Showing posts with label அறவழி. Show all posts
Showing posts with label அறவழி. Show all posts

Thursday, 19 July 2018

நெல்சன் மண்டேலா சாதித்தது என்ன?

நெல்சன் மண்டேலா சாதித்தது என்ன?

மொபைல் கேமரா போராளிகள் இன்று மட்டும் இல்லை அன்றே உண்டு.

அதாவது நமது பிரச்சனைக்காக நாம் போராடாமல் ஊரையே கூவி அழைத்துவிட்டால் நியாயம் கிடைத்துவிடும் என்று நம்புபவர்கள்.

போராடுவதை விட கூவுவது எளிதல்லவா?

சல்லிக்கட்டு போராட்டம் நடந்தாலும் நடந்தது,
இன்று ஒரு கிராமத்தில் ஒரு குழியை மூடவேண்டும் என்றாலும் அந்த ஊர் இளைஞன் ஒரு வீடியோ எடுத்து "ஜல்லிக்கட்டு போராட்டம் போல நடத்தவேண்டும்" என்று பேசி  சமூகவலையில் பரப்பிவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து லைக்குகளை எண்ணிக்கொண்டு குழியை மூட உலகமே திரண்டுவரும் என்று எதிர்பார்த்தபடி இருப்பது வாடிக்கையாகிவிட்டது.

உலகத்தின் கவனத்திற்கு நமது பிரச்சனையைக் கொண்டு சென்றால் அது தீர்ந்துவிடும் என்றால்,

நெல்சன் மண்டேலா பற்றி உலகத்திற்கே தெரியும் ஆனால் ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கருக்கே கிடைத்துவிட்டதா?
  தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கம் குறைந்துவிட்டதா?

பதில் "சிறிதும் இல்லை"

இதேபோல யாசர் அராபத் பற்றி உலகத்திற்கே தெரியும் ஆனால் பாலஸ்தீனம் அமைந்துவிட்டதா?

தலாய்லாமா பற்றி உலகத்திற்கே தெரியும் திபெத் விடுதலை ஆனதா?

இதுபோல உலகத்தின் பரந்துவிரிந்த கண்களின் முன்னிலையிலேயே பல அநியாயங்களும் அடக்குமுறைகளும் கொடூரங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

2009 தமிழினப் படுகொலை அப்படிதான் நடந்தது.

இன்றும் அதற்கான ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு சர்வதேசம் நீதி வழங்கும் என்று திரிபவர்கள் உண்டு.

நாம் ஏன் அகிம்சையை முதலில் தேர்ந்தெடுக்கிறோம்?

ஏனெனில் நாம் அறவழியில் நோகாமல் நோன்பு கும்பிடலாம்.

அதிகார வர்க்கமும் அதையே விரும்புகிறது.
அப்போதுதான் அவர்கள் அடிக்க, நாம் அடி "வாங்குவதை" பெருமையாக நினைப்போம்.

நாம் இப்படி அடிவாங்கிக்கொண்டே போனால் நமக்கும் ஒரு தலாய்லாமா கிடைப்பார்.
நோபல் பரிசு கூட கொடுப்பார்கள்.
ஆனால் தீர்வுதான் கிடைக்காது.

சல்லிக்கட்டு போராட்டம் பாதி வெற்றிதான் பெற்றது.
ஸ்டெர்லைட் போராட்டமும் நிரந்தர வெற்றி பெறவில்லை.
இந்த வெற்றிகளின் முன்பு அதற்கான இழப்புகளைக் கணக்கிட்டால் இதற்கு சட்டத்தை நாமே கையிலெடுத்திருக்கலாம் என்று தோன்றும்.

காவிரி பிரச்சனையை நாம் 150 ஆண்டுகளாக அறவழியில்தான் கையாள்கிறோம்.
அது ஐபிஎல்லில் செருப்பு வீசியதில் முடிந்தது. அவ்வளவுதான்.

ஆனால் நமது வீரப்பனாரும் அவரது சொற்ப ஆயுத பலமும் குறுகிய காலத்திற்கு பெற்றுத்தந்த நியாயத்தை ஜனநாயகப் போராளிகளும் இத்தனை பெரிய ஜனநாயகமும் உயர் உச்ச நீதிமன்றங்களும் பெற்றுத்தர முடிந்ததா?

இதே நமது தமிழரசனார் பொன்பரப்பி வங்கியைக் கொள்ளையடிக்கும் திட்டம் உளவுத்துறைக்குத் தெரியாமலிருந்து அவர் அந்த கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி அதன்மூலம் வெடிமருந்து தயாரித்து அணையை உடைத்திருந்தால் காவிரிப் பிரச்சனை உடனடி முடிவுக்கு வந்திருக்குமா இல்லையா?

நமது சங்கரலிங்கனாரும் திலீபனும் அன்னை பூபதியும் நடத்திய அறவழி போராட்டம் எதில் முடிந்தது?

எட்டுவழிச்சாலை நில கையகப்படுத்தல் பணி 85% முடிந்துவிட்டது என்கிறார்கள்.

நமது எதிர்வினை என்ன?

பெண்கள் கதறி அழுதபடி 4 படம். சில தலைவர்கள் கைது. அவ்வளவுதான்.

  இங்கே ஏதோ புத்தனும் காந்தியும் ஆட்சி செய்வது போலவும்
நமது ஆருயிர்க் காதலன் ஆட்சியில் இருப்பது போலவும் நாம் நடந்துகொள்கிறோம்.

பிரபாகரனாரைக் கண்முன் பார்த்த தலைமுறை இன்று கூடன்குளத்திலும் கதிராமங்கலத்திலும் கூட்டமாக குத்தவைத்து நாட்களை எண்ணினோம்.
இப்போது வருடத்தை எண்ணிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்.

ஒரு போலீஸ்காரனைக் கைநீட்டத் துப்பில்லாமல் முழு கிராமமும் பிழைப்பை விட்டுவிட்டு போராட்டம் என்ற பெயரில் கூடி பொழுதைப் போக்குவது இங்கேதான் நடக்கிறது.

ஆனால் அத்தனை நாசகார திட்டங்களின் பணிகளும் தங்குதடையின்றி நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒரு வாட்டசாட்டமான இளைஞன் நடுரோட்டில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரமாக நின்று நாலு கோசம் போட்டுவிட்டு காவல்துறையிடம் ரெண்டு அடிவாங்கி வாகனத்தில் ஏற்றபட்டு மண்டபத்தில் தங்கிவிட்டு மாலையில் விடுதலை ஆகி மறுநாள் ஒருவரிச் செய்தியில் வந்ததும் போராடிவிட்ட திருப்தியைப் பெறுகிறான் என்றால் நட்டம் யாருக்கு?

நாம் இன்று செய்யும் கூத்துக்கெல்லாம் பெயர் போராட்டமே அல்ல.
போராட்டம் என்கிற பெயரில் நாமும் பாதிப்படைந்து பிற பொதுமக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.

அதிகார வர்க்கத்தின் மீது சிறு கீறலும் விழாமல், இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பார்த்து நகைக்கும் வண்ணம் காமெடி செய்துகொண்டு இருக்கிறோம்.

அவர்கள் ஏன் சிரிக்கமாட்டர்?!

கிரிக்கெட் வீரன்கூட பார்ம் இல் இல்லை என்றால் தூக்கி எறிந்துவிடுவார்கள்.
நம்மை ஆள்பவர்களை நாம் சீர்தூக்கிப் பார்த்திருக்கிறோமா?!
அவர்களாக சாகும்வரை பதவியில் வைத்திருக்கிறோம்.

இதையே செய்த தென்னாப்பிரிக்கர் மண்டேலா செய்த சிறு வன்முறைச் செயலுக்கே அவரைச் சாகும்வரை தலைவராகப் போற்றினர்.
மண்டேலா எதற்காகப் போராடவந்தாரோ அதே நிலைதான் இன்றும்.

வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் வீரியமாகப் போராடி பாதிவழி வந்து பிறகு சமரசம் செய்துகொண்ட தலைவர்கள் வானளாவிய புகழடைந்துள்ளனர்.
  நாமும் இதே போல உணர்ச்சிக்கு அடிமையாக இருக்கிறோம்.

தமிழன் என்பதை விடுங்கள்.
மனிதன் என்பதை விடுங்கள்.
ஒரு விலங்கினம் என்பதையாவது நிரூபிக்க வக்கு இருக்கிறதா நமக்கு?!

ஒரு எறும்பின் கூட்டைக் கலைக்கப் போனால் அவை கூட கடிக்கும்.
நாம் நமது வீட்டை இடிக்க வந்த, நமது மகனை தூக்கிச்செல்ல வந்த 4 தொப்பை போலீசிடம் பயந்துகொண்டு கெஞ்சி அழுகிறோம்.

