Wednesday 15 July 2015

திராவிடத்தைத் தமிழ்கொண்டு தாக்கிய பாவணர்

திராவிடத்தைத் தமிழ்கொண்டு தாக்கிய பாவணர்

* தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

*தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி
திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

* பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல்,
வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது.

* தமிழ் தூய்மையான தென்மொழியென்றும்
திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

*தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

*தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள,உணர்ச்சியும் ஆற்றலும்
திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

*திரவிடம் முக்கால் ஆரியமாதலால்,
அதனொடு தமிழையும் இணைப்பின்,
அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம்.
பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

* வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும்,
பகையாகக்கொள்ளும் தமிழுக்கும்
சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

* தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

* தமிழ் வேறு திரவிடம் வேறு என்பதுடன்
ஆரியமும்
திராவிடமும் ஒன்றேயென அறிக.

* நடந்தது பிராமணர் ஆட்சி,
நடப்பது திரவிடர் ஆட்சி,
நடக்கவேண்டியது தமிழர் ஆட்சி.

-பாவணர்

ஒளிதந்த ஞாயிறே
நும்மை மதியாது போனோமே
படாததெல்லாம் பட்டோமே

நன்றி: @[1505329917:2048:SenthilKumar Selvaraj]
நன்றி:மள்ளர் மீட்புக் களம்.

No comments:

Post a Comment