Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts

Friday, 8 June 2018

உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி

உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி

* ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உற்பத்தியில் ஏறத்தாழ 80% சீனாவிற்கு செல்கிறது.

* மீதி 20% சதவீதத்தில் எந்த நாடுகளிலிருந்து தாமிரத் தாது எடுக்கப்பட்டதோ (பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் ஜாம்பியா) அதே நாட்டிற்கு அனுப்பபட்டு அங்கே வரிவிலக்கு பெறப்படுகிறது.

* மிச்சமீதி தாமிரம் தூத்துக்குடியின் தாமிரத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை.
தேறாத கழிவு தாமிரமே உள்ளூர் சந்தைக்கு வருகிறது.
இந்த உள்ளூர் வணிகமும் ஸ்டெர்லைட் பெயரால் நடக்காமல் கள்ளச்சந்தை மூலம் நடக்கிறது.

* இதுபோக ஆனோடு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது.
இந்த ஆனோடு வெறும் ஆனோடு கிடையாது; தங்கம், பிளாட்டினம், பல்லேடியம் போன்றவை திருட்டுத்தனமாக கலக்கப்பட்டது.
அதாவது ஆனோடில் மறைத்து கள்ளக்கடத்தல் செய்கிறார்கள்.

ஸ்டெர்லைட் உற்பத்தி நாட்டுக்கு தேவை என்போர் முதலில் அவர்கள் கட்டாமல் பாக்கிவைத்துள்ள 750கோடி சுங்கவரியை நாட்டுக்கு வாங்கி கொடுத்துவிட்டு பேசலாம்.

ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மின்சாரம் வராது என்போர் அவர்கள் இதுவரை பாக்கி வைத்திருக்கும் மின்சாரக் கட்டணமான 10கோடி ரூபாயை வாங்கித் தந்துவிட்டு பேசலாம்.

ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மோட்டார் இயங்காது அதனால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது என்போர்,
ஆயிரம் லிட்டர் தண்ணீரை வெறும் 15ரூபாய்க்கு பெறும் ஸ்டெர்லைட் இதுவரை தண்ணீர் கட்டணமே கட்டியதில்லை என்பதையும் அந்த பாக்கித் தொகை 2011லேயே 82கோடி ரூபாய் என்பதையும் அறிந்து பேசவும்.

சான்று நூல்: ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்

Monday, 4 June 2018

ஸ்டெர்லைட் தரும் வேலைவாய்ப்பு

ஸ்டெர்லைட் தரும் வேலைவாய்ப்பு?

ஆலையின் ஆண்டுவருமானம் ஏறத்தாழ 20,000 கோடி
(கணக்கில் காண்பித்த வருமானம் உண்மை இதைவிட பலமடங்கு அதிகம்)

ஊழியர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் ஊதியச் செலவு ஆண்டுக்கு ஏறத்தாழ 100 கோடி.
(உண்மை இதைவிட பலமடங்கு குறைவு)

அதாவது ஒரு ஸ்டெர்லைட் தொழிலாளி ஒரு ரூபாய் கூலி வாங்கிவிட்டு 200 ரூபாய் சம்பாதித்து கொடுக்கிறான்.

Saturday, 2 June 2018

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை (மின்னூல் பக்கங்கள்)


ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை (மின்னூல் பக்கங்கள்) 

1995 ல் பூவுலகின் நண்பர்கள் ஸ்டெர்லைட் குறித்த முதல் நூலை வெளியிட்டது.."ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் அதனால் வரவிருக்கும் அபாயங்களும்,," இதனை எழுதியவர் வசீகரன்.

2000த்தில் “விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்” நூலை எதிர் பதிப்பகத்தோடு இணைந்து வெளியிட்டோம்...

பின்பு தோழர் தமிழ் மாந்தன் எழுதிய் "ஸ்டெர்லைட் வாழ்க மக்கள் ஒழிக" என்ற நூலை 2013ல் வெளியிட்டோம்..