இப்படியே போனால் நம் அக்கா தங்கைகளை நம் வீடுபுகுந்து நம் கண்முன்னே கெடுப்பார்கள்.
நாம் வீடியோ எடுத்து நியாயம் கேட்கப் போகிறோமா?
கொடிபிடித்துக்கொண்டு கோசம் போடப் போகிறோமா?

இவ்வளவு அநியாயம் நடக்கிறது.
ஒரு போலீஸ்காரனின் கன்னம் சிவக்கவில்லை.
ஒரு அரசாங்க அதிகாரியின் செவுள் கிழியவில்லை என்றால் அவமானம் யாருக்கு?

அவன் வெறும் அம்பாம்! எய்தவன் எவனோவாம்!

ஏனிந்த வெற்று சமாதானம்?!
தட்டிக்கேட்க துப்பில்லை என்று நேரடியாக ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே?!

நீங்கள் திருப்பி அடிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டால் விட்டுவிடுவார்களா?

இந்திய சனநாயகத்தில் ஏன் உலக சனநாயகத்தலே கூட வன்முறையில் இறங்கியவனை விட அப்பாவிக்குத்தான் தண்டனை கிடைக்க வாய்ப்பு அதிகம்.

வாச்சாத்தி கிராம மக்களை விடவா நீங்கள் அப்பாவிகள்?!
அவர்களுக்கு நேர்ந்தது தெரியும்தானே?!

உங்களுக்காக களத்தில் இறங்க ஒரு கதாநாயகன் வரப்போவதில்லை.
பொதுமக்களே கூட்டாக வன்முறையில் இறங்குங்கள்.

கூவியது போதும்!
கையை நீட்டுங்கள்!

உங்கள் வீரத்தை நிரூபியுங்கள்!

அதன்பிறகு கண்ணைக்காட்டினாலும் உலகம் உங்கள் பின்னால் வரும்!

Wednesday, 23 May 2018

தூத்துக்குடி! திருப்பியடி!

தூத்துக்குடி! திருப்பியடி!

1008 வது முறையாகச் சொல்கிறேன்.

அறவழி என்று பொட்டையாக அடிவாங்கி சாகாதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

13 உயிர்கள் போய்விட்டன.
ஆனால் ஒரு போலீஸ்காரனுக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை.

இது எத்தனை பெரிய கேவலம்!

தமிழகத்தின் பத்தாவது பெரிய நகரமான தூத்துக்குடி மாநகரின் மக்கட்தொகை மட்டுமே இரண்டரை லட்சம்!

அதில் ஓட்டுபோடும் வயது வந்தோர் ஒன்றரை லட்சம்!

இளைஞர்கள் எப்படியும் முக்கால் லட்சம் இருக்கிறார்கள்!

இதில் ஆண் இளைஞர்கள் 40,000 பேர்!

இத்தனை பெரிய பலம் கொண்ட நகரத்தை வெறும் 3000 போலீஸ் சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சில மணிநேரத்தில் அடக்கிவிட முடிகிறது என்றால்,

யாருக்கு அவமானம்?!

பல ஆயிரம்பேர் இருந்தீர்களே வெட்கமாக இல்லையா?!

ஏன் கையில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இல்லை?!

ஏன் குண்டுகளைத் தடுக்க கேடயம் போன்று எதுவும் இல்லை?!

ஏன் கனரக வாகனங்களை எடுத்துச் செல்லவில்லை?!

இப்போதும் கூறுகிறேன்.

நூறு உயிரைக் கொடுத்தேனும் ஒரு உயிரை எடுத்துவாருங்கள்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்கள் பின்னால் நிற்கவில்லை என்றால் நான் என் பெயரை கெட்டவார்த்தையாக மாற்றிக்கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு நூறுநாள் குத்தவைத்து
பிறகு வெறுங்கையுடன் ஊர்வலம் போய் அடிவாங்கி செத்து
பிணத்தை காட்டி இரக்கத்தை சம்பாதித்து
சம்பந்தமே இல்லாத பிற மாவட்டத்தான் பிழைப்பை விட்டுவிட்டு போராட வருவான் என்று எதிர்பார்ப்பது மடத்தனமன்றி வேறென்ன?!

