Wednesday 15 July 2015

தண்ணிவண்டி தமிழர்களே !

தண்ணிவண்டி தமிழர்களே !

ஒரு சொட்டு பிராந்தி நாக்கில் பட்டவுடன்
வாந்தியில் மிதக்கும் பித்த உடம்புக்காரன்கூட
பெருமுயற்சி செய்து பயிற்சி எடுத்து
குடிகாரனாக மாறுகிறான்.

அந்த அளவுக்கு தமிழகத்தில் குடிக்கலாச்சாரம் புகுந்துவிட்டது.

குடிக்காதவனை தீண்டத்தகாதோர் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
குடிப்பழக்கமில்லாதவனை ஏதோ வேட்டிகட்டத்தெரியாதவன் போல பார்க்கின்றனர்.

குடிப்பழக்கம் உலகம் முழுவதும்தான் இருக்கிறது.
முன்னேறிய நாடுகளில் ஆண்களும் பெண்களும் குடிக்கிறார்கள்.
அவர்கள் நன்றாக வாழவில்லையா?
அவர்கள் குடிப்பதற்கும் இங்கே குடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

அவர்கள் வாரத்திற்கு 5நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதி இரண்டு நாட்கள் தங்களுக்காக செலவளிக்கின்றனர்.
பிக்னிக், சினிமா, என்று போய்விட்டு சனிக்கிழமை இரவு க்ளப்க்கு சென்று குடிக்கின்றனர்.
நிதானத்தில் இருப்பவர்கள் வீட்டுக்குச் செல்கின்றனர். மீதிபேர் அங்கேயே விழுந்துகிடந்துவிட்டு விடிந்ததும் செல்கின்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுவேலைகளைச் செய்து குடும்பத்துடன் நேரம் செலவிட்டுவிட்டு மறுபடி திங்கள் கிழமை ஒழுங்காக வேலைக்கு செல்கின்றனர்.

இங்கே அப்படியா?
இருட்டத் தொடங்கியதுமே கைகால் நடுங்கத் தொடங்கிவிடுகிறது.
தலையை விற்றாவது குடித்தே ஆகவேண்டும் என்று பதைபதைப்பு தொடங்கிவிடுகிறது.
குடித்தாலும் நிதானமே இல்லாத அளவுக்கு குடிப்பது, வேட்டி விலகி தெருவில் விழுந்துகிடப்பது, குடல் வெளிவர வாந்தி எடுப்பது, கண்டபடி உளறுவது, பைத்தியம் பிடித்ததுபோல நடந்துகொள்வது, குப்பைமேட்டில் படுத்துக்கிடப்பது, தாறுமாறாக வண்டி ஓட்டி சாவது அல்லது கொலைசெய்வது,  வீட்டுக்குப்போனால் வெறிவந்து மனைவியை அடிப்பது, குடிநாற்றத்தோடு பிள்ளைகளைக் கொஞ்சுவது
இதையெல்லாம் பெருமையாக நினைப்பது (?!?????)

ரயிலில் வரும்போது நம் தமிழ்குடிமகன்கள் பண்ணும் கூத்து இருக்கிறதே.
குடித்துவிட்டு படுத்தவன் இடையில் ஒன்றுக்கு போய்விட்டு வெளியே வருவான்.
அடுத்த அரைமணிநேரத்துக்கு அந்த கழிவறைக்குள் மூக்குள்ளவன் நுழையமுடியாது.
அவன் மூச்சிலும், வியர்வையிலும், ஒன்றுக்கு விட்ட இடத்திலும் சகிக்கமுடியாத சாராயவாடைதான் வரும்.
இத்தகைய நாற்றம்பிடித்த கழிசடையாக இருப்பதுதான் பிடித்திருக்கிறதா?

