Tuesday, 31 December 2024
குடியை விடுவோம்
Sunday, 23 June 2024
கல்கி எழுதிய மதுவிலக்கு சிறுகதை
Thursday, 20 June 2024
திராவிடமும் சாராயமும்
Friday, 26 May 2023
நடிக்கிறேன்
Monday, 3 April 2017
பாதி சாராயக்கடைகளை மூடிய சாதனையாளர் திரு. கே. பாலு
தமிழகத்தின் 6233 டாஸ்மாக் ல் (நெடுஞ்சாலைகளில் உள்ள) 3211 கடைகள் மூடப்படவுள்ளன.
2012 ல் வழக்கு தொடுத்து எத்தனையோ பெரிய தடங்கள் வந்தும் நேர்மையாக உறுதியாக நின்று இதை சாதித்துக்காட்டிய 'சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை' யின் தலைவர் திரு.கே. பாலு அவர்களையும் அவர் சார்ந்த 'பாட்டாளி மக்கள் கட்சி' யையும் தமிழக மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.
தமிழகத்தில் தோராயமாக ஒருகோடி பேர் தினமும் குடிக்கின்றனர்.
தமிழினத்தின் முதன்மையான பிரச்சனையை ஓரளவு வெற்றிகண்ட நாள் இது.
இதற்காகப் போராடிய மாணவி நந்தினி, உயிரையே கொடுத்த ஐயா சசி பெருமாள் ஆகியோரை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும்.
Saturday, 5 December 2015
மதுவிலக்கும் திராவிடமும்
இராஜாஜி 1949ல் நிறைவேற்றிய மதுவிலக்கால் 25 ஆண்டுகள் குடிப்பழக்கத்தை மறந்திருந்த தமிழகத்தை,
1971 ல் கருணாநிதி சட்டத்தை தளர்த்தி சாராயக்கடைகளைத் திறந்து குடிகார மாநிலமாக்கினார்.
1991ல் மது ஒழிப்பை பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அவர்கள் கருணாநிதியின் "மலிவுவிலை மதுக்கடைகளை" (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார்.
பிறகு டாஸ்மாக் கொண்டுவரப்பட்டது.
Tuesday, 4 August 2015
ஒரு படம் எடுக்கறோம் சார்
ஒரு படம் எடுக்கறோம் சார்
ஹீரோ ஒரு அப்பாவி (தெலுங்கன்)
ஒரு ஹீரோயின(வடயிந்தியர்) காதலிக்காரு.
கொஞ்சம் ரொமான்டிக் சீன், ரெண்டு டூயட் இங்க வைக்கறோம்.
ஹீரோவோட அழகான தங்கச்சிய நாலு குடிகாரர்கள் கற்பழிச்சி கொல்லுதாங்க.
ஹீரோ அவ பொணத்த பாத்து கதறி கதறி அழுறாரு.
(இந்த ரெண்டு சீனயும் அணுஅணுவா பிரிச்சு மேயறோம்)
நாலுபேருமே பெரிய எடத்து புள்ளைங்க
ஹீரோ சட்டப்படி போறாரு.
அது வழக்கம்போல நிக்கல.
(புல் மேக்கப்ல ஹீரோயின் ஆறுதல் சொல்றமாதிரி ஒரு சீன் இங்க வைக்கலாம்)
ஹீரோ வேறவழியில்லாம சட்டத்த கைல எடுக்குறாரு.
(நரம்பு பொடைக்கற மாதிரி இங்க ஒரு பாட்டு வைக்கறோம்)
அந்த நாலுபேரயும் புதுசு புதுசா யோசிச்சு விதவிதமா கொல்றாரு.
சாராய தொழிலதிபர்(நல்ல தமிழ்ப் பெயர் உடையவர்)தான் இதுக்கெல்லாம் காரணம்னு தெரியுது.
இங்க ஒரு ட்விஸ்ட்டு.
அவரோட பொண்ணுதா ஹீரோயின்.
