Monday, 14 September 2026

விசில் ஆட்சி 14092026

விசில் ஆட்சி அதிர்ச்சிகளும் ஆறுதல்களும் 14.09.2026 * பாதுகாப்பு அதிகாரியை டிரைவராக்கிய அமைச்சர் ஜெகதீஸ்வரி அதனால் நடந்த விபத்தில் இளைஞர் மரணம் * தனக்கு இன்ஸ்பெக்டர் கொலைமிரட்டல் விடுவதாக புகாரளித்த மறுநாள் கொலை செய்யப்பட்ட திருவொற்றியூர் பிரதீப் ராஜ் * மீனாட்சியம்மன் குடமுழுக்கு தமிழில் செய்ய போராடிய ஓதுவார்கள் கைது * பல்கலை கழக பரப்பளவு 100 ஏக்கர் இருக்க வேண்டும் என்பதை 12 ஏக்கராக குறைத்து மசோதா * விவசாய நிலங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி இனி தேவையில்லை என மசோதா * கோயம்புத்தூர் கஞ்சா பயன்படுத்தும் 20 சக மாணவர்களை காட்டிக் கொடுத்த அமுதன் அவர்களால் பெற்றோர் கண்முன் அடித்து கொலை, இரு குழுவுக்கு இடையேயான மோதல் என ப.க. துறை அமைச்சர் சட்டசபையில் பொய் * விஜய் வீட்டுக்கு அருகே 1200 கோடி செலவில் 25 ஏக்கர் housing board நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் * ஓய்வுபெற்று ஆந்திரா சென்றுவிட்ட பனீந்திர ரெட்டியை அழைத்து வந்து ரியல் எஸ்டேட் ஒழுங்கு ஆணைய (rera) தலைவர் பதவி * அரசு காப்பீடு 25 லட்சம் ஆக உயர்வு ஆனால் மாத வருமானம் பத்தாயிரம் இருக்க வேண்டும் என நிபந்தனை * பாட்டிலுக்கு மேல் பத்து ரூபாய் வாங்குவதை நியாயப்படுத்தி விகடன் பேட்டி அமைச்சர் விக்னேஷ் * மேட்டூர் அணை திறக்க முதல்வர் சென்று வர 6 கோடி செலவு * ஜெகத்ரட்சகன் இன் அக்காட் சசிகலாவின் மிடாஸ் டி.ஆர்.பாலு வின் கோல்டன் வாட்ஸ் நிறுவன மது வகைகள் டாஸ்மாக் கொள்முதல் மீண்டும் தொடங்கியது * மேகமலை கிராமங்களை சட்டப்படி காப்பாற்றுவோம் என வாக்களித்துவிட்டு சீராய்வு மனு விசாரணையில் 3 மாதத்தில் காலி செய்துவிடுவோம் என்று வாதிடல் * போராடும் தூய்மைப் பணியாளர் சம்பள உயர்வு இல்லை ஆனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு * தங்கை அனிதா நினைவேந்தல் பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த அனுமதி மறுப்பு ஆனாலும் நிகழ்வு நடக்கும் என அனிதாவின் சொந்த அண்ணன் s.மணிரத்தினம் பேட்டி * மேட்டூர் 1.5 லட்ச மதிப்புள்ள தன் கூலிங் கிளாசை மூதாட்டிக்கு மாட்டிவிட்ட முதல்வர் * கள்ளச் சாராய வியாபாரிகள் மறுவாழ்வு நிதி ஒரு லட்சமாக உயர்த்தி அமைச்சர் விக்னேஷ் உத்தரவு * தூத்துக்குடி துப்பாக்கி சூடு போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிவிப்பு * செம்மஞ்சேரி jpr கல்லூரி அருகே 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்த நிலத்தை திமுக அரசு மீட்டு கொண்டுவந்த சர்வதேச விளையாட்டு மையம் திட்டம் தவெகவால் ரத்து * அமைச்சர் பிரபு மருத்துவமனைக்கு எதிரே உள்ள 'இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவிலுக்கு' சொந்தமான 120 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு * போராடிய தூய்மை பணியாளர் மீது தவெக 23 fir போடப்பட்டுள்ளது நீக்குமாறு கோரிக்கை * ஒரு வீடியோவுக்கு 75,000 வரை கொடுத்து இந்தியில் ரூட் மாபியா விஜய் பற்றி போலியான சாதனைகள் கூறி விளம்பரம் -கம்யூன் * ஆன்லைன் டாஸ்மாக் ஆப் இல் புக் செய்தும் மது கிடைக்கவில்லை 10ரூ அதிகமாக கொடுத்த பிறகே ஊழியர்கள் toi செய்தி * ஓமலூர் அருகே அரசு நீட் பயிற்சி ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்ட வடயிந்தியர்கள் * எண்ணூர் கொசஸ்தலை மீன்கள் சைத்து மிதந்ததற்கு காரணம் மனித கழிவுகள் என சுற்றுசூ அமைச் ராஜீவ் * மத்திய அரசு திட்டம் pm mudra திட்டத்தில் விருதுநகருக்கு திமுக கொண்டு வந்த வேலைவாய்ப்பை தாம் கொண்டுவந்ததாக கீர்த்தனா * முதல்வர் அலுவலக இன்ட்டீரியர் 5 கோடி யில் * இன்னோவா கார் கேட்ட mla சண்முகன் 6.5 கோடி சொத்து * நிலக்கோட்டை mla ஐயனார் கூலி வேலை பார்த்தவர் என சட்டசபையில் பொய், மனைவி பெயரில் கார், jcp, லாரி மற்றும் 82 லட்சம் சொத்து * சின்னசேலம் அரசு கட்டிக் கொடுத்த 36 வீடுகளை கோவில் நில ஆக்கிரமிப்பு என jcp இடிப்பு * கேளம்பாக்கம் தையூர் பிரவீன் கூலிப்படை மூலம் ஆணவக்கொலை ஒரே சமூகத்திற்குள் * கல்லூரி கல்வித் துறை மாணவர்கள் cjp மற்றும் இடதுசாரி போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ள சுற்றறிக்கை * மின்சார கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு உதயநிதி, ஆதவ் தனிப்பட்ட தாக்குதல் வாக்குவாதம் * கார் தேவை என்று கேட்ட 3 mla கள் (ஜோதிமணி, சபரி ஐங்கரன், சண்முகன்) பெரும் கோடிஸ்வரர்கள் * லட்ச ரூபாய் சம்பளமும் அனைத்து போக்குவரத்தும் இலவசமாக பெறும் mla அனைவருக்கும் கார் மற்றும் மாதம் 75,000 வாகனப்படி *ஈரான் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உடலை ஒரு வாரமாகியும் மீட்காத அரசு * வண்டல் மண் எடுக்க அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு அதை மணல் அல்லது களிமண் என்று புரிந்துகொண்டு மணல் திருட்டு, செங்கல் சூளை என பதிலளித்த செங்கோட்டையன், பிரபு * முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சிபி ராய் விஜய் கொடும்பாவி கொளுத்தி போராட்டம் * ஒரே நாளில் நான்கு ஆளுங்கட்சி mlaக்களை கண்டித்து உட்கார வைத்த சபாநாயகர் அவைக் குறிப்பிலிருந்து 4 நீக்கம் * 1800 அரசு பேருந்து நடத்துநர் பணி ஒப்பந்தம் உத்திரபிரதேச நிறுவனத்திடம் ஒப்படைப்பு, ஊழியர்கள் போராட்டம் * விசிக மாநாடு உளுந்தூர் பேட்டை நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை * 16 வயது தனுஷ் ஐ அடித்துக் கொன்ற சக மாசவர்கள் 3 நாட்கள் கழித்து சென்ற ஆதவ் ராஜ்மோகன் பொதுமக்களால் முற்றுகை * கர்நாடகா வில் மேகதாது அருகே 3 தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக் கொலை சட்டசபையில் தவெக அரசு மௌனம் * ஆனாலும் அடுத்த மாநிலத்தில் தலையிட வேண்டாம் என கர்நா. முதல்வர் விஜய் அரசுக்கு எச்சரிக்கை * சட்டசபை யில் 10 நிமிடத்தில் பேசி முடிக்க அறிவுறுத்தல் மாலை சீக்கிரம் செல்லமுடியாமல் சிலருக்கு சிரமம் என்று விளக்கம் *விசிக கட்சி அடாவடியை தட்டிக்கேட்ட இளைஞரை அடித்து உதைத்து இழுத்துச் சென்ற போலீஸ் * ஆந்திராவின் என்ரிக்கா நிறுவன மது தரமில்லை என்று விதிக்கப்பட்ட தடை டாஸ்மாக் ஆல் ஒரே நாளில் நீக்கம் * தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா புரிந் ஒப்பந் போட்ட 96 நிறுவனங்களுமே டம்மி! 46 ஜெயின் மார்வாடி நிறுவனங்கள், பல கொரிய நிறுவனங்கள், எல்லாமே மிகச்சிறிய நிறுவனங்கள் அல்லது ஊர் பெயர் தெரியாத நினுவனங்கள் - சாட்டை * குளித்தலை சிறுமியை பா.வ.