Showing posts with label ஈழத்தமிழர். Show all posts
Showing posts with label ஈழத்தமிழர். Show all posts

Saturday, 18 May 2024

எல்லாம் ஈழத்தார் தவறுதான்

எல்லாம் எல்லாம் ஈழத்தார் தவறுதான்

 இனவாதம் பழமையானது.
 தற்காலத்தில் மட்டுமில்லை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குள்ளேயே தமது இனவுரிமையை நிலைநாட்டின பல இனங்கள்.
ஆங்கிலேயர் 1905 வங்காளத்தை இரண்டாக பிரித்தபோது 6 ஆண்டுகள் கடுமையாகப் போராடி மீண்டும் ஒன்றிணைந்தனர் வங்காளிகள்.
 1880 களில் பர்மா வை இந்தியாவுடன் சேர்த்த பிறகு 50 ஆண்டுகள் போராடி அங்கே இருந்த இந்தியர்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி 1937 இல் பர்மியர் தமக்கு தனி நிர்வாகம் கேட்டு பெற்றனர்.
1903 லேயே இயக்கம் கட்டி 1936 இல் முதன்முதலாக தமக்கென ஒரிசா எனும் மொழிவாரி மாநிலம் அடைந்தனர் ஒடியர்.
 அதாவது முதலாம் உலகப்போர் மூளப்போகும் காலத்திலேயே இந்திய இனங்கள் விழித்துக்கொண்டு தமது தாய்நிலத்தை தக்கவைப்பதோடு இந்திய அதிகாரத்தைக் கைப்பற்றவும் முன்னெடுப்புகளைத் தொடங்கிவிட்டனர்.
 எங்கும் இனவாதம் பற்றி எரிந்த அக்காலத்தில் அதற்கு மதிப்பளித்து 1925 இல் காந்தி மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமையும் எனும் வாக்குறுதி அளித்து முன்மாதிரியாக காங்கிரசை மொழிவாரியாக பல கிளைகளாக பிரித்து கட்டமைத்தார்.
 இதன்பிறகு வெவ்வேறு நிர்வாக அலகுகளில் சிதறிக்கிடந்த மராத்தியர், கன்னடர், தெலுங்கர் மற்றும் மலையாளிகள் இனவுணர்வு கொண்டு தத்தமது இனத்தை ஒருங்கிணைத்து தாய்நிலத்தை தக்கவைப்பதோடு தமிழர் எல்லைப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் திட்டம் தீட்டினர்.
 1900 களில் தர்ம்பாலா சிங்கள பௌத்த இனவாதத்தை முன்னிறுத்தினார் அது இனவாதமாக உருப்பெற்று 1937 இல் பண்டாரநாயக சிங்கள இனத்திற்கு அறைகூவல் விடுத்து இலங்கையை கைப்பற்ற திட்டமிட்டார்.

 இப்படி எல்லா இனங்களும் ஆங்கிலேயர் வெளியேறுவர் அப்போது அந்த இடத்தை தாம் பிடிக்கத் திட்டமிட்டனர்.
 ஆங்கிலேயரும் இதை அறிந்து அதிகாரப் பகிர்வு அளித்து தற்காலிகத் தீர்வு கண்டனர்.
 இந்திய தலைவர்களும் இனவுணர்வுக்கு மதிப்பளிக்கத் தொடங்கினர்.
 இந்த முக்கியமான நேரத்தில் தமிழர்கள் இன ஓர்மையின்றி கிடந்தனர்.
 வந்தேறிகளின் சதியால் தென்னிந்தியர் ஒரே இனம் என்கிற புரிதலில் அதாவது திராவிட மாயையிலும் மொழியைக் காப்பாற்றி பழமையை நிறுவும் தேவையற்ற வேலையிலும் இறங்கினர்.
 
 தமிழர்களிலும் விதிவிலக்காக சிலர் இருந்தனர்.
 முதலில் அயோத்திதாசர் 1912 இலேயே ஆங்கிலருக்கு அடங்கிய தமிழருக்கு தனிநாடு கேட்டு பத்திரிக்கையில் எழுதினார். அதாவது எல்லை எதுவும் குறிப்பிடாமல் இனத்திற்கு விடுதலை கேட்டார்.
1933 இல் ஈவேரா தனிநாடு கேட்டார். ஆனால் மதராஸ் மகாணத்தை ஆங்கிலேயரே தொடர்ந்து ஆளவேண்டும் எனும் அடிமைத்தனமான கோரிக்கைதான் அது.
 1922 இல் அருணாச்சலம் தனி ஈழம் கேட்டார். இதில் ஈழத் தமிழர் நலன் பற்றிய சிந்தனை இருந்ததே தவிர தமிழகம் பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. 
  1937 இல் ஆதித்தனார் தனிநாடு கேட்டார் அதிலும் ஈழம் இணைந்த பேரரசு கேட்டார்.
 