தொழிலதிபரோட ஹீரோ மோதுறாரு.
அணுகுண்டு கண்டுபிடிச்சி 70வருசம் ஆனாலும் ஒரு துப்பாக்கி கூட இல்லாம அம்பது அடியாட்கள் கத்தி கபடாவோட வர்றாங்க.
ஹீரோ ஒத்தயாளா அவங்கள பொளக்கறாரு.
(ஈரோ ஒடம்பு லைட்டா ரெண்டு வெட்டுக்காயம் )
இந்த மோதல்ல ஹீரோவோட அம்மாவயோ அப்பாவயோ ப்ரண்டயோ இழந்திருதாரு.
மக்கள் ஈரோவுக்கு ஆதரவா பேட்டி குடுக்கறாங்க.
சாராயம் குடிக்கறதால ஏற்படுற பாதிப்புகள கண்ணீரோட காட்றோம்.
கடசில ஹீரோ மூளய யூஸ் பண்ணி க்ளைமேக்ஸ்ல கொடூரமா வில்லன சாகடிச்சிருதாரு.
மக்கள் எல்லாரும் இப்டி ஒரு ஈரோ வருவாருனு நம்பிக்கையோட எழுந்து போறாங்க.
எவன் ஈரோவா ஆகணும் நெனச்சாலும் அவன் வாழ்க்கைல அத்தனையையும் புடுங்கிட்டு விட்ருவோம்னு மறைமுக மிரட்டலும் இதில கலந்துருக்கோம் அதால பெரிய கொந்தளிப்பு எதுவும் வராது.
5ஸ்டார் ஓட்டல்ல ஸ்டோரி டிஸ்கசன்.
பாரின் சரக்கு ஒன்னுவிடாம வாங்கிவச்சிருங்க அண்ணையாகாரு.
Friday, 24 July 2015
ஈ.வே.ரா மது ஆதரவு
இது ஈ.வே.ரா வழி :p
“ஒரு மனிதனைப் பார்த்து
நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும்
நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும்
என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”
(விடுதலை 18.3.71)
’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும்
மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது.
மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....
குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள்.
இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. " (விடுதலை 16.2.69).
”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது.
நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)
1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள்,
குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள்
அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள்.
இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் புண்ணிய சேத்திரங்களுக்கு அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள்.
(குடியரசு 3.10.1937)”
"கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.”
(கு.அ.3.10.1937)
‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”
(கு.அ.3.10.1937)
”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ
அது போல் போலீசாரும்,
அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று
மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்.
அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்”
(விடுதலை 16.2.69)
’’மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது.
(விடுதலை 16.2.69)”,
“நான் கீழ் ஜாதி என்பதை
எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ
அப்படித்தான்
குடிகாரன் குற்றவாளி என்பதையும்
மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும்
ஒப்புக்கொள்வதில்லை.
(விடுதலை 16.2.69)”
“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” (விடுதலை 18.3.71)
”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம்.
வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும்.
மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும்.
பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும்
அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும்
என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)
“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது.
அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது.
கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு.
இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்.
(விடுதலை 18.3.71)
Wednesday, 15 July 2015
தண்ணிவண்டி தமிழர்களே !
தண்ணிவண்டி தமிழர்களே !
ஒரு சொட்டு பிராந்தி நாக்கில் பட்டவுடன்
வாந்தியில் மிதக்கும் பித்த உடம்புக்காரன்கூட
பெருமுயற்சி செய்து பயிற்சி எடுத்து
குடிகாரனாக மாறுகிறான்.
அந்த அளவுக்கு தமிழகத்தில் குடிக்கலாச்சாரம் புகுந்துவிட்டது.
குடிக்காதவனை தீண்டத்தகாதோர் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
குடிப்பழக்கமில்லாதவனை ஏதோ வேட்டிகட்டத்தெரியாதவன் போல பார்க்கின்றனர்.