கொடுமை செய்த மாணிக்கம் என்பவரை பொதுமக்கள் ஆதரவுடன் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய பாட்டி * போதைப்பொருள் தொடர்பாக தகவல் கொடுத்த மாணவர் அமுதன் கொலை * ஆதவ் சட்டசபையில் கரும்பு உற்பத்தி ஐந்தாண்டுகளில் 70% குறைந்துவிட்டதாக தவறான தகவல் * சுற்றுலா அமைச்சர் ராஜேஷ் குமார் தொடங்கிய விளையாட்டு நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பாடலுக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து * வனவிலங்குகள் தாக்குதல் குறித்த கேள்விக்கு 'மக்கள் என்ஜாய்மென்ட் க்காக காட்டுக்குள் செல்கிறார்கள்' என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பொறுப்பற்ற பதில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் * மூத்த குடிமக்கள் புனிதப் பயணம் வகுத்து பார்த்தால் தலைக்கு 800 ரூ மட்டுமே வரும் * அம்பேத்கர் அயலக மாணவர் நிதி கைவிரிப்பு * கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி க்கு அரசு பதவி இத்துடன் 4 தயாரிப்பாளர்கள் அரசு பதவியில் * மேகமலை, வருசநாடு 50,000 பழங்குடிகள் வாழும் 92 கிராமங்களை காலி செய்யச் சொன்ன உச்சநீ. 450 குடும்பங்கள்தான் உள்ளதாக தமிழக அரசு கொடுத்த தவறான ஆவணத்தால் நடந்தது *மதுரை மீனாட்சி கோவில் நில மோசடி சி.டி. நிர்மல் குமார் உறவினர் சப் கலெக்டர் அன்பழகன் கைது * பழனி கோவில் மோசடி போலவே அடுத்த நான்கு நாட்களில் தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் சொத்தும் விற்பனை * பழனி கோவில் சொத்து மோசடியில் கைதான ஒருவர் (அன்வர்தீன்) மரணம் இன்னொருவர் (ஜஸ்டின் மணிகண்டன்) உயிருக்கு ஆபத்தான நிலையில் * தூத்துக்குடி பறிமுதல் செய்து காவலில் வைக்கப்பட்டிருந்த சீன பட்டாசுகளை திருடிய தவெக நிர்வாகி * அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பணம் இல்லை என பட்ஜெட் இல் கைகழுவல் * மதசார்பற்ற அரசு என்றுவிட்டு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஜெபமாலையுடன் கர்த்தரை வேண்டி ஆரம்பித்த மரியவில்சன் * மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8000 லிருந்து 7000 ஆக குறைப்பு * ஓட்டப்பிடாரம் போதை கும்பல் மோதல் 2பேருக்கு வெட்டு நாட்டு வெடிகுண்டு வீசல் * திருவள்ளூர் மீனவர்களுக்கு இழப்பீடு அளிக்காமல் எம்&டி விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்த மீன்வளத்துறை அமைச்சரை துரத்தி துரத்தி கேள்வி கேட்ட பத்திரிகையாளர் அமைச்சர் நிமிர்ந்து பார்க்காமல் ஓடினார் * மாணவர்களை கிரவுன்டில் கூட்டி tvk tvk என்று கத்தவைத்து வீடியோ எடுத்த காரைக்குடி mla * தமிழக அரசு சமூக வலை கண்காணிப்பு (fact check unit) குழு பெயர்மாற்றப்பட்டு (iid) அதன் தலைவராக ரசிகர் மன்ற தலைவர் குரு தலைவா என்பவர் நியமனம் * பனவிளை கிராமத்து ஊர் பொதுக் கிணற்றை ஆக்கிரமித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி குடும்பம் * நாடு முழுவதும் நீட் போராட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதி உத்தரவு அதை செயல்படுத்திவிட்டு முதல்வர் விஜய் தாயுள்ளத்தோடு செய்ததாக ராஜ்மோகன் பேட்டி * பல்லடம் விளைந்த நிலத்தில் ஜேசிபி கொண்டு idpl குழாய் பதிப்பு, 340 கிமீ நீளம் கர்நாடகா செல்கிறது, போராடிய விவசாயிகளை வலுக்கட்டாயமாக அகற்றிய போலீஸ் * பால்வள அமைச்சரான நாமக்கல் c.விஜயலட்சுமி சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து மூடி, பிறகு மாதாமாதம் லஞ்சம் பெற்றதாக விகடன் * இளையான்குடி யில் மெத்தப்பெட்டைன் போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிப்பு 9 பேர் கைது * ஜூலை மாத கரன்ட் பில் 9.5 லட்சம் பேருக்கு மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளது என்ற கேள்விக்கு திமுக ஆட்சி ஜூலை மாதத்தில் 11 லட்சம் பேருக்கு இப்படி வந்தது என்று சிடி நிர்மல் குமார் பதில் * பல்லடம் அருகே வயல்வெளிகள் மத்தியில் குழாய் பதிப்பு பொதுமக்கள் போராட்டத்தை வலுக்கட்டாயமாக அகற்றிய போலீஸ் * தென்காசி ஆலங்குளம் அருகே பாதுப்பில்லாத 60,000 நெல்மூட்டைகள் எரிந்து சாம்பல் எந்த அமைச்சரும் ஆய்வு செய்யவில்லை * வண்டல் மண் கொள்ளை வீரபாண்டி யின் தவெக mla பழனிவேல் * மகளிர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி 10ம் வகுப்பு கூட தேறாமல் டாக்டர் bsc என சான்றிதழ், தக அறி உரி சட்டத்தில் கேட்டும் கல்வித் தகுதி பற்றி பதில் இல்லை * ராஜகுரு எனும் தவெக நிர்வாகி அமைச்சர் ஜெகதீஸ்வரி தன்னை ஜட்டியோடு சிறையில் வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டும் ஆடியோவை வெளியிட்டார் * the commune தவெக பிரஷாந்த் கிஷோர் உட்பட சமூக வலை மாபியாக்களுக்கு 800 கோடி வரை செலவு செய்துள்ளதாக கட்டுரை * சேலம் ஒதியத்தூர் அம்பேத்கர் சிலை திறக்க முடியாத சூழல் * sbi வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த பெண் அழகிரி யின் மகள் என்பதால் காவல்நிலைய சொந்த ஜாமீனில் விடுவிப்பு * தமிழகத்தின் திட்டங்கள் ஆந்திராவுக்கு வருகிறது தொடர்ந்து இதைச் செய்யுங்கள் என ஆந்திர அமைச்சர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு பாராளுமன்றத்தில் கிண்டல் * காவிரி ஆணையம் 15 நாட்களுக்குள் தமிழகத்திற்கு 4tmc திறந்துவிட உத்தரவிட்டும் அதை மறுத்து கர்நாடகா மேல்முறையீடு தவெக அரசு வேடிக்கை * மாணவர்கள் மாணவிகளிடம் பேசினாலே போக்சோ பாயும் என்று பேசிய பேசிய சிங்கப்பெண் ssi சுமதி அப்படையிலிருந்து நீக்கம் * தரமற்ற உணவு வழங்கப்பட்டு 100 துப்புரவு தொழிலாளர்கள் மருத்துவமனை அனுமதி * சரியான கொள்முதல் விலை கொடுக்க முடியாமல் ஆவின் திணறல் பால் வரத்து குறைவு விற்பனை பாதிப்பு * உயர்சிறப்பு மருத்துவ படிப்பு 151 சீட்களை நிரப்பாமல் வைத்திருந்து மத்திய அரசிடம் தாரைவார்த்த திமுக தவெக அரசுகள் நீதிமன்றத்திலும் சரியாக வாதாடத் தெரியாமல் கோட்டைவிட்டனர் * சீமான் திமுக விடம் 100 கோடி வாங்கியதாக அவதூறு பரப்பிய தவெக ஆதரவாளர் பிஸ்மி என்பவரை வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிய நாதக வழக்கறிஞர் பாசறை * கேரள காங்கிரஸ் மத்திய அரசை புதிய அணை கட்ட வலியுறுத்தி தீர்மானம் தமிழக காங்கிரஸ் ராகுல் பிரியங்கா காந்தி கைதை கண்டித்து போராடிக் கொண்டிருந்தது * ராமேஸ்வரம் மீனவர் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது தங்கச்சி மடத்தில் உறவினர்கள் மறியல் * ஜோதிடர் சொன்னதால் தலைமைச் செயலகத்திலிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு மாறிய விஜய், 11 கோடி செலவு * நீட் தேர முடியாதவர்கள் வக்கீல் படிக்கவும் carpenter, plumber ஆகுமாறும் பேசிய ctr நிர்மல் குமார் * சோளிங்கர் mla கபில் நியூஸ் தமிழ் அரங்கநாதன் உட்பட பத்திரிக்கையாளர்களை முட்டியை முறுக்கி தாக்குதல் * கங்கைகொண்டான் விக்ரம் சோலார் திட்டம் சென்ற ஆட்சியில் கையெழுத்தானதை தாம் கொண்டுவந்தது போலவும் 2607 பேர் வேலைவாய்ப்பு என்றும் முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு * எழும்பூர் 99 வது வார்டில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பெண்கள் கழிப்பிடம் ரிப்பன் வெட்டி திறந்த ராஜ்மோகன் * 5 வாரத்தில் 4 காவல் மரணங்கள் *ஆளுநர் உத்தரவு படி முதன்முதலாக மனோன்மணீயம் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது இதை எதிர்த்து டிஜிபி மகேஸ்குமார் அகர்வால் விழாவை புறக்கணித்தார் * தவெக மா.