  இதிலிருந்து நாம் அறிவது தமிழருக்கு இன உணர்வு இல்லை!
 இருந்ததையும் குழப்பி மடைமாற்றினர் வந்தேறிகள்!
 அதையும் மீறி சிந்தித்த ஓரிருவரில் ஈழத்தமிழர் சுயநலமாகவும் தமிழகத்தார் முழு இனம் தழுவியும் சிந்தித்தனர். 
 
 இதன்பிறகு ஆங்கிலேயர் வெளியேற்றமும் அதிகாரப் பகிர்வும் நடந்தது. இதிலும் தமிழர் கோட்டைவிட்டனர். இந்த இடத்திலாவது ஈழத்தமிழர் தமிழகத்துடன் இணையவோ அல்லது தமிழகத்தார் ஈழத்தை தம்முடன் இணைக்கவோ சிந்திக்கவில்லை.
 
 இருபுறமும் தவறென்றாலும் ஈழத்தார் தவறு முத.ன்மையானது என்றே கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 இலும் இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 இலும் ஈழத்தார் சுயநலமாக சிந்தித்தனர்.
 ஒருபக்கம் இலங்கை தனிநாடு அதில் கால் பங்கு அதிகாரம்  இன்னொரு பக்கம் இந்தியாவில் மிகச் சிறுபான்மையான அதிகாரம் எனவே தமிழகத்துடன் இணைவதைக் கைவிட்டனர்.
 
 ஒரு இனத்தின் தாய்நிலம் உடைக்கப்பட்டு இனம் நசுக்கப்படுவதும் அதில் ஒரு பகுதிக்கு சற்று அதிக சலுகை வழங்கப்படுவதும் ஆனாலும் இனம் வெகுண்டெழுந்து மீண்டும் இணைவதும் வரலாற்றில் பல முறை நடந்துள்ளது.

 அப்படி ஒவ்வொரு முறையும் உடைந்த துண்டுகளில் எது சிறியதோ அதுவே போராடி பெரிய துண்டுடன் இணைந்துள்ளது.

 ஜெர்மனி உடைக்கப்பட்ட பிறகு அதில் கொஞ்சம் சிறியதாக இருந்த கிழக்கு ஜெர்மனியே போராடி ஒன்றிணைந்தது.

 தமிழினத்திலும் மலையாளிகள் பிடியிலிருந்த குமரித் தமிழர்கள் போராடி தமிழகத்துடன் இணைந்தனர்.

 வியட்நாம் போல பெரிய துண்டு சிறிய துண்டை போரிட்டு இணைத்துக் கொண்ட வரலாறும் உண்டு.

 ஈழத்தார் தமிழகத்தை  ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்தமை அவர்களது இன்றைய நிலைக்கு காரணம்.
 
 ஆங்கிலேயர் அதிகாரப் பகிர்வு அளித்த 1900களின் போதும் 
1947 இல் இந்திய விடுதலையின் போதும்
 1948 இல் இலங்கை விடுதலையின் போதும் 
இனமாக ஒன்றிணையாத தமிழினம் அதிலும் குறிப்பாக சுயநலமாக சிந்தித்த ஈழத்தார் இன்றைய இழிநிலையை அடைந்ததில் வியப்பில்லை.

 புலிகள் எழுந்தபோதும் இதே தவறைச் செய்தனர்.
தமிழரசன் தலைமையில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடிய தமிழகத் தமிழருடன் இணையாமல் தமிழகத்தில் தமது பிரச்சாரத்தைச் செய்யாமல் நேரடியாக இந்தியாவை தம் பக்கம் இழுப்பதிலும் சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்வதிலும் குறியாக இருந்தனர்.
புலிகள் தமிழகத்துடன் ஈழத்தை (இந்தியாவிற்குள்) இணைக்கக் கோரியிருந்தால் கூட அதை அடைந்திருக்க வாய்ப்பிருந்தது.
 இனம் பற்றிய புரிதல் இல்லாததன் விளைவாக ஈழத்தார் தனித்து விடப்பட்டு இந்தியாவாலும் சர்வதேசத்தாலும் இனப்படுகொலை க்கு ஆளாகி அழிந்து போயினர்.

