Thursday 20 June 2024

திராவிடமும் சாராயமும்

திராவிடமும் சாராயமும்

“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும்என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”
(விடுதலை 18.03.1971)

 சாகும் தருவாயில் ஈவேரா எழுதிய வார்த்தைகள் இவை.
 ஆரம்பத்திலேயே அதாவது 1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டபோதே இந்த நிலைப்பாட்டில் இருந்துள்ளார் ஈவேரா.

”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள்,
குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள்
அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள்.
இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் புண்ணிய சேத்திரங்களுக்கு அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள்."
"கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.”
" மதுவிலக்கு அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.” 
(குடி அரசு 03.10.1937)

”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது.
நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.”
”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம்.
வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும்.
மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும்.
பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும் அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
(விடுதலை 09.11.1968)

’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும் மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. 
மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....
குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள்?!
இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. "
”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று/சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்.
அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்” 
’’மது கீழ்ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது."
“நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும் மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை"
(விடுதலை 16.02.1969)

“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. 
அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது.
கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு.
இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்."
“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” 
(விடுதலை 18.3.1971)

 ஆனால் ஈவேரா தென்னை மரங்களை வெட்டினார் என்பது மட்டுமே திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்யப் படுகிறது

(இதுவரை 25.07.2015 அன்றைய பதிவு) 

 ஈவேரா காட்டிய வழிப்படி 1949 லிருந்து 25 ஆண்டுகள் மதுவிலக்கு நடவடிக்கை மூலம் குடியை மறந்திருந்த தமிழர்களை 1971 உல் அரசாங்க சாராயக் கடைகள் திறந்து குடிக்க வைத்தார் கருணாநிதி!

 மது ஒழிப்பை பரப்புரை செய்து 1991ல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, கருணாநிதியின் "மலிவுவிலை மதுக்கடைகளை" (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார். 2003 இல் அவரே டாஸ்மாக் என்று மீண்டும் அரசாங்க சாராயத்தைக் கொண்டுவந்தார்.
 சசி பெருமாள் சாராயத்தை ஒழிக்க போராடி உயிரிழந்தபோது ஜெயலலிதா டாஸ்மாக் இல் போலீஸ் பாதுகாப்பு போட்டு சாராயம் விற்றார்.

 இவற்றை மிஞ்சும் வகையில் ஸ்டாலின் ஆட்சியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'கள்ளச் சாராய மரணங்கள்' மீண்டும் நிகழத் தொடங்கின.  
2023 இல் மரக்காணம் கள்ள சாராயம் அருந்தி 14 பேர் சாவு!
தற்போது 40 பேர் கள்ளக்குறிச்சி பகுதியில் சாவு!
இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் நபருக்கு பத்து லட்சம் நிவாரணமாக அறிவிக்கப் பட்டுள்ளது!
 சாதிக் பாட்சா போன்றோர் மூலம் போதைப்பொருள் வியாபாரமும் கொடிகட்டி பறக்கிறது.

 ஆக திராவிட விஷச்செடி யின் நீர் ஆதாரம் சாராயம்தான்!
 சாராய வருமானம் இல்லாமல் அரசு நடக்காது என்பதும் பொய்!
அரசு நினைத்தால் முடியும்!
மதுவுக்கு பதில் பால் பொருளாதாரத்தை கொண்டுவர முடியும்!
 கொரோனா காலகட்டத்தில் சாராயம் முற்றாக தடைபட்டபோது குடிகாரர்கள் எவரும் சாகவில்லை பைத்தியம் ஆகவில்லை சட்ட ஒழுங்கு பிரச்சனை கூட வரவில்லை!
ஆனால் மது குடித்தவன் தன் மூன்று மகள்களைக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது!

 மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருந்தால் மட்டுமே தாங்கள் ஆளமுடியும் என்பதாலேயே திராவிடம் உயிரைக் கொடுத்தாவது மதுவைத் திணிக்கும்! 

No comments:

Post a Comment