செ விஜய மோகன் பல கட்சிப் பெண்களை பதவி ஆசை காட்டி பாலியல் தேவைக்கு அழைப்பதாக பெண் புகார் FIR போடப்பட்டது தன் 14 வயது மகள் மீது ஆசைப்படுவதாக சாட்டையில் பேட்டி * அன்புமணிக்கு மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற அவசியமில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதில் * அனிதா மரணத்துக்கு பிறகு நீட் கோச்சிங் சென்டர் ஆரம்பித்து பணம் சம்பாதித்தவர் விஜய் வேட்பு மனுவில் கோகிலாம்பாள் கல்வி நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடு அம்பலம் * அரசு வழக்கறிஞர் பதவிக்கு 12 லட்சம் பேரம் பேசும் குமரி தவெக நிர்வாகி அனிஷ் ஆடியோ லீக் கட்சியிலிருந்து நீக்கம் * மத்திய மாநில ஒத்திசைவு (concurrent) பட்டியலுக்கு கல்வியை மாற்றுவோம் என ராஜ்மோகன் பேட்டி ஏற்கனவே அப்படித்தான் உள்ளது * பாடப் புத்தகங்களை படங்கள் நிறைந்த QR மூலம் video வருவது போன்று (திரைப்)பட புத்தமாக மாற்றுவோம் என ராஜ்மோகன் * கனிமவளத்துறை அமைச்சர் உறவினருக்காக புதிய கல்குவாரி அமையக்கூடாது என்று கீழவளவு கிராம மக்கள் காவல்நிலையம் முன் போராட்டம் * புதிய குவாரியை எதிர்க்கும் சிவகங்கை ஜெயங்கொண்டநிலை வழக்கறிஞர் வேலாயுதம் கார் நடுரோட்டில் நிறுத்தி அடித்த குவாரி மாபியா பொதுமக்கள் கூடியதால் பிழைத்தனர் * பல ஆண்டுகளாக த.நா பாடநூல் கழகம் புத்தக கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ள நிலையில் முதன்முதலில் தானே செய்துள்ளதாக லயோலா மணி * தென்காசி தவெக செயற்குழு ராபின் பெண்களை தவறாக நடத்துவதாக கட்சி நிர்வாகி செல்வி dsp அலுவலகம் புகார் * வந்தே மாதரம் தேசிய கீதம் மூன்றாவதாக தமழ்த்தாய் வாழ்த்து * தவெக அரசு கரூரில் வழங்கிய அரசு பணியை ரத்து செய்தது. பொதுமக்களின் வேலைவாய்ப்பை தூக்கிவீச அரசு அதிகாரத்துக்கு உரிமையில்லை என்ற வரிகள். * cjp தமிழ்நாடு கிளை என போலியான கணக்கு மூலம் ராஜ்மோகன் க்கு நன்றி அந்த கணக்கு cjp க்கு 5 ஆண்டுகள் முந்தையது பெயர் மாற்றப்பட்டது * டாஸ்மாக் லிருந்து பார் 100 மீட்டர் வரை தள்ளி இருக்கலாம் என விதி தளர்த்தல் * கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு 8 ஊழியர்கள் சஸ்பென்ட் *சேலத்தில் பைக்கை திருடிய ரோந்து போலீஸ் இருவர் சிசிடிவி யில் மாட்டியதும் ஒத்திகை என மழுப்பல் * திருச்சி சிறப்பு முகாம் 3 ஈழத் தமிழ் பெண்கள் 12 நாட்கள் உண்ணாவிரதம் * கர்நாடகா போய் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் சம்மதம், தேவையற்ற நடவடிக்கை என்று அன்புமணி விமர்சனம் *அத்திப்பள்ளி மறியல் கர்நாடகாவில் பதற்றம் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்திவைப்பு * ஜூன் மாத 90 tmc ஜூலை மாத 30tmc காவிரி வரவில்லை குருவை சாகுபடி முற்றிலும் பாதிப்பு * ஸ்ரீவைகுண்டம் கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி உடைமைகளை சூறையாடிய தவெக நிர்வாகி பாலமுருகன் * 3 மாதங்களில் 20881 கோடி கடன் அதில் வட்டிச் செலவு 14618 கோடி *டெல்லி போராட்டம் வெற்றிபெற்று முடிந்த சில நொடிகளில் சென்னை போராட்ட களத்தில் போய் ஆதரவு தெரிவித்த ராஜ்மோகன் * நீட் க்கு எதிரான மாணவர் போராட்ட களத்தில் கலந்துகொள்ள சென்ற ராஜ்மோகனை மெரினாவை மூடியதாக முழக்கமிட்ட மாணவர்கள் * நீட் எதிரான மாணவர் கூட்டத்தில் நீட் ஆதரவாளர் தவெக ஸனம் ஷெட்டி போய் இங்கே அரசியல் பேசுவது தவறு என்று கூறியதால் கூச்சல் எழுந்து வெளியேற்றப் பட்டார் முந்தைய நாள் தியேட்டரில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல் * நீட் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக கோவை திருச்சி திருப்பூர் எழும்பூர் தமுக்கம் போராடிய DYFI, SFI மாணவர்களை பலவந்தமாக அகற்றிய காவல்துறை * ஆழ்வார்குறிச்சி குழந்தை இதய அறுவை சிகிச்சை தவெக அமைச்சர் நடத்தித் தந்ததாக பொய்யான வீடியோ * ஜனநாயகன் படம் பார்க்க முதல்வர் அமைச்சர்கள் சென்றுவிட்டதால் வெறிச்சோடிய தலைமைச் செயலகம் * ஜூன் 12 திறக்க வேண்டிய காவிரி திறக்கவில்லை நீர்வளத்துறை அமைச்சர் ஜனநாயகன் ரிலீஸ் வேலையில் பிசி *தூத்துக்குடி போலீஸ் அடித்து மருத்துவமனையில் சேர்த்த இளைஞர் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி இறப்பு *பெங்களூர் குடிநீர் தேவை அதனால் தண்ணீர் திறக்க முடியாது காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகா மறுப்பு *காசிமேடு மீனவர் மறியல் பற்றி கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடிய மீன்வளத்துறை அமைச்சர் *பணி நிரந்தரம் கோரி சென்னையில் அரசு நர்சுகள் போராட்டம் * மது விற்பனை தனியார் மயமாக்க ஆலோசனை பொள்ளாச்சியில் அமைச்சர் விக்னேஷ் * பரந்தூர் திட்டத்தை தவெக எதிர்த்து மத்தியில் முறையிட்டுள்ளதாக கூறியது பொய் திமுக அமைச்சர் வில்சன் கடிதம் மூலம் கேட்டதற்கு அதிகாரப்பூர்வ பதில் *துணைவேந்தர் நியமன கமிட்டி 3 பிரதிநிதிகளை 5 என்றாக்கி மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் * நிறுத்திவைக்கப்பட்ட 8வழிச் சாலையை தொடங்க அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை * கடையம் அருகே 10டன் கழிவுகளை கொட்டிய கேரள லாரிகள் *தமிழ்நாடு நாள் என இரண்டு தினங்கள் அறிவிப்பு * சஸ்த்ரா பல்கலை ஆக்கிரமித்துள்ள 20ஏக்கர் 20 ஆண்டுகளாக இழுத்தடிப்பு வெறும் 2 ஏக்கர் குடியிருப்பை இடித்து அகற்றம் * தமிழ்நாடு மருத்துப் பணிகள் கழகம் மூலம் தங்கமோதிரம் வாங்கப்படும் என அறிவிப்பு அதே நேரத்தில் மருத்துவ துறைக்கு நிதி வழங்க nalam tn மூலம் பொதுமக்களிடம் கோரிக்கை * ஜல் ஜீவன் 2.0 மத்திய அரசின் திட்டத்தில் கையெழுத்து *விஜயுடன் போட்டோ எடுக்கவைப்பதாக இளம்பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்த வாய்ஸ் ஆப் சரத் ஆடியோ லீக் கமிசனரிடம் புகார் ஏற்கனவே கள்ளநோட்டு மனைவியை கொடுமைப் படுத்திய பின்னணி உடையவர் *இருக்கன்துறை சுடுகாடு டெண்டர் குளறுபடி அறப்போர் இயக்க புகாரால் ரத்து * கள்ளக்குறிச்சி 45 ஆண்டு குடியிருப்பு இடித்து அகற்றம் * 62 நாட்களில் 10 அரசு பள்ளிகள் மூடல் 15 cbse பள்ளிகள் திறப்பு * தமிழகத்தில் ரூட் மாபியா பரப்பிய பரப்பிய தவெக போலிச் சாதனைகளை தோலுரித்த தி இந்து போல வடக்கே பரப்பிய வதந்திகளை தோலுரித்த இந்தியா டுடே டிவி * பழநி கோவில் சொத்து முறைகேடு அமைச்சரை விமர்சித்த வினோத் சூர்யா கைது கோர்ட் கண்டனம் *பதவி தருவதாக 26 லட்சம் வாங்கினார்கள் தவெக நிர்வாகி ஷர்மிளா பாலாஜி மற்றும் கணவர் புகார் *கூடங்குளம் அணுவுலை பற்றிய ரகசிய தகவல்கள் இணையத்தில் கசிவு *1600 கோடி ஊழலை வெளிக்கொணர்ந்த சகாயம் ஐஏஎஸ் ஏன் போலீஸ் பாதுகாப்பு இல்லை என அரசுக்கு கோர்ட் கேள்வி * உணவகத்துடன் கூடிய மதுக்கூடம் ரெஸ்ட்ரோபார் களை ஆரம்பிக்க டாஸ்மாக் முடிவு * குளித்தலை தவெக ஒ.செ ரமேஷ் பாலியல் தொந்தரவு பொதுமக்களே அடித்து போலீசில் ஒப்படைப்பு * எதிர்கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி வாங்கி 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் * பொள்ளாச்சி பல பெண்களை கடன் கொடுத்து தவறான வழியில் இழுத்த தவெக நிர்வாகி * பொதுமக்கள் சென்று சந்திக்க முடியாத முதல்வர் சினிமாக்கார்ர்கள் மட்டும் பலர் சந்திப்பு புகைப்படங்கள் * மாம்பாக்கம் தவெக ஊராட்சித் தலைவர் ஒப்பந்தக்காரரிடர் 1.3 லட்சம் வாங்கும் வீடியோ வைரல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் * விஜயை விமர்சித்த மாற்றுத் திறனாளி கைநு செய்து அலைக்கழிப்பு கோர்ட் தனது ஜாமீனில் விட்டது * சூயஸ் நிறுவனம் இறுதி ஒப்பந்தம் சேலம் தண்ணீர் தாரைவார்ப்பு * சிடிஆர் நிர்மல் குமார் இன் இணையம் ctrnirmalconnect ல் அவரது பணிகள் என்று போலியான விபரங்கள் விமர்சனங்கள் வந்தபிறகு அழிப்பு * குமரி சபரி வர்மன் மாற்றுத்திறனாளி குட்கா விற்றதாக போலீஸ் அடித்து கொலை அதே நாளில் தவெக பவானி அருண் 135 கிலோ குட்காவுடன் கைது காவல்நிலைய சொந்த ஜாமீனில் விடுதலை * வாக்குறுதி படி மீனவருக்கு மீன் இனப்பெருக்க கால தடை உதவித் தொகை வழங்கவில்லை வழக்கு போட்டு வாங்கிக் கொடுத்த நாதக தீரன் திருமுருகன் * அறந்தாங்கி டாஸ்மாக் எதிரே போராடிய பள்ளி மாணவிகளை துரத்தி துரத்தி அடித்த போலீஸ் * பாடநூல் தலைவர் அனுபவமற்ற லயோலா மணி * பழநி கோவில் 200 கோடி சொத்து முறைகேடாக தனியாருக்கு 2கோடிக்கு பத்திரப்பதிவு எதிர்ப்பு கிளம்பியதால் தவறை ஒத்துக்கொண்ட அறநி அமைச் * மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம் லட்சம் வீரப்பன்களை உருவாக்குவோம் என அன்புமணி பதில் * கர்நாடகா போய் கொல்லூர் அம்மன் தரிசனம் செய்த விஜய் கூடவே இருந்த கர்நாடக துணை முதலமைச்சர் இடம் காவிரி பற்றி பேசவில்லை * அரசு தரப்பு வக்கீல் நியமனம் லட்சக் கணக்கில் லஞ்சம் கேட்பதாக தவெக பெண் நிர்வாகி வழக்கு 120 கோடி சம்பாதித்த புசி ஆனந்த் * தாய்மாமன் திட்டம் அனைத்து குழந்தைகளுக்கு என்ற வாக்குறுதி அரசு மருத்துவமனை பிறக்கும் குழந்தை என்று மாற்றம் *ஜோஸ் ஆலுக்காஸிடம் சந்தை மதிப்பை விட 3000ரூ அதிக விலைக்கு தங்கம் வாங்க டெண்டர். * 4.44 லட்சம் மோதிரங்கள் செய்து கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் ஊழல் நடக்கும் * தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் சட்ட திருத்தம் அந்த தேவையற்ற அனுமதியை லஞ்சம் இல்லாமல் பெற முடிவதாக பரப்புரை * பழனி கோவில் பத்திரப் பதிவு செல்லாது என்று தீர்ப்பு * மேகதாது அணை முடிவை காவிரி ஆணையத்திடம் தமிழக அரசு கையளித்தது தவறு என மணியரசன் நகல் எரித்து விமர்சனம் * ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ரேசன் கடையில் லாரி டயர் ஆய்வு நகைச்சுவை * நெம்மேலி 6700 கோடி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நாசகரமானது * விஜய் ரசிகர் முதல்வரின் செயலாளராக நியமனம் அரசாணை 40 நாட்களாக மூடி மறைப்பு * கரூர் வட்டம் மூன்று கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடமே நிலத்தை விற்றுவிட முயற்சி * குமரி அணுக்கழிவு ஒப்பந்தம் காலம் நீட்டிப்பு * குடிநீரை காலி செய்யும் டேட்டா சென்டர்கள் அமையும் ஒப்பத்தம் கையெழுத்தானது * விஜயை விமர்சனம் செய்யும் 18 நபர்களை தடை செய்ய ட்விட்டருக்கு அரசு சார்பில் அறிக்கை தவறு என கோர்ட் உத்தரவு * சாராயத்தை தொட்டதே இல்லை என்ற ஆதவ் கைப்பையில் பாட்டில் வைத்து மாட்டிய பழைய வீடியோ வைரல் * கர்நாடகத் தெலுங்கர் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் டெல்லி பிரதிநிதி பதவி * ஏற்கனவே 30 லட்சம் பெற்ற கரூர் நெரிசல் குடும்பங்களுக்கு அரசு வேலை இடைத்தேர்தல் வந்தவுடன் திடீர் பாசம் * ஜவ்வாது மலையில் வரவுள்ள நீரேற்று திட்டம் நாசகாரமானது என்று விகடன் செய்தி * அமைச்சர் சரத் ஐபிஎல் அரங்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வைரல் * பள்ளியை ஆய்வு செய்த கீர்த்தனா ஆணவத்துடன் நடந்து கடும் விமர்சனங்கள் * 18பேர் இறந்த ஞஅமோனியா கசிவு ஆலைக்கு போகாமல் பள்ளியில் என்ன ஆய்வு என்று சீமான் விமர்சனம் * சட்டசபையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடம் தவெக வினர் பெயர்களை குறிப்பிட்டு பேசிய உதயநிதி * விஜய் நேரடியாக குதிரைபேரம் பேசியதாக வைகோ பேட்டி * ஆந்திராவுக்கு சென்ற இரண்டு முக்கிய தொழில்வாய்ப்புகள் * இறுதி செய்யப்பட்ட வேட்பாளரை பணபலத்தால் அகற்றிவிட்டு சீட் வாங்கி வென்ற தவெக எம்எல்ஏ தன்னை குதிரை பேரம் பேசுவதாக பேட்டி * சென்ற ஆட்சியில் வாங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் சென்னைக்கு ஓட்டியே வரவைத்து பிரம்மாண்ட விழா * அமைச்சர் கீர்த்தனா முதலீடு ஈர்க்க சிறுபிள்ளைத் தனமான ரீல்ஸ் * திருச்செந்தூர் கோவில் அனைத்து சிறப்பு பூஜை கட்டணங்களும் உயர்த்தல் * உயர்கல்வி அமைச்சர் பள்ளி நிகழ்ச்சியில் குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் மாணவிகள் கால்களை அமுக்கிவிட்ட வீடியோ சர்ச்சையானது * நடிகர் பாக்யராஜு மறைவுக்கு அரச மரியாதை * முதல்வர் மராத்தான் ஓடியபோது உண்மையான விளையாட்டு வீரர்களை மணிக்கணக்கில் அடைத்து வைத்து துணைநடிகர்கள் புடைசூழ ரீல்ஸ் ஓட்டம் * ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ இரு அடியாட்கள் தவெக பெண் தொண்டரை பா.