Thursday 14 January 2016

தமிழானா

--தமிழானா--

ஆக்கிரமிக்கப்பட்டு தாய்நிலத்திலிருந்து மூச்சுக் குழல் துண்டிக்கப்பட்டு அண்டை மாநிலங்களில் துன்புறும் தமிழர்களே!
உங்களை அழைக்கிறாள் தமிழன்னை !
எதற்கு?
போராடித் தன்னோடு இணைய!
தன் மார்போடு வந்து அணையுமாறு இருகரம் நீட்டி அழைக்கிறாள்!
உதறுங்கள் அச்சத்தை!
ஐந்துகோடித் தமிழ்ப்பிள்ளைகள் அழைக்கிறோம்!
போராட்டத்தை ஆரம்பியுங்கள்!
ஏனென்றால்
நாளை நமது தமிழர்படை முன்னேறும்போது யாரும் கூறிவிடக்கூடாது 'இவர்கள் அமைதியாகப் போராடியதில்லை' என்று!
7 ஆகஸ்ட் 2013

No comments:

Post a Comment