இப்போது முழுமையான புத்தகமாக 2018ல் இலவசமாக வெளியிட்டுள்ளோம்,,,தமிழ் மாந்தன், பிரபாகர் கப்பிக்குளம், கஜேந்திரன் ஆகியோர் எழுதிய விரிவான கட்டுரைகளோடு
தூத்துக்குடி மக்களில் எண்ணற்ற தியாகத்தின் வரலாற்றை..
ஒரு ஆலையை மூட எவ்வளவு நிண்ட நெடிய காலம் போராடி வந்துள்ளார்கள் என்பதை அறிய இப்புத்தகத்தை ஒருமுறை வாசியுங்கள்....

பூவுலகின் நண்பர்களின் ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை நூல் -விலையில்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.�
நூலின் பெயர்: ஸ்டெரெலைட்டின் சூழலியல் படுகொலை
எழுதியவர்கள்: பி.மி.தமிழ்மாந்தன்
கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
மற்றும் வெ.கஜேந்திரன்

இந்தக் கட்டுரையை முழுவதும் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்:
http://poovulagu.in/?p=1861



கொண்டுவந்த ஜெயலலிதா!


போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
பாத்திமா பாபு கைது போராட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது.


தூத்துக்குடி புற்றுநோயில் முதலிடம்.
தொழிலாளர் ஊதியம் போன்று 19,000 மடங்கு லாபம்.


 சுங்க வரி 750கோடி மோசடி.
10கோடி மின்சாரக் கட்டணம் பாக்கி.




மணல் கொள்ளை.
ஓடை நீர் மறிப்பு.
அணைக்குள்ளேயே குழாய் போட்டு உறிஞ்சல்.

நிலத்தடி நீர் கொள்ளை.

நீர் மற்றும் காற்றை விசமாக்குதல்.


 அடிக்கல் நாட்டிய ஜெயலலிதா
ஆரம்பித்து வைத்த கருணாநிதி


பாமக, புதிய தமிழகம் வாய்ச்சவடால்.

ம.தி.மு.க கடைசி நேரத்தில் ஒட்டிக்கொள்ளல்.


 1995 ல் முதல் நூல்.
ஆரம்பகால போராளிகள்.


பற்றி எரிந்த போராட்டம்.
கப்பலை விரட்டியடித்த மீனவர்கள்.


துறைமுக முற்றுகை.
முதல் தடை.
தேர்தல்.

சாதிக் கலவரம்.


ஸ்டெர்லைட் தந்திரம் வேலை செய்தது.
அதை முறியடித்த பசுபதி பாண்டியன்.
மீண்டும்

துறைமுக முற்றுகை.


 நடுவில் வந்தவரே வைகோ.
தடை தளர்ந்த்து.


வரி கட்டாதவனுக்கு சலுகை.
கட்டணம் கட்டாதவனுக்கு மின்சாரம்.


இப்போது மூன்றாவது தடை


 மூன்று முக்கிய விதிமீறல்கள்.



முதல் முற்றுகை நடந்தபோது...




இரண்டாவது கப்பல் முற்றுகையின்போது.. 


ஆரம்பகால போராளிகள்


காற்றில் மாசு



ஸ்டெர்லைட்டின் கூலிகளாக மாறிய செல்லப் பாண்டியன் மற்றும் கலெக்டர்




2013 ல் 71 அமைப்புகள் இணைந்து போராட்டம்


காற்று நீர் மாசு குறித்து



1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 15 ரூபாய்.
ஆனால் 15 ரூபாயில் 1000 லிட்டர் தண்ணீர் பெறுகிறது ஸ்டெர்லைட்.







Friday, 25 May 2018

மும்பைவாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்

மும்பைவாழ் தமிழர்களே!

தமிழகத்தின் சார்பாக வேண்டுகோள்!

