Saturday 2 March 2024

சாந்தன் இன்னொரு திலீபன்

சாந்தன் இன்னொரு திலீபன்

 அன்று திலீபன் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது ஈவு இரக்கமே இல்லாமல் சாகவிட்டது ஹிந்தியம்!
 ஆனால் சாந்தனை 30 ஆண்டுகள் அனுஅனுவாக வதைத்து சாகும் தருவாயில் கொஞ்சம் கருணை காட்டியது ஹிந்தியம்!
 ஆனால் அதையும் விடாத திராவிடம் அவரை பிடித்து மேலும் வதைத்து அவர் குற்றுயிராக தன் ஊருக்குத் திரும்ப இருந்த கடைசி நாளில் கொன்று முடித்தது!

 பிரபாகரன் பிறந்த வயிற்றை வைத்திருந்தார் என்பதாலேயே பார்வதியம்மாள் மரணத் தருவாயில் சிகிச்சைக்கு வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பி கொன்ற திராவிடம் ஹிந்தியத்தை விட கொடூரமானது! 

 போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று வெளிப்படையாகவே கூறிய திராவிடம் சட்டத்திற்கு புறம்பாக ஈழத் தமிழரை வதைக்கவே கட்டியுள்ளது சிறப்பு முகாம் எனும் கொட்டடி சிறை!

  நீதிமன்றம் விடுதலை செய்த 5 பேரை சட்டவிரோதமான  கோட்டடியில் இறுக பூட்டி 2 பேரை சாகடித்துவிட்டது!
இன்னும் 3 பேர் சாவுக்கு காத்திருக்கின்றனர்!

 இதேபோல கர்நாடகா விலும் தூக்குமேடை வரை போன 4 தமிழர்கள் கதை இருக்கிறது!
 செய்யாத தவறுக்கு கைதாகி ஹிந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டவர் வீரப்பன் அண்ணன் மாதையன்!

  கொட்டடியில் அடைக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். மீதி 2 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் சிறையில் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

 தமிழர்களை 'வைத்திருந்து கொல்வது' ஹிந்தியமும் திராவிடமும் இன்பமடைய சிறந்த வழியா?!

 33 ஆண்டுகளாக பார்க்க முடியாத தன் மகன் வரப்போகிறான் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அந்த முதிய தாயின் கண்முன் உருக்குலைந்து இறந்த மகனது பிணத்தை போட்டு எக்காளமிட்டு சிரிக்கிறது திராவிடம்! 

கூடவே கைகொட்டி கூத்தாடும் இந்தியமும் சிங்களமும்!

 இதற்கு தீர்வு இல்லையா?!

இதற்குத்தானா தங்கை செங்கொடி தன்னை தீயில் போட்டு அலறி நம்மை அறியாமையில் இருந்து எழுப்பினாள்?!

 சங்கரலிங்கனார் தொடங்கி சாந்தன் வரை ஒரு தமிழன் அவன் இந்திய குடிமகனோ இலங்கை குடிமகனோ அறவழியோ ஆயுதவழியோ ஆணோ பெண்ணோ அப்பாவியோ எவனாக இருந்தாலும் வதைபட்டு சாவதுதான் விதியா?!

 
 

 

No comments:

Post a Comment