Saturday 6 October 2018

கயவாளி கட்டபொம்மன் - 9

கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 9 (இறுதிப் பகுதி)

பதிவர்: ஆதி பேரொளி

"கட்டபொம்மனின் முடிவு"

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டு இருக்க கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிவிட்டான்.

மறுநாள் அக்கோட்டை கைப்பற்றப்பட்டதும் கட்டபொம்மன் ஓடிவிட்டது பானர்மேனுக்கு தெரிகிறது.

ஏற்கனவே நடந்ததுபோல கட்டபொம்மன் ஆங்கிலேய தலைமை அலுவலகத்திற்கு போய் உயரதிகாரிகளை காக்கா பிடித்து தப்பிவிடுவான் என்று பானர்மேன் ஊகித்தான்.

உடனே சுற்றியுள்ள பாளையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினான்.
கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்போர் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்றும் அவனைக் கண்டதும் உயிருடனோ பிணமாகவோ பிடித்து ஆங்கிலப் படையிடம் ஒப்படைக்கும்படி அதில் எழுதியிருந்தது.

எட்டையபுரம் சென்று தமக்கு வழிகாட்ட உள்ளூர் விபரமறிந்த சிலரைப் பெற்றுக்கொண்டான்.

தனது படையில் ஒரு பகுதியை திருச்சி நோக்கியும் மற்றொரு பகுதியை வடக்கு நோக்கியும் போகுமாறு பணித்து
கட்டபொம்மன் திருச்சி அல்லது சென்னை அலுவலகத்தை அடையுமுன் எப்படியாவது துரத்தி பிடிக்கும்படி உத்தரவிட்டான்.

அப்போது லெப்டினண்ட் டல்லாஸ்  தலைமையில் சென்ற படைத்தொகுதி கட்டபொம்மனைத் துரத்திச் சென்று கோல்வார்ப்பட்டியில் கட்டபொம்மன் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து சுற்றிவளைத்தது.

கட்டபொம்மன் மற்றவர்களை அம்போ என்று விட்டுவிட்டு எப்படியோ தப்பிவிட்டான்.
கட்டபொம்மனுடைய கொள்ளைக் கூட்டணியில் இருந்த பயங்கர கொள்ளையன் 'நாகலாபுரம் சௌந்தரபாண்டிய நாயக்கன்' இதில் பிடிபட்டான்.
கட்டபொம்மனின் தம்பி இருவரும் அமைச்சர் தனாதிபதிப் பிள்ளையும் பிடிபட்டனர்.

கட்டபொம்மனின் குடும்ப பெண்கள் தூத்துக்குடி சென்று கட்டபொம்மனது ஆங்கிலேய நண்பன் டேவிசனிடம் சரண் புகுந்தனர்.
அவனோ தன்னால் எதுவும் செய்யமுடியாதென்று ஆங்கிலேயரிடமே அவர்களை ஒப்படைத்தான்.

கட்டபொம்மன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்கள் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

கட்டபொம்மனை முதல் விடுதலை வீரன் என்று பலரும் கருத ஒரு காரணம் அவனே வெள்ளையரால் தூக்கில் போடப்பட்ட முதல் பாளையக்காரன் என்பதுதான்.
ஆனால் அவனுக்கு முன்பே பானர்மேன் உத்தரவின்பேரில் தனாதிபதிப் பிள்ளை தூக்கில் போடப்பட்டு இறந்தபிறகு தலை வெட்டப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் நட்டுவைக்கப்பட்டது.

அடுத்தது சௌந்தரபாண்டிய நாயக்கன் கோபாலபுரத்தில் தூக்கிலப்பட்டான்.

கட்டபொம்மன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பகலில் மறைந்தும் இரவில் கால்நடையாகவும் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
  சிவகங்கைச் சீமையின் ஆளியூரில் பதுங்கி மறுநாள் கலியபுரம் எனும் ஊரில் பதுங்கியிருந்தான்.

அப்பகுதி புதுக்கோட்டை மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட திருக்களம்பூர் எனும் பகுதியின் எல்லை.
அங்கே புதுக்கோட்டை அரசின் திருக்களம்பூர் தளபதியாக 'சர்தார் முத்துவைரவ அம்பலக்காரர்' என்பவன் இருந்தான்.

அவன் வெளியாட்கள் நடமாட்டத்தை அறிந்து அங்கே சென்று கட்டபொம்மனைப் பிடித்தான்.
சிறிதுநேரத்தில் ஆங்கிலேயரும் அங்கே வந்தடைந்தனர்.

கட்டபொம்மன் தன்னை பானர்மேன் தவிர வேறு வெள்ளையர் யாரிடமாவது ஒப்படைக்குமாறு அம்பலக்காரர் காலில் விழுந்து கெஞ்சி உயிர்பிச்சை கேட்டான்.