 2024 ஆண்டு நடக்கும் இப்போதும் கூட ஈழத்தார் திருந்தவில்லை.
இன்னமும் சர்வதேச அரங்கில் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு தமிழகத் தமிழருடன் கைகோர்க்காமல் இருக்கின்றனர்.

 ஈழம் அமையப்போவது இல்லை அமைந்தால் தமிழர்நாடு தான் அமையும்.
 தமிழகத் தமிழர் விடுதலை அடையாமல் ஈழ விடுதலை கனவில் கூட சாத்தியமில்லை.

ஈழத் தமிழர் இனியாவது திருந்துங்கள்!
இனமாக ஒன்றிணையுங்கள்!

 தமிழகமும் உங்கள் நாடுதான்!
ஈழம் போதும் என்று சுயநலமாக யோசிக்காதீர்கள்!
 

 இதையேதான் புதுச்சேரி தமிழருக்கும் சொல்கிறேன்!
 மாநிலமோ மாவட்டமோ நாடோ இனம் மொத்தமும் ஒரே நிர்வாகத்தில் இருப்பதுதான் முறை!
 புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது பற்றி சிந்தியுங்கள்!

தமிழகத் தமிழருக்கும் இதே அறிவுரைதான்!
ஈழம் தனியாக அமையாது அமைந்தாலும் நிலைக்காது!
 ஈழத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்றால் இந்தியாவிலிருந்து விடுதலை அடைவதைப் பற்றி சிந்தியுங்கள்!
 இந்த ஓர்மை இல்லாமல் ஆயிரம் இயக்கங்கள் கட்சிகள் நடத்தினாலும்  பல ஆயிரம் புத்தகங்கள் போட்டாலும் மாநில ஆட்சியைப் பிடித்தாலும் எதுவும் நடக்காது!

 இனம் மொத்தமும் சேர்ந்து மொத்த தாய்நிலத்தையும் மீட்பதுதான் உண்மையான விடுதலை! 

 விடுதலை எப்போதும் ஆயுத வழியில்தான் கிடைக்கும்!

 உச்ச நீதிமன்றமும் முதலமைச்சர் பதவியும் கொண்டுவராத காவிரி நீரை வீரப்பனார் அனுப்பிய 10 ரூபாய் கேசட் கொண்டு வந்தது.

 லாபமோ நஸ்டமோ இனமாக இணைந்து இருப்பதே தப்பிப் பிழைக்க வழி!

 இந்த இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர் அனைவரும் உறுதியேற்போம்!

இனமாக ஒன்றிணைவோம்!
இனப் படுகொலைக்கு ஆளாகாமல் இருப்போம்!
புலிகள் வழியில் பயணிப்போம்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு! 


  தவறுதான்

 இனவாதம் பழமையானது.
 தற்காலத்தில் மட்டுமில்லை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குள்ளேயே தமது இனவுரிமையை நிலைநாட்டின பல இனங்கள்.
ஆங்கிலேயர் 1905 வங்காளத்தை இரண்டாக பிரித்தபோது 6 ஆண்டுகள் கடுமையாகப் போராடி மீண்டும் ஒன்றிணைந்தனர் வங்காளிகள்.
 1880 களில் பர்மா வை இந்தியாவுடன் சேர்த்த பிறகு 50 ஆண்டுகள் போராடி அங்கே இருந்த இந்தியர்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி 1937 இல் பர்மியர் தமக்கு தனி நிர்வாகம் கேட்டு பெற்றனர்.
1903 லேயே இயக்கம் கட்டி 1936 இல் முதன்முதலாக தமக்கென ஒரிசா எனும் மொழிவாரி மாநிலம் அடைந்தனர் ஒடியர்.
 அதாவது முதலாம் உலகப்போர் மூளப்போகும் காலத்திலேயே இந்திய இனங்கள் விழித்துக்கொண்டு தமது தாய்நிலத்தை தக்கவைப்பதோடு இந்திய அதிகாரத்தைக் கைப்பற்றவும் முன்னெடுப்புகளைத் தொடங்கிவிட்டனர்.
 எங்கும் இனவாதம் பற்றி எரிந்த அக்காலத்தில் அதற்கு மதிப்பளித்து 1925 இல் காந்தி மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமையும் எனும் வாக்குறுதி அளித்து முன்மாதிரியாக காங்கிரசை மொழிவாரியாக பல கிளைகளாக பிரித்து கட்டமைத்தார்.
 இதன்பிறகு வெவ்வேறு நிர்வாக அலகுகளில் சிதறிக்கிடந்த மராத்தியர், கன்னடர், தெலுங்கர் மற்றும் மலையாளிகள் இனவுணர்வு கொண்டு தத்தமது இனத்தை ஒருங்கிணைத்து தாய்நிலத்தை தக்கவைப்பதோடு தமிழர் எல்லைப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் திட்டம் தீட்டினர்.
 1900 களில் தர்ம்பாலா சிங்கள பௌத்த இனவாதத்தை முன்னிறுத்தினார் அது இனவாதமாக உருப்பெற்று 1937 இல் பண்டாரநாயக சிங்கள இனத்திற்கு அறைகூவல் விடுத்து இலங்கையை கைப்பற்ற திட்டமிட்டார்.