உணர்ச்சி வசப்படாமல் நடைமுறையைச் சிந்தியுங்கள்!

இனியும் அறவழி, அகிம்சை, உண்ணாவிரதம், கடையடைப்பு,  என்று தன்னக்குத்தானே தீங்கு செய்து இப்படி தாலியறுத்துக் கொள்ளாதீர்கள்!

நேரடியாக பாதிக்கப்படுவோரால் முடியாதபோதுதான் மற்றவர்கள் களத்திற்கு வருவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 18 லட்சம் மக்கட்தொகையில் உள்ள இரண்டேகால் லட்ச ஆண் இளைஞர்களும் சேர்ந்து நின்று ப்பூ என்று ஊதினால் போலீஸ் படையெல்லாம் பறந்து கடலில் போய் விழுந்துவிடாதா?!

தன் பலமறியாத தூத்துக்குடி.

Monday, 2 October 2017

காந்தியின் அகிம்சை

காந்தியின் அகிம்சை
***********************

கே: காந்தியை உருவாக்கியது தமிழர்கள் என்கிறீர்கள்!
ஆனால் அவரது வழி தவறு என்கிறீர்கள்!
இது முரணாக இருக்கிறதே?!

ப: காந்தியை ஒரு அகிம்சை போராளியாக உருவாக்கியது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்தான்.
இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அகிம்சை போராட்டம் ஆயுத போராட்டத்திற்கு சற்றும் சளைத்தது இல்லை.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் போராடியது சம உரிமைக்காக
அதனால் அகிம்சை வழி சரியாக இருந்தது.

ஆனால் விடுதலை எப்போதும் அகிம்சை மூலம் கிடைக்காது.
இதுதான் வரலாறு நமக்கு தரும் பாடம்.

  சம உரிமை பெற காந்திக்கு தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கற்றுக்கொடுத்த அகிம்சை வழியை
அவர் இங்கே வந்து ஆங்கிலேயரிடம் விடுதலை பெற பயன்படுத்தினார்.

இது ஆங்கிலேயருக்கு வசதியாகப் போய்விட்டது.

ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு போக முதல் காரணம் அவர்கள் உலககம் முழுவதும் சுரண்டி சேர்த்துவைத்த செல்வமெல்லாம் இரண்டு உலகப்போர்களில் காலியானதுதான்.

இதற்கு காரணம் ஜெர்மனி.
ஜெர்மனியை ஆங்கிலேயர் மீது ஏவியது ஒரு தமிழரான செண்பகராமன் பிள்ளை மற்றும் அவரது வழிநடந்த நேதாஜி (மற்றும் அவர் படையிலிருந்த தமிழர்கள்)

ஜெர்மனியை பிரிட்டிஷ் இரண்டு உலகப்போர்களிலும் தோற்கடித்தாலும் தனது செல்வம் அனைத்தையும் இழந்து அதன் பொருளாதாரம் வீழ்ந்தது.
  உலக நாடுகளை அடக்கி சுரண்டும் வலு அதனிடம் இல்லை.
அதனால் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து காலி செய்தனர்.
காந்தியால் சுதந்திரம் கிடைத்தது என்பது 1% கூட உண்மை இல்லை.
------------
மேலும் அறிய,
search காந்தியை உருவாக்கிய தென்னாப்பிரிக்க தமிழர் வேட்டொலி

search இலங்கைக்கு ஏன் ஆறுமாதம கழித்து சுதந்திரம்? வேட்டொலி

search எம்டன் செண்பகராமன் ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு வேட்டொலி

search அறவழி விடுதலை அடைய உதவுமா வேட்டொலி

Tuesday, 26 September 2017

பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்

பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்

ராஜீவ் காந்தி கட்டளையிட்டார்.

எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.

அடையாறில் புலமைப்பித்தன் வீட்டில் பிரபாகரனார் துளி நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு மேற்கொண்டார்.
கொதித்தெழுந்த தமிழகம் ஒரே நாளில் ஹிந்தியாவை பணியவைத்தது.

தமிழகத் தமிழருக்கு ஈழப் போராளிகள் மீது இருக்கும் பேரன்பை நன்றாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் புலிகளுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதன் மூலம் அரசியல் முதலீடு செய்தார்.
(அதே நேரத்தில் தனித்தமிழ்நாடு போராளிகளை அதன் தலைவர் தமிழரசனை சத்தமில்லாமல் ஒழித்தார்)

தொண்டனைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தலைவரல்ல பிரபாகரன்.
உலகிலேயே முதன்முதலாக நீர் அருந்தாமல் உண்ணாநோன்பு போராட்டம் நடத்திய போராளி.

