Friday 24 July 2015

ஈ.வே.ரா மது ஆதரவு

இது ஈ.வே.ரா வழி :p

“ஒரு மனிதனைப் பார்த்து

நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும்

நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும்

என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”

(விடுதலை 18.3.71)

’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும்

மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது.

மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....

குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. " (விடுதலை 16.2.69).

”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது.
நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)

1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள்,
குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள்
அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள்.
இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் புண்ணிய சேத்திரங்களுக்கு அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள்.
(குடியரசு 3.10.1937)”

"கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.”
(கு.அ.3.10.1937)

‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”
(கு.அ.3.10.1937)

”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ

அது போல் போலீசாரும்,

அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று

மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்.

அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்”
(விடுதலை 16.2.69)

’’மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது.
(விடுதலை 16.2.69)”,

“நான் கீழ் ஜாதி என்பதை

எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ

அப்படித்தான்
குடிகாரன் குற்றவாளி என்பதையும்

மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும்

ஒப்புக்கொள்வதில்லை.
(விடுதலை 16.2.69)”

“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” (விடுதலை 18.3.71)

”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம்.
வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும்.
மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும்.

பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும்

அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும்

என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)

“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது.
அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது.
கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு.
இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்.
(விடுதலை 18.3.71)

No comments:

Post a Comment