 இப்படி எல்லா இனங்களும் ஆங்கிலேயர் வெளியேறுவர் அப்போது அந்த இடத்தை தாம் பிடிக்கத் திட்டமிட்டனர்.
 ஆங்கிலேயரும் இதை அறிந்து அதிகாரப் பகிர்வு அளித்து தற்காலிகத் தீர்வு கண்டனர்.
 இந்திய தலைவர்களும் இனவுணர்வுக்கு மதிப்பளிக்கத் தொடங்கினர்.
 இந்த முக்கியமான நேரத்தில் தமிழர்கள் இன ஓர்மையின்றி கிடந்தனர்.
 வந்தேறிகளின் சதியால் தென்னிந்தியர் ஒரே இனம் என்கிற புரிதலில் அதாவது திராவிட மாயையிலும் மொழியைக் காப்பாற்றி பழமையை நிறுவும் தேவையற்ற வேலையிலும் இறங்கினர்.
 
 தமிழர்களிலும் விதிவிலக்காக சிலர் இருந்தனர்.
 முதலில் அயோத்திதாசர் 1912 இலேயே ஆங்கிலருக்கு அடங்கிய தமிழருக்கு தனிநாடு கேட்டு பத்திரிக்கையில் எழுதினார். அதாவது எல்லை எதுவும் குறிப்பிடாமல் இனத்திற்கு விடுதலை கேட்டார்.
1933 இல் ஈவேரா தனிநாடு கேட்டார். ஆனால் மதராஸ் மகாணத்தை ஆங்கிலேயரே தொடர்ந்து ஆளவேண்டும் எனும் அடிமைத்தனமான கோரிக்கைதான் அது.
 1922 இல் அருணாச்சலம் தனி ஈழம் கேட்டார். இதில் ஈழத் தமிழர் நலன் பற்றிய சிந்தனை இருந்ததே தவிர தமிழகம் பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. 
  1937 இல் ஆதித்தனார் தனிநாடு கேட்டார் அதிலும் ஈழம் இணைந்த பேரரசு கேட்டார்.
 
  இதிலிருந்து நாம் அறிவது தமிழருக்கு இன உணர்வு இல்லை!
 இருந்ததையும் குழப்பி மடைமாற்றினர் வந்தேறிகள்!
 அதையும் மீறி சிந்தித்த ஓரிருவரில் ஈழத்தமிழர் சுயநலமாகவும் தமிழகத்தார் முழு இனம் தழுவியும் சிந்தித்தனர். 
 
 இதன்பிறகு ஆங்கிலேயர் வெளியேற்றமும் அதிகாரப் பகிர்வும் நடந்தது. இதிலும் தமிழர் கோட்டைவிட்டனர். இந்த இடத்திலாவது ஈழத்தமிழர் தமிழகத்துடன் இணையவோ அல்லது தமிழகத்தார் ஈழத்தை தம்முடன் இணைக்கவோ சிந்திக்கவில்லை.
 
 இருபுறமும் தவறென்றாலும் ஈழத்தார் தவறு முத.ன்மையானது என்றே கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 இலும் இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 இலும் ஈழத்தார் சுயநலமாக சிந்தித்தனர்.
 ஒருபக்கம் இலங்கை தனிநாடு அதில் கால் பங்கு அதிகாரம்  இன்னொரு பக்கம் இந்தியாவில் மிகச் சிறுபான்மையான அதிகாரம் எனவே தமிழகத்துடன் இணைவதைக் கைவிட்டனர்.
 
