Tuesday, 21 May 2024
ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்
Saturday, 2 March 2024
சாந்தன் இன்னொரு திலீபன்
Thursday, 28 February 2019
ஈழத்தமிழர் போண்டா மணி
ஈழத்தமிழர் போண்டா மணி
என் இயற்பெயர் கேதீஸ்வரன்.
அம்மா கடல்பயணத்தில் குண்டுபோட்டபோது தவறிவிட்டார்கள்.
இப்போது அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் சேலம் அகதி முகாமில் தஞ்சமடைந்தேன்.
எடப்பாடியில் இப்போதும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையில் வசதியாக வாழ்ந்தவன்.
இப்போது அப்படியிருக்க முடியவில்லையே என்கிற கவலையை தமிழக மக்கள் போக்கிவிட்டார்கள்.
என்னை வளர்த்துவிட்ட மண்ணுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
1985இல் அப்பாவை தமிழகம் அழைத்துவந்து கோவில்களை சுற்றிக் காட்டியபோது சிதம்பரம் பஸ் நிலையத்தில் டீ வாங்கித் தரமுடியாத நிலையில் என் மடியில் அப்பாவின் உயிர் பிரிந்தது.
பசியைப் போக்க போன்டா சாப்பிட்டு வந்ததால் அதுவே பெயராகிவிட்டது.
'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' (1992) என் முதல் படம்.
முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் வடிவேலு அண்ணனுடன் நடிக்க ஆரம்பித்த பிறகே பிரபலம் ஆனேன்.
வடிவேலு அண்ணன் சொல்லித்தான் எனக்கு பெண்கொடுத்தனர்.
சிங்கமுத்து அண்ணன் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
என் திருமணத்தை தன் செலவில் நடத்திவைத்தவர் அவர்தான்.
நான் வாய்ப்பு தேடிய காலங்களில் மன்சூர் அலிகான் அண்ணன்தான் தங்க இடம் கொடுத்து மளிகை சாமான்கள் வாங்கித் தந்தவர்.
நல்ல தமிழ் பற்றாளர்.
ஒரு முறை ரஜினி சாரிடம் வாய்ப்பு கேட்டேன்.
'இயக்குனர் கையில்தான் எல்லாமே இருக்கிறது' என்று சொல்லிவிட்டார்.
சினிமாவில் நிறைய ஆண்டுகள் இருந்தாலும் சொந்தமாக வீடு, வாசல் அமைத்துக் கொள்ளவில்லை.
ரசிகர்கள்தான் என் சொத்து.
தற்போதும் 15 படங்கள் கைவசம் உள்ளன.
நன்றி: தினமலர் 24.02.2019
------------------
எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு உயிர் தப்பிச்சு, குண்டு பட்ட காயங்களோட 90-ம் வருஷம் நான் வந்து சேர்ந்த இடம் எடப்பாடி முகாம்.
படுகாயத்தோட வந்த என்னை வீரப்பன் என்கிற அண்ணன்தான் ஆஸ்பத்திரியில சேர்த்து உசிரைக் காப்பாத்தினார்.
அப்புறம் டீக் கடையில வேலை பார்த்தேன்.
எடப்பாடி மக்கள் என்கிட்ட சொந்தக்காரங்க மாதிரி பழகுவாங்க.
எப்பவுமே பிரிச்சுப் பார்த்ததே இல்லை.
உதாரணத்துக்கு என் குழந்தைகள் படிக்க வசதி இல்லாம இருந்தாங்க.
சம்பத் அண்ணன், மகாலிங்கம் அண்ணன் உட்பட ஊர்ப் பெரிய மனுஷங்க சேர்ந்து உள்ளூர் அரசுப் பள்ளியில எங்க முகாம் குழந்தைகளைச் சேர்த்து படிப்புக்கு ஏற்பாடு செஞ்சாங்க.
இன்னொரு விஷயம் தெரியுமா?
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து எடப்பாடிக்குப் போக நிறைய டவுன் பஸ்கள் வரும்.
நாங்கசேலத்துக்குப் போகும்போது பஸ் நடத்துனர்கள் யாருமே எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க.