குடிப்பழக்கம் உலகம் முழுவதும்தான் இருக்கிறது.
முன்னேறிய நாடுகளில் ஆண்களும் பெண்களும் குடிக்கிறார்கள்.
அவர்கள் நன்றாக வாழவில்லையா?
அவர்கள் குடிப்பதற்கும் இங்கே குடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
அவர்கள் வாரத்திற்கு 5நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதி இரண்டு நாட்கள் தங்களுக்காக செலவளிக்கின்றனர்.
பிக்னிக், சினிமா, என்று போய்விட்டு சனிக்கிழமை இரவு க்ளப்க்கு சென்று குடிக்கின்றனர்.
நிதானத்தில் இருப்பவர்கள் வீட்டுக்குச் செல்கின்றனர். மீதிபேர் அங்கேயே விழுந்துகிடந்துவிட்டு விடிந்ததும் செல்கின்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுவேலைகளைச் செய்து குடும்பத்துடன் நேரம் செலவிட்டுவிட்டு மறுபடி திங்கள் கிழமை ஒழுங்காக வேலைக்கு செல்கின்றனர்.
இங்கே அப்படியா?
இருட்டத் தொடங்கியதுமே கைகால் நடுங்கத் தொடங்கிவிடுகிறது.
தலையை விற்றாவது குடித்தே ஆகவேண்டும் என்று பதைபதைப்பு தொடங்கிவிடுகிறது.
குடித்தாலும் நிதானமே இல்லாத அளவுக்கு குடிப்பது, வேட்டி விலகி தெருவில் விழுந்துகிடப்பது, குடல் வெளிவர வாந்தி எடுப்பது, கண்டபடி உளறுவது, பைத்தியம் பிடித்ததுபோல நடந்துகொள்வது, குப்பைமேட்டில் படுத்துக்கிடப்பது, தாறுமாறாக வண்டி ஓட்டி சாவது அல்லது கொலைசெய்வது, வீட்டுக்குப்போனால் வெறிவந்து மனைவியை அடிப்பது, குடிநாற்றத்தோடு பிள்ளைகளைக் கொஞ்சுவது
இதையெல்லாம் பெருமையாக நினைப்பது (?!?????)
ரயிலில் வரும்போது நம் தமிழ்குடிமகன்கள் பண்ணும் கூத்து இருக்கிறதே.
குடித்துவிட்டு படுத்தவன் இடையில் ஒன்றுக்கு போய்விட்டு வெளியே வருவான்.
அடுத்த அரைமணிநேரத்துக்கு அந்த கழிவறைக்குள் மூக்குள்ளவன் நுழையமுடியாது.
அவன் மூச்சிலும், வியர்வையிலும், ஒன்றுக்கு விட்ட இடத்திலும் சகிக்கமுடியாத சாராயவாடைதான் வரும்.
இத்தகைய நாற்றம்பிடித்த கழிசடையாக இருப்பதுதான் பிடித்திருக்கிறதா?
சாலையில் அங்கங்கே மூன்று சுவரும் ஒரு தொட்டியும் கட்டி ஒன்றுக்கு போக ஏற்பாடுசெய்ய துப்பில்லாத அரசாங்கம், வீதிக்கு நான்கு சாராயக்கடைகளை திறந்துவைத்துள்ளது.
அரசாங்கத்தைச் சொல்லியும் குற்றமில்லை. நன்றாகக் கொள்ளையடிப்பவனாகப் பார்த்து ஓட்டு போட்டு ஆட்சியைக் கொடுத்தால் அவன் எதில் வருமானம் வருமோ அதைத்தான் செய்வான்.
கர்நாடகாவிற்கு சென்றால் தெரியும்.
இங்கே வயிறுமுட்ட குடிக்க 300 ரூ ஆகுமென்றால் அங்கே 180ரூ தான் ஆகும்.
