Showing posts with label தேவநேயப் பாவணர். Show all posts
Showing posts with label தேவநேயப் பாவணர். Show all posts

Saturday, 19 March 2016

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

"பல திராவிட இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின்,
தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின்,
அது தமிழுக்கும் உலை வைப்பதாகும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சியாட்சியிலாவது
காங்கிரசு ஆட்சியிலாவது
*பார்ப்பனத் தமிழனும்* எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை.

தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின்,
தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து
தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியதுதான்!

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால்
அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின்,
எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆயின், பெரும்பான்மை பற்றியுமே
பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும்.

இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை.
ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது.
ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே."

-பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
15.5.1951)

நன்றி: kathir nilavan
==========================

பார்ப்பனர் தமிழரே என்று சொல்லிப்பார்!
திராவிடத்தின் ஆணிவேரே நடுங்கும் பார்!

Wednesday, 15 July 2015

திராவிடத்தைத் தமிழ்கொண்டு தாக்கிய பாவணர்

திராவிடத்தைத் தமிழ்கொண்டு தாக்கிய பாவணர்

* தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

*தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி
திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

* பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல்,
வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது.

* தமிழ் தூய்மையான தென்மொழியென்றும்
திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

*தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

*தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள,உணர்ச்சியும் ஆற்றலும்
திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

*திரவிடம் முக்கால் ஆரியமாதலால்,
அதனொடு தமிழையும் இணைப்பின்,
அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம்.
பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

* வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும்,
பகையாகக்கொள்ளும் தமிழுக்கும்
சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

* தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

* தமிழ் வேறு திரவிடம் வேறு என்பதுடன்
ஆரியமும்
திராவிடமும் ஒன்றேயென அறிக.

* நடந்தது பிராமணர் ஆட்சி,
நடப்பது திரவிடர் ஆட்சி,
நடக்கவேண்டியது தமிழர் ஆட்சி.

-பாவணர்

ஒளிதந்த ஞாயிறே
நும்மை மதியாது போனோமே
படாததெல்லாம் பட்டோமே

நன்றி: @[1505329917:2048:SenthilKumar Selvaraj]
நன்றி:மள்ளர் மீட்புக் களம்.