இந்தப் பகுதியில மில்கள் அதிகம்.
அப்பப்ப முகாம் பக்கம் எட்டிப் பார்க்கிற மில் முதலாளிங்க அரிசி மூட்டை, பருப்பு மூட்டைனு கொடுத்துட்டுப் போவாங்க.
மனசு விட்டு சொல்றேங்க.
இலங்கையில வயித்துக்குச் சாப்பாடு இல்லாம பலநேரம் கொலைப்பட்டினி கிடந்து இருக்கேன்.
ஆனா, இங்க வந்தபின்னாடி நானும் சரி, என்னை சேர்ந்த மக்களும் சரி, ஒருவேளைகூடப் பட்டினி கிடந்தது கிடையாதுங்க.
டீக்கடை பாலு அண்ணன், முகாமில் இருந்து வெளியே கூலி வேலைக்குப் போறவங்களுக்குத் தினமும் காலையில 25 போண்டா இலவசமா கொடுப்பார்.
ஒருமுறை என் அண்ணன் இலங்கையில குண்டடிபட்டு ராமேஸ்வரம் கடற்கரைப் பக்கமா ஒதுங்கி இருக்கிறதாத் தகவல் கிடைச்சுது.
கையில காசு இல்லாம தவிச்சப்ப, நடுராத்திரி எடப்பாடியில் உள்ள அன்புமதி அண்ணன் செலவுக்குப் பணம் கொடுத்து, கூடவே ராமேஸ்வரம் வரைக்கும் வந்தார்.
நாங்க போறதுக்குள்ள அண்ணன் உசிரு போயிடுச்சு.
எடப் பாடிக்குத் தகவல் கொடுத்து, ஊர்க்காரங்களை வரவழைச்சு, இறுதிச் சடங்கைச் செஞ்சாங்க.
நன்றி: விகடன் 01.05.2012@
---------------
போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும்.
இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்துவிட்டார்கள்.
எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார்.
இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.
நன்றி: Wikipedia
-------------------
Wednesday, 13 September 2017
தமிழர்களுக்கும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதை
தமிழர்களுக்கும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதை
ஒரு முகாமில் நடக்கும் பல்வேறு கொடுமைகளை உலகத்திற்கு விரிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் யாஸ்மின் சூகா (Yasmin Sooka) அவர்கள்.
இலங்கை ராணுவ தளபதிகள் வன்னியில் உள்ள ஜோசப் (Joseph) முகாமில் தமிழ்க் கைதிகள் மீது பலவகையான கொடுமைகள் மற்றும் கற்பழிப்புகள் செய்து அதற்கேற்ப அரசிடம் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ராஜபக்ச ஆட்சி முடிந்த பிறகும் இது தொடர்கிறது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையிடமே சூகா கோரிக்கை வைத்தார் என்பதுதான் இங்கே வேதனையான நகைச்சுவை.
இதற்கு இலங்கை என்ன பதில் கூறியது தெரியுமா?
சாட்சிகளின் விபரங்களைத் தாருங்கள் விசாரிக்கிறோம் என்று.
நல்லவேளை 'சாட்சிகளுக்கு சிறிலங்காவில் பாதுகாப்பு கிடையாது, எனவே தரமுடியாது' என்று கூறிவிட்டார் சூக்கா.
இவ்வாறாக அனைத்துலகம் தமிழர்களுக்காக எழுப்பிய குரல் சிறுமுனங்கலாக முடிந்தது.
காணொளி: https://m.facebook.com/story.php?story_fbid=1036628333107486&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.1036628333107486%3Atl_objid.1036628333107486%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1506841199%3A-7673180923453744813&__tn__=%2AW-R
நன்றி: IBC Tamil
Tuesday, 21 June 2016
ஈழத்து முகாமிலிருந்து மருமகளை அழைத்துவந்த தமிழகம்
எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக இருக்கப்
போகிறார்கள்?
தமிழகத்திற்கு மருமகளாக
வந்திருக்கும் வவுனியா விமலினியின் சோகம்!
23 08 12
மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர்
என்று இங்கு வந்துவிட்டேன்.
