற்றியுமே
பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும்.

இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை.
ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது.
ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே."

-பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
15.5.1951)

நன்றி: kathir nilavan
==========================

பார்ப்பனர் தமிழரே என்று சொல்லிப்பார்!
திராவிடத்தின் ஆணிவேரே நடுங்கும் பார்!

Thursday, 16 October 2014

பார்ப்பனத் தமிழ்த் தாத்தா

பார்ப்பனத் தமிழ்த் தாத்தா

©©©©©©©©©©©©©©

இன்று நாம் கொண்டாடும் புறநானூறு,
சிலப்பதிகாரம். மணிமேகலை போன்ற
காப்பியங்களை மக்கிந ஓலைச்சுவடிகளிலி
ருந்து மீட்டுத் தந்தவர்.
தமிழ் இன்று செம்மொழி என்றால் அது இந்தத்
தனிமனிதரின் கடுமையான உழைப்பே காரணம்.
அம்மாமனிதர் அழியவிருந்த
ஓலைச்சுவடிகளை அலைந்து திரிந்து தொகுத்து அச்சிட்டு வெளியிட்ட
புத்தகங்கள்:-
1 -அழகர் கிள்ளை விடு தூது 1938
2 -ஆற்றூர்ப் புராணம் 1935
3 -இயற்பகை நாயனார் சரித்திரக்
கீர்த்தனை 1936
4 -உதயண குமார காவியம் 1935
5 -உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
6 -ஐங்குறு நூறு 1903
7 -கச்சி ஆனந்தருத்திரேசர்
வண்டு விடுதூது 1888
8 -கடம்பர் கோயிலுலா 1932
9 -கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
10- கலைசைக் கோவை 1935
11 -களக்காட்டு சத்தியவாகீசர்
இரட்டை மணிமாலை 1932
12 -கனம் கிருணயைர் 1936
13 -குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்
திரட்டு 1939
14 -குறுந்தொகை 1937
15 -கோபால கிருஷ்ண பாரதியார் 1936
16 -சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
17 -சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
18 -சங்கரலிங்க உலா 1933
19 -சிராமலைக் கோவை 1937
20 -சிலப்பதிகாரம் 1892
21 -சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
1932
22 -சிவசிவ வெண்பா 1938
23 -சீகாழிக் கோவை 1903
24 -சீவக சிந்தாமணி 1887
25 -சூரைமாநகர்ப் புராணம் 1904
26 -செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
27 -தக்கயாகப் பரணி 1930
28 -தண்டபாணி விருத்தம் 1891
29 -தணிகாசல புராணம் 1939
30 -தமிழ்நெறி விளக்கம் 1937
31 -தமிழ்விடு தூது 1930
32 -தனியூர்ப் புராணம் 1907
33 -திரு இலஞ்சி முருகன் உலா 1935
34 -திருக்கழுக்குன்றச்
சிலேடை வெண்பா 1933
35 -திருக்கழுக்குன்றத்துலா 1938
36 -திருக்காளத்திநாதர் இட்டகாமிய
மாலை 1938
37 -திருக்காளத்தி நாதருலா 1904
38 -திருக்காளத்திப் புராணம் 1912
39 -திருக்குடந்தைப் புராணம் 1883
40 -திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
41 -திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
42 -திருநீலகண்டனார் சரித்திரம் 1936
43 -திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
1908
44 -திருப்பூவண நாதருலா 1904
45 -திருப்பெருந்துறைப் புராணம் 1892
46 -திருமயிலைத் திரிபந்தாதி 1888
47 -திருமயிலை யமக அந்தாதி 1936
48 -திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
49 -திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
50 -திருவாரூர்க் கோவை 1937
51 -திருவாரூர்த் தியாகராச லீலை 1905
52 -திருவாரூருலா 1905
53 -திருவாலவாயுடையார் திருவிளையாடற்
புராணம் 1906
54 -திருவாவடுதுறைக் கோவை 1903
55 -தேவையுலா 1907
56 -நல்லுரைக் கோவை பகுதி 1 1937
57 -நல்லுரைக் கோவை பகுதி 2 1937
58 -நல்லுரைக் கோவை பகுதி 3 1938
59 -நல்லுரைக் கோவை பகுதி 4 1939
60 -நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
61 -நன்னூல் மயிலை நாதருரை 1925
62 -நான் கண்டதும் கேட்டதும் 1936
63 -நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
64 -நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
65 -நீலி இரட்டை மணிமாலை 1874
66 -பத்துப் பாட்டு மூலம் 1931
67 -பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
68 -பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
69 -பதிற்றுப் பத்து 1904
70 -பரிபாடல் 1918
71 -பழமலைக் கோவை 1935
72 -பழனி இரட்டைமணி மாலை 1935
73 -பழனி பிள்ளைத் தமிழ் 1932
74 -பாசவதைப் பரணி 1933
75 -புகையிலை விடு தூது 1939
76 -புத்த சரித்திரம், பெளத்த தருமம்,
பெளத்த
சங்கம் 1898
77 -புதியதும் பழையதும் 1936
78 -புறநானூறு 1894
79 -புறநானூறு மூலம் 1936
80 -புறப்பொருள் வெண்பா மாலை 1895
81 -பெருங்கதை 1924
82 -பெருங்கதை மூலம் 1936
83 -மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
84 -மகாவைத்தியநாதையைர் 1936
85 -மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
86 -மணிமேகலை 1898
87 -மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
88 -மத்தியார்ச்சுன மான்மியம் 1885
89 -மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்
கோவை 1932
90 -மதுரைச் சொக்கநாதர் உலா 1931
91 -மான் விடு தூது 1936
92 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 1 1933
93 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 2 1934
94 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
பிரபந்தத் திரட்டு 1910
95 -வலிவல மும்மணிக் கோவை 1932
96 -வித்துவான் தியாகராச செட்டியார் 1942
97 -வில்லைப் புராணம் 1940
98 -விளத்தொட்டிப் புராணம் 1934
99 -வீரவனப் புராணம் 1903
100- வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878
கேட்டால் அய்யர் என்பான் பார்ப்பான்
என்பான் ஆரியன் என்பான் உருப்படியாக
ஒரு சிலைவைக்காத இன்றைய தமிழன்.
நன்றி http://hayyram.blogspot.in/2010/06/
blog-post_24.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=414378071999185&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Saturday, 26 July 2014