வன் செய்த புகார் எந்த நடவடிக்கையும் இல்லை * விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் ஆதவ் அர்ஜுனா சர்ச்சை கருத்து * விஐய் முகம் போல மைதானத்தில் உட்காரவைக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் * மூடப்பட்ட டாஸ்மாக் பட்டியல் தகவ அறி உரி சட் மூலம் போலி என்று அம்பலம் *ரிசர்வ்டு அன்ரிசர்வ்டு வித்தியாசம் தெரியாத போக்குவரத்து அமைச்சர் * ஆலங்குளம் நெட்டூர் தலித் மக்களை தாக்கி வரும் முகமூடி ஆயுத கும்பல் 6 பேருக்கு அரிவாள் வெட்டு * விவசாய கடன் ரத்து சொன்னதில் 10% மட்டும் நிறைவேற்றல் * தாராபுரம் ஆட்டோ ஓட்டுநரை கழுத்தில் வெட்டிவிட்டு காசு கொடுக்காமல் ஓடிய வடமாநில கும்பல் * தென்காசி சிவகிரி விசாரணைக்கு அழைத்துசென்ற அந்தோணி ராஜ் (65) விசம் குடித்து இறந்துவிட்டதாக சடலம் ஒப்படைப்பு * கெலவரப்பள்ளி அணை மாசு நுரை கலந்த நீர் வீடியோ வைரல் * புதுக்கோட்டை 35வயது மாற்றுத்திறனாளி பெண் இருவரால் பா.வன் அரசு மருத்துவமனையில் தரையில் போட்டு சிகிச்சை * 15 லட்சம் பக்க குற்றப் பத்திரிக்கை கொண்ட சேலம் வின்ஸ்டார் சிவக்குமார் 5 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு தவெக இணைவு * ரவுடி படப்பை குணா நண்பர் தென்னரசு அயலக தமிழர் நல அமைச்சர் * அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்ற உறுதி நிறைவேறவில்லை * கடையநல்லூர் குடிபோதையில் தந்தை சுப்பையாவை அடித்துகொன்ற மகன் சேகர் * திருச்சி அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி சக செவிலியர்கள் போராட்டம் * சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு * கோவை சூலூர் 10 வயது சிறுமி கடத்தி கொடூர கொலை. பா.வன்கொடுமை * சூலூர் பெண்குழந்தை பா.வ கொலை அமைச்சர் கீர்த்தனா சிரிப்பை அடக்கியபடி மழுப்பல் பதில் * சட்டசபையில் சொந்தமாக பதில் சொல்ல தெரியாமல் வார் ரூம் அனுப்பும் ஏ4 சீட் படித்தல் * சட்டசபை நேரலை உண்டு என்று அறிவித்த ஒரே நாளில் நிறுத்தம் * எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு வீட்டுக்கு போய் ட்விட்டரில் பதில் * கோவில்பட்டி கெச்சிலாபுரம் இளைஞர் சஞ்சய் ஆணவப் படுகொலை * ஒரு மாத்ததிற்கு இலவச மின்சாரம் என வாக்குறுதி ஆனால் அதே அளவு இரண்டு மாதங்களுக்கு என அறிவிப்பு * பதவியேற்ற 5 நாட்களில் 24 கொலைகள் * மகளிர் தொகை வாக்களித்தபடி 2500 இல்லை பழையபடி 1000ரூ * டாஸ்மாக் மூடப்பட்டதாக போலி வீடியோ * மூன்று மாத அரசியல் அனுபவமுள்ள இளம்பெண் தொழில்துறை அமைச்சர் * அரியர் எழுதும் ராஜ்மோகன் பள்ளிக் கல்வி அமைச்சர் * கோடிக்கணக்கில் சொத்துள்ள ராஜ்மோகன் ஏழைக்கு mla பதவி தந்ததாக உருக்கம் * திராவிட அரசுகளை போலவே குறிப்பிட்ட டாஸ்மாக் களை மூடி மக்களை ஏமாற்றுதல் * கஜானா காலி எனவே வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்டல் ஆனால் வாக்குறுதியில் இப்படி சாக்கு சொல்லமாட்டோம் என உள்ளது * தனது கொலைக் குற்றவாளி ஜோசியருக்கு அரசு பதவி எதிர்ப்பால் வாபஸ் * செருப்பு இல்லாமல் பஸ் ஏறி பதவியேற்க வந்த தவெக எம்எல்ஏ பெரும் பணக்காரர் என அம்பலம் * ரெட் ஜெயன்ட் படங்களை வெளிவர விடமாட்டோம் ஆதவ் அர்ஜுன ரெட்டி * எடப்பாடியார் வணக்கம் தெரிவித்தபோது மதிக்கவில்லை மற்ற தலைவர்களை சந்தித்தபோதும் அவரை சந்திக்கவில்லை * அதிமுகவை பிளந்து தனக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தல் * மத சார்பற்ற அரசு என்று கூறிவிட்டு ஒரு சீட்டு இ.யூ.முஸ்லீம் லீக் ஆதரவை பெறல் * காங்கிரசுடன் கைகோர்த்தல் * அதிமுக,பாஜக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி உடனே திமுக அதிமுக கூட்டணி அமைக்கப் போவதாக வதந்தி ஆறுதல்கள்... * ஈழத் தமிழர் குடியுரிமை வலியுறுத்தி பேசிய அமைச்சர் சிந்து * தொகுதி மறுவரையறை எதிர்ப்பு * பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல் * மகளிர் கட்டணமில்லா பேருந்து * பாடநூல் அச்சிடுவது இனி ஆந்திராவில் நடக்காமல் தமிழகத்தில் நடக்கும் லயோலா மணி *இடுக்கி நிகழ்ச்சி ஒன்றில் முல்லைப் பெரியாறு ஆற்றில் நீரோடு கழிவுகளைக் கலந்து திறந்து விடுவதாக பேசிய கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகந்நாத் மிஸ்ரா * கனிமவளம் கேரளா செல்ல தற்காலிக தடை கேரள முதலமைச்சர் அனுமதிக்குமாறு கடிதம் * விஜயை ஆபாசமாக பேசிய உதயநிதி கைது

தலைக்குடி பகுதி 1

தலைக்குடி அகவை நாற்பது ஆன அருண் தெருவோரத்தில் அமர்ந்திருந்தான். வழக்கறிஞர் போல உடை அணிந்திருந்தான். அவன் எதிரே இருந்த அந்த பிரம்மாண்ட வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவே அவன் பிறந்த வீடு. அதனால் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தான். அவன் குழந்தையாக யாருடன் எல்லாம் விளையாடினானோ அவர்கள் எல்லாரும் உள்ளே இருந்தனர். ஆனால் இவனை மட்டும் உள்ளே விடவில்லை. வாசலுக்கு அருகே சில அரசு அதிகாரிகள் மேசை போட்டு உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் எதிரே ஒரு இளைஞன் இவன் போலவே உடையணிந்து அமர்ந்திருந்தான். அவன் எழுந்து உள்ளே சென்றான். உள்ளே கேட்ட சில கூச்சல் குழப்பங்களுக்குப் பிறகு அதனுள்ளிருந்து வெளியே வந்தான். அந்த இளைஞன் அவனுடைய உதவியாளன் மற்றும் நண்பனான மாறன். இன்று அருணுக்கு துணையாக மாறனைத் தவிர யாரும் இல்லை. மாறன் சோர்வான முகத்துடன் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு அருணிடம் வந்தான். அருணிடம் வந்து ஒரு பத்திரத்தை நீட்டினான். அதை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போட்டு கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு போனவன் ஒரு பை நிறைய பணத்துடன் வந்தான். "பாகப் பிரிவினை முடிந்தது! இதுதான் உங்களிடம் இருக்கும் கடைசி சொத்து" என்று கூறி அருணிடம் அந்த பையைக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டதும் இருவரும் நடக்கத் தொடங்கினர். தன் வீட்டை கடைசி முறையாகத் திரும்பிப் பார்த்தான் அருண். வாசலில் யாராவது வந்து நின்று தன்னை கடைசியாக பார்ப்பார்கள் என்று நினைத்தான். அப்படி யாரும் இல்லை. 'பரவாயில்லை! அவர்கள் மீதும் தவறில்லை!' என்று நினைத்தபடி மனத்தை திடமாக்கிக் கொண்டு தொடர்ந்து நடந்தான். மாறனோ கண்கலங்கி விட்டான். 'இத்தனை உயர்ந்த மனிதனுக்கு இப்படி ஒரு நிலையா?!' என்று மனதுக்குள் புலம்பினான். அவனுக்குத் தெரியும் இனிதான் மிகப் பெரிய போராட்டம் தொடங்கப் போகிறது! அருணின் நடையில் தெரிந்த வேகத்தையும் மிடுக்கையும் கவனித்தான். 