 ஒரு இனத்தின் தாய்நிலம் உடைக்கப்பட்டு இனம் நசுக்கப்படுவதும் அதில் ஒரு பகுதிக்கு சற்று அதிக சலுகை வழங்கப்படுவதும் ஆனாலும் இனம் வெகுண்டெழுந்து மீண்டும் இணைவதும் வரலாற்றில் பல முறை நடந்துள்ளது.

 அப்படி ஒவ்வொரு முறையும் உடைந்த துண்டுகளில் எது சிறியதோ அதுவே போராடி பெரிய துண்டுடன் இணைந்துள்ளது.

 ஜெர்மனி உடைக்கப்பட்ட பிறகு அதில் கொஞ்சம் சிறியதாக இருந்த கிழக்கு ஜெர்மனியே போராடி ஒன்றிணைந்தது.

 தமிழினத்திலும் மலையாளிகள் பிடியிலிருந்த குமரித் தமிழர்கள் போராடி தமிழகத்துடன் இணைந்தனர்.

 வியட்நாம் போல பெரிய துண்டு சிறிய துண்டை போரிட்டு இணைத்துக் கொண்ட வரலாறும் உண்டு.

 ஈழத்தார் தமிழகத்தை  ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்தமை அவர்களது இன்றைய நிலைக்கு காரணம்.
 
 ஆங்கிலேயர் அதிகாரப் பகிர்வு அளித்த 1900களின் போதும் 
1947 இல் இந்திய விடுதலையின் போதும்
 1948 இல் இலங்கை விடுதலையின் போதும் 
இனமாக ஒன்றிணையாத தமிழினம் அதிலும் குறிப்பாக சுயநலமாக சிந்தித்த ஈழத்தார் இன்றைய இழிநிலையை அடைந்ததில் வியப்பில்லை.

 புலிகள் எழுந்தபோதும் இதே தவறைச் செய்தனர்.
தமிழரசன் தலைமையில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடிய தமிழகத் தமிழருடன் இணையாமல் தமிழகத்தில் தமது பிரச்சாரத்தைச் செய்யாமல் நேரடியாக இந்தியாவை தம் பக்கம் இழுப்பதிலும் சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்வதிலும் குறியாக இருந்தனர்.

 இதன் விளைவாக ஈழத்தார் தனித்து விடப்பட்டு இந்தியாவாலும் சர்வதேசத்தாலும் இனப்படுகொலை க்கு ஆளாகி அழிந்து போயினர்.

 2024 ஆண்டு நடக்கும் இப்போதும் கூட ஈழத்தார் திருந்தவில்லை.
இன்னமும் சர்வதேச அரங்கில் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு தமிழகத் தமிழருடன் கைகோர்க்காமல் இருக்கின்றனர்.

 ஈழம் அமையப்போவது இல்லை அமைந்தால் தமிழர்நாடு தான் அமையும்.
 தமிழகத் தமிழர் விடுதலை அடையாமல் ஈழ விடுதலை கனவில் கூட சாத்தியமில்லை.

ஈழத் தமிழர் இனியாவது திருந்துங்கள்!
இனமாக ஒன்றிணையுங்கள்!

 தமிழகமும் உங்கள் நாடுதான்!
ஈழம் போதும் என்று சுயநலமாக யோசிக்காதீர்கள்!

 இதையேதான் புதுச்சேரி தமிழருக்கும் சொல்கிறேன்!
 மாநிலமோ மாவட்டமோ நாடோ இனம் மொத்தமும் ஒரே நிர்வாகத்தில் இருப்பதுதான் முறை!
 புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது பற்றி சிந்தியுங்கள்!

தமிழகத் தமிழருக்கும் இதே அறிவுரைதான்!
ஈழம் தனியாக அமையாது அமைந்தாலும் நிலைக்காது!
 ஈழத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்றால் இந்தியாவிலிருந்து விடுதலை அடைவதைப் பற்றி சிந்தியுங்கள்!

 இனம் மொத்தமும் சேர்ந்து மொத்த தாய்நிலத்தையும் மீட்பதுதான் உண்மையான விடுதலை! 

 விடுதலை எப்போதும் ஆயுத வழியில்தான் கிடைக்கும்!

