Wednesday 19 April 2017

வந்தேறிகள் வெளியேற்றம்

வந்தேறிகள் வெளியேற்றம்

தமிழர்நாட்டில் பிற இனத்தார் குடியேற்றத்தை சமாளிப்பது எப்படி?

தமிழர்நாடு அமைந்ததும்
(அதாவது தமிழர்நாடு முழுவதும் தமிழரின் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்த தமிழினத்தலைவர் 'விடுதலைப் பிரகடனம்' செய்ததும்)

தமிழரல்லாதாரை முடிந்த அளவு வெளியேற்ற வேண்டும்.
அவர்கள் எத்தனை நூறாண்டுகள் இங்கு வாழ்ந்திருந்தாலும் சரி.

அவர்களுக்கு அடிப்படை சாமான்களும் சிறிதளவு பண உதவியும் கொடுத்து அனுப்பிவைக்கவேண்டும்.

அவர்களின் சொத்துகள் அனைத்தும் தமிழர்நாட்டுக்கே சொந்தம்.

பிறகு உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் வம்சாவழிகளை மீண்டும் அழைத்து வந்து குடியேற்றவேண்டும்.
அவர்கள் தமிழரா என ஆராய்ந்து அவர்களில் தமிழர்களை மீண்டும் தமிழ் மயமாக்கவேண்டும்.

நாட்டில் இருக்கும் அனைவரையும் ஆராய்ந்து இவர் இன்ன இனம் என்று சான்றிதழ் கொடுக்கவேண்டும்.
சாதி, மதம் போன்றவை அந்த சான்றிதழில் குறிப்பிட வேண்டாம்.
இந்த ஒரு இனச்சான்றே முதன்மை ஆவணம்.
குடியுரிமையும் அனைவருக்கும் கொடுக்கவேண்டும்.
(இதற்கு பத்தாண்டுகள் வரை எடுத்துக்கொள்ளலாம்)

சிறிய அளவில் வேற்றினத்தாரும் இருக்க வாய்ப்புண்டு.
அதாவது தமிழர்நாடு அமைய தமிழரோடு போராடிய வேற்றினத்தார் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டாம்.
அதாவது நம் போராட்டம் தொடங்கிய காலத்தில் நமக்காகப் போராடியோர்.
(நாம் வெல்லும் நிலைக்கு வந்ததும் கடைசிநேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டவர்களாக இருக்ககூடாது.)
அவர்களைத் தமிழராக ஏற்கமுடியாவிட்டாலும் குடியுரிமை கொடுத்து தமிழர்நாட்டுக் குடிமக்களாக ஏற்கலாம்.
(ஆனால் அவர்கள் தமிழில் பேசக்கூடாது.
வேறு நாட்டுக்குக் குடிபெயர்ந்தால் வாரிசுகளுக்கு தமிழர்நாட்டு குடியுரிமை கிடைக்காது).

இனச்சான்று வழங்கப்பட்டதும் தமிழரல்லாதார் தமிழ் பேச தடைவிதிக்க வேண்டும்.

தமிழர்கள் தமக்குள் முடிந்த அளவு தூய தமிழிலும் பிறருடன் ஆங்கிலத்திலும் பேசவேண்டும்.

தமிழர்நாடு அமைந்து 50 ஆண்டுகளுக்குள் உலகத்தமிழர் தமிழரனைவரும் தாய்நிலம் திரும்பவேண்டும்.

தமிழர்நாட்டுக்கு குடிவர இயலாத தமிழர்கள் அனைவரும் (50 ஆண்டுகளுக்குள்) ஒருமுறை தமிழர்நாட்டுக்கு வந்து தாம் தமிழர் என்பதை நிறுவி சான்று பெற்றுக்கொண்டு செல்லவேண்டும்.

தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை முடிந்த அளவு தமிழர்நாட்டில் குடியமர்த்த முயற்சிக்க வேண்டும்
அல்லது தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து குழந்தைக்கு இனச்சான்று பெற்றுச் செல்லவேண்டும்.
அப்பிள்ளையை முடிந்த அளவு தமிழரையே (அதுவும் முடிந்தவரை தாய்நிலத்தில்) திருமணம் செய்ய ஊக்குவிக்கவேண்டும்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கென இனச்சான்று இல்லாத எவருக்கும் குடியுரிமை கிடைக்காது.
தமது பெற்றோருக்கான சான்றைக்காட்டி குடியுரிமை பெற இயலாது.

தாய்நிலத் தமிழர் பிறநாடுகளில் இனசான்று பெற்ற ஒரு தமிழரை திருமணம் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு (பாஸ்போட், விசா) வாங்கி யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கியிருக்கலாம், வேலை செய்யலாம்,
படிக்கலாம், சுற்றிப்பார்க்கலாம்.

ஆனால் யாருக்கும் நிரந்தரக் குடியுரிமை கிடையாது.
வெளிநாட்டார் வரலாம். தங்கியிருக்கலாம்.
ஆனால் திரும்ப சென்றுவிடவேண்டும்.
தமிழர்நாட்டிலேயே இருந்தாலும் அவர்களுக்கு இங்கேயே பிள்ளைகள் பிறந்தாலும் குடியுரிமை கிடைக்காது.

இப்படியான வெளிநாட்டார் 20% மேல் அதிகமானால் விசா வழங்குவதை சிறிது காலம் நிறுத்திவைக்க வேண்டும்.
தேவையில்லாமல் இங்கிருக்கும் வெளிநாட்டாரை வெளியேற்றவேண்டும்.
தமிழர்கள் தமது தாய்நிலத்தில் 80%க்கு எப்போதும் குறையக்கூடாது.

வெளியாட்கள் தமிழர்நாட்டில் ஒரு தமிழரைத் திருமணம் செய்தால் அவர்களின் பிள்ளைக்கு பாதித்தமிழர் என்ற இனசான்றிதழும் குடியுரிமையும் கிடைக்கும்.

அந்த பிள்ளை ஒரு தமிழரையே திருமணம் செய்தால் அதன் பிள்ளைக்கு (முழுத்)தமிழர் என்ற சான்று கிடைக்கும்.
இல்லாவிட்டால் தமிழரல்லாதார் என்றே கருதப்படுவர். இனச்சான்று கிடைக்காது.
ஆனால் குடியுரிமை கிடைக்கும்.

தமிழர்களின் மக்கட்தொகை தற்போதைய எண்ணிக்கையை விடக் கூடாதவாறும் குறையாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
(அதாவது தாய்நிலத் தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்.
மக்கட்தொகை குறைவான நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்)

தமிழர்நாட்டு குடிமக்கள் வேறுநாட்டுக்கு குடிபெயரும்போது அவர்களிடம் தமிழினச்சான்று இருந்தால் வேற்றுநாட்டில் பிறக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இனச்சான்று (தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து) வாங்கிக்கொள்ளலாம்.
அதைவைத்து பிற்காலத்தில் குடியுரிமையும் கிடைக்கும்.

தமிழினச்சான்று இல்லாத (அதாவது தமிழரல்லாத) தமிழர்நாட்டு குடிமக்கள்  வேற்றுநாட்டுக்கு குடிபெயர்ந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமையோ இனச்சான்றோ கிடைக்காது.

தமிழர்களின் தாய்நிலம் சிறியது.
தமிழர் மக்கட்தொகை சற்று அதிகம்.

எனவே தமிழர்களுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மற்ற மக்களை வெளியேற்ற வேண்டியதும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிப்பதும் இதனாலேயே செய்யவேண்டி உள்ளது.

இது இனவெறி இல்லை.

இதற்கு முன்பு போட்ட 'வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல்' பதிவு தாய்நிலத்தில் தமிழர்களின் மக்கட் செறிவை கருத்தில் கொள்ளாமல் போடப்பட்டது.

தமிழருக்கே அவர்களின் தாய்நிலம் போதாதபோது வேற்றினத்தாரைக் குடிவைக்க வழியில்லை.

எனவே இப்பதிவு.

No comments:

Post a Comment