1986 ல் தமிழக மக்கள் தமது இனப்பற்றைக் காட்டாதிருந்தால்...?

விளைவுகளை நீங்களே ஊகியுங்கள்.

Tuesday, 12 September 2017

அகிம்சையின் உச்சம் ?!

அகிம்சையின் உச்சம் ?!

கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அமைதியான வழியில் போராட்டம் நடத்திவந்த ஐயாக்கண்ணு (கள்ளர்)
*அம்மணமாக ஓடுதல்
*மூத்திரம் குடித்தல்
*சேலை கட்டுதல்
*எச்சில் இலையை சாப்பிடுதல்
போன்ற அகிம்சை போராட்டங்களைச் செய்த அவர்,
*தன் மலத்தைத் தானே தின்று அமைதி வழி போராட்டத்தில் உச்சம் அடைந்தார்.

அகிம்சை அதாவது தன்னைத் தானே கொடுமைப்படுத்தி எதிரியிடம் இரக்கத்தை சம்பாதிக்கும் போராட்ட வடிவத்த அய்யாக்கண்ணு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் இவர்
*பிணத்தை தின்னப் போவதாகவும்
*கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

என்ன நடந்தாலும் டெல்லியில் சுற்றும் ஒரு தெருநாய் கூட மதிக்கப்போவதில்லை என்பது வேறுவிடயம்.

தமிழினத்தையே கேவலப்படுத்தும் இந்த மாதிரி ஈனப்பிறவிகள் உயிருடன் இருப்பது அவசியமா?

Thursday, 27 July 2017

ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?

ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?

தோற்றுப்போன புலிகள்,
பாதி தோற்றுவிட்ட நக்சலைட் இயக்கம்,
இதையெல்லாம் பார்த்தபிறகும் ஆயுதவழி வெற்றி தரும் என்று உறுதியாகக் கூறமுடியுமா?

ஆம், ஆயுதவழி வெற்றி தரும்.
இதை உறுதியாகக் கூறமுடியும்.

இன்று நாம் தனிநாடாக இருந்திருந்தால்கூட
கார்ப்பரேட் அரக்கர்கள் நம்மீது போர்தொடுத்திருப்பார்கள்.

ஈராக் தனிநாடுதான், ஆப்கானிஸ்தான் தனிநாடுதான்,
சோமாலியா, எத்தியோப்பியா, சியரா லியோன் சுதந்திர நாடுகளாக இருந்தவைதான்.

ஆனாலும் வல்லாதிக்கம் போர்தொடுத்து தனக்குத் தேவையானதை மண்ணிலிருந்து உறிஞ்சிக்கொள்ளவில்லையா?

நான் சொல்லுவேன் 2009 வரை புலிகள் ஆண்ட நிலப்பரபப்பு தனிநாடு என்று.

நாடு என்பது ஐ.நா அளிக்கும் அங்கீகாரம் அல்ல.
நாடு என்பது எல்லையைக் கொண்டது.
எல்லை என்பது ராணுவம் வகுப்பது.
ஆக ராணுவம் பாதுகாக்கும் எல்லைதான் நாடு.

தன் தாய்மண்ணை,
அந்த மண்ணின் மைந்தன்,
அந்த மண்ணின் மக்களால் ஆன படையின் மூலம் எல்லையை பாதுகாத்து,
அந்நியர் தலையீடு இன்றி ஆளும் நிலமே உண்மையில் நாடு.

எம் தலைவர் பிரபாகரன் அப்படித்தான் எவருக்கும் அடிபணியாமல் ஆண்டார்.
எவர் ஆதரவையும் நாடாமல் தன் சொந்த பலத்தினால் ஆண்டார்.
அவர் செய்ததற்குப் பெயர்தான் ஆட்சி.

நாடுநாடாகப்போய் கண்டவனுக்கும் கூழைக்கும்பிடு போட்டு நரேந்திர மோடி செய்வதற்குப் பெயர் ஆட்சி இல்லை.

தன் நிலத்தில் தனது படையைக் கொண்ட ஒரு இனத்தின் வளங்களைச் சுரண்டுவதே பெருமுதலாளிகளுக்கு கடினம்.

