Saturday 19 March 2016

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

பாவணரின் திராவிட எதிர்ப்பு கட்டுரையில் "பார்ப்பனத் தமிழன்" என்ற சொல்

?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

"பல திராவிட இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின்,
தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின்,
அது தமிழுக்கும் உலை வைப்பதாகும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சியாட்சியிலாவது
காங்கிரசு ஆட்சியிலாவது
*பார்ப்பனத் தமிழனும்* எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை.

தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின்,
தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து
தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியதுதான்!

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால்
அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின்,
எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆயின், பெரும்பான்மை பற்றியுமே
பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும்.

இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை.
ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது.
ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே."

-பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
15.5.1951)

நன்றி: kathir nilavan
==========================

பார்ப்பனர் தமிழரே என்று சொல்லிப்பார்!
திராவிடத்தின் ஆணிவேரே நடுங்கும் பார்!

No comments:

Post a Comment