ஆனாலும் ஆதரவற்ற
நிலையில் என் தங்கையும் தம்பிகளும்
அங்கு இருக்கிறார்கள்.
அவர்களை நினைத்தால்தான்
மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.
இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம்.
தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் விமலினி.
ஆகஸ்ட் 25-ம் தேதி இவருக்கும் பாலகுருவின் மூத்த மகனான பாண்டியனுக்கும் சென்னையில் திருமணம்!
2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்தபோது முள்ளிவாய்க்கால் அருகே வட்டுவாகலில் பங்கர் ஒன்றில் பதுங்கியிருந்த விமலினியின் குடும்பத்தை பங்கரைத் துளைத்துக்கொண்டு வெடித்த குண்டொன்று சின்னாபின்னமாக்கியது.
விமலினியின் தாய் சரோஜாமலர், தந்தை இருதயராஜ் அங்கேயே இறந்துவிட...
தங்கை சரோஜினி, தம்பிகள் சதீவகாந்த், ஜீவகாந்த் ஆகியோருடன் உயிர்பிழைத்தார் விமலினி.
விமலினிக்குத் தலை, நெஞ்சு, இடுப்பு, கால் பகுதியில் கூரிய உலோகங்கள் துளைத்து இருந்தன.
''எங்களை இலங்கை இராணுவம் பம்பைமடு முகாமில்
கொண்டுவந்து வைத்திருந்தது.
என் அண்ணன்
கமலகாந்த் புலி போராளி என்பதால்,
மற்றவர்களைவிட எங்களுக்குச் சித்திரவதைகள்
அதிகம்.
அந்த முகாமில் வைத்துதான்
மாமாவை (பாலகுரு) முதல்முறையாகப்
பார்த்தேன்.
(அவர் உறவுக்கார மாமா இல்லை)
அவர் தமிழகத்தில் இருந்து மக்களனைவருக்கும் ஆறுதல் சொல்ல
வந்திருந்தார்.
எங்களுக்கு ஆறுதல் கூறியவர்,
மறுநாள் என்னிடம் வந்து,
தமிழ்நாட்டு மருமகளாக வரச் சம்மதமா?
என்
மகனைத் திருமணம் செய்துகொள்கிறாயா?’
என்று கேட்டார்.
பதில் சொல்லும் சூழலில் நான்
அப்போது இல்லை.
அப்போது என் பின்னங்காலில் நுழைந்த குண்டின்
பாகங்களை அகற்றி சதையை வெட்டி எடுத்து இருந்தார்கள்.
எதிர்காலத்தில் என்னால் நடக்க
இயலுமா என்று கூடத் தெரியாமல் இருந்தேன்.
சிகிச்சை அளித்த செவிலியர்களோ தலையிலும் நெஞ்சிலும் இருக்கும் உலோகத் துண்டுகளை அகற்றும் வசதி அங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
நான் உயிரோடு இருப்பேனா என்றுகூட எனக்குத் தெரியாது.
அந்தச் சூழலில் மாமா இப்படிக் கேட்டால், என்ன
பதில் சொல்லுவேன்?
நானும் சென்றுவிட்டால் என்
தம்பிகளையும் தங்கையையும் யார் பார்த்துக்கொள்வார்கள்?
அதனால் மாமாவிடம் நான் மறுக்கவும் இல்லை,
சம்மதிக்கவும் இல்லை.
மாமா கிளம்பிச்
சென்றுவிட்டார்.
என் தம்பிகளும் தங்கையும், ஏன்
அக்கா, பேசாமல் சென்னை சென்று இருக்கலாம்
அல்லவா?
அங்குதான் சண்டை இல்லை;
சித்திரவதை இல்லை;
யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். தினமும்
நிம்மதியாகக் குளிக்கலாம்.
உணவு உண்ணலாம்...’
என்று சொன்னார்கள்.
கண்ணீரைத் தவிர என்னிடம்
வேறு பதில் இல்லை.
இடையில் ஓர் ஆண்டு ஓடிவிட்டது.
அதற்குள்
நாங்கள் முகாமில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சம் அல்ல.
இராணுவத்தினர் தலையில்
முகமூடி அணிவித்த
ஆட்களை அடிக்கடி அழைத்து வருவார்கள்.
