Showing posts with label ஐயங்கார். Show all posts
Showing posts with label ஐயங்கார். Show all posts

Tuesday, 18 November 2025

பட்டியல்சாதி ஐயங்கார்

பட்டியல்சாதி ஐயங்கார்

 அந்த ஐயங்காரின் பெயர் மானாமதுரை கிருஷ்ணசாமி. பெரிய வக்கீல். 
காந்தியின் சீடர்.  
ராஜாஜியின் நண்பர். 
காமராஜருக்கு ஆலோசகர்.  
மதுரை வைத்திய நாத ஐய்யருடன் திருக்குலத்தார் மீனாட்சி ஆலய பிரவேசம் செய்ய உடன் நின்றவர். 
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோயில்களை சர்.சி.பி ராமாசமி ஐயர் எல்லோருக்கும் திறந்து விட்ட பின், தன் ஊரில் இருந்து திருக்குலத்தாரை தன் சொந்த செலவில் அங்கு சென்று ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர். 
மானாமதுரையில் ஹோட்டல்களில் எல்லோரும் சென்று சாப்பிட போராடி வழி செய்தவர். 
சுதந்திர இந்தியாவில், முதல் தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக (MLA) இருந்தவர். 
தன்னிடம் கொடுக்கப்பட்ட காரை விற்று அரிஜன சேவைக்கு பயன் படுத்தியவர். 
கோயில் தர்ம கர்த்தாக்கள் நியமனத்தில் திருக்குலத்தாரையும் சேர்க்க பாடுபட்டவர். அவர்களுக்கு அர்ச்சகர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர். 
அரசியலில் பணம் ஏதும் சம்பாதிக்காதவர். அதனால் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் இருந்தவர். 
 அவரது மகன் ஒரு அதிகாரியாகி அவரைப் பார்க்க வருகிறார்.
இவர்  திருக்குலத்தில் பிறந்தவர். 
இவரை ஐயங்கார் சிறு வயதிலேயே தன்வீட்டில் சேர்த்துக் கொண்டு, ஊரைப் பகைத்துக் கொண்டு, பள்ளிக் கூடத்தில் சேர்த்து, ராஜாஜியின் உதவியுடன் கல்லூரியில் சேர்த்து ஆளாக்கி மத்திய அரசில் பெரிய பதவியில் உட்கார செய்தார். 
அவரின் திருமணத்தையும் தானே முன் நின்று நடத்தி வைத்தார். 
அந்த தத்து புத்திரன் தான் தற்போது பெரிய அதிகாரி. அவர்  பெயர் சம்பந்தம். 
திரு் சம்பந்தம் தன்னை ஆளாக்கிய தந்தையைப் பற்றி எழுதிய பழைய நூலை வைத்து கன்யூட்ராஜ் என்பவர் எழுதிய புனைவிலக்கியம் (நாவல்) தான் 'அரிஜன ஐங்கார்" எனும் படைப்பு. 
இவரைப் போன்றோருக்கு சிலை ஒன்று அவர் ஊரில் கூட இல்லை!
அவர் போட்டோவை இணையத்தில் தேடினேன். 
இல்லை. 

பதிவர்:- Ganesh Lakshminarayanan

Tuesday, 25 April 2017

பார்ப்பனர் தமிழரே! (பதிவுகளின் தொகுப்பு)

பார்ப்பனர் தமிழரே
அறிந்துகொள்ளவேண்டிய பதிவுகள்

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு
vaettoli.blogspot.nl/2017/04/blog-post_30.html?m=1

தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?
vaettoli.blogspot.in/2016/10/blog-post_42.html?m=1

யார்தான் ஆரியர் ?
vaettoli.blogspot.in/2017/03/blog-post_19.html?m=1

ஈழப் பார்ப்பனர் மூவர்
vaettoli.blogspot.in/2015/07/blog-post_19.html?m=1

புலிப் பார்ப்பனர்
vaettoli.blogspot.in/2017/04/blog-post_0.html?m=1

பாவாணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்
vaettoli.blogspot.in/2016/03/blog-post_19.html?m=1

