Friday 8 June 2018

உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி

உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி

* ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உற்பத்தியில் ஏறத்தாழ 80% சீனாவிற்கு செல்கிறது.

* மீதி 20% சதவீதத்தில் எந்த நாடுகளிலிருந்து தாமிரத் தாது எடுக்கப்பட்டதோ (பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் ஜாம்பியா) அதே நாட்டிற்கு அனுப்பபட்டு அங்கே வரிவிலக்கு பெறப்படுகிறது.

* மிச்சமீதி தாமிரம் தூத்துக்குடியின் தாமிரத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை.
தேறாத கழிவு தாமிரமே உள்ளூர் சந்தைக்கு வருகிறது.
இந்த உள்ளூர் வணிகமும் ஸ்டெர்லைட் பெயரால் நடக்காமல் கள்ளச்சந்தை மூலம் நடக்கிறது.

* இதுபோக ஆனோடு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது.
இந்த ஆனோடு வெறும் ஆனோடு கிடையாது; தங்கம், பிளாட்டினம், பல்லேடியம் போன்றவை திருட்டுத்தனமாக கலக்கப்பட்டது.
அதாவது ஆனோடில் மறைத்து கள்ளக்கடத்தல் செய்கிறார்கள்.

ஸ்டெர்லைட் உற்பத்தி நாட்டுக்கு தேவை என்போர் முதலில் அவர்கள் கட்டாமல் பாக்கிவைத்துள்ள 750கோடி சுங்கவரியை நாட்டுக்கு வாங்கி கொடுத்துவிட்டு பேசலாம்.

ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மின்சாரம் வராது என்போர் அவர்கள் இதுவரை பாக்கி வைத்திருக்கும் மின்சாரக் கட்டணமான 10கோடி ரூபாயை வாங்கித் தந்துவிட்டு பேசலாம்.

ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மோட்டார் இயங்காது அதனால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது என்போர்,
ஆயிரம் லிட்டர் தண்ணீரை வெறும் 15ரூபாய்க்கு பெறும் ஸ்டெர்லைட் இதுவரை தண்ணீர் கட்டணமே கட்டியதில்லை என்பதையும் அந்த பாக்கித் தொகை 2011லேயே 82கோடி ரூபாய் என்பதையும் அறிந்து பேசவும்.

சான்று நூல்: ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்

No comments:

Post a Comment