எங்களில் கொஞ்சம் களையாக இருக்கும் பெண்களை வரிசையாக நிற்கவைத்து, அவர்களிடம் அடையாள அணிவகுப்பு நடத்துவார்கள்.
முகமூடி நபர், தலையை 'ஆம்’ என்று ஆட்டினால்
அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அவள் அவ்வளவுதான்.
இப்படிச் சென்ற யாரும்
திரும்பி வந்ததே இல்லை.
நமக்கும்
இப்படி ஒருநாள் நடக்கும் என்றுதான்
நினைத்து இருந்தேன்.
அங்கு விடியும்
ஒவ்வொரு விடியலும் எமக்குச் சொந்தம் இல்லை.
இராணுவத்தினர் சொல்லும் நேரத்தில்தான் குளிக்க
வேண்டும்.
20, 30 பேராகச் சேர்ந்து குளிக்க
வேண்டும்.
சுற்றிலும் பிளாஸ்டிக் பேப்பர்
வைத்து மூடி இருந்தாலும்
மேலே திறந்தவெளியாகத்தான் இருக்கும்.
பக்கத்தில் உயரமான பகுதியில் இருந்து நாங்கள்
குளிப்பதைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கதைத்துக்
கொண்டும்தான் இருப்பார்கள்.
சிறு கற்களை எங்கள்
மீது எறிவார்கள்.
நாங்கள் சோப்பு போட்ட
பின்பு பாதியில் தண்ணீரை நிறுத்திவிடுவார்கள். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
2011-ல் மாமா மீண்டும் வந்து என்னிடம்
அதே கேள்வியைக் கேட்டார்.
தம்பிகளும் தங்கையும்
என்னிடம், அக்கா போய்விடு அக்கா.
சென்னை நல்ல
ஊர்.
நம் மக்கள் அவர்கள்.
நம் சகோதர, சகோதரிகள்.
உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்’
என்று அன்று இரவு முழுவதும்
சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
மறுநாள் மாமா வந்தபோது தம்பிகள் எப்படியும்
பிழைத்துக்கொள்வார்கள்.
தங்கையை நினைத்தால்தான்
கவலையாக இருக்கிறது.
அவளுக்குப்
பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்தால்
வருகிறேன் என்றேன்.
தாராளமாகச் செய்கிறேன் என்றார்.
அதன்
பின்பே திருமணத்துக்குச் சம்மதித்தேன்.
விடயம்
தெரிந்தால் அவ்வளவுதான்.
இராணுவத்தினர்
சும்மா விட மாட்டார்கள்.
அதனால், இரகசியமாக
வைத்து இருந்தோம்.
ஒரு ஆண்டாக முகாமில் இருந்து என்னை அழைத்துச்
செல்ல ஏதேதோ காரணங்களைச் சொல்லியும்
இலங்கை அரசு விசா கொடுக்கவில்லை.
மாமா ஏதேதோ முயற்சிகள் எடுத்து ஜூலை மாதம் எனக்கு சுற்றுலா விசா வாங்கினார்.
ஜூலை 15-ம் தேதி அத்தான்
வந்து என்னை அழைத்து வந்தார்.
கிளம்பும்போதுகூட மனம் இல்லை.
இந்த மண்ணுக்காகத்தானே அத்தனை பேரும்
போராடினார்கள்!
பல ஆயிரம் பேர் உயிர்கொடுத்தார்கள்.
இந்த மண்ணைவிட்டுக்
கிளம்பிவருகிறோமே என்று வருத்தமாக
இருந்தது.
சென்னைக்கு இப்போதுதான் முதல்முறையாக
வந்து இருக்கிறேன்.
இங்கு இருக்கும்
சூழலே அமைதியாக இருக்கிறது.
அத்தான்
என்னை மெரினா பீச்சுக்கு அழைத்துப்போனார்.
மகாபலிபுரம் கூட்டிச் சென்று சிற்பங்களைக்
காட்டினார்.
ஊரை எல்லாம் சுற்றிக் காட்டினார்.
இந்த ஊரில் நீங்கள் எல்லாம்
எவ்வளவு மகிழ்ச்சியாக...
எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறீர்கள்?
எங்கள்
ஊரில் மட்டும் ஏன் அப்படி?
எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக,
மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்?’
என்று அத்தானிடம் கேட்டேன்.
அத்தானிடம் பதில் இல்லை!
நன்றி:-
ஆனந்த விகடன்
ஈழ மகான் தமிழ்
Sunday, 3 January 2016
கோபுரங்கள் சாய்வதில்லை : இரு அகதி(?)களின் கதை
கோபுரங்கள் சாய்வதில்லை
இரு அகதி(?)களின் கதை
1982ல் இரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டனர்.
20 ஆண்டுகள் முன்பு கொழும்பு காவல்துறையிடமிருந்து தப்பித்து கள்ளத்தோணியில் கடல்கடந்து வந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.
அதில் ஒருவர் வெற்றியம்பதி என்ற ஊரில் குடியேறினார்.
15 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்.
திருமண வயதில் பெண் இருந்தாள்.
அவளுக்கு 80 பவுண் நகை சேர்த்துவைத்திருந்தார்.
அவள் பெயர் அருக்காணி.
அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை.
இன்னொருவர் சென்னையில் குடியேறினார்.
வட்டிக்கடை வைத்து வசதியாக இருக்கிறார்.
திருமண வயதில் அவருக்கு முரளி என்றொரு மகன் இருந்தான்.
நல்ல படிப்பு, பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருந்தான்.
இருவருக்கும் திருமணமானது.
முரளிக்கு அருக்காணியைப் பிடிக்கவில்லை.
தமிழர் மண்ணான பெங்களூரில் ஒரு ஜூலி என்றொரு தமிழ்ப்பெண்ணை பார்த்து காதல்வயப்படுகிறான்.
தனக்கு திருமணமானதை மறைத்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறான்.
இப்படி மேற்கொண்டு கதை செல்கிறது.
ஆமாம். இதில் அகதி முகாம் கொடுமைகள் வரவில்லையே?
இது அகதி முகாம்களில் இருக்கும் 2லட்சம் தமிழர்களின் கதை இல்லை.
தமிழகம் முழுவதும் வாழும் 5லட்சம் அகதிகள் இல்லையில்லை குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்களின் கதை.
கோபுரங்கள் சாய்வதில்லை : இரு அகதி(?)களின் கதை
கோபுரங்கள் சாய்வதில்லை
இரு அகதி(?)களின் கதை
1982ல் இரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டனர்.
20 ஆண்டுகள் முன்பு கொழும்பு காவல்துறையிடமிருந்து தப்பித்து கள்ளத்தோணியில் கடல்கடந்து வந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.
அதில் ஒருவர் வெற்றியம்பதி என்ற ஊரில் குடியேறினார்.
15 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்.
திருமண வயதில் பெண் இருந்தாள்.
அவளுக்கு 80 பவுண் நகை சேர்த்துவைத்திருந்தார்.
அவள் பெயர் அருக்காணி.
அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை.
இன்னொருவர் சென்னையில் குடியேறினார்.
வட்டிக்கடை வைத்து வசதியாக இருக்கிறார்.
திருமண வயதில் அவருக்கு முரளி என்றொரு மகன் இருந்தான்.
நல்ல படிப்பு, பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருந்தான்.
இருவருக்கும் திருமணமானது.
முரளிக்கு அருக்காணியைப் பிடிக்கவில்லை.
தமிழர் மண்ணான பெங்களூரில் ஒரு ஜூலி என்றொரு தமிழ்ப்பெண்ணை பார்த்து காதல்வயப்படுகிறான்.
தனக்கு திருமணமானதை மறைத்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறான்.
இப்படி மேற்கொண்டு கதை செல்கிறது.
ஆமாம். இதில் அகதி முகாம் கொடுமைகள் வரவில்லையே?
இது அகதி முகாம்களில் இருக்கும் 2லட்சம் தமிழர்களின் கதை இல்லை.
தமிழகம் முழுவதும் வாழும் 5லட்சம் அகதிகள் இல்லையில்லை குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்களின் கதை.