நாடில்லாத,
அதாவது ராணுவம் இல்லாத,
வேற்றினத்தால் ஆளப்படும் இனத்தின் தாய்நிலத்தைச் ஆக்கிரமித்து சுரண்டுவது பெருமுதலாளிகளுக்கு  ஒரு பொருட்டே இல்லை.

அந்த மக்கள் ஆயுதம் தூக்காதவரை வெறும் லத்திகளை வைத்தே குறைந்த செலவில் அதிக சுரண்டல் நடத்த அவர்களால் முடியும்.

கோசம் போடுபவர்களையும் வாயாலே வடைசுடுபவர்களையும் அவர்களே வளர்த்துவிடுவார்கள்.

போர் புரிவது போல ஆடி
அதாவது போர் ஆட்டம் நடத்தி,
அடிவாங்குவதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பவைத்து,
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாழாக்கி,
வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கே நட்டம் என்றாக்கி,
நீண்டகாலம் இழுத்து,
கடைசியில் கைவிரிப்பார்கள் சனநாயக அரசியல்வாதிகள்.

வழக்குபோட்டாலும் இதேதான் 30, 40 ஆண்டுகள் வழக்கு நடத்தி கடைசியில் கார்ப்பரேட்டுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும்.
அப்படியே தாமதமாக நீதி (அதாவது அநீதி) வழங்கப்பட்டாலும் அதற்குள் அரசியல்வாதிகள் அவனை பத்திரமாக வெளியே அனுப்பியிருப்பார்கள்.

கார்ப்பரேட் பெருமுதலாளிகளை சனநாயக வழியில் எதிர்க்கவே முடியாது.
இழப்பும் அதிகம். நேரமும் அதிகம். தீர்வு கிடைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது.
இதுதான் உண்மை.

ஆயுதவழியில் இழப்பு கிட்டத்தட்ட அதே அளவுதான்.
ஆனால் குறுகிய நேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.
தீர்வு கிடைக்க 50% வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஒரு கையை முட்டிமுறுக்கி தூக்கி தூக்கி
தொண்டை வலிக்க கத்தி கத்தி எதுவும் ஆகப்போவதில்லை.
உங்களுக்குத்தான் வலிக்கும்.
உங்கள் போராட்டங்களால் வரும் பாதிப்புகள் அனைத்தும் உங்களுக்கே!

நீங்கள் திருப்பி அடியுங்கள்!

அப்போதுதான் ஆதரவு குவியும்!

எதிரிக்கு இழப்பு வரும்!

இப்போது உங்களை எந்த ஊடகமும் பதிவு செய்யாத நிலை மாறும்.
பத்திரிக்கைக்காரன் உயிரைப் பணயம் வைத்து தேடிவந்து காத்திருந்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வான்.
அதை உலகமே ஆவலுடன் கேட்கும்.

மனிதன் என்றால் மானம் வேண்டும்
வீரம் வேண்டும்
மக்கள் என்றால் மண்பற்று வேண்டும்.

நீங்கள் அமைதியாக போராடினாலும் நக்சலைட் முத்திரை குத்தி அரசுக்கெதிராக போர்தொடுத்த தேசதுரோக வழக்குதான் போடுவார்கள்.

எதற்கு உங்களுக்கு குற்ற உணர்ச்சி?

எதிரி ஆயுதப்படையோடு வந்து நிற்கிறான்.
நீங்கள் தற்காப்புக்காக திருப்பி அடிப்பதில் என்ன தவறு?!

காட்டில் வாழும் நாடோடி இனங்களெல்லாம் ஆயுதமேந்தி
கார்ப்பரேட்களை கதறவிடும் இந்தக்காலத்தில்
முன்னேறிய இனமான தமிழர்களால் அது ஏன் முடியாது?
___________________
படம் : திருச்சி சிறையில் தினமும் நிர்வாண சோதனை: ஜாமீனில் வந்த மாணவி குற்றச்சாட்டு
(தினகரன் 21-05-2017)

Friday, 26 May 2017

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.

ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.

அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.

ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.

இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.

அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.

அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.

ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.

காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.

ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.

ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.

வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.

மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.

1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)

1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.

அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.

1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.

1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.

பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.

இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.

அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.

மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.

கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.

1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.

1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!

லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர்  கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.

ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.

சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.

தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.

அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.

1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.

மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.

ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.

படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்