எண் 75, நேரு சாலையில் உள்ள அனில் அகர்வால் நிறுவனத்தின் (இந்திய) தலைமைச் செயலகத்தை முற்றையிடுங்கள்

இனம் காக்க வாருங்கள்!

Wednesday, 23 May 2018

தூத்துக்குடி மக்களுக்காக உயிர்நீத்த ஈழத்தமிழர் கந்தையா

தூத்துக்குடி சிலோன்காலணி எனும் ஈழத்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு வன்முறையில் உயிரை ஈந்தார்.

அன்னாருக்கு வீரவணக்கம்!

படம்: அவருக்கு பொதுமக்கள் வைத்துள்ள நினைவுப் பதாகை
(நன்றி: கவி அமுதன்)

தூத்துக்குடி! திருப்பியடி!

தூத்துக்குடி! திருப்பியடி!

1008 வது முறையாகச் சொல்கிறேன்.

அறவழி என்று பொட்டையாக அடிவாங்கி சாகாதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

13 உயிர்கள் போய்விட்டன.
ஆனால் ஒரு போலீஸ்காரனுக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை.

இது எத்தனை பெரிய கேவலம்!

தமிழகத்தின் பத்தாவது பெரிய நகரமான தூத்துக்குடி மாநகரின் மக்கட்தொகை மட்டுமே இரண்டரை லட்சம்!

அதில் ஓட்டுபோடும் வயது வந்தோர் ஒன்றரை லட்சம்!

இளைஞர்கள் எப்படியும் முக்கால் லட்சம் இருக்கிறார்கள்!

இதில் ஆண் இளைஞர்கள் 40,000 பேர்!

இத்தனை பெரிய பலம் கொண்ட நகரத்தை வெறும் 3000 போலீஸ் சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சில மணிநேரத்தில் அடக்கிவிட முடிகிறது என்றால்,

யாருக்கு அவமானம்?!

பல ஆயிரம்பேர் இருந்தீர்களே வெட்கமாக இல்லையா?!

ஏன் கையில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இல்லை?!

ஏன் குண்டுகளைத் தடுக்க கேடயம் போன்று எதுவும் இல்லை?!

ஏன் கனரக வாகனங்களை எடுத்துச் செல்லவில்லை?!

இப்போதும் கூறுகிறேன்.

நூறு உயிரைக் கொடுத்தேனும் ஒரு உயிரை எடுத்துவாருங்கள்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்கள் பின்னால் நிற்கவில்லை என்றால் நான் என் பெயரை கெட்டவார்த்தையாக மாற்றிக்கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு நூறுநாள் குத்தவைத்து
பிறகு வெறுங்கையுடன் ஊர்வலம் போய் அடிவாங்கி செத்து
பிணத்தை காட்டி இரக்கத்தை சம்பாதித்து
சம்பந்தமே இல்லாத பிற மாவட்டத்தான் பிழைப்பை விட்டுவிட்டு போராட வருவான் என்று எதிர்பார்ப்பது மடத்தனமன்றி வேறென்ன?!

உணர்ச்சி வசப்படாமல் நடைமுறையைச் சிந்தியுங்கள்!

இனியும் அறவழி, அகிம்சை, உண்ணாவிரதம், கடையடைப்பு,  என்று தன்னக்குத்தானே தீங்கு செய்து இப்படி தாலியறுத்துக் கொள்ளாதீர்கள்!

நேரடியாக பாதிக்கப்படுவோரால் முடியாதபோதுதான் மற்றவர்கள் களத்திற்கு வருவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 18 லட்சம் மக்கட்தொகையில் உள்ள இரண்டேகால் லட்ச ஆண் இளைஞர்களும் சேர்ந்து நின்று ப்பூ என்று ஊதினால் போலீஸ் படையெல்லாம் பறந்து கடலில் போய் விழுந்துவிடாதா?!

தன் பலமறியாத தூத்துக்குடி.