Friday 27 November 2015

தமிழியத்தின் வகைகள்

தமிழியத்தின் வகைகள்:

தமிழியம் மூன்று வகைப்படுகிறது.
அவையாவன,

அ) தமிழ்நாட்டாண்மை அல்லது தமிழ்த் தேசியம்.
ஆ) தனித் தமிழியம்
இ) தீவிரத் தமிழியம்.

முதலில் தமிழ்நாட்டாண்மை என்பது,
 
தமிழரின் தாயக நிலத்தில் பல்வேறு இனங்களை இணைத்து தலைமையை தமிழரிடம் வைத்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டை அமைப்பது ஆகும்.
இது இருவகைப்படும்.
அ) அறவழித் தமிழ்நாட்டாண்மை
ஆ) ஆயுதவழித் தமிழ்நாட்டாண்மை

இரண்டாவது தனித்தமிழியம்,
 
தமிழரின் தாயக நிலத்தில் தமிழரல்லாதோரை அவரவர் தாய்நிலத்திற்கு அனுப்பிவிட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழ்க்குடிகளை தமிழ்த் தாயக நிலத்திற்கு மீள்குடியேற்றி தமிழரே தமிழரை 100% ஆளும், ஆளப்படும் நாட்டை நிறுவுவது.

மூன்றாவது தீவிரத் தமிழியம்,
 
நாடு என்கிற வரையறையில்லாத உலகில் உள்ள அத்தனை மக்களும் தமிழரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவந்து உலகைத் தமிழர் ஆள்வதை வலியுறுத்துவது.

இதில் எது சரி எது தவறு என்பதை காலம் முடிவு செய்யும்.

தனித்தமிழியம் மற்றும் தீவிரத் தமிழியத்திற்கு அறவழி என்பது கிடையாது.

மக்கள் எந்தவொரு கொள்கையிலும் மென்மையில் இருந்து தீவிரத்திற்கு நகர்வார்கள்.

நாம் அறவழித் தமிழ்நாட்டாண்மையிலும் ஆயுதவழித் தமிழ்நாட்டண்மையிலும் தோற்றுவிட்டோம்.

இப்போது அடுத்த கட்டமான தனித்தமிழியத்திற்கு காலம் நம்மை நகர்த்துகிறது.

இதிலும் தோற்றால் தீவிரத்தமிழியத்தைத் தமிழர்கள் கையிலெடுக்கும் நிலை வரலாம்.

அப்போது,
ஒன்று உலகம் என்றுமில்லாத நன்மையை அடையும்
அல்லது என்றுமில்லாத நாசத்தை அடையும்.
.

No comments:

Post a Comment