பாவாணர் போற்றும் பார்ப்பனர்கள்
vaettoli.blogspot.in/2016/04/blog-post_70.html?m=1

தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்
vaettoli.blogspot.in/2016/11/blog-post_6.html?m=1

தெலுங்கனுக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே! பாரதியார் வேதனை!
vaettoli.blogspot.in/2016/11/blog-post_40.html?m=1

ஐயர் செய்த ஆலய நுழைவு
vaettoli.blogspot.com/2014/08/blog-post_9.html?m=1

பூணூல் = வில்லின் நாண்
vaettoli.blogspot.in/2017/03/blog-post_25.html?m=1

ஆரியர் பற்றி தமிழ் இலக்கியங்களில்..
vaettoli.blogspot.in/2017/03/blog-post_42.html?m=1

ஆ.. ஊ..னா ஆரியன்
vaettoli.blogspot.in/2017/02/blog-post_25.html?m=1

நவீன தீண்டாமை
vaettoli.blogspot.in/2015/11/blog-post_23.html?m=1

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?
vaettoli.blogspot.in/2017/04/blog-post_98.html?m=1

ஆணிவேர் அறிஞர்.குணா எழுதிய சிறுநூல்
vaettoli.blogspot.nl/2017/04/blog-post_44.html?m=1

பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு
http://vaettoli.blogspot.in/2017/07/blog-post_13.html?m=1

பூணூல் போட்டக் குயவர்
http://vaettoli.blogspot.in/2017/10/blog-post_5.html?m=1

Monday, 24 April 2017

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு

ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ

பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே

இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)
சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு,

1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி]

2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி]

3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி]

4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்)

5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி]

இவர்கள் போக,

தென்கலை வைணவர் (நம்பி)
நயினார் [திருவாரூர்]

திருசுதந்திரர் [திருச்செந்தூர்]

சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்]

குருக்கள் (ஐயர்) [மதுரை]

சோழியர் (ஐயர், ஐயங்கார்)

முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்]

ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே!
______________________

பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்

பிரகச்சரணம் (ஐயர்)
வாத்திமா (ஐயர்)
அஷ்டசகஸ்ரம் (ஐயர்)
கேசியர்
வடகலை வைணவர்
மத்தியானப் பறையர்
பட்டஸ்ய
வடமா (ஐயர்)
வடமா தீட்சிதர்
நம்பூதிரி

இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன.

அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.

(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.
உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும்.
சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)

ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.

மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே.

அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால்
நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.

ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர்.
இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.

ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.

தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.

தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர்.
35% மட்டுமே பார்ப்பனர்.

(இது ஆரம்பகட்ட ஆய்வுதான்.
பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன.
ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும்
வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.

ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)

