Monday 17 April 2017

கரண் தப்பினால் மரணம்

'கரணம் தப்பினால் மரணம்'

இதில் கரணம் என்பது திருமணத்தைக் குறிக்கும்.

உலகில் திருமணம் என்ற சடங்கு தோன்றியிராத காலத்தில் (ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இருந்தது)
பெண்ணும் ஆணும் களவு நெறியில் ஈடுபடுவர். (தற்போதைய மேலைநாட்டு வழக்கமான டேட்டிங் போல) இதன் விளைவாக பெண் கருவுறுவாள்.
ஒருவேளை அந்த ஆண் அவளோடு வாழமாட்டேன் என்று கைவிட்டுவிட்டால் அந்தப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருந்தது.
இதுதான் கரணம் தப்பினால் மரணம் (கரண் = திருமணம்).
இத்தகைய தற்கொலைகள் அதிகமானதால் ஊரறிய திருமணம் செய்துகொள்வது விதியாக்கப்பட்டது.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண் என்ப"
_தொல்காப்பியம்

No comments:

Post a Comment