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்

/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/

நீங்கள் '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டதுண
்டா?
இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத
பாறையும் அல்லாத ஒரு குறுங்கோள் ஆகும்;
இதில் 'சந்த்ரா' என்ற பெயர்
ஒரு தமிழனை பெருமைப் படுத்தும் விதத்தில்
சூட்டப்பட்ட பெயர் ஆகும்;
அந்த தமிழர்தான் திரு.சுப்பிரமணியம்
சந்திரசேகர்;
1910ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள
லாகூரில் ஆங்கில அரசில் பணிபுரிந்துவந்த
இவரது தந்தை (சர்.சி.வி.ராமனின் அண்ணன்)
வசித்தபோது பிறந்தார்;
பிறகு தமிழகம் திரும்பி 1930களில்
அமெரிக்கா சென்று குடியேறுகிறார்;
அங்கே பல்வேறு சாதனைகளும் விருதுகளும்
குவித்து பெயர்பெற்ற அறிவியலாளராக(வி
ஞ்ஞானி) வளர்கிறார்;
1983ல் இவரது 'விண்மீன்களின் பரிணாமம்'
பற்றிய ஆய்வைப் பாராட்டி இயற்பியலுக்கான
நோபல் பரிசு வழங்கப்படுகிறது;
இந்த ஆய்வு விண்மீன்களின் வயதையும்
ஆயுளையும் கணிக்க உதவுகிறது; கதிரவனின்
வயதைக் கணித்தவர் இவர்தான்
என்று நம்பப்படுகிறது;
வானியல் ஆய்வாளர் 'சந்திரசேகர் எல்கை'
என்பதைப் பயன்படுத்துகின்றனர்;
இயற்பியலாளர்கள் 'சந்திரசேகர் எண்' என்பதைப்
பயன்படுத்துகின்றனர்;
இத்தனை பெருமைமிக்க ஒரு தமிழனைப்
பற்றி எந்த தமிழனுக்கும் தெரியாது;
திராவிடக் கட்சிகள் இவர் ஒரு தமிழ்ப் பார்ப்பனர்
என்பதாலேயே இவரை மறைத்துவிட்டனர்;
இவரது சித்தப்பாவான சர்.சி.வி.ராமனும்
ஒரு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்; அவர்
திராவிடம் தலைதூக்கும்
முன்பே பரிசு பெற்றவராதலால்
அவரை மறைக்கமுடியவில்லை;
கதை இதோடு முடியவில்லை;
சி.வி.ராமனின் மகனான திரு.வெங்கடராமன்
ராமகிருஷ்ணன் என்பவர் 2009ல்
வேதியியலுக்கான நோபல்
பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்; இதுவும்
பலருக்குத் தெரியாது;
ஆக தமிழர்களில் இதுவரை 3பேர் உலகின்
மிகச்சிறந்த விருதாகக் கருதப்படும் நோபல்
பரிசு பெற்றுள்ளனர்;
இன்னும் இருக்கிறது;
ராமானுஜம் மிக
இளவயதிலேயே இறந்துவிட்டார்
இல்லாவிட்டால் அவருக்கும் நோபல்
பரிசு கட்டாயம் கிடைத்திருக்கும்;
சி.வி.ராமனின் மாணவரான ஜி.என்.ராமச்சந்திரன்
நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்
ஆனால்
அது கிடைக்கவில்லை (எப்படி கிடைக்கும்,
அவர் ஒரு வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்திரு
ந்தால் கிடைத்திருக்கும்);
ஏ.ஆர்.ரகுமான் கூட ஒரு ஐரோப்பிய
படத்திற்கு இசையமைக்கவில்லை என்றால்
அவருக்கும் 'ஆஸ்கார்' கிடைத்திருக்காது;
இதேபோல சிவசங்கர நாராயணப்பிள்ளை,
கே.எஸ்.கிருஷ்ணன் என்று உலகளாவிய
புகழ்பெற்ற பல தமிழ் மேதாவிகள் இருந்தனர்.
நமக்கு இவர்களின் பெயரெல்லாம் தெரியாது;
நமக்குத் தெரிந்ததெல்லாம் நோபல்
பரிசை ஏற்படுத்தியர் ஆல்பிரட் நோபல்
என்பதும், நோபல் பரிசு பெற்றவர்களில்
அன்னை தெரசா, ரவீந்தரநாத் தாகூர்,
அமர்த்தியா சென் போன்ற ஹிந்தியர்களின்
பெயர்களும் மேலும் கல்பனா சாவலா,
மேத்தா பட்கர், அருந்ததி ராய் போன்ற
தமிழரல்லாதவர்களின் பெயரும்தான் தெரியும்.
நம் மொழி பேசும், நம் இனத்தைச் சேர்ந்த, நம்
மண்ணில் பிறந்த மேதாவிகளை அவர்கள் பிறந்த
சாதியைக் காரணம்காட்டி மறைத்துவிடும்
கீழான அரசியலைத்தான் நாம்
அரியணை ஏற்றி வைத்திருக்கிறோம்.
https://m.facebook.com/photo.php?fbid=470592359711089&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13#470604516376540