அங்கே சாராயக் கடைகளில் வரிசை நிற்காது.
அங்கேயும் குடிக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், இந்த அளவு இல்லை.
அங்கே ஊருக்கு 4தண்ணிவண்டி என்றால் இங்கே தெருவுக்கு 4.
தமிழனை குடிக்கும் சாதனையில்(?) எவனாலும் அடிக்கமுடியாது.
மலையாளி கொஞ்சம் போட்டிபோடுவான்.
மற்றபடி குடிப்பதற்காகவே வாழ்வது தமிழினம் மட்டுமே.
கரிகாலன் காலத்திலேயே ரோமாபுரியிலிருந்து சாராயம் வந்துள்ளது.
ஔவையும் அதியமானும் கள் குடித்த வரலாறு இருக்கிறது.
இந்திய மாநிலங்களில் குடியால் குடல் அவிந்து செத்தவர்களில் முதலிடம் தமிழகம்.
இரண்டாம் இடம் கேரளா.
குடிப்பதற்கும் முன்னேறுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. குடிக்காமல் இரு என்றுகூடச் சொல்லவில்லை.
குடியுங்கள். ஆண்களும் பெண்களும் கூட குடியுங்கள்.
ஆனால், அளவாகக் குடியுங்கள். வாரம் ஒருமுறை குடியுங்கள்.
வீட்டுக்குப் போனால் பொண்டாட்டிக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவு குடிக்காதீர்கள்.
வருமானத்தை குடியில் இழந்து பிறகு கடைசிக்காலத்தில் இழுத்துக்கொண்டு கிடந்து மேலும் செலவுவைத்து செத்தும் கெடுத்தவன் ஆகாதீர்கள்.
உங்களை நினைத்தாலே கூனிக்குறுகும் நிலைக்கு உங்கள் பிள்ளைகளை ஆளாக்காதீர்கள்.
குடியை விடுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.
மொடாக்குடிகாரர்கள் பலர் 15,16 ஆண்டுகளுக்குப் பிறகு குடியை விட்டு திருந்தி வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.
குடிப்பதால் எந்த நன்மையும் கிடையாது.
பணத்தையும் கொட்டி, உடலையும் கெடுத்து ,குடலை நாசமாக்கி, அருவருப்பான காரியங்களில் ஈடுபட்டு, பிறரை முகம்சுளிக்கவைத்து, குடும்பத்தினரை அவமானப்படவைத்து, காலையில் தலைவலியுடன் எழுந்து வேலைக்குச் சென்றாலும் சரியாக எதையும் செய்யமுடியாமல்
அடச்சை
இந்த பிழைப்பு தேவைதானா?
கவலையை மறக்க உடல்சோர்வைப் போக்க எத்தனையோ வழிகள் உள்ளன.
அளவாகக் குடியுங்கள்.தீவிரக் குடிகாரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளுஙங்கள்.
கள் கிடைத்தால் அதைக்குடியுங்கள் கெடுதி குறைவு.
பீர் குடித்தால்கூட கெடுதி குறைவு.
அளவாகக் குடிப்பவர்கள் அதை அப்படியே பின்பற்றுங்கள்.
குடியைத் தொடாதவர்கள் தொடாமலே இருங்கள்.
தீவிர குடிகாரர்கள் குறைத்துக்கொள்ள வழி உண்டா பாருங்கள்.
ஒரு விசயத்தில் கொஞ்சம் சந்தோசம் கிடைத்தாலே அதில் மூழ்கி அடிமையாவது தமிழன் பழக்கம்.
நடிகனுக்கு சிலைவைத்து பாலூற்றுவது, பார்த்த படத்தையே திரும்ப பார்ப்பது, பிடித்த காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வது என்று பல்வேறு செயல்பாடுகளில் இப்பழக்கம் வெளிப்படுகிறது.
இந்த குணத்தைப் பயன்படுத்தி நம்மை சீரழிக்கப்பார்க்கிறார்கள்.
கவனம்.