Tuesday 9 October 2018

வீரமணி ஐயரின் தமிழிசைத் தொண்டு

வீரமணி ஐயர் நினைவு நாள் இன்று (08 அக்டோபர்))

தமிழிசைக்குத் அளப்பரிய தொண்டு செய்த வீரமணி ஐயர் ஈழத்தின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாயம்மா" போன்ற பல பாடல்களை எழுதி இசையமைத்தவர்.

72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார்.

பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.

கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணி ஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார்.

அன்னாரின் நினைவைப் போற்றுவோம்!

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி

No comments:

Post a Comment