அந்த தளபதியோ மறவன். திருநெல்வேலி மறவர்களுக்கு கெட்டபொம்மு செய்த கொடுமைகளை மனதில் கொண்டு அந்த அம்பலக்காரர் கட்டபொம்மனை தரதரவென இழுத்து வந்து பானர்மேனின் படைமுன்பே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டான்.

(புதுக்கோட்டை அரண்மனை கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு வெள்ளையரிடம் ஒப்படைத்ததாகவும் இந்த சம்பவம் திரித்து எழுதப்படுகிறது)

1799 அக்டோபர் 16 ஆம் தேதி கயத்தாறில் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டான்.
அனைத்து பாளையக்காரர்களும் வரவழைக்கபட்டனர்.

அனைவருமே கட்டபொம்மு மீது புகார்களை அடுக்கினர்.
பொதுமக்களும் சாட்சியம் அளித்தனர்.
வெள்ளைய அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

வேறுவழியில்லாத கட்டபொம்மன் அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு வெள்ளையர்கள் சாவிற்கு காரணமான கட்டபொம்மனை மன்னிக்க ஆங்கில விசாரணைக் குழு தயாராக இல்லை.
எனவே கட்டபொம்மனுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயருக்கு மக்கள் ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்க மக்கள் அதிகம் வெறுக்கும் கட்டபொம்மனை பொதுவெளியில் தூக்கிலிட பானர்மேன் உத்தரவிட்டான்.

உடனடியாக கயத்தாறு முக்கிய சாலையில் ஒரு புளியமரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டு கட்டபொம்மன் கொல்லப்பட்டான்.

அங்கு வந்திருந்த பாளையக்காரர் அனைவரும் திகிலடைந்தனர்.

தமிழகத்தில் நன்கு காலூன்றிவிட்ட ஆங்கிலேயர் இனி யார் ஆதரவும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பாளையக்காரர், நவாபு, நிஜாம் என ஆதிக்கம் செலுத்தி வந்த அனைவரது அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இனி பாளையங்கள் செலுத்தும் சிற்றரசு ஆட்சி செல்லாதென்றும்  அனைத்து பாளையக்காரர்களும் தமது கோட்டைகளை இடித்துவிடுமாறும் உத்தரவிட்ட பானர்மேன்
அவர்களது நிலத்தில் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு வரி கட்டும் நிலக்கிழார்களாக பாளையக்காரர்கள் தொடர்ந்து இருக்கலாம் என்றும் உத்தரவிட்டான்.

கட்டபொம்மன் போன்ற ஒரு கோழை வந்தேறித் தெலுங்கனை தமிழருக்காகப் போராடிய மபொசி ஏன் ஆதரிக்கவேண்டும்?!

அரசியல்தான் காரணம்.

காங்கிரஸ் ஆதரவாளரான மபொசி திராவிடத்தையும் அதில் தெலுங்கர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தார்.
சென்னையை ஆந்திரர் கேட்டபோது அவர்களை எதிர்த்து கடுமையாகப் போராடினார்.

இதனால் அவர் இனவெறியர் என்றும் தெலுங்கர்-எதிரி என்றும் நடுநிலை வேடமிடும் கயவர்களால் குற்றம்சாட்டப் பட்டார்.

இதைச் சமன்செய்யும் வகையில் அவர் தமிழகத்தின் உட்பகுதித் தெலுங்கு வந்தேறு குடிகளை ஆதரித்தார்.
ஆந்திராவின் அசல் தெலுங்கருக்கும் தமிழக வந்தேறித் தெலுங்கருக்கும் வேறுபாடு இருப்பதாகப் பேசினார்.

அவர்கள் தமிழர்களே என்றும் கூறத் துணிந்தார்.
கருணாநிதி தூய தமிழர் என்று கூறினார்.
ஆனால் கருணாநிதி ஆட்சியில் 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' போல தெலுங்கு வரலாறு தோண்டப்படுவதைத் தடுக்க ஆங்கிலேயர் கால ஆவணங்கள் சேமிக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் எரிக்கப்பட்டு சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதன்பிறகு தெலுங்கரான பந்துலு கட்டபொம்மன் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தார்.
போலியான வரலாற்றைக் கூறிய இந்த திரைப்படம் வெளியாக உதவிய மபொசி அதை ஈடுகட்டும் வகையில் பந்துலுவை வைத்தே கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சி வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக்கினார்.

ம.பொ.சி தமிழகத்தில் வாழ்ந்த தெலுங்கரில் ஒரு நாட்டுப்பற்றாளனைத் தேடி கட்டபொம்மனை கையிலெடுத்தார்.

உண்மை தெரிந்தபிறகு கைவிடமுயன்றார்.
ஆனால் மாற்றாக ஒரு வீரமான தமிழகத் தெலுங்கரின் வரலாறு தேவைப்பட்டது.

  ஆனால் அப்படி யாருமே கிடைக்கவில்லை.


No comments:

Post a Comment