 லாபமோ நஸ்டமோ இனமாக இணைந்து இருப்பதே தப்பிப் பிழைக்க வழி!

 இந்த இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர் அனைவரும் உறுதியேற்போம்!

இனமாக ஒன்றிணைவோம்!
இனப் படுகொலைக்கு ஆளாகாமல் இருப்போம்!
புலிகள் வழியில் பயணிப்போம்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு! 


 

Monday, 8 March 2021

இலங்கை கிரிக்கெட்டில் கண்துடைப்பு

கண்துடைப்பு

இலங்கை கிரிக்கெட் அணி தொடங்கியதில் தொடங்கியதில் இன்று இன்றுவரை அதன் தேசிய அணியில் ஏறத்தாழ 200 பேர் விளையாடியிருக்கிறார்கள்

இலங்கையில் 75% சிங்களவர் என்று வைத்துக்கொண்டாலும் இந்த 200 இல் 50 பேராவது தமிழர்கள் இருக்கவேண்டும்.

ஆனால் இலங்கை அணியில் விளையாடிய தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி எண்ணத் தொடங்குவோம்....

1) ரசல் அர்னால்ட்
2) ரோய் தியாஸ்
3) பிரதீப் ஜெயபிரகாஷ்தரன்
4) சிறிதரன் ஜெகநாதன்
5) வினோதன் ஜான்
6) ஏஞ்சலோ மேத்யூஸ்
7) முத்தையா முரளிதரன்
8)......?

சரி தமிழ் - சிங்கள கலப்பினத்தவரையும் சேர்த்துக் கொள்வோம்

9) ரவீந்திர புஷ்பகுமார
10) ரவி ரத்னயகே

அவ்வளவுதான்!
அவ்வளவேதான்!

எப்படி இலங்கை ராணுவம் 99% சிங்களவர், இலங்கை காவல்துறை 95% சிங்களவர் என்று ஒரே இனத்தால் நிரம்பி வழிகிறதோ?!

அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியும்!

முத்தையா முரளிதரன் ஒரு கண்துடைப்பு அவ்வளவுதான்.

நாம் எதிர்க்கப்பட வேண்டிய ஒருவரைத்தான் எதிர்க்கிறோம்!
17.10.2021

Thursday, 28 February 2019

ஈழத்தமிழர் போண்டா மணி

ஈழத்தமிழர் போண்டா மணி

என் இயற்பெயர் கேதீஸ்வரன்.
அம்மா கடல்பயணத்தில் குண்டுபோட்டபோது தவறிவிட்டார்கள்.
இப்போது அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் சேலம் அகதி முகாமில் தஞ்சமடைந்தேன்.
எடப்பாடியில் இப்போதும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையில் வசதியாக வாழ்ந்தவன்.
இப்போது அப்படியிருக்க முடியவில்லையே என்கிற கவலையை தமிழக மக்கள் போக்கிவிட்டார்கள்.
என்னை வளர்த்துவிட்ட மண்ணுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

1985இல் அப்பாவை தமிழகம் அழைத்துவந்து கோவில்களை சுற்றிக் காட்டியபோது சிதம்பரம் பஸ் நிலையத்தில் டீ வாங்கித் தரமுடியாத நிலையில் என் மடியில் அப்பாவின் உயிர் பிரிந்தது.

பசியைப் போக்க போன்டா சாப்பிட்டு வந்ததால் அதுவே பெயராகிவிட்டது.
'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' (1992) என் முதல் படம்.

முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் வடிவேலு அண்ணனுடன் நடிக்க ஆரம்பித்த பிறகே பிரபலம் ஆனேன்.
வடிவேலு அண்ணன் சொல்லித்தான் எனக்கு பெண்கொடுத்தனர்.

சிங்கமுத்து அண்ணன் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
என் திருமணத்தை தன் செலவில் நடத்திவைத்தவர் அவர்தான்.

நான் வாய்ப்பு தேடிய காலங்களில் மன்சூர் அலிகான் அண்ணன்தான் தங்க இடம் கொடுத்து மளிகை சாமான்கள் வாங்கித் தந்தவர்.
நல்ல தமிழ் பற்றாளர்.

ஒரு முறை ரஜினி சாரிடம் வாய்ப்பு கேட்டேன்.
'இயக்குனர் கையில்தான் எல்லாமே இருக்கிறது' என்று சொல்லிவிட்டார்.