சாலையில் அங்கங்கே மூன்று சுவரும் ஒரு தொட்டியும் கட்டி ஒன்றுக்கு போக ஏற்பாடுசெய்ய துப்பில்லாத அரசாங்கம், வீதிக்கு நான்கு சாராயக்கடைகளை திறந்துவைத்துள்ளது.
அரசாங்கத்தைச் சொல்லியும் குற்றமில்லை. நன்றாகக் கொள்ளையடிப்பவனாகப் பார்த்து ஓட்டு போட்டு ஆட்சியைக் கொடுத்தால் அவன் எதில் வருமானம் வருமோ அதைத்தான் செய்வான்.
கர்நாடகாவிற்கு சென்றால் தெரியும்.
இங்கே வயிறுமுட்ட குடிக்க 300 ரூ ஆகுமென்றால் அங்கே 180ரூ தான் ஆகும்.
அங்கே சாராயக் கடைகளில் வரிசை நிற்காது.
அங்கேயும் குடிக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், இந்த அளவு இல்லை.
அங்கே ஊருக்கு 4தண்ணிவண்டி என்றால் இங்கே தெருவுக்கு 4.
தமிழனை குடிக்கும் சாதனையில்(?) எவனாலும் அடிக்கமுடியாது.
மலையாளி கொஞ்சம் போட்டிபோடுவான்.
மற்றபடி குடிப்பதற்காகவே வாழ்வது தமிழினம் மட்டுமே.
கரிகாலன் காலத்திலேயே ரோமாபுரியிலிருந்து சாராயம் வந்துள்ளது.
ஔவையும் அதியமானும் கள் குடித்த வரலாறு இருக்கிறது.
இந்திய மாநிலங்களில் குடியால் குடல் அவிந்து செத்தவர்களில் முதலிடம் தமிழகம்.
இரண்டாம் இடம் கேரளா.

குடிப்பதற்கும் முன்னேறுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. குடிக்காமல் இரு என்றுகூடச் சொல்லவில்லை.
குடியுங்கள். ஆண்களும் பெண்களும் கூட குடியுங்கள்.
ஆனால், அளவாகக் குடியுங்கள். வாரம் ஒருமுறை குடியுங்கள்.

வீட்டுக்குப் போனால் பொண்டாட்டிக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவு குடிக்காதீர்கள்.

வருமானத்தை குடியில் இழந்து பிறகு கடைசிக்காலத்தில் இழுத்துக்கொண்டு கிடந்து மேலும் செலவுவைத்து செத்தும் கெடுத்தவன் ஆகாதீர்கள்.

உங்களை நினைத்தாலே கூனிக்குறுகும் நிலைக்கு உங்கள் பிள்ளைகளை ஆளாக்காதீர்கள்.

குடியை விடுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.
மொடாக்குடிகாரர்கள் பலர் 15,16 ஆண்டுகளுக்குப் பிறகு குடியை விட்டு திருந்தி வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.

குடிப்பதால் எந்த நன்மையும் கிடையாது.
பணத்தையும் கொட்டி, உடலையும் கெடுத்து ,குடலை நாசமாக்கி,  அருவருப்பான காரியங்களில் ஈடுபட்டு, பிறரை முகம்சுளிக்கவைத்து, குடும்பத்தினரை அவமானப்படவைத்து,  காலையில் தலைவலியுடன் எழுந்து வேலைக்குச் சென்றாலும் சரியாக எதையும் செய்யமுடியாமல்
அடச்சை
இந்த பிழைப்பு தேவைதானா?
கவலையை மறக்க உடல்சோர்வைப் போக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

அளவாகக் குடியுங்கள்.தீவிரக் குடிகாரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளுஙங்கள்.
கள் கிடைத்தால் அதைக்குடியுங்கள் கெடுதி குறைவு.
பீர் குடித்தால்கூட கெடுதி குறைவு.
அளவாகக் குடிப்பவர்கள் அதை அப்படியே பின்பற்றுங்கள்.
குடியைத் தொடாதவர்கள் தொடாமலே இருங்கள்.
தீவிர குடிகாரர்கள் குறைத்துக்கொள்ள வழி உண்டா பாருங்கள்.

ஒரு விசயத்தில் கொஞ்சம் சந்தோசம் கிடைத்தாலே அதில் மூழ்கி அடிமையாவது தமிழன் பழக்கம்.
நடிகனுக்கு சிலைவைத்து பாலூற்றுவது, பார்த்த படத்தையே திரும்ப பார்ப்பது, பிடித்த காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வது என்று பல்வேறு செயல்பாடுகளில் இப்பழக்கம் வெளிப்படுகிறது.

இந்த குணத்தைப் பயன்படுத்தி நம்மை சீரழிக்கப்பார்க்கிறார்கள்.

கவனம்.

No comments:

Post a Comment