Saturday, 26 July 2014

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்

விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்

/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/

நீங்கள் '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டதுண
்டா?
இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத
பாறையும் அல்லாத ஒரு குறுங்கோள் ஆகும்;
இதில் 'சந்த்ரா' என்ற பெயர்
ஒரு தமிழனை பெருமைப் படுத்தும் விதத்தில்
சூட்டப்பட்ட பெயர் ஆகும்;
அந்த தமிழர்தான் திரு.சுப்பிரமணியம்
சந்திரசேகர்;
1910ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள
லாகூரில் ஆங்கில அரசில் பணிபுரிந்துவந்த
இவரது தந்தை (சர்.சி.வி.ராமனின் அண்ணன்)
வசித்தபோது பிறந்தார்;
பிறகு தமிழகம் திரும்பி 1930களில்
அமெரிக்கா சென்று குடியேறுகிறார்;
அங்கே பல்வேறு சாதனைகளும் விருதுகளும்
குவித்து பெயர்பெற்ற அறிவியலாளராக(வி
ஞ்ஞானி) வளர்கிறார்;
1983ல் இவரது 'விண்மீன்களின் பரிணாமம்'
பற்றிய ஆய்வைப் பாராட்டி இயற்பியலுக்கான
நோபல் பரிசு வழங்கப்படுகிறது;
இந்த ஆய்வு விண்மீன்களின் வயதையும்
ஆயுளையும் கணிக்க உதவுகிறது; கதிரவனின்
வயதைக் கணித்தவர் இவர்தான்
என்று நம்பப்படுகிறது;
வானியல் ஆய்வாளர் 'சந்திரசேகர் எல்கை'
என்பதைப் பயன்படுத்துகின்றனர்;
இயற்பியலாளர்கள் 'சந்திரசேகர் எண்' என்பதைப்
பயன்படுத்துகின்றனர்;
இத்தனை பெருமைமிக்க ஒரு தமிழனைப்
பற்றி எந்த தமிழனுக்கும் தெரியாது;
திராவிடக் கட்சிகள் இவர் ஒரு தமிழ்ப் பார்ப்பனர்
என்பதாலேயே இவரை மறைத்துவிட்டனர்;
இவரது சித்தப்பாவான சர்.சி.வி.ராமனும்
ஒரு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்; அவர்
திராவிடம் தலைதூக்கும்
முன்பே பரிசு பெற்றவராதலால்
அவரை மறைக்கமுடியவில்லை;
கதை இதோடு முடியவில்லை;
சி.வி.ராமனின் மகனான திரு.வெங்கடராமன்
ராமகிருஷ்ணன் என்பவர் 2009ல்
வேதியியலுக்கான நோபல்
பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்; இதுவும்
பலருக்குத் தெரியாது;
ஆக தமிழர்களில் இதுவரை 3பேர் உலகின்
மிகச்சிறந்த விருதாகக் கருதப்படும் நோபல்
பரிசு பெற்றுள்ளனர்;
இன்னும் இருக்கிறது;
ராமானுஜம் மிக
இளவயதிலேயே இறந்துவிட்டார்
இல்லாவிட்டால் அவருக்கும் நோபல்
பரிசு கட்டாயம் கிடைத்திருக்கும்;
சி.வி.ராமனின் மாணவரான ஜி.என்.ராமச்சந்திரன்
நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்
ஆனால்
அது கிடைக்கவில்லை (எப்படி கிடைக்கும்,
அவர் ஒரு வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்திரு
ந்தால் கிடைத்திருக்கும்);
ஏ.ஆர்.ரகுமான் கூட ஒரு ஐரோப்பிய
படத்திற்கு இசையமைக்கவில்லை என்றால்
அவருக்கும் 'ஆஸ்கார்' கிடைத்திருக்காது;
இதேபோல சிவசங்கர நாராயணப்பிள்ளை,
கே.எஸ்.கிருஷ்ணன் என்று உலகளாவிய
புகழ்பெற்ற பல தமிழ் மேதாவிகள் இருந்தனர்.
நமக்கு இவர்களின் பெயரெல்லாம் தெரியாது;
நமக்குத் தெரிந்ததெல்லாம் நோபல்
பரிசை ஏற்படுத்தியர் ஆல்பிரட் நோபல்
என்பதும், நோபல் பரிசு பெற்றவர்களில்
அன்னை தெரசா, ரவீந்தரநாத் தாகூர்,
அமர்த்தியா சென் போன்ற ஹிந்தியர்களின்
பெயர்களும் மேலும் கல்பனா சாவலா,
மேத்தா பட்கர், அருந்ததி ராய் போன்ற
தமிழரல்லாதவர்களின் பெயரும்தான் தெரியும்.
நம் மொழி பேசும், நம் இனத்தைச் சேர்ந்த, நம்
மண்ணில் பிறந்த மேதாவிகளை அவர்கள் பிறந்த
சாதியைக் காரணம்காட்டி மறைத்துவிடும்
கீழான அரசியலைத்தான் நாம்
அரியணை ஏற்றி வைத்திருக்கிறோம்.
https://m.facebook.com/photo.php?fbid=470592359711089&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13#470604516376540