சினிமாவில் நிறைய ஆண்டுகள் இருந்தாலும் சொந்தமாக வீடு, வாசல் அமைத்துக் கொள்ளவில்லை.
ரசிகர்கள்தான் என் சொத்து.
தற்போதும் 15 படங்கள் கைவசம் உள்ளன.

நன்றி: தினமலர் 24.02.2019
------------------
எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு உயிர் தப்பிச்சு, குண்டு பட்ட காயங்களோட 90-ம் வருஷம் நான் வந்து சேர்ந்த இடம் எடப்பாடி முகாம்.
படுகாயத்தோட வந்த என்னை வீரப்பன் என்கிற அண்ணன்தான் ஆஸ்பத்திரியில சேர்த்து உசிரைக் காப்பாத்தினார்.
அப்புறம் டீக் கடையில வேலை பார்த்தேன்.
எடப்பாடி மக்கள் என்கிட்ட சொந்தக்காரங்க மாதிரி பழகுவாங்க. 
எப்பவுமே பிரிச்சுப் பார்த்ததே இல்லை.

உதாரணத்துக்கு என் குழந்தைகள் படிக்க வசதி இல்லாம இருந்தாங்க.
சம்பத் அண்ணன், மகாலிங்கம் அண்ணன் உட்பட ஊர்ப் பெரிய மனுஷங்க சேர்ந்து உள்ளூர் அரசுப் பள்ளியில எங்க முகாம் குழந்தைகளைச் சேர்த்து படிப்புக்கு ஏற்பாடு செஞ்சாங்க.

இன்னொரு விஷயம் தெரியுமா?
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து எடப்பாடிக்குப் போக நிறைய டவுன் பஸ்கள் வரும்.
நாங்கசேலத்துக்குப் போகும்போது பஸ் நடத்துனர்கள் யாருமே எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க.

இந்தப் பகுதியில மில்கள் அதிகம்.
அப்பப்ப முகாம் பக்கம் எட்டிப் பார்க்கிற மில் முதலாளிங்க அரிசி மூட்டை, பருப்பு மூட்டைனு கொடுத்துட்டுப் போவாங்க.

மனசு விட்டு சொல்றேங்க.
இலங்கையில வயித்துக்குச் சாப்பாடு இல்லாம பலநேரம் கொலைப்பட்டினி கிடந்து இருக்கேன். 
ஆனா, இங்க வந்தபின்னாடி நானும் சரி,  என்னை சேர்ந்த மக்களும் சரி, ஒருவேளைகூடப் பட்டினி கிடந்தது கிடையாதுங்க.

டீக்கடை பாலு அண்ணன், முகாமில் இருந்து வெளியே கூலி வேலைக்குப் போறவங்களுக்குத் தினமும் காலையில 25 போண்டா இலவசமா கொடுப்பார்.

ஒருமுறை என் அண்ணன் இலங்கையில குண்டடிபட்டு ராமேஸ்வரம் கடற்கரைப் பக்கமா ஒதுங்கி இருக்கிறதாத் தகவல் கிடைச்சுது.
கையில காசு இல்லாம தவிச்சப்ப, நடுராத்திரி எடப்பாடியில் உள்ள அன்புமதி அண்ணன் செலவுக்குப் பணம் கொடுத்து, கூடவே ராமேஸ்வரம் வரைக்கும் வந்தார்.
நாங்க போறதுக்குள்ள அண்ணன் உசிரு போயிடுச்சு.
எடப் பாடிக்குத் தகவல் கொடுத்து, ஊர்க்காரங்களை வரவழைச்சு, இறுதிச் சடங்கைச்  செஞ்சாங்க.
நன்றி: விகடன் 01.05.2012@
---------------

போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும்.
இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்துவிட்டார்கள்.

எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார். 
இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.
நன்றி: Wikipedia
-------------------

Wednesday, 23 May 2018

தூத்துக்குடி மக்களுக்காக உயிர்நீத்த ஈழத்தமிழர் கந்தையா

தூத்துக்குடி சிலோன்காலணி எனும் ஈழத்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு வன்முறையில் உயிரை ஈந்தார்.

அன்னாருக்கு வீரவணக்கம்!

படம்: அவருக்கு பொதுமக்கள் வைத்துள்ள நினைவுப் பதாகை
(நன்றி: கவி அமுதன்)