Sunday 3 January 2016

கோபுரங்கள் சாய்வதில்லை : இரு அகதி(?)களின் கதை

கோபுரங்கள் சாய்வதில்லை

இரு அகதி(?)களின் கதை

1982ல் இரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டனர்.

20 ஆண்டுகள் முன்பு கொழும்பு காவல்துறையிடமிருந்து தப்பித்து கள்ளத்தோணியில் கடல்கடந்து வந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.

அதில் ஒருவர் வெற்றியம்பதி என்ற ஊரில் குடியேறினார்.
15 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்.
திருமண வயதில் பெண் இருந்தாள்.
அவளுக்கு 80 பவுண் நகை சேர்த்துவைத்திருந்தார்.
அவள் பெயர் அருக்காணி.
அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை.

இன்னொருவர் சென்னையில் குடியேறினார்.
வட்டிக்கடை வைத்து வசதியாக இருக்கிறார்.
திருமண வயதில் அவருக்கு முரளி என்றொரு மகன் இருந்தான்.
நல்ல படிப்பு, பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருந்தான்.

இருவருக்கும் திருமணமானது.
முரளிக்கு அருக்காணியைப் பிடிக்கவில்லை.

தமிழர் மண்ணான பெங்களூரில் ஒரு ஜூலி என்றொரு தமிழ்ப்பெண்ணை பார்த்து காதல்வயப்படுகிறான்.

தனக்கு திருமணமானதை மறைத்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறான்.

இப்படி மேற்கொண்டு கதை செல்கிறது.

ஆமாம். இதில் அகதி முகாம் கொடுமைகள் வரவில்லையே?

இது அகதி முகாம்களில் இருக்கும் 2லட்சம் தமிழர்களின் கதை இல்லை.

தமிழகம் முழுவதும் வாழும் 5லட்சம் அகதிகள் இல்லையில்லை குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்களின் கதை.

No comments:

Post a Comment