'ஒருநாள் இந்த நாடே இவரை வணங்கி நிற்கும்!' என்று மனத்துக்குள் கூறிக்கொண்டான். இருவரும் ஒரு வண்டியில் ஏறி சென்றார்கள். ------- அந்த பணத்தின் பெரும்பகுதியை நாட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்திருந்த அந்த வேற்றுநாட்டு ஆசாமியிடம் கொடுத்தான் அருண்! அவன் அதைப் பெற்றுக் கொண்டு ஒரு ஆவணத்தைக் கொடுத்தான். ஆர்வத்துடன் உடனே அதைப் படிக்கத் தொடங்கினான். அது எளிதாக்கம் செய்யப்பட்ட ஒரு உளவு அறிக்கை! மூன்று தலைமுறைக்கு முன் ஒரு உளவாளி இந்த நாட்டு மக்களுடன் பழகி இந்த நாடு எப்படி இயங்குகிறது என்று அறிந்து எழுதியிருந்தான். அந்த செயலமைப்பை எப்படி உடைக்க வேண்டும் என்றும் யோசனைகளை வழங்கியிருந்தான். அந்த மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆவணம் அவன் நினைத்தபடியே இருந்தது. நம்பிக்கையுடன் வெளியே வந்தான் அருண். வாசலில் இருந்த மாறன் அதை வாங்கிப் பார்த்தான். "இதற்கா இவ்வளவு பணம்?! இதெல்லாம் தேவைதானா?! இதை வெளியிடுவது நாட்டுக்கு செய்யும் இரண்டகம்!" என்று கொதித்தான். "ஆனால் நாட்டு மக்களுக்கு நன்மை" என்று பதிலளித்துவிட்டு அருண் வண்டிக்குள் சென்று அமர்ந்தான். ஓட்டும் இருக்கையில் அமர்ந்த மாறன் "இதை எழுதியவன் திறமையானவன் என்று எனக்குத் தோன்றவில்லை! அது உண்மையென்றால் இதில் கூறியிருப்பது போல செய்து நம் நாட்டையே குதறிப் போட்டிருப்பார்கள்!" என்று வெறுப்பாகக் கூறினான். அருண் சிரித்தபடி "தரவுகள் தான் நமக்குத் தேவை! இது மிகவும் பழைய அறிக்கை! இதில் உள்ள செய்திகள் இன்று எந்த அளவு உண்மை என்று ஆய்ந்து வெளியிட வேண்டும்" என்று கூறினான். வண்டியைக் கிளப்பினான் மாறன்! இது எல்லாம் எங்கிருந்து தொடங்கியது என்று யோசித்தான். 'எல்லாவற்றுக்கும் அவள்தான் காரணம்' என்று முகம் தெரியாத அந்த பெண்ணை திட்டிக் கொண்டிருந்தான். ------------ 25 வயது அருண் உயரமான அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் முழுநிலவின் ஒளியில் கலங்கிய கண்களுடன் அந்த பெண்ணின் முன்னாள் நின்றுகொண்டிருந்தான். அவன் கையிருந்த பூங்கொத்து கீழே விழுந்தது. ஆம் இப்போதுதான் அவனது காதல் வெற்றியை இழந்திருந்தது. அவன் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கே வந்திருந்தான். தனக்கு என்ன குறை?! மிகப்பெரிய பின்னணி கொண்ட குடும்பம்!பணம்! செல்வாக்கு! அழகு! அறிவு! படிப்பு! கல்லூரியிலேயே மிகவும் அழகான பெண்கள் காதல் நிரம்பிய கண்களுடன் சுற்றிவந்தனர். ஆனால் மதி மட்டும் அவனுக்கு பிடித்த பெண்ணாக இருந்தாள். கல்லூரி தோழி! கண்டதும் காதல்! அவளும் நன்றாகத்தான் பழகினாள்! காதலி போலத்தான் நடந்துகொண்டாள்! எப்படியும் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாள் என்று வந்தவனுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்! "ஏன் மதி....?! என்னை ஏன் வேண்டாம் என்கிறாய்! நீ இல்லை என்றால் என்னால் கடைசிவரை சிரிக்கவே முடியாதே?!" "அருண்...! உன்னைப் பிடிக்கும்! நிரம்பவும் பிடிக்கும்! ஆனால் உன் குடும்பம் அதன் பாரம்பரியம் பழக்க வழக்கங்கள் எனக்குப் பிடிக்கவில்லை! உன்னை மட்டும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை! என்னை மன்னித்து விடு! உனக்காக இறுதிவரை இருப்பேன்! ஆனால் ஒரு தோழியாக மட்டும்! எனக்கான ஒருவனை பங்குபோட்டுக் கொண்டு வாழ்வதில் எனக்கு விருப்பம் இல்லை" சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து உடனடியாக விரைந்து வெளியேறினாள்! அவன் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டான்! அவள் சொன்ன சொற்கள் மெல்ல மெல்ல உடைந்து புரியத் தொடங்கின! கடைசியாகச் சொன்ன சொற்கள்! பங்கு போடுவதில் விருப்பம் இல்லை! என்றால் என்ன பொருள்?! குடும்பத்தில் என்ன குறை?! அவனுக்கு புரிந்தது! அவனுடைய பரம்பரையில் ஆண்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் கொண்டிருந்தனர். அவன் தந்தை, அண்ணன்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள். அவனது தாத்தாக்களுக்கு மூன்று மனைவிகள்! "நானும் அப்படித்தான் செய்வேன் என்று இவள் நினைத்துவிட்டாளே! இவளைத் தவிர இன்னொருத்தியைத் தொடுவது என்றால் அதற்கு இவள்தான் இரண்டாக மாற வேண்டும்!" என்று நினைத்துக்கொண்டான். அதன் பிறகு அவளை எங்கும் பார்க்கவில்லை! அவள் எங்கேயோ போய்விட்டாள்! இவனும் அவளை தேடவில்லை! அவனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை! இதனால் ஏற்பட்ட விரக்தி அதனால் வந்த வெறுப்பு அவனது இயல்பான முன்கோபமும் முரட்டு குணமும் அதிகமாகி பல பிரச்சனைகள் பல எதிரிகள் என்று வாழ்க்கை திசைமாறியது! ஒரு கட்டத்தில் அவன் தாய் இறந்த போது அவன் வாழ்க்கை ஓரிடத்தில் சட்டென்று நின்றது. அவனை அவனே உற்றுநோக்கினான். அவனுக்குள் ஒரு மாற்றம் வந்தது. வழக்கறிஞர் படிப்பை மீண்டும் நினைவுகூர்ந்தான். மேலதிக படிப்புகள் படித்து வழக்கறிஞர் ஆனான். இப்போது ஊர் வம்பு செய்பவனாக இல்லாமல் எளிய மக்களுக்காக நின்று போராடி ஊர் வம்பை வாங்கிக்கொள்ளும் போராளி ஆனான். மற்றவர்கள் பணம் பெற்று வழக்கு நடத்திக் கொண்டிருக்க இவன் கையிலிருந்து பணம் செலவழித்து வழக்குகளை நடத்தினான். அவனது குடும்பம் அவனைக் கைகழுவியது. அவனது சொத்துகள் கரைந்தன. இந்த நிலையில் ஒருநாள் மதியை தூரத்தில் இருந்து பார்த்தான். அவள் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். அவளிடம் போய் பேச அவனுக்கு மனமில்லை. மீண்டும் அவளது நினைவுகள் வந்து வாட்டின. அவள்தான் சரி! என் மதி சொன்னால் அதில் காரணம் இல்லாமல் இருக்காது! அவன் அறிவு வேலை செய்தது! அவளது கடைசி சொற்கள் மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியது! பெரிய பலகையில் தன் குடும்பத்தை ஒரு மரம் போல வரைந்தான் அதில் பல்வேறு கிளைகள் தோன்றின! ஏழத்தாழ எல்லாருமே பல மனைவிகள் கொண்டவர்கள்! இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா?! இதையே ஆய்வு செய்யத் தொடங்கினான். முடிவு அவன் நினைத்ததை விட அதிர்ச்சியாக இருந்தது. இவனுடைய உறவினர்கள் அத்தனை பேரையும் தொடர்புபடுத்தி பார்த்தான். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரத்து உறவினர்களை தேடி சேர்த்து வரைந்தான். அந்த குடும்ப மரம் தோப்பாகி காடு அளவு கிளைகள் பரப்பி மிகப் பெரிய வரைபடம் தயாரானது. அதில் இருந்த அத்தனை பேரும் வெவ்வேறு துறைகளில் உச்சத்தில் இருந்தனர். ஏறத்தாழ அனைவருமே பெரும் இடத்தில் இருந்தனர். இவர்களது ஆதிக்கம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருந்தது. ஏறத்தாழ அனைவருமே இரண்டு அல்லது மூன்று மனைவிகள் கொண்டவர்கள். இவர்களுக்கு சாதகமாக ஒரு சட்டத்தையே உருவாக்கியிருந்தனர். அதன்படி இந்த நாட்டில் தந்தை மூன்று மனைவி கொண்டவர் என்றால் மகனும் மூன்று மனைவி வரை திருமணம் செய்யலாம். மற்றபடி ஒரு மனைவிதான். இது பற்றிய வரலாற்றை ஆராய நினைத்தான். ஆனால் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. எல்லாமே திட்டமிட்டு அழிக்கப் பட்டிருந்தது. மூன்று தலைமுறைக்கு முன் நடந்த போரில் இப்படி பல ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தன. 