Showing posts with label டாஸ்மாக். Show all posts
Showing posts with label டாஸ்மாக். Show all posts

Monday, 3 April 2017

பாதி சாராயக்கடைகளை மூடிய சாதனையாளர் திரு. கே. பாலு

தமிழகத்தின் 6233 டாஸ்மாக் ல் (நெடுஞ்சாலைகளில் உள்ள) 3211 கடைகள் மூடப்படவுள்ளன.

2012 ல் வழக்கு தொடுத்து எத்தனையோ பெரிய தடங்கள் வந்தும் நேர்மையாக உறுதியாக நின்று இதை சாதித்துக்காட்டிய 'சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை' யின் தலைவர் திரு.கே. பாலு அவர்களையும் அவர் சார்ந்த 'பாட்டாளி மக்கள் கட்சி' யையும் தமிழக மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.

தமிழகத்தில் தோராயமாக ஒருகோடி பேர் தினமும் குடிக்கின்றனர்.

 தமிழினத்தின் முதன்மையான பிரச்சனையை ஓரளவு வெற்றிகண்ட நாள் இது.

இதற்காகப் போராடிய மாணவி நந்தினி, உயிரையே கொடுத்த ஐயா சசி பெருமாள் ஆகியோரை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும்.

Saturday, 5 December 2015

மதுவிலக்கும் திராவிடமும்

இராஜாஜி 1949ல் நிறைவேற்றிய மதுவிலக்கால் 25 ஆண்டுகள் குடிப்பழக்கத்தை மறந்திருந்த தமிழகத்தை,
1971 ல் கருணாநிதி சட்டத்தை தளர்த்தி சாராயக்கடைகளைத் திறந்து குடிகார மாநிலமாக்கினார்.

1991ல் மது ஒழிப்பை பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அவர்கள் கருணாநிதியின் "மலிவுவிலை மதுக்கடைகளை" (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார்.
பிறகு டாஸ்மாக் கொண்டுவரப்பட்டது.

Tuesday, 4 August 2015

ஒரு படம் எடுக்கறோம் சார்

ஒரு படம் எடுக்கறோம் சார்

ஹீரோ ஒரு அப்பாவி (தெலுங்கன்)
ஒரு ஹீரோயின(வடயிந்தியர்) காதலிக்காரு.
கொஞ்சம் ரொமான்டிக் சீன், ரெண்டு டூயட் இங்க வைக்கறோம்.

ஹீரோவோட அழகான தங்கச்சிய நாலு குடிகாரர்கள் கற்பழிச்சி கொல்லுதாங்க.
ஹீரோ அவ பொணத்த பாத்து கதறி கதறி அழுறாரு.

(இந்த ரெண்டு சீனயும் அணுஅணுவா பிரிச்சு மேயறோம்)

நாலுபேருமே பெரிய எடத்து புள்ளைங்க

ஹீரோ சட்டப்படி போறாரு.
அது வழக்கம்போல நிக்கல.

(புல் மேக்கப்ல ஹீரோயின் ஆறுதல் சொல்றமாதிரி ஒரு சீன் இங்க வைக்கலாம்)

ஹீரோ வேறவழியில்லாம சட்டத்த கைல எடுக்குறாரு.
(நரம்பு பொடைக்கற மாதிரி இங்க ஒரு பாட்டு வைக்கறோம்)

அந்த நாலுபேரயும் புதுசு புதுசா யோசிச்சு விதவிதமா கொல்றாரு.

சாராய தொழிலதிபர்(நல்ல தமிழ்ப் பெயர் உடையவர்)தான் இதுக்கெல்லாம் காரணம்னு தெரியுது.

இங்க ஒரு ட்விஸ்ட்டு.
அவரோட பொண்ணுதா ஹீரோயின்.

தொழிலதிபரோட ஹீரோ மோதுறாரு.

அணுகுண்டு கண்டுபிடிச்சி 70வருசம் ஆனாலும் ஒரு துப்பாக்கி கூட இல்லாம அம்பது அடியாட்கள் கத்தி கபடாவோட வர்றாங்க.
ஹீரோ ஒத்தயாளா அவங்கள பொளக்கறாரு.
(ஈரோ ஒடம்பு லைட்டா ரெண்டு வெட்டுக்காயம் )

இந்த மோதல்ல ஹீரோவோட அம்மாவயோ அப்பாவயோ ப்ரண்டயோ இழந்திருதாரு.

மக்கள் ஈரோவுக்கு ஆதரவா பேட்டி குடுக்கறாங்க.
சாராயம் குடிக்கறதால ஏற்படுற பாதிப்புகள கண்ணீரோட காட்றோம்.

கடசில ஹீரோ மூளய யூஸ் பண்ணி க்ளைமேக்ஸ்ல கொடூரமா வில்லன சாகடிச்சிருதாரு.

மக்கள் எல்லாரும் இப்டி ஒரு ஈரோ வருவாருனு நம்பிக்கையோட எழுந்து போறாங்க.

எவன் ஈரோவா ஆகணும் நெனச்சாலும் அவன் வாழ்க்கைல அத்தனையையும் புடுங்கிட்டு விட்ருவோம்னு மறைமுக மிரட்டலும் இதில கலந்துருக்கோம் அதால பெரிய கொந்தளிப்பு எதுவும் வராது.

5ஸ்டார் ஓட்டல்ல ஸ்டோரி டிஸ்கசன்.
பாரின் சரக்கு ஒன்னுவிடாம வாங்கிவச்சிருங்க அண்ணையாகாரு.

Friday, 24 July 2015

ஈ.வே.ரா மது ஆதரவு

இது ஈ.வே.ரா வழி :p

“ஒரு மனிதனைப் பார்த்து

நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும்

நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும்

என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”

(விடுதலை 18.3.71)

’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும்

மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது.

மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....

குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. " (விடுதலை 16.2.69).

”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது.
நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)

1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள்,
குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள்
அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள்.
இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் புண்ணிய சேத்திரங்களுக்கு அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள்.
(குடியரசு 3.10.1937)”

"கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.”
(கு.அ.3.10.1937)

‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”
(கு.அ.3.10.1937)

”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ

அது போல் போலீசாரும்,

அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று

மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்.

அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்”
(விடுதலை 16.2.69)

’’மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது.
(விடுதலை 16.2.69)”,

“நான் கீழ் ஜாதி என்பதை

எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ

அப்படித்தான்
குடிகாரன் குற்றவாளி என்பதையும்

மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும்

ஒப்புக்கொள்வதில்லை.
(விடுதலை 16.2.69)”

“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” (விடுதலை 18.3.71)

”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம்.
வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும்.
மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும்.

பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும்

அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும்

என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)

“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது.
அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது.
கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு.
இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்.
(விடுதலை 18.3.71)