'யார் இவர்கள்? இவர்களின் மூலம் என்ன? இவர்கள் மட்டும் ஏன் இப்படி வேறுபட்டு இருக்கின்றனர். ஒரு இனத்தில் அது போராடி மீட்ட ஒரு நாட்டில் 10% கூட வராத ஒரு கூட்டம் அந்த இனத்தையும் நாட்டையும் ஆதிக்கம் செலுத்துவது சரியா?! இதில் நானும் ஒருவன் என்றால் இதில் எனக்கும் பங்குண்டா?!' அவனுக்கு விடை தெரியாத கேள்விகள் பல தோன்றின. இவர்களை எப்படி வகைப்படுத்துவது?! இவர்களுக்கு இருக்கும் ஒற்றுமை இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் கொண்டது மட்டுமல்லாமல் எந்த தொழிலில் இருந்தாலும் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்துடன் இவர்கள் பிறரால் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப் படுகிறார்கள். ஆனால் இவர்களோ இந்த நாட்டின் பதவிகள் மற்றும் தொழில்கள் இரண்டையும் தம் கைக்குள் வைத்துள்ளனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் என்பதும் வெளியே தெரியாது. இவர்கள் நாடு முழுவதிலும் பரவியிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட மாகாணம் தவிர பிற இடங்களுக்கு மூன்று தலைமுறைக்கு முன்புதான் குடிவந்துள்ளனர். மூன்று தலைமுறைக்கு முன் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை! வயதில் பெரியவர்களை விசாரித்தால் இவர்களை கிட்டத்தட்ட அரசர்கள் என்றவாறு கூறுகின்றனர். சிலர் தெய்வம் என்றே குறிப்பிடுகின்றனர். ஆம்! அதற்கும் காரணம் உண்டு! இந்த நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மதம் இவர்கள் உருவாக்கியதுதான். முன்னோர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது அது. இன்று நாட்டின் பெரும்பாலோர் அதற்கு மாறிவிட்ட பிறகு இவர்களே அதன் தெய்வங்களாகவும் பூசாரிகளாகவும் மாறிவிட்டனர். ஆக அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம் என எங்கும் இவர்களே இருக்கின்றனர். வெளிநாடுகளில் கிடைக்கும் தரவுகள் மேலும் குழப்பம் தருவதாக இருந்தது. அதாவது அப்போது சாதி என்ற அமைப்பு இருந்துள்ளது. அதைவைத்து ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளன. அதை ஒழிக்க பலர் முயன்றுள்ளனர். ஆனால் இங்கே நடந்த விடுதலைக்கான போர் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டது. போருக்குப் பிறகு ஒரு சாதியினர் மட்டும் ஒரு குழுவாக இணைந்து இந்த நாட்டை எப்படியோ தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மேலே எதிர்த்தவர்கள் கீழே என்று புதிய சாதிய படிநிலையை உருவாக்கியுள்ளனர். அந்த சாதி இங்கேயே இருந்தவர்களா அல்லது வெளியே இருந்து வந்தவர்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. அவனது ஆய்வுகள் தொடர்ந்தன. அந்த தேடலில் ஒரு ஆவணம் பற்றிய தகவல் கிடைத்தது. அது போர் முடிந்து சில காலம் தாண்டி இங்கே உட்புகுத்த ஒரு வெளிநாட்டு உளவாளி இந்த நாட்டை பற்றி ஆய்ந்து எழுதி அவனது அரசுக்கு அனுப்பிய ஒரு அறிக்கை! அதன் நகல் அவனது பேரனிடம் இருப்பதாக தெரியவந்தது. ஆனால் அதற்கு அவன் கேட்ட விலை மிக அதிகமாக இருந்தது. ------------------- ஆவணத்தை பிரதி எடுத்துக்கொண்டு உண்மையான ஆவணத்தை பத்திரமாக வைத்துவிட்டு நிதானமாக அதை ஆராயத் தொடங்கினான் அருண். அது முழுமையாக இல்லை! இருந்தாலும் இவன் எதிர்பார்த்த தரவுகள் இருந்தன! அதில் அந்த உளவாளி முன்னுரை போல எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் இவர்கள் இதே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்! வெளியில் இருந்து வந்தவர்கள் அல்லர். ஒரு பெரிய நாட்டின் அங்கமாக அமைதியாக இருந்த இந்த நாட்டில் பிரிவினையைத் தூண்டி கலவரத்தையும் போரையும் வரவழைத்தது இந்த கூட்டம்தான்! இன்று அதிகாரத்தில் இருக்கும் இந்த கூட்டம் விடுதலைப் போருக்கு முன் ஒரே சாதியாக இருந்தவர்கள்! இவர்களே பல இனங்கள் சமத்துவமாக வாழ்ந்த இந்த நாட்டை துண்டாடி போருக்கும் அழிவுக்கும் கொண்டுசென்று அதிகாரத்தைப் பிடித்தவர்கள் என்று கூறிய அந்த ஆவணம்! அன்று புதிதாக உருவாகியிருந்த இந்த நாட்டில் இவர்கள் எந்த எந்த துறைகளில் எல்லாம் எவ்வளவு ஆதிக்கத்துடன் இருக்கின்றனர் என்று பட்டியல் போட்டிருந்த்து. இவர்கள் தமக்குள் எப்படி இணைந்துள்ளனர் என்பதையும் அந்த உளவாளி எழுதியிருந்தார். இவர்கள் தேசியவாதம் போன்றே இருக்கும் புதிய மதம் ஒன்றை உருவாக்கியிருந்தனர். அதன் தலைமை குருக்களின் குழு ஒன்றிடம் இருக்கிறது. அதேபோல இவர்கள் தேசியவாத அரசியல் கட்சி மற்றும் அரசியல் சாரா இயக்கம் என இரண்டு அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இந்த இரண்டையும் ஒருங்கிணைக்க இரண்டு குடும்பங்கள் இருக்கின்றன! இந்த இரு குடும்பங்களும் தங்களுக்குள் நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள்! சொல்லப்போனால் ஒரே குடும்பம் போன்று! அது இந்த நாட்டின் மன்னர் குடும்பத்தை விட அதிகாரம் படைத்தவர்கள்! ஆனால் வெளித்தோற்றத்தில் தெரிவதில்லை! வெளிப்பார்வைக்கு நாட்டின் பெரிய குடும்பங்களில் இதுவும் ஒன்று! அந்த குடும்பத்தின் பின்னாலும் வெளியுலகுக்கு தெரியாத ஒருவர் இருக்கிறார்! அவரை கண்டறிந்து அழித்துவிட்டால் இந்த நாட்டின் கட்டமைப்பு உடையும்! அதாவது இந்த நாடு தனிநாடான பிறகு இந்த நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள், நாட்டின் பெரிய பணக்காரர்கள், இந்த நாட்டின் மன்னர், இந்த நாட்டின் மத குருக்கள் என அனைவருமே 90% ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்! இந்த நாட்டை இயக்குவது ஒரு நபர், அவருக்கு கீழே இரண்டாக இருக்கும் ஒரு குடும்பம், அதற்கு கட்டுப்பட்ட 10% மக்கட்தொகை ஒரு சிறுபான்மைக் குடி, அதன் கட்டுப்பாட்டில் ஒரு மதமும் ஒரு இயக்கமும், இதன் போக்குக்கு இயங்கும் பிற ஆதிக்க குடிகள் (30% மக்கள்), இதற்கு கட்டுபட்டு நடக்கும் பொதுமக்கள் (50%), அவர்களுக்கும் கட்டுப்பட்ட எதுவுமே புரியாத எளிய மக்கள் (10%) என்று இது கட்டமைக்கப் பட்டுள்ளது. இங்கே கடைநிலையில் இருக்கும் 10% மக்கள் பெரும்பாலும் வேற்றினத்தவர்! இத்தனை பேரைத் தாண்டி அந்த நபரை கண்டுபிடிப்பது கடினம்! ஆனால் அந்த குடியை வகைப்படுத்தி விடலாம்! இந்த நாட்டில் இந்த குடிதான் எல்லாமுமே என்று பொதுமக்களுக்கு தெரியாது! ஏனென்றால் சாதி என்கிற அடையாளத்தை ஆணங்களில் அழித்துவிட்டனர்! அதே போல அதிகாரத்தில் உச்சத்தில் மட்டும் இவர்கள் இருக்கமாட்டார்கள்! அதிபர் அல்லது அதிபராக வர வாய்ப்புள்ளவர் இந்த சாதியைச் சேர்ந்தவராக எப்போதும் இருப்பதில்லை! ஆனால் அதிபரை ஆட்டுவிக்கும் துணை அதிபர், எதிர் கட்சி, உளவுத்துறை முக்கியமாக ராணுவ தலைமை அனைத்தும் பெரும்பாலும் இவர்கள்தான்! வெளிப்படையான அடையாளங்களான நடிகர், விளையாட்டு வீரர் போன்ற பிரபலங்களாக இவர்கள் இருக்கமாட்டார்கள்! வெளிப்பார்வைக்கு பிற மக்கள் போலவே இருப்பார்கள்! இன்று இவர்களை பிறரிடமிருந்து பிரித்துகாட்ட எந்த அடையாளமும் இல்லை! ஒரே ஒரு அடையாளத்தைத் தவிர! அதுதான் பலதார மணம்! இதுவே அந்த உளவாளி அனுப்பிய முழுமையற்ற அறிக்கையின் சாராம்சம்! இது பற்றி மேலும் ஆராய்ந்து தான் பிறந்த குடியின் ஆதிக்கத்தை பொதுமக்களிடம் அம்பலப்படுத்த அருண் தயாரானான்! இது பற்றி மாறனிடம் சொன்னான்! யாருக்கும் தெரியாமல் விரிவாக ஒரு புத்தகம் எழுதப் போவதாகவும் அதன் வெளியீட்டு விழாவை பெரிய மாநாடு போல நடத்தி பல நூறு புத்தகங்களை அச்சிட்டு நாடு முழுவதும் இலவசமாக வழங்கப் போவதாகவும் அவன் சொன்னான்! அதற்கு அவன் "இதனால் எந்த விளைவும் ஏற்படாது! ஏனென்றால் நாடு நல்ல நிலையில் இருக்கிறது! மக்கள் அடிப்படைத் தேவைகளும் உரிமைகளும் பெற்றுள்ளனர்! தேவையற்ற சிறிய பிரச்சனைகளை பெரிய பிரச்சனை போல பேசிக்கொண்டு இருக்கின்றனர்! 'அலுவலகங்களில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடலாமா வேண்டாமா ?!' என்பதுதான் இப்போது பெரிய பேசுபொருளாக இருக்கிறது! நேற்று கூட அதற்காக போராட்டம் நடந்ததே?!" "சரிதான் மாறன்! என்ன இருந்தாலும் ஒரு சிறிய கூட்டம் ஒரு இனத்தையே ஆதிக்கம் செய்வதை எப்படி ஏற்பது?!" "மக்களுக்கு தேவை வசதியான வாழ்க்கைதான்! ஆள்வது யார் எவர் என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியமில்லை!" "எனக்கு என்னமோ இது ஒரு புரட்சியையே கொண்டுவரும் என்று தோன்றுகிறது" என்றான் அருண்! ஆனால் ஒரு உள்நாட்டு யுத்தமே நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை! -------- அதிபர் ரகசிய அறையில் நுழைந்தார்! அங்கே ஏற்கனவே இருந்த உளவு அதிகாரிகள் சலசலப்பை நிறுத்திவிட்டு அமைதியானார்கள்! அதிபர் முன் ஒரு கோப்பு வைக்கப்பட்டது! அதில் அண்டை நாட்டினர் இங்கே ஒரு புரட்சியைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு ஒரு முக்கியமான நபரை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வந்திருந்தன. நாட்டில் ஊடுறுவிய ஒருவனை பிடிக்க முயன்றபோது அவன் எதிர்பாராத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவன் ஒரு முக்கிய ஆவணத்தை யாரோ ஒருவருக்கு கொடுத்ததாகவும் அதிபரிடம் கூறப்பட்டது. ஆனால் யாரை சந்தித்து என்ன பேசினான் என்று கண்டறிய முடியவில்லை என்றும் கூறினர். அதிபர் மக்களிடம் ஏதாவது கோபம் தென்படுகிறதா என்று கேட்டார்! நாட்டில் இருக்கும் வேற்றின வம்சாவளிகள் மட்டும் சற்று அதிருப்தியுடன் இருப்பதாகவும் அதேபோல நாட்டின் கடைக்குடி என்று பொதுவாக அழைக்கப்படும் ஏழை எளிய மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் ஆனால் கிளர்ச்சி செய்யும் வகையில் அதிருப்தி கொண்டவர்கள் யாருமில்லை என்றும் கூறினர். அதிபர் அந்த அண்டைநாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகப் படுத்த கட்டளையிட்டார். அப்போது தலைமை உளவு அதிகாரி 'சென்ற ஆண்டு நம் நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை அணைகளில் தடுத்து வைத்துக்கொண்டனர், பாதியளவு தண்ணீரே வந்தது, இந்த முறை அவர்கள் அணை நிரம்பக் கூடாது, ஏற்கனவே ஒருமுறை செய்தது போல குண்டு போட்டு அணையை உடைத்துவிடலாமா?! அல்லது மழையைத் தடுத்துவிடலாமா?!" என்று கேட்டார். "மழைமேகங்களை நம் நாட்டிலேயே தடுத்து மழைபொழிய வையுங்கள்! அதுவும் பாதியளவு மேகங்களை விடுங்கள்! அவை அங்கே சென்று மலைகளில் மோதி மழை பொழிந்து நதிநீராக மாறுவது பாதியளவு நடக்கட்டும்! மலைகளிலும் அதற்கு அடுத்துள்ள காடுகளிலும் நீர் சேரட்டும்! ஆனால் அவர்களது அணைகளுக்கு குடிநீர் மட்டுமே வந்து சேர வேண்டும்! இந்த ஆண்டு மழையளவை கணக்கிட்டு மேகங்களை கணக்கிட்டு அவர்களுக்கு பாதி மழையைத் தடுத்துவிடுங்கள்!" என்று கூறிவிட்டு அதிபர் வெளியே வந்தார். அவரைப் பார்க்க தலைமை குரு வந்திருப்பதாக உதவியாளர் வந்து சொன்னார். அதிபர் தமது மாளிகையில் மற்றொரு ரகசிய அறைக்குப் போனார்! அங்கே தலைமை குரு தவிர பிற சீடர்கள் வெளியே சென்றனர்! அதிபர் குருவை வணங்கினார்! "என்ன தலைவரே! புரட்சிக்குத் தயாரா?" என்று குரு கேட்க அதிபர் அதிர்ந்துவிட்டார்! "உங்களுக்கு எப்படி.." "எனக்கு என் நலம்விரும்பிகள் சொன்னார்கள்!" "நிழல் தலைவர் செய்தி அனுப்பினார் என்று சொல்லுங்கள் குருவே! புரட்சி ஏற்படும் அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! அதை செய்ய நினைத்தவர் களையும் அதில் கவனம் செலுத்த முடியாதபடி நெருக்கடிகளை ஏற்படுத்திவிட்டேன்!" "தலைவரே! மக்கள் வசதியாக சில காலம் வாழ்ந்தாலே ஒருவித சலிப்பு ஏற்படும்! அதுவே புரட்சி நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறி! ஆனால் நீங்கள் நினைப்பது போல பிரச்சனை வெளியே இருந்து வரப்போவதில்லை! ஏற்கனவே இங்கே விதை போடப்பட்டு விட்டது!" "குருவே தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையும் செய்கிறேன்! எனக்கு நாடு நன்றாக இருந்தால் போதும்!" "இனி அதைத் தடுக்க முடியாது! நாட்டுக்குள் மோதல் வரத்தான் போகிறது! அது இருதரப்பு 'மேடை முழுக்க மோதலாக' இருக்கலாம்! அல்லது நாடே இரண்டாக பிளந்து பெரும்போர் நடக்கலாம். ஏனென்றால் நாம் மூடிமறைத்த பெரும் ரகசியம் ஒன்று வெளிவரப் போகிறது" அதிபர் கவலை கொண்டார் " இப்போது என்ன செய்யலாம்?!" "இதை செய்யப்போகிறவன் யாரென்று தெரியவில்லை! ஆனால் அவன் வெளிச்சத்துக்கு வந்த பிறகு உடனடியாக செயலில் இறங்க வேண்டும்! அவனை நாம் அடையாளம் கண்டு சரிசெய்வதற்குள் அவன் புகழடைந்து விட்டால் ஒன்றும் செய்யமுடியாது! அதாவது அவனது தொடக்கம் பெரியதாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்! அவன் வெளிப்பட்ட பிறகு என்னிடம் கொண்டுவந்து சேருங்கள்! மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்! என்னால் ஊகிக்க முடிவது ஒன்றுதான்! அவன் தலைக்குடியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்" "தலைக்குடியில் பிறந்த ஒருவன் நாட்டுக்கு எதிராக சிந்திக்க வாய்ப்பே இல்லையே?!" "ஆம்! ஆனால் அவன் பார்வையில் அவன் செய்யப்போவது தான் நாட்டுக்கு நன்மை!" "நிழல் தலைவர்தான் இந்த நாட்டைக